Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thevai Oru Devathai
Thevai Oru Devathai
Thevai Oru Devathai
Ebook123 pages49 minutes

Thevai Oru Devathai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603584
Thevai Oru Devathai

Read more from Devibala

Related to Thevai Oru Devathai

Related ebooks

Reviews for Thevai Oru Devathai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thevai Oru Devathai - Devibala

    http://www.pustaka.co.in

    தேவை ஒரு தேவதை

    Thevai Oru Devathai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    விக்ரம் வெளிநாட்டில் இருந்து இன்று திரும்புகிறான். வீடே பரபரப்பாக இருந்தது. அம்மா ஒரு வாரமாக வீட்டை அழகுபடுத்துவதில் முனைப்பாக இருந்தாள். கூடவே, கல்யாணி.

    அப்பா எல்லாருக்கும் சொல்லிவிட்டார் - விக்ரம் வரப்போவதை!

    உள்ளூரில் இருக்கும் விக்ரமின் தங்கை, மும்பையில் இருக்கும் அக்கா எல்லாரும் கூடிவிட்டார்கள்!

    விக்ரம் அந்த வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை! செல்லப் பிள்ளை!

    ஆனால், பெற்றவர்களிடம், உடன்பிறப்புகளிடம் அளவு கடந்த பாசம் உள்ளவன்!

    நல்ல புத்திசாலி. பள்ளிப் படிப்பில் மாநிலத்தில் முதல் பத்து இடத்துக்குள் வந்துவிட்டான். பொறியியல் கல்லூரியில் சுலபமாக இடம் கிடைத்தது. நாலு ஆண்டுகள் அதை முடித்தான். பிறகு, எம்.பி.ஏ. படித்தான். இங்கே ஒரு நல்ல நிறுவனத்தில் கூப்பிட்டு வேலை கொடுத்தார்கள்.

    ஆரம்பச் சம்பளமே ஐம்பதாயிரம் ரூபாய்! ஆறே மாதங்கள் முடிவதற்குள் பதவி உயர்வு வந்து, லட்சத்தைத் தொட்டுவிட்டான். ஒரு ஆண்டுக்குள் பெரிய பணி ஒன்றை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு விக்ரம் தலையில் விழுந்தது! மூன்று ஆண்டு ஒப்பந்தம். மாதச் சம்பளம் மூன்று லட்ச ரூபாய்! குடும்பமும், நண்பர்கள் வட்டாரமும் வாய்பிளந்தது!

    ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு இங்கு வரமுடியாது! அம்மா விக்ரமை பிரிந்திருக்க முடியாது! அவன் போகக்கூடாது என குரல் எழுப்பி ஒப்பாரி வைக்க, விக்ரமும் தலையாட்ட, எல்லாரும் வசைபாடினார்கள்.

    'எதிர்கால முன்னேற்றம் முக்கியமல்லவா? அதைவிடலாமா?’எனக் கேட்டு பேசிப் பேசி புரிய வைத்தார்கள்.

    சகோதரிகள் அப்பா, அம்மாவிடம் எடுத்துச் சொன்னார்கள்.

    ஒரு வழியாக விக்ரம், விமானத்தில் ஏறிவிட்டான்.

    அம்மா அழுது அழுது ஒரு வாரம் படுத்தபடுக்கையாகி, குடும்பமே பதறி, இறுதியில் சரியானது!

    தினசரி தொலைபேசி பேச்சு...

    அது வாரம் இருமுறையாகி, ஒரு முறையாகி அதுவும் தேய்ந்தது.

    விக்ரம் பிரிவை சுலபமாக ஜீரணிக்கப் பழகிவிட்டான். பெற்றவர்களால் முடியவில்லை.

    மூன்று ஆண்டுகள் ஓடி மறைய, இதோ விக்ரம் வருகிறான். எல்லாரும் அதிக ஆனந்தப்பட, மவுனமாக சிலிர்த்தவள், கல்யாணி!

    கல்யாணி, விக்ரமின் மாமன் மகள். கல்யாணிக்கு பதினொரு வயதாக இருக்கும்போது ஒரு கார் விபத்தில் தாய், தகப்பன் பலியாகிவிட்டார்கள்.

    அவளுக்கு உடன்பிறப்புகளும் இல்லை!

    விக்ரமின் அம்மா - கல்யாணிக்கு அத்தைதான் ஒரே நாதி. கல்யாணி இவர்கள் பராமரிப்பில் வந்துவிட்டாள்.

    மாமாவின் பணமும், வீடும் கல்யாணி பேருக்கு மாற்றப்பட்டு பாதுகாவலராக அம்மா நியமிக்கப்பட்டாள்.

