Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeyodu Vilaiyadum Thendral!
Theeyodu Vilaiyadum Thendral!
Theeyodu Vilaiyadum Thendral!
Ebook107 pages59 minutes

Theeyodu Vilaiyadum Thendral!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580100604386
Theeyodu Vilaiyadum Thendral!

Read more from Devibala

Related to Theeyodu Vilaiyadum Thendral!

Related ebooks

Reviews for Theeyodu Vilaiyadum Thendral!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeyodu Vilaiyadum Thendral! - Devibala

    http://www.pustaka.co.in

    தீயோடு விளையாடும் தென்றல்!

    Theeyodu Vilaiyadum Thendral!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அமுதாவைப் பெண் பார்க்க வந்தபோதே குமார் உறுதியாகச் சொல்லிவிட்டான்.

    உன்னைப் பிடிச்சிருக்கு! ஆனா, பெத்தவங்க எனக்கு ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்க அக்கா மாதவி. அவ எனக்கு அக்கா இல்லை. அம்மா மாதிரி! அவ மனசு கோணக்கூடாது. எங்க வீட்ல அவ வச்சதுதான் சட்டம். அவ சொல்றபடிதான் எல்லாமே நடக்கும். இதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

    திடமான குரலில் அவன் சொல்ல...

    அவளுக்கு அது பிடிக்கவில்லை!

    அமுதா 'எம்.எஸ்சி. பயோ கெமிஸ்டரி' படித்து, பெரிய கம்பெனியில் ஆராய்ச்சி தொடர்பான வேலையில் மாதம் முப்பத்தி ஐந்தாயிரம் சம்பளம். அழகான பெண். 24 வயது. அப்பா, அம்மா, ஒரு தம்பி.

    அப்பா... பள்ளிக்கூட வாத்தியார். அம்மா... குடும்பத் தலைவி. 'மிடில்கிளாஸ்' குடும்பம். ஏழு வயது இளையவனான தம்பி, படிப்பது 12-ம் வகுப்பு. சொந்தமாக 700 சதுர அடியில் புறநகர் பகுதியில் வீடு.

    பெரிதாக சேமிப்பு இல்லை. கல்யாணமே கடன் வாங்கித்தான் நடக்க வேண்டும். 2 வருடங்களாக அமுதா சம்பாதிக்கும் பணத்தால்தான் வீட்டில் செழிப்பு. அப்பா 'சர்வீசில்' சிரமமான வாழ்க்கைதான்!

    வரன் பார்க்க... இந்த இடம் நெருங்கிவிட்டது!

    குமார் எம்.பி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் அதிகாரி. 27 வயது. ஐம்பதாயிரம் சம்பளம். அப்பா... 'இன்கம்டாக்ஸ்' அதிகாரி. அம்மா... வங்கியில் அதிகாரி. நகரின் மையத்தில் ஆயிரத்து நானூறு சதுர அடிக்கு வீடு-கார் எல்லாம் உண்டு.

    அக்கா மாதவிக்கு கல்யாணமாகி ஒரே குழந்தை! அவளும், கணவனும் வேலைக்குப் போகிறார்கள்.

    ஜாதகம் பொருந்த...

    கொஞ்சம் 'அப்பர் மிடில் கிளாஸ்' ஆச்சே! எங்களைவிடப் பெரிய இடம். அதிகம் எதிர்பார்த்தா செய்ய முடியாது.

    அமுதாவின் அம்மா சொல்ல...

    இல்லேம்மா! 'டீசண்டா’ன குடும்பம். பணத்தாசை இல்லை. பரஸ்பரம் பிடிச்சு, பேசிப் பார்த்துட்டா தெரியுது!

    இருவீட்டாரும் பேச... 2 பக்கமும் புகைப்படம் வர,

    குமார் ஓடிசலாக, வெள்ளையாக அழகாக இருந்தான்.

    அமுதாவின் அழகுக்கு கேட்கவே வேண்டாம்!

    குமார், முதலில் அக்கா மாதவியிடம் காட்டினான்.

    உனக்குப் பிடிச்சிருக்காக்கா?

    டேய்... கல்யாணம் உனக்குடா! முதல்ல உனக்குப் பிடிக்கணும்.

    எனக்கு எது பிடிக்கும்னு உனக்குத்தானே தெரியும்? நீ சொல்லு.

    மாதவியின் முகத்தில் கர்வம் கூத்தாடியது!

