Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veettukku Veedu!
Veettukku Veedu!
Veettukku Veedu!
Ebook139 pages57 minutes

Veettukku Veedu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580100605442
Veettukku Veedu!

Read more from Devibala

Related to Veettukku Veedu!

Related ebooks

Reviews for Veettukku Veedu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veettukku Veedu! - Devibala

    http://www.pustaka.co.in

    வீட்டுக்கு வீடு!

    Veettukku Veedu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நேற்று மாலை முதலே எரிச்சலில் இருந்தாள் சுகந்தி. ஏற்கனவே கடந்த ஒரு வருட காலமாக சுகந்தி சந்தோஷமாக இல்லை! ஏன்? இந்தக் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது! மிக நீளமாக அதிக பக்கங்களை செலவிட்டு, நம் கதாநாயகி சுகந்தியின் பூர்வீகமும், கடந்து வந்த பாதையும் தெரிந்தால் தான் இந்த எரிச்சல் நியாயமா இல்லையா என்பது உங்களுக்குப் புரியும்!

    சுகந்திக்கு அம்மா இல்லை!

    அவளது கல்லூரி படிப்பு முடியும் நேரம் அம்மா காலமாகி விட்டார். ஏற்கனவே உடம்பு முழுக்க வியாதி! மன உளைச்சல்! காரணம் புருஷன்!

    ஆரம்பம் முதலே பொறுப்பில்லாத புருஷன். கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத மனிதர் குருமூர்த்தி. குடி, போதை, பெண் சபலம் எதுவும் இல்லாதவர்! ஆனால் உழைக்கப் பிடிக்காதவர்! எந்த வேலையிலும் நிலைத்து நிற்க மாட்டார்.

    இதனால் அம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

    மூத்தவன் சம்பத் தலையெடுத்து விட்டான். அவனுக்கு பட்டப்படிப்பு முடிந்ததும் மத்திய அரசாங்க உத்யோகம் கிடைத்து விட்டது! அதுவரை குடும்பத்தை நடத்த அம்மா பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. படாத அவமானங்கள் பாக்கியில்லை!

    ஒரு சில வீடுகளில் வேலை - சமையல் பணி - மெஸ் போன்ற ஒரு அமைப்பு வீட்டு வாசலில்! இந்த மாதிரி சங்கடங்கள் ஏராளம்.

    அம்மா ஏழையாக இருந்தாலும் பளிச்சென நல்ல கலரில் எடுப்பாக தளதளப்பாக இருப்பாள்.

    அதனால் வேலை செய்யும் இடங்களிலும், கடைக்கு வரும் ஆண்களும் காமக் கண்களை அம்மா மேல் பதித்து விட படாதபாடு பட்டு விட்டாள்.

    பொறுப்பான கணவன் இல்லை. அவனை ஒரு பாதுகாப்பாக கருதவே முடியாது!

    தளதளப்பான அழகான மனைவியை ஒரு பார்வை கூடப் பார்க்காத ஜடம். சம்பத்தும், சுகந்தியும் பிறந்த பிறகு, இருவருக்கும் உடல் ரீதியான தொடர்பு கூட இல்லை!

    காரணம், சம்பாதிக்காமல், குடும்ப பொறுப்புகளை உணராமல் உண்டு, உறங்கும் மனிதன் கணவனாக இருந்தாலும் அவனிடம் எப்படி ஈடுபாடு வரும்! அதே நேரம் அந்த மனிதனும் கிட்ட நெருங்குவதில்லை! இது தான் ஆச்சர்யம்.

    சோம்பேறி ஆண் மகனை கட்டி வைப்பது இரண்டு பசிகள் தான். ஒன்று வயிற்றுப்பசி. அது அடங்கி விட்டால், பெண்ணைத் தேடும் புத்தி!

    குருமூர்த்திக்கு அதுவும் இல்லை! 'இது என்ன கேரக்டர்!' அம்மா பல முறை யோசித்ததுண்டு!

    இந்த மனிதனுக்கு இயல்பான உணர்வுகள், ரோஷம், ஆசை, பாசம், காமம் எதுவுமே இல்லையா? பொறுப்பில்லாத புருஷனை வெறுக்கும் மனசு இருந்தாலும், உடல் கட்டுப்பட்டு விடும்!

    உண்ட பிறகு உறக்கம் என்பது மட்டுமே குருமூர்த்தியின் வாழ்க்கை! பல நாள் வீடு திரும்புவதில்லை! எங்கு போகிறார் என்பதும் தெரியவில்லை!

    திரும்பும் போது தாடி தலையுடன் பிச்சைக்காரன் போல வருவார்.

    நீ இத்தனை நாள் எங்கே இருந்தாய் என கற்பகம் கேட்க மாட்டாள். நீ குடும்பத்தை எப்படி நடத்துகிறாய் என குருமூர்த்தியும் கேட்டதில்லை! படிக்கும் உங்களுக்கே ஆச்சர்யமாக, கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும்! இதுதான் கதாபாத்திரம்!

    பிள்ளைகள் வளரத் தொடங்கி விட்டார்கள்.

    சம்பத், பட்டம் வாங்கியதும் அரசாங்க வேலை கிடைத்து விட்டது! சம்பத், சுகந்தி இரண்டு பேருக்கும் பரஸ்பர ஒட்டுதல் பெரிதாக இல்லை! ஆனால் தான் படித்து முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! அதற்காக அம்மா பட்டபாடும் தெரியும்! வாடகை தந்து, பிள்ளைகளுக்கு சம்பளம் கட்டி, வீட்டு நிர்வாகத்தை நடத்த கற்பகம் கடன் வாங்காத நபர் இல்லை! கடன் ஏராளமாகி, பல பேர் வீட்டு வாசலுக்கு வந்து ஏசும் நிலை உருவாகி விட்டது!