    அப்போது முதலே ஒரு கணக்கு உருவாகிவிட்டது! விக்ரமுக்கு கல்யாணியை மணம்முடித்து இந்த வீட்டு மருமகளாக்க வேண்டும் என்று!

    விக்ரம் எதுவும் பேசவில்லை!

    கல்யாணி மனதில் அந்த ஆசை வளர்ந்துவிட்டது! ஆனால், வாய்விட்டுச் சொல்லமாட்டாள்.

    கல்யாணி பட்டப்படிப்பை முடித்தாள். சுமாராக இருப்பாள். வீட்டு வேலைகளை பிரமாதமாக செய்வாள். அற்புதமாக சமைப்பாள். அவளை வேலைக்கு அனுப்பவில்லை! ஏறத்தாழ வீட்டு நிர்வாகம் முழுக்கக் கல்யாணிதான்! அந்த வீட்டில் உள்ள எல்லாரையும் கல்யாணி அதிகமாக நேசித்தாள்.

    இன்று விக்ரம் வருகிறான்.

    நேற்று இரவே - அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்தாள், அம்மா. விக்ரம் வந்து ஒரு வாரத்துல கல்யாணப் பேச்சை எடுத்துடலாம். ஒரு நல்ல நாள்ல தாம்பூலம் மாத்திக்கிட்டா, சீக்கிரமா கல்யாணம் செஞ்சிடலாம்!

    விக்ரமைக் கேக்கணும்!

    கேக்க என்ன இருக்கு? இது எப்பவோ முடிவான சங்கதி! அவனுக்கும் அது தெரியும்!

    அப்படி இல்லைம்மா! மூணு ஆண்டு வெளிநாட்டுல இருந்துட்டு வர்றான்!

    என் பிள்ளையைப் பற்றி எனக்கு நம்பிக்கை உண்டு!

    நான் வேண்டாம்னா சொல்றேன். அவசரப்படாதே! தலைக்கு உசந்த பிள்ளை! அவன் வாழ்க்கை, இது! முடிவுகளை நாம எடுத்துட்டு அவன்கிட்ட பேசுறது நாகரீகமில்லை! அவனைக் கேக்கணும்!

    கேட்டுடுங்க! கல்யாணி தவிர, யார் இந்த வீட்டு மருமகளா வந்தாலும், வீடு சந்தோஷமா இருக்காது! இந்த வீட்டை, உறவுகளை, உணர்வுகளை புரிஞ்சுகிட்டவ அவ ஒருத்திதான்! இப்பக்கூட வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது! புரியுதா?

    சரி விடு! நாளைக்கு விக்ரம் வரட்டும்! அப்புறமா பேசிக்கலாம்!

    விக்ரம் வரப்போகிறான்!

    விமான நிலையத்துக்கு அப்பா, அம்மா, சகோதரிகள் புறப்பட்டார்கள்.

    கல்யாணி! நீயும் புறப்படு!

    வேண்டாம் அத்தே!

    என்னடீ நீ? ஏன் வரலை?

    ஆரத்தி தயாரா இருக்கணும்! அத்தானுக்கு பசிக்கும்! வந்ததும் சாப்பிடுவார். நான் பார்த்துக்கிறேன். இங்கே தானே வரப்போறார்? நீங்களெல்லாம் போயிட்டு வாங்க!

    அம்மா அவளை பெருமிதத்துடன் பார்த்தாள். அருகில் வந்து முத்தமிட்டாள்.

    இத்தனை பொறுப்புள்ள உனக்கு கழுத்துல தாலி ஏறவேண்டிய நேரம் வந்தாச்சு

    கல்யாணி வெட்கத்துடன் சிரித்தாள்.

    குடும்பம் மொத்தமும் காரில் ஏறிப் புறப்பட்டது.

    கல்யாணி உள்ளே வந்தாள். மேசை மேல் விக்ரமின் அழகான வண்ண புகைப்படம் இருந்தது அதையே பார்த்தாள்.

    எடுத்து, ஆசையாய் முத்தமிட்டாள்! –

    "மூணு ஆண்டா நான் சரியா தூங்கலை! சரியா சாப்பிடலை! எந்த நேரமும் உன் நெனப்புதான்! நீயும் என்னை ஞாபகம் வச்சிக்கியா, அத்தான்?’–

    'நீ ஒல்லியா பழைய மாதிரி இருக்கியா? இல்லை, குண்டாயிட்டியா? நான் சுவையான சாப்பாடு போட்டு, உன்னை சதை போட வைக்கிறேன்! உன்னை நான் குண்டாக்குகிறேன். பதிலுக்கு என்னை நீ? சீச்சீ! போ!

    Enjoying the preview?
    Page 1 of 1