    என் தம்பி, நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்!

    அழகா இருக்கா! படிப்பு, உத்தியோகம் எல்லாம் இருக்கு. ஆனா, உன்னைவிட ஒரு படி குறைச்சல்! அப்படித்தான் இருக்கணும். பேசலாம்.

    வசதி கம்மிதான் மாதவி! - அப்பா சொல்ல...

    இருக்கட்டும்ப்பா! நம்மைவிட மேலே இருந்தா... வர்றவளுக்கு திமிர் தலை தூக்கும். அது கூடவே கூடாது!

    சரிடி... இவனுக்கும், நம்ம குடும்பத்துக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கோ?-அப்பா கேட்க...

    பெண் பார்க்கப் போலாம். நம்ம குடும்பத்தோட பாசத்தை அவகிட்ட பேசிப் புரிய வைப்பான்.

    மறைமுகமாக அவனை எச்சரித்துவிட்டாள் மாதவி.

    அதை அப்படியே குமார் ஒப்புவித்துவிட்டான்.

    அதுகூட எப்படி?

    முதலில் வந்து உட்கார்ந்து, காப்பி குடித்து, அமுதா வந்து வணங்கி, மாதவி ஏராளமான கேள்விகள் கேட்ட பிறகு,

    உன்கிட்ட என் தம்பி தனியா பேசணும்.

    சரி!

    அக்கா... நீயும் வா.

    டேய்... கட்டிக்கப் போறது நீ. நான் எதுக்கு உன்கூட? 'சாரி’ங்க... என் தம்பி இப்படித்தான்! நான் இல்லாம வலது காலைக்கூட எடுத்து வைக்க மாட்டான். போடா... போய்ச் பேசு.

    அவள் அனுமதித்த பிறகே உள்ளே வந்து அக்கா புராணத்தைப் படித்தான்.

    அமுதாவுக்கு கடுப்பாகிவிட்டது!

    அவள் திடமான பெண். நல்ல புத்திசாலி. தன் மூளை பலத்தால், தன்னம்பிக்கையால் சாதிக்க நினைப்பவள்.

    அப்பாவுக்கும் அதிக செலவு வைக்காமல் 'ஸ்காலர் ஷிப்’பில் படித்து வந்தவள்.

    எதுவும் நியாயமாக நடக்க வேண்டும்!

    அல்லாமல் தப்பாக நடந்தால் பிடிக்காது!!

    இனிமே நீ பேசலாம் அமுதா!

    நாம் தனியாப் பேசினாலும், பெரியவங்ககிட்ட ரெண்டு பேருமே கலந்து பேசணும். அப்புறம்தானே முடிவு?

    நான் வெளியில போய் அக்காகிட்ட என் கருத்தைச் சொல்லிட்டு, அவ 'சரி'ன்னா மேற்கொண்டு பேசிடலாம்.

    அப்ப என் விருப்பம் முக்கியம் இல்லையா?

    நீ சொல்லு!

    எங்க அப்பா-அம்மாகிட்ட பேசிட்டுச் சொல்றேன்!

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    அவங்க பேசட்டும். உள்ளே வாங்க.-அமுதாவின் அம்மா...

    அப்பாவை அழைத்துக்கொண்டு வர,

    வெளியே...

    நீ என்ன சொன்ன?

    அவன் ஒப்பித்தான்.

    மாதவி முகத்தில் பெருமை.

    அவ என்ன சொன்னா?

    நானும் எங்க அப்பா, அம்மாகிட்டப் பேசிட்டுச் சொல்றேன்னா!

    அவங்க வேண்டாம்னா சொல்லப் போறாங்க? இந்த மாதிரி பெரிய இடம் கிடைக்குமா என்ன? அப்பா... முதல்ல நாம வாயை விட வேணாம். அவங்க வெளியில் வந்து மூணு பேருக்கும் பிடிச்சிருந்தா... அப்புறமா பேசத் தொடங்கலாம்.

    சரி மாதவி!

    உள்ளே...

    அப்பா... இந்த வரன் வேணாம்!

    ஏன் அமுதா?

    குமார் பேசியதை அவள் சொல்ல...

    "விடுடி! எப்பவுமே ஆம்பளைங்க இப்படித்தான் இருப்பாங்க. கழுத்துல தாலி ஏறி, பெண்டாட்டிகூட ஒரு ராத்திரியைக் கழிச்சா

    Enjoying the preview?
    Page 1 of 1