    வேலை செய்யும் வீடுகளில் ஒன்று மிக மிக வசதியானது!

    மற்ற இரண்டும் சுமார் ரகம்.

    வசதியான வீட்டுக்காரர் புண்ணியகோடி ரியல் எஸ்டேட் பிஸினஸ்! கோடீஸ்வரர். அந்த வீட்டில் கூட்டம் அதிகம். அவர் மனைவி சகுந்தலா கிட்டத்தட்ட ஒரு ராட்சஸி! அவள் வாயைத் திறந்தால், எதிரே நிற்பவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகும்!

    மூன்று பிள்ளைகள். கணவன் - பிள்ளைகள் எல்லாருமே சகுந்தலாவைக் கண்டால் நடுங்கிப் போவார்கள்.

    ஒரு பெண் இந்த அளவுக்கு கெட்ட வார்த்தைகளை பேச முடியுமா என்று ஆச்சர்யப்படுவார்கள். பார்க்கவும் சுர்ப்பனகை போல குண்டாக, கறுப்பாக, மோசமாக இருப்பாள்.

    புண்ணிய கோடி லட்சணமாக, கம்பீரமாக இருப்பார்.

    மாமன் மகளை செஞ்சோற்றுக் கடனுக்காக மணந்து மனசு இயங்காமல், உடல் மட்டும் செயல்பட்டு 3 பிள்ளைகளைப் பெற்று விட்டார்கள். அங்கும் மோசமான ஒரு தாம்பத்யம் முற்றுப்புள்ளி கண்டது!

    கற்பகத்தை, சகுந்தலா பிழிந்து எடுப்பாள். ஆனால் சம்பளமும் குறைவு!

    இது புண்ய கோடிக்குத் தெரிய, நொந்து போனார். பிள்ளைகளின் படிப்புச் செலவு முழுக்க, சகுந்தலா அறியாமல் அவரே ஏற்றுக் கொண்டார். தவிர மருத்துவச் செலவு, பற்றாக்குறை சகலத்தையும் ஈடுகட்டினார்.

    அப்படியும் சமாளிக்க முடியாமல் கற்பகத்துக்கு ஊரைச் சுற்றிக் கடன்!

    குருமூர்த்திக்கு, புண்ணியகோடி ஓரிரு முறை வேலையும் வாங்கித் தந்தார். அதிலும் நிலைக்கவில்லை!

    ஒரு நாள் கடன்காரன் ஒருவன் கற்பகத்தை கேவலமாக பேசுவதை புண்ணிய கோடி பார்த்துவிட்டார்.

    அவரால் தாள முடியவில்லை! வீட்டுக்கே வந்து விட்டார்.

    கற்பகம்! என்ன அவன் இப்படி பேசறான். கேக்கவே காது கூசுது!

    இது மாதிரி நிறைய இருக்குங்க! அவமானத்தை முதல்ல பட்டப்ப, உடம்புல ஊசி குத்தின மாதிரி இருந்தது! அடிக்கடி ஊசிகள் உடம்புல குத்தும் போது பழகிப் போயிடும்! வலி தெரியாது! தெரிஞ்சாலும் வெளியில சொல்ல முடியாது! சம்பத் ஆளாயிட்டா, வெளியில வந்துடலாம்!

    எவ்ளோ கடன் இருக்கு?

    விடுங்கய்யா! ஏற்கனவே படிப்புச் செலவு பற்றாக்குறைனு சம்பளம் தவிர தர்றீங்க! அம்மாவுக்குத் தெரிஞ்சா தப்பாயிடும்! விட்டுடுங்க!

    இல்லைம்மா! அவன் ஆபாசமா பேசறான். உனக்கு செய்ய நான் கடமைப்பட்டிருக்கேன். சொல்லு!

    கட்டாயப் படுத்திக் கேட்க, நாலைந்து வருடங்களாக வட்டியோடு சேர்ந்த கடன் எண்பதாயிரம்! என்றாள்.

    மறுநாளே புண்ணிய கோடி அந்த பணத்தைத் தந்து கடனை அடைக்கச் சொன்னார். கற்பகம் மறுத்தும் கேட்கவில்லை!

    சம்பளத்துல, அடைச்சிக்கறேன்!

    தேவையில்லை! வாய்க்கு ருசியா மூணு வேளையும் நீ சமைச்சுப் போடற! என் மூணு பசங்களும் உன் சாப்பாட்டு ருசில சொக்கி, வெளில பச்சத் தண்ணி கூடக் குடிக்கறதில்லை! வயிறு திருப்தியா ரொம்பற காரணமாத்தான் என் வர்த்தகம் தெளிவா நடக்குது கற்பகம். பல லட்சங்கள், சமயத்துல கோடிகளை லாபமா நான் அடைய நீயும் ஒரு காரணம்!

    அய்யா!

    "மனுஷப் பிறவிக்கு 2 பசிதான்! அது ஆணோ, பெண்ணோ! வயித்துப் பசி! அதை நீ பிரமாதமா போக்கறே! அடுத்தது உடல் பசி சகுந்தலா கிட்ட கடனேனு வாழ்ந்து மூணைப் பெத்தாச்சு! நானும் ஆம்பளை தானே! எனக்கும் இப்பவும் சில சமயம் மேற்படி இச்சைகள் வரும். ஆனா சகுந்தலா முகமும், பேச்சும் கண் எதிரே வரும் போது எல்லாமே அடங்கிடும்! விட்டுடு! இதையெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1