Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veettu Nilakkal
Veettu Nilakkal
Veettu Nilakkal
Ebook116 pages1 hour

Veettu Nilakkal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604220
Veettu Nilakkal

Read more from Devibala

Related to Veettu Nilakkal

Related ebooks

Reviews for Veettu Nilakkal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veettu Nilakkal - Devibala

    http://www.pustaka.co.in

    வீட்டு நிலாக்கள்

    Veettu Nilakkal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    அன்புள்ள வாசகர்களுக்கு...

    வீட்டுக்கு வீடு நடக்கும் சூடான பிரச்சினை!

    எதார்த்தமான இந்த விவகாரம் என்றும் இளமையான சங்கதி. புத்திபூர்வமாக இதை அணுகி, சரி செய்பவர்கள் தப்பித்தார்கள்.

    அப்படி இல்லாதவர்கள் மாட்டிக்கொண்டு...

    அமைதி, நிம்மதி, சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

    பாசம் முக்கியம். அது வெறியாக மாறக்கூடாது.

    'பெற்றவர்கள் பெண்ணுக்கு நிரந்தரமில்லை' என்ற அழுத்தமான நிஜத்தைச் சொல்லும் புதினம் இது!

    பேரன்புடன்...

    தேவிபாலா

    *****

    1

    புது வருஷம் அற்புதமா அமையணும். குடும்பத்தோடு சீரும் சிறப்புமா ஒரு குறையும் இல்லாம வாழணும். கேட்டதெல்லாம் கிடைக்கணும். நெனச்சதெல்லாம் நடக்கணும்!

    அவர் சொல்லிக்கொண்டே போக, வீட்டில் அவரைச் சுற்றி எல்லாரும் உட்கார்ந்து விட்டார்கள்.

    அது டிசம்பர் மாதம் 31-ந்தேதி மாலை 6 மணி.

    வீடே நிரம்பி வழிந்தது. மூன்று பெட்ரூம் ஃபிளாட் ஆட்கள் குறைவாக இருந்தால் சமாளிக்கலாம். இந்த வீடு சந்தைக்கடை!

    எந்த நேரமும் இறைச்சல்தான்!

    அங்கு 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி. மற்றவர்கள் வீட்டில் இந்த அளவுக்குக் கூட்டம் இருக்காது.

    நம் முதல் கதாநாயகன் பத்ரி!

    தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறான். மாதம் முப்பதாயிரம் சம்பளம். வயதும் 30. நாலு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, இப்போது இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மனைவி ஜோதி, தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை, மாதம் 15 ஆயிரம் சம்பளம்.

    பத்ரிக்கு அப்பா உண்டு. அவருக்கு ‘ரெயில்வே' உத்தியோகம். அம்மா குடும்பத் தலைவி. அண்ணன், அண்ணி, அவர்களது 2 குழந்தைகள். உள்ளூர் தங்கை வேறு. மாதத்தில் இருபது நாளும் பிறந்த வீட்டில்தான் இருப்பாள். அவன் கணவன் ஓசி கிராக்கி. சாப்பாட்டுக்கு ஆஜராகிவிடுவான்.

    இவர்கள் தவிர... மாமா, அத்தை, சித்தி என உறவுக்கார குடும்பங்கள் அவ்வப்போது ஆஜர். வந்தால், உடனே போக மாட்டார்கள். குறைந்தபட்சம் நாலு நாள் தங்கிவிட்டுத்தான் போவார்கள். விதவை, வாழாவெட்டி, மனைவி, கன்னி என சகல பெண்களும் ஆஜர்.

    எப்போதும் 10 பேருக்கு சாப்பாட்டுக்குக் குறையாது.

    மாமியாரும் உழைக்கத் தயங்கமாட்டார். வந்தவர்களை சுலபத்தில் போகவிடாமல் இழுத்துப் பிடிப்பாள்.

    கூட்டுக் குடும்பத்தையும் கடந்து 'மார்க்கெட் ரேஞ்சில்' ஒரு குடும்பம்.

    அப்பா, அண்ணன், பத்ரி, ஜோதி... நாலு பேர் வேலைக்குப் போயும் மாதக் கடைசியில் மூச்சு முட்டும்.

    அண்ணன் மனைவி சத்யா வேலை செய்யாமல் 'டிமிக்கி’ தருவாள். ஜோதி வேலைக்கும் போய்... வீட்டுக்கு வந்தாலும் வேலைகளால் இடுப்பு முறியும்.

    முதல் இரண்டு வருடங்கள் தெரியவில்லை.

    குழந்தை பிறந்த பிறகு சமாளிக்க முடியவில்லை. சகலமும் கவனிக்க வேண்டும்.

    ஜோதி குடும்ப பற்றுதல் உள்ள பெண்தான். 'யாரையும் உதற வேண்டும்... விலக்கி வாழ வேண்டும் என்று நினைக்கும் ரகமல்ல!’

