Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruttin Nizhalgal…!
Iruttin Nizhalgal…!
Iruttin Nizhalgal…!
Ebook76 pages35 minutes

Iruttin Nizhalgal…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604301
Iruttin Nizhalgal…!

Read more from Devibala

Related to Iruttin Nizhalgal…!

Related ebooks

Reviews for Iruttin Nizhalgal…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruttin Nizhalgal…! - Devibala

    http://www.pustaka.co.in

    இருட்டின் நிழல்கள்...!

    Iruttin Nizhalgal…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    நீ இந்த வேலைக்கு போகத்தான் வேணுமா அனு?

    தன் பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த அனு நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தாள்.

    இந்தக் கேள்வியை நீ பதினேழாவது தடவையை கேக்கறேம்மா உனக்கு என்ன பதில் சொல்லட்டும் நான்?

    அதுக்கில்லைடி. உள்ளூர்ல ஒரு இடத்துல உட்கார்ந்து வேலை செஞ்சாலோ, இல்லை டீச்சர் உத்யோகமோ இருந்தா தேவலை. ஊர், ஊரா டூர் போற வேலை பொம்மனாட்டிக்கு சரிப்படுமானு, கவலைப்படறேன். எங்கே நீ. தங்குவே? எப்படி சமாளிப்பே தனியா எனக்கு பயமா இருக்கம்மா!

    அனு சிரித்தாள்.

    அம்மா பொம்பளை எந்த உத்தியோகம் பாக்கலை? சொல்லு.

    இருந்தாலும்?

    சொல்லு! என்ன இருந்தாலும்? எது உன் பிரச்சனை?

    நாலு ஆம்பிங்களோட, வெளியூர்ல தனியா ஒரு கல்யாணமாகாத சின்னப் பொண்ணு.

    கெட்டுப் போயிருவேன்னு தோணுதா உனக்கு?

    அனூ...

    அம்மா! கெட்டுப் போக வெளியூர் போகணும்னு அவசியமில்லை. உள்ளூர்ல வீட்டுக்குள்ள கூட கெட்டுப் போகலாம். அதுக்கு மனசுதான் காரணம். என்னைப் பாதுகாத்துக்க எனக்குத்! தெரியும். நீ பயப்பட வேண்டாம்.

    அப்பா வந்து விட்டார்.

    என்ன உங்கம்மா புலம்பத் தொடங்கிட்டாளா?

    வேறென்ன?

    அவ பட்டிக்காடு. பொம்பளை முக்காடு போட்டுட்டு மூலைல நின்னு எட்டிப் பாக்கற காலத்துல இன்னமும் இருக்கா. குழந்தையை, நிம்மதியா புறப்படவிட மாட்டாளே!

    என்னங்க!

    என்னா?

    காலம் முன்னேறி, சந்திர மண்டலத்துக்கே. போனாலும், பொம்பளை. பொம்பள தான். கட்டுப்பாடுங்கற நூல் கையில இருக்கற வரைக்கும்தான். வாழ்க்கைங்றக பலூான் சரியான திசைல பறக்க முடியும். அந்த நூல் அறுந்துட்டா, பலூன் இலக்கு தெரியாம எங்கேயாவது போய் விழும். உள்ளே இருக்கற காற்றும் போய் உபயோகமில்லாம ஆகும். அப்புறம் உங்க இஷ்டம்!

    பார்த்தியா அனு? உங்கம்மா சினிமாவுக்கு வசனம் எழுதலாம். சும்மா இருக்கற நேரத்துல பக்கத்து வீட்ல ஓசி வீடியோ பாக்கற கோளாறு! சரி சரி உனக்கு ரயிலுக்கு நேரமாச்சு. நீ கிளம்பும்மா.

    எத்தனை நாள் டி டூர்?

    தெரியலைமா. நான் வேலைல சேர்ந்து இதுதானே முதல் டூர். போனாத் தெரியும்.

    அனு சூடிதாரை அணிந்து கொண்டு வெளிப்பட்டாள்.

    நான் ஸ்டேஷனுக்கு வரணுமாம்மா?

    வேணாம்பா. அவசியமில்லை அதுக்கு! தன் பெட்டியை எடுத்துக் கொண்டு, வாசலுக்கு வந்து அனு ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். அது புறப்பட்டது.

    அனு சென்ட்ரலை அடைவதற்குள்...

    அனு அவளது பெற்றோர்களுக்கு ஒரே மகள். அப்படியொன்றும் வசதியான குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் கடை நில ஊழியர். மாதம் ஆயிரத்து நானூறு ரூபாய் சம்பளம். மாதக், கடைசியில் காப்பிப் பொடி கடன் வாங்குமளவு இழுபறிதான்.

    ஆனாலும் அனுவை ஒரு ஆண் பிள்ளை போலத்தான் செல்லமாக வளர்த்தார்கள்.

    கடனை உடனை வாங்கி அவள் ஆசைகளை ஒன்று விடாமல் நிறைவேற்றத்தான் செய்தார்கள். அனு படிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேறினாள். அதிகப்படியான சில பல

    Enjoying the preview?
    Page 1 of 1