Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaathal Crime
Oru Kaathal Crime
Oru Kaathal Crime
Ebook65 pages29 minutes

Oru Kaathal Crime

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Oru Kaathal Crime

Read more from Devibala

Related to Oru Kaathal Crime

Related ebooks

Related categories

Reviews for Oru Kaathal Crime

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaathal Crime - Devibala

    1

    இண்டர்காம் சிணுங்க, எடுத்தாள் சுதா…

    அவள் சம்பந்தப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனம். அன்று அனாதை இல்லம் சென்று பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதாக இருந்தது.

    தேவையான பணத்தை எடுத்துக் கொண்டாள். புறப்பட்டாள். பல அமைப்புகளில் இருந்தாலும், பொழுதைக் கழித்தாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தது.

    அனாதை இல்லம் வந்து விட்டாள். அங்குள்ள பிள்ளைகளைவிட, தான் மோசமான ஒரு அனாதை என்று தோன்றியது.

    அவர்களுக்குக் கிடைக்கும் அன்புகூட தனக்கு இல்லையே என்ற கவலை வந்தது.

    அவளைப் பேச அழைத்தார்கள்.

    உங்களைப் பார்க்கும்போது பொறாமையா இருக்கு எனக்கு. பணம் இருந்தும் என் நிலைமை உங்களைவிட மோசம் என்று தொடங்கி, பதினைந்து நிமிடங்கள் பேசினாள்.

    முடித்ததும்,

    கூட்டம் கை தட்டியது பலமாக. அந்த ஓசை அடங்கி வெகுநேரமாகியும் ஒரு கைதட்டல் மட்டும் தொடர்ந்து கேட்டது.

    அது வந்த திசையில் விழிகளை நகர்த்தினாள் சுதா.

    2

    அறையில் உட்கார்ந்து பத்திரிகைக்கான மேட்டரை தயாரித்துக் கொண்டிருந்தான் வசிஷ்ட்!

    சுதா, அனாதை இல்லம் வந்ததை, பிள்ளைகளுக்கு உதவியதை என்று மேற்படி நிகழ்ச்சியை ‘கவர்’ செய்து கொண்டு வர அவனை அனுப்பியிருந்தார் எடிட்டர்.

    அந்தப் பத்திரிகையின் ப்ரூஃப் ரீடராகத் தொடங்கி, இன்று முக்கிய உதவி ஆசிரியராக உயர்ந்திருக்கிறான் வசிஷ்ட்.

    சுதாவின் பேச்சு முடிந்தும் கை தட்டி அவள் கவனத்தைக் கவர்ந்தான்.

    ‘அனாதை கோடீஸ்வரி!’ என்று தலைப்பிட்டு, ‘கவர் ஸ்டோரியே தயார். செய்து விட்டான்.

    எடிட்டர் அந்த சமயத்தில் இல்லாததால், அவனே மேட்டரைத் தயாரித்து வண்ணப்படங்களுடன் வெளியிட ஏற்பாடு செய்தான்.

    இல்லத்தில் வைத்து தன் புகைப்படக்காரரின் உதவியால் நாலைந்து படங்கள் எடுத்து அட்டைக்குத் தயாரித்துக் கொண்டான்.

    மூன்றாவது நாள்...

    பத்திரிகை வெளியாகும் போது எடிட்டர் இருந்தார்.

    ‘அனாதை கோடீஸ்வரி!’

    ‘கோடிக்கணக்கில் பணமிருந்தும், அன்பான நெஞ்சம் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறார் சுதா’. எனத் தொடங்கி, ஒரு பணக்காரியின் ஏக்கமான இன்னொரு பக்கத்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியிருந்தான்.

    மூன்று பக்கங்களுக்கு மேட்டர்.

    டெலிபோன் ஒலித்தது.

    எடிட்டர் இருக்காரா நான் டில்லிலேலிருந்து ஞானசேகரன் பேசறேன்!

    சொல்லுங்க சார்!

    யாருய்யா வசிஷ்ட்.

    சார்! எங்க பிரதம உதவி ஆசிரியர்!

    அவன் மேல நான் ஸீட் போடணுமா என் மகள் அனாதைங்கற மாதிரி டாமேஜிங்கா எழுதியிருக்கான் என் பேரு நாறிப் போச்சு. என் ப்ரோக்ராமை ரத்து பண்ணிட்டு இன்னிக்கு மெட்ராஸ் திரும்பறேன் அவனை நான் சும்மா விடமாட்டேன்!

    அறைக்கு வந்த வசிஷ்ட் ரிசீவரில் கை வைக்க முயல,

    அதுவே அழைத்தது.

    எடுத்தான்.

    மிஸ்டர் வசிஷ்ட் இருக்காங்களா?

    ஸ்பீக்கிங்!

    நான் சுதா... ஞானசேகர் மகள் பேசறேன்!

    ‘‘உங்க டெலிபோன் எதிர்பார்த்தேன்!"

    நேர்ல வர முடியுமா சார்?

    எதுக்கு

    நீங்க வர்றீங்க. நான் எங்கேயும் போகாம, உங்களுக்காகக் காத்துட்டு இருக்கேன். ஓக்கே

    ‘இவள் என்ன சொல்லப் போகிறாள்’

    ‘பார்க்கலாமே! நேரில போய்ப் பார்த்தால் தெரிந்து போகிறது!’

    அவசர வேலைகளை மட்டும் முடித்துவிட்டு, தன் காமிரா, டேப்சகிதம்

    Enjoying the preview?
    Page 1 of 1