    ஆனால், தலைக்கு மேல் வேலைகள் வந்து குவிய, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் வந்ததால்... சலிப்பு வரத் தொடங்கிவிட்டது.

    உடம்பு சோர்ந்து போனது.

    ஜோதிக்கு பிறந்த வீடு வெளியூரில்! அம்மா கிடையாது. அப்பாவோ அக்கா வீட்டில்.

    உடன் பிறப்புகள் மூவரும் பெண்கள்.

    உரிமையுடன் யார் வீட்டிலும் போய் தங்க முடியாது. அவரவர் சொந்த விவகாரம்.

    இரண்டு வயது குழந்தை நச்சரிப்பு வேறு.

    ஜோதி முனகினாள். அவளது கோபம் முழுக்க பத்ரி பக்கம் திரும்பியது.

    அவனிடம் இணக்கமாக இல்லாமல் கடுகடுப்பு காட்டத் தொடங்கி விட்டாள்.

    பத்ரி கோபக்காரனல்ல! சகலத்துக்கும் இணங்கிப் போவான்.

    அண்ணன் முன்கோபக்காரன். அண்ணி நாடகமாடி, புருஷனுக்கே அல்வா கொடுப்பவள். வேலை செய்வது போல் பாசாங்கு செய்து தளுக்காக தப்பிப்பாள்.

    என்னங்க... உங்க அண்ணி வேலைக்குப் போகல. வீட்டுலதானே இருக்காங்க? நான் பார்க்கற வேலையில் பாதியைக்கூட செய்யறதில்லை. வேலைக்கும் போய், வீட்டுலேயும் மாடு மாதிரி உழைச்சா தாங்குமா? இதையெல்லாம் உங்க அம்மா கேக்க மாட்டாங்களா... சொல்லுங்க.

    விடு ஜோதி... எதுக்குக் கோபம்? அம்மாவும் இந்த வயசுல பாடுபடலையா? ஒரு நிமிஷம் சும்மா இருக்காங்களா? சொல்லு...

    சரி! அண்ணியை தட்டிக் கேக்கறாங்களா?

    உன்னையும் அம்மா செய்யச் சொன்னாங்களா?

    இல்லைதான்! நான் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?

    அது உன் சுபாவம்! இப்படி 'படக்'குன்னு பேசினா, உறவு முறியும்.

    உங்க தங்கச்சி, புருஷன் வீட்டையே மறந்தாச்சு!

    சரி ஜோதி... உன் கேள்வி நியாயம். அவளுக்கும் பிரச்சினை இருக்கு. அவளா புரிஞ்சுக்கணும். எங்க வீட்டுல பிறந்த பொண்ணு. விரட்டி அடிக்க முடியுமா?

    எல்லாத்துக்கும் சப்பைக்கட்டு கட்டுவீங்களா?

    வேற வழியில்லை ஜோதி! எல்லா உறவுகளும் வேணும்னு நினைக்கறவன் நான்.

    பத்ரி ரொம்ப நல்லவன்.

    எந்த தப்பான பழக்கமும் கிடையாது.

    கல்யாணம் தீர்மானமான நாள் முதல் ஜோதியை நேசிப்பவன். இன்று வரை அது குறையவில்லை. அவனது காதல், எல்லாருக்கும் தெரியும். மற்றவர்கள் இருப்பதற்காக கூச்சப்படாமல் ஜோதியைக் கொஞ்சுவான்.

    விடுங்களேன்! கூச்சமா இருக்கு. மாமா, அத்தை எல்லாரும் இருக்காங்க.

    அப்பா கொஞ்சிக் கொஞ்சித்தான் நாங்க அஞ்சு பேர், புரியுதா ஜோதி.

    அம்மா அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாள்.

    பத்ரியின் காதலுக்காக... இந்த நிமிடம் வரை தன்னிடம் உள்ள பாசத்துக்காக... ஜோதி சகலமும் பொறுத்துக் கொண்டாள்.

    அங்கு யாரும் குணத்தில் பழுதில்லை, தப்பானவர்களும் கிடையாது.

    என்றாலும், ஆசைப்பட்டபடி ஒரு பொருள் வாங்க முடியாது. வீட்டில் அவசியமான எல்லாம் இருக்கிறது.

    ஆனால், ஜோதிக்குள் ஒரு கனவு இருந்தது.

    தனக்கென வீடு, அதை அழகுப்படுத்தும் கலைநயம். விரும்பிய மாதிரி அமைப்பு. ஒரு சின்ன கார். 'பளிச்' உடைகள் என சற்றே பெரிய கனவுதான்.

    அத்தனையும் உடைந்தது!

    இது சந்தைக் கடையாக இருந்ததால்

    Enjoying the preview?
    Page 1 of 1