Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavil Vanthaval!
Kanavil Vanthaval!
Kanavil Vanthaval!
Ebook102 pages40 minutes

Kanavil Vanthaval!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விசாலி தனது தந்தை மற்றும் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்து வந்தாள். வங்கியில் வேலைக்குச் சேர்ந்து தன் குடும்பத்தை கவனிக்கிறாள்.

வங்கியின் மேலாளரான, பிரசாந்த் உமாவை திருமணம் செய்து உஷா என்ற அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. சந்தோஷம் நிறைந்த இவர்களது வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன? உஷாவிற்காக பிரசாந்த் எடுக்கும் முடிவு என்ன? பிரசாந்த் விசாலி இணைந்தார்களா? கனவில் வந்தவளை தேடி…

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580100607871
Kanavil Vanthaval!

Read more from Devibala

Related to Kanavil Vanthaval!

Related ebooks

Reviews for Kanavil Vanthaval!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavil Vanthaval! - Devibala

    http://www.pustaka.co.in

    கனவில் வந்தவள்!

    Kanavil Vanthaval!

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    விசுக்கென எழுந்து உட்கார்ந்தாள் விசாலி!

    அவள் உட்கார்ந்த நொடியில் அலாரம் அடித்தது!

    காலை மணி நாலரை!

    அப்பா அப்போதுதான் பாத்ரூம் போய்விட்டு உள்ளே வருவது தெரிந்தது.

    விசாலி எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிந்துகொண்டு, உள்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    ‘எத்தனை அழகான பெண்!’

    ‘கனவில் வந்த பெண் - மகாலக்ஷ்மி போல இருந்தாள். பட்டுச் சேலைக்ச்கட்டி, தலையில் பூச்சூடி - ஒரு கல்யாணப் பெண்போல களையாக இருந்தாள்!’

    ‘அவளுடன் ரொம்ப நாள் பழகியதைப் போல இருந்தது!’

    ‘கனவு கலைந்துவிட்டதே’ என்று ஆதங்கமாக இருந்தது!

    ‘விசாலி... வா! வா விசாலி தேன் குரலில் அவளது அழைப்பு! விசாலிக்குப் புரியவில்லை! இந்தக் கனவு விசாலிக்குப் பிடித்திருந்தது.’

    பல் தேய்த்துக் குளித்துவிட்டு, சமையல் கட்டுக்குள் விசாலி நுழைந்தாள்.

    பாலை அடுப்பில் வைத்தாள்.

    நேராக பூஜை அறைக்கு வந்து விளக்கை ஏற்றி நமஸ்கரித்தாள்.

    அப்பாவின் இருமல் தொடக்கி விட்டது.

    பத்தே நிமிடங்களில் சுடு தண்ணி தயாரித்துக் கொண்டு வந்தாள்.

    அப்பாவிடம் தந்தாள்.

    அவர் ஏதோ பேச வர, விசாலி தடுத்தாள்.

    எதுவும் பேசவேண்டாம். இருமல் அதிகமாகும்! பேசாமப் படுங்க.!

    உள்ளே வந்து வேலைகளை ஆரம்பித்துவிட்டாள்.

    வயதான - ரிட்டயரான அப்பா பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை! குடும்ப பாரம் காரணமாக முடியவில்லை!

    அண்ணன் சண்முகம்... தனியாரில் வேலை பார்க்கிறான். சுயமாக எதையும் சிந்திக்காத மனிதன்!

    அண்ணி ராஜி வந்தாள். அண்ணனது லேசான கோழைத்தனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுவிட்டாள்.

    அவனை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டாள். சுயநலத்தின் மொத்த உருவம் அவள்தான்!

    கணவனது கடமை இந்த வீட்டில் உண்டு என்பதை மழுங்கடித்து விட்டாள்.

    அதுமட்டுமல்ல! விசாலி வங்கியில் உத்தியோகம் பார்ப்பவள். கணிசமான சம்பளம்.

    அது வீட்டுக்கு வசதிகளைக் கொண்டுவருகிறது என்பது தெரிந்துவிட்டது. அழகாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள்.

    விசாலியின் சம்பளத்தில் குடும்பம் நடக்க, சண்முகத்தின் சம்பளம் நகைச்சீட்டு, புடவைச்சீட்டு என உருமாறியது! டெபாஸிட்டாக வங்கியில் ஏறியது! ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடமாட்டாள் ராஜி.

    அம்மா இறந்த பிறகு சமையல்கட்டு விசாலி கைக்கு வந்துவிட்டது! இன்னும் விடவில்லை!

    அப்பா பொருமத் தொடங்கி விட்டார்.

    வீட்ல உழைச்சிட்டு, உத்தியோகமும் பாத்துட்டு வர்ற உனக்கு என்னம்மா தலையெழுத்து?

    விசாலி சிரித்தபடி அவரை சமாதானப்படுத்திவிடுவாள்.

    அப்பா! இது நம்ம வீடு! செய்யறதுல தப்பே இல்லை கூடுமானவரைக்கும் சண்டை வேண்டாம்பா! விட்டுக்குடுத்துப் போயிடுவோம். அப்பத்தான் உறவுகள் நல்லா இருக்கும் மோதிக்கிட்டா, முகம் பார்க்க முடியாதப்பா!

    கல்யாண முயற்சிகளை அப்பா எடுத்தார்.

    விசாலி அதையும் தடுத்தாள்.

    கடன் வாங்கிக் கல்யாணம் நடத்தணும். அண்ணன் அடைக்க மாட்டான். அவ அடைக்க விடமாட்டா! அப்புறம் எதுக்கப்பா பிரச்சனை?

    அதுக்காக காலம் முழுக்க இப்படியே கன்னிகழியாம நீ இருப்பியா?

    தெரியலப்பா!

    இப்பவே உனக்கு இருபத்தி ஆறு! வேண்டாம்மா! என்னால ஜீரணிக்க முடியில!

    அப்பா! என் கழுத்துல ஒரு தாலி ஏறணும்னு யோகமிருந்தா நிச்சயமா அது ஏறும். யார் தடுத்தாலும் நிக்காது! நீங்க அமைதியா இருங்க! புரியுதாப்பா?

    அப்பா அதற்குமேல் பேசவில்லை!

    இதோ விசாலியின் வேலை தொடங்கிவிட்டது.

    அண்ணனுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை உஷா!

    அதைக் குளிப்பாட்டி, சீருடை போட்டு, சாப்பாடு ஊட்டி, பாடம் சொல்லித் தந்து, பள்ளிக்கூடத்தில் விட்டபிறகுதான் வங்கிக்குப் போவாள்.

    அத்தை என்றால் உஷாவுக்கு உயிர்.

    அம்மாகூட இரண்டாம் பட்சம்தான்.

    ராஜிக்கு இதில் எந்த ஈகோவும் இல்லை! குழந்தையை கவனிக்கும் பாரம் இல்லையே!

    ஏழு மணிக்குள் சமையல் முடிந்துவிட்டது.

    விசாலி போய் குழந்தையை எழுப்பினாள்.

    அதை பல்தேய்க்க வைத்துக் குளிப்பாட்டிய பிறகுதான் ராஜியே எழுந்து வந்தாள்.

    குழந்தைக்கு இட்லி ஊட்டத் தொடங்கினாள் விசாலி.

    "அத்தே! நாளைலேருந்து லீவு. வெளியூருக்கு எல்லாரும் போறாங்க! நாமளும்

    Enjoying the preview?
    Page 1 of 1