Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Vazhi Paathai
Oru Vazhi Paathai
Oru Vazhi Paathai
Ebook107 pages56 minutes

Oru Vazhi Paathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Oru Vazhi Paathai

Read more from Devibala

Related to Oru Vazhi Paathai

Related ebooks

Reviews for Oru Vazhi Paathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Vazhi Paathai - Devibala

    14

    1

    மதுவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள்! அம்மா சமையல் கட்டில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள். கதிர் உள்ளே வந்தான்!

    எல்லாம் ரெடியாம்மா?

    பண்ணிட்டேன்டா! ஒரு ஸ்வீட், காரம், கொஞ்சம் கிச்சடி, சட்னி எல்லாம் ரெடி! சரியா இருக்கா பாரு!

    கதிர் டேஸ்ட் பார்த்தான்.

    சூப்பரா இருக்கம்மா! உன் கை வெல்லமாச்சே!

    சரி! மது ரெடி ஆயிட்டாளா?

    பாக்கறேன்மா! திரும்பியவன் மறுபடியும் அம்மாவைப் பார்த்தான். வியர்வை ஆறாகப் பெருக, அம்மாவுக்கு மூச்சு இரைத்தது!

    அருகில் வந்தான்!

    பாவம்மா நீ! உனக்கு ஒடம்புல எல்லா கோளாறும் உண்டு! நீ இந்த மாதிரி வேலைகளை செய்யவே கூடாது! நீ படுத்துட்டா, இந்த வீட்ல எல்லாமே முடங்கிப் போயிடும்!

    பரவால்லைடா! கடவுள் எனக்குத் தெம்பைத் தருவார். மது என் பொண்ணு! அவளுக்கொரு வாழ்க்கை அமையணும். பெத்த அம்மா - நான் செய்யாம யாரு செய்வாங்க!

    மூச்சு அதிகமாக இறைத்தது!

    ஒக்காரும்மா! ரிலாக்ஸ் பண்ணிக்கோ! உட்கார வைத்து தண்ணீர் எடுத்துத் தந்தான்!

    மது உள்ளே வந்தாள்.

    அண்ணே! என்னாச்சு அம்மாவுக்கு?

    காலைல 4 மணிக்கு எழுந்தாச்சு! இடைவிடாத வேலை. முடியலை மது! அம்மா பாவம்!

    நான் செய்யறேன்னு சொன்னேன் அண்ணே! அம்மா கேக்கலை!

    எப்படீடா? இவ வேர்த்து வழிஞ்சுகிட்டு நின்னா, வர்றவங்களுக்கு புடிக்குமா? இவளை விட்டா வீட்ல வேற யாருமே இல்லையானு தோணாதாப்பா?

    அவமானமா இருக்கம்மா!

    எதுக்குடா கதிர்?

    எனக்குனு ஒருத்தி வாச்சிருக்காளே! இந்த நேரத்துல குழந்தையையும் கூட்டிட்டு பிறந்த வீட்ல போய் ஒக்காந்திருக்கா! தட்டிக் கேட்டா, வாய்க்கு வந்தபடி கத்துவா! ராட்சஸி! நீதான்மா கட்டாயப்படுத்தி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டே!

    அம்மா முகம் மாறியது!

    அண்ணே! என்ன பேசற? அம்மா ஏற்கனவே பலவித டென்ஷன்கள்ள இருக்காங்க! நீயும் இப்பிடி பேசினா, எப்படீ?

    ஸாரிம்மா! எனக்குள்ள வலில, வாய்தவறி உன்னைப் பேசிட்டேன். மன்னிச்சிடும்மா!

    எதுக்குடா கதிர் வருத்தப்படற? உன்னை எனக்குக் தெரியாதாப்பா! அம்மா, தங்கச்சியை விடமாட்டேன்னு எங்ககிட்ட பாசம் காட்டி எங்களை நீ ஆதரிக்கறது கவிதாவுக்கு சுத்தமா புடிக்கலை! ஒரு வகைல, உன்னோட இந்தப் போராட்டத்துக்கு காரணம், நாங்க ரெண்டு பேரும்தான். அவ கூட நீ தனிக்குடித்தனம் போயிருந்தா, கவிதா சந்தோஷமா இருப்பா! அதை நீ சுத்தமா ஏத்துக்கலை. அதான் மாசத்துல பாதிக்கு மேல அவ பிறந்த வீட்ல இருக்கா!

    அண்ணே! நான் சம்பாதிக்கறேன். எனக்கும் அம்மாவுக்கும் வாழத் தேவையான சம்பளம் எனக்கு வருது! நீ தனியாப் போயிருந்தா, உன் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்.

    இதை விட ஒரு நல்ல யோசனை இருக்கு மது!

    என்ன?

    நான் சாகறது!

    என்னடா பேசற நீ? - அம்மா சுந்தரி அலறி விட,

    பின்ன என்னம்மா! அப்பாவும் இல்லை! நான் உனக்கு ஒரு பிள்ளை! பெத்த தாய், கூடப்பிறந்த தங்கச்சியை தவிக்க விட்டுட்டு நான் நிம்மதியா சந்தோஷமா இருப்பேன்னு எப்படி உங்களுக்குத் தோணுது?

    அதில்லைப்பா! கல்யாணம் நடந்து ஒரு குழந்தையும் ஆயாச்சு! வாழ வேண்டிய வயசுல நீ இப்பிடி வதங்கலாமா?

    பரவாயில்லைமா! கவிதா உணரணும். தப்பு அவமேல! அவ புரிஞ்சுக்கணும்! இல்லைனா, நிரந்தரமா என்னை விட்டுப் பிரியட்டும். நான் தயார்!

    அய்யோ... வேண்டாம். நல்லது நடக்கப் போற நேரத்துல வில்லங்கமா பேசாதேடா! மது! விட்டுடு! அப்புறமா பேசிக்கலாம். நீ போய் பட்டுப் புடவையைக் கட்டிட்டு வா. பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்கோ. அவங்க வந்துடுவாங்க! கதிர்! நீ எதையும் மனசுல வச்சுக்காதேடா! உன் நல்ல குணத்துக்கு, கடவுள் நல்லதையே செய்வார்!

    சரிம்மா!

    மது புடவைகட்டப் போக, அம்மா சமையல்கட்டில் தீவிரமாக, கதிர் வீட்டை ஒழுங்கு படுத்தினான்!

    அப்பா இறந்த சமயம் கதிர் தன் எம்.காம். படிப்பை முடித்திருந்தான். தனியார் நிறுவனம். அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது! ஓரளவுக்கு நல்ல பதவியில் இருந்தார். அதனால் கதிருக்கு வேலை கொடுத்து விட்டார்கள். சொந்த வீடு.

    அப்பாவுக்கு பென்ஷன் இல்லை!

    மொத்தப் பணம் பத்துலட்ச ரூபாய் வந்தது! அதை அம்மா பேரில் பேங்கில் போட்டான் கதிர்! வேலைக்குப் போகத் தொடங்கி விட்டான்.

    மது 12வது முடித்து, காலேஜில் சேரும் நேரம். நல்ல மதிப்பெண்கள்! இன்ஜினீரிங் படிக்க ஆசை! கேபிடேஷன் பீஸ் எல்லாம் சேர்த்து 6 லட்சம். அம்மா தடுக்க, அப்பா பணத்தை எடுத்து கதிர் மதுவுக்காகக் கட்டி விட்டான்.

    மது இரண்டாவது வருஷம் முடிக்கும் போது, கதிருக்குக் கல்யாணம் செய்ய அம்மா முடிவெடுக்க.. கதிர் தீர்மானமாக மறுத்தான்!

    மது படிப்பு, கல்யாணம் இரண்டும் முடிந்த பிறகு தன் கல்யாணம் என்றான்.

    ‘இன்னும் நாலு வருடங்கள் நீ காத்திருக்கக் கூடாது’ என அம்மா கட்டாயப்படுத்தி, கதிர் மறுத்தும் கேளாமல் வரன் பார்க்கத் தொடங்க, கதிர் வேறு வழியில்லாமல் தலையாட்டினான்!

    வரன் அமைந்தது!

    கவிதா - படித்த பெண் - தனியாரில் வேலை! அப்பா, அம்மா, ஒரு அக்கா - தம்பி எனக் குடும்பம்!

    அழகான - புத்திசாலிப் பெண்தான்!

    ஆனால், சுயநலத்தின் உச்சம். அடாவடி! தான் நினைத்தது நடக்க வேண்டும்! பிறந்த வீட்டாரையும் தாறுமாறாக ஆட்டி வைத்த பெண்! சம்பாதிக்கும் பணத்தில் சல்லிக்கா" தரமாட்டாள். அத்தனையும் அவள் செலவுக்கு!

    பெற்றவர்கள் தட்டிக் கேட்டு நொந்து போனார்கள்.

    கவிதாவின் அக்கா வெளியூரில்!

    தம்பி - உள்ளூரில் படிப்பு! அப்பா - ஒருவரின் சம்பளத்தில் சகலமும்!

    வரன் பொருந்தி விட்டது!

    நல்ல உத்யோகம், அழகு எல்லாம் கதிருக்கு இருந்ததால், கவிதாவுக்கு பிடித்து விட்டது!

    தன் ‘கல்யாண குணங்க’ளை ஆரம்பத்தில் காட்டாமல் அடக்கி வைத்திருந்தாள்!

    இவர்களும் அதை நம்ப...

    பிறந்த விட்டார் - அவளைத் தள்ளிவிட்டால்

    Enjoying the preview?
    Page 1 of 1