Ilakku
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Charumma Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Vidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Su(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Madiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ilakku
Related ebooks
Poiththaan Aaganum Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5Thaanaagath Thriyum Rating: 0 out of 5 stars0 ratingsIru Vizhi Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsIlamaikku Perumai 1 Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Neril Vandha Deivam! Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisivarai Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsKaasalavu Nesam! Rating: 0 out of 5 stars0 ratingsKelvi Pirakatum Rating: 0 out of 5 stars0 ratingsNaanal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Aaniver Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsAkkarai Patchai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ilakku
0 ratings0 reviews
Book preview
Ilakku - Devibala
16
1
பாபு உள்ளே நுழையும்போதே குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டது! அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
பாபு சோபாவில் உட்கார்ந்து ஷூக்களை அவிழ்க்கத் தொடங்கினான்.
அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மா புலம்பியபடி வெளியே வந்தாள்.
வயசான காலத்துல ஒரு பக்கம் வெந்ததைத் தின்னுட்டு நிம்மதியா விழுந்து கிடக்க முடியுதா? புள்ளையைப் பாத்துக்கற கஷ்டம். இந்த வயசு புள்ளையை வளர்க்கற வயசா? முடியலைடா சாமி! இதை விட ஏதாவதொரு இல்லத்துக்குப் போயிடலாம் போலிருக்கு!
பாபு எதுவும் பேசாமல் சட்டையைக் கழட்டினான்!
முடியலை! ஒடம்பு ஒத்துழைக்கலை!
பாபு பர்முடாஸுக்கு மாறி, பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
நீ பாட்டுக்கு புலம்பிக்கிட்டே இருக்கே! அவன் பேசாம போறான் பார்த்தியா?
அவன் என்னங்க செய்வான்? பத்து மாசம் இதை சுமந்து பெத்தவளுக்கே அந்தப் பொறுப்பு இல்லை! இவன் ஆம்பிளை என்ன செய்ய முடியும்?
பாபு காதில் சகலமும் விழுந்தது!
எதுவும் பேச முடியாது!
பாபுவுக்குக் கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது! கூட்டுக் குடும்பம்! இது முதல் குழந்தை! பத்து மாதத் குழந்தை!
பாபுவின் மனைவி சுமித்ரா ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் உத்யோகம். பி.ஈ. படித்தவள். மாதச் சம்பளம் அறுபதாயிரத்துக்கு மேல். பொறுப்பான வேலை! வீடு திரும்ப தினசரி இரவு பத்து மணி ஆகிவிடும். பாபு வங்கியில் அதிகாரி. அதனால் எட்டு மணிக்குள் வந்துவிடுவான்!
இந்தக் குழந்தை பிறக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை!
இது பிறந்து, பகல் நேரம் அம்மா பராமரிக்க வேண்டும் என்ற நிலை வந்ததும் - பிரச்னை தொடங்கிவிட்டது!
அவள் வேலையை விடச் சொல்லு!
எப்படீம்மா? நான் சம்பாதிக்கறதை விட ரெண்டு மடங்கு சம்பாதிக்கறா! குடும்பத்துத் தேவைகள் நிறைய இருக்கு! விட முடியுமா? சமையலுக்கு, வீட்டு பராமரிப்புக்கு ஆளை ஏற்பாடு பண்ணிடலாம். குழந்தையை மட்டும் நீ பார்த்துக்கோ!
குழந்தை வளர்ப்புதான் கஷ்டம்!
சரி! பேபி ஸிட்டர்கள் நிறையப் பேர் இருக்காங்க! குழந்தையை ஒப்படைக்கலாம்!
அதெல்லாம் கூடாது! நம்ம புள்ளையை மத்தவங்க வளர்த்தா, பாசம் விட்டுப் போயிடும்!
நீ ரெண்டும் சொன்னா எப்படீம்மா?
சொல்ல வேண்டியது உன் மனைவி சுமி!
இரவு அவளிடம் பாபு ஆரம்பித்தான்.
பெரியவங்களுக்கு பாத்துக்கணும்னு அவசியம் இல்லை! புள்ளை நம்முது! நீ பேசாம இருந்தா எப்படி சுமி?
இதப்பாருங்க! நல்ல உத்யோகத்தை நான் விட முடியாது. உங்கம்மா கஷ்டப்பட வேண்டாம். எல்லாத்துக்கும் ஆள் போடலாம்னு சொல்றேன். அதுக்கும் ஒப்புக்கலைனா நான் பேசி என்ன லாபம்?
இப்ப என்ன செய்யறது?
கோவப்படாதீங்க! உங்கம்மா ஆரோக்யமாத்தான் இருக்காங்க! உங்கப்பா ரிடையராயிட்டு வீட்லதான் இருக்கார். உங்க புள்ளைதானே? பொறுப்பு அவங்களுக்கு இல்லையா? பாத்துக்கட்டும்!
ஏய்! நீ இப்படி பேசறது அவங்க காதுல விழுந்தா, வீட்ல புயல் வீசும்!
இதப்பாருங்க! கடமை, பொறுப்புனா அது ஒரு குடும்பத்துல எல்லாருக்கும் உண்டு! புரியுதா?
பாபு பேசவில்லை!
பாபு சுமித்ராவை எதிர்த்து எப்போதுமே பேசமாட்டான்.
முதல் காரணம், காதல் கல்யாணம்; ரெண்டாவது அவனைவிட, சுமி அதிகம் சம்பாதிப்பவள்! மூன்றாவது சுமி குடும்பத்தில் பெரியவர்களை எதிர்த்தும் பேசமாட்டாள். அதேசமயம் தான் பிடித்த பிடியை விடமாட்டாள். அதிலிருந்து மாறவும் மாட்டாள்.
இரண்டு பேர் உத்யோகம் பார்க்கும் குடும்பங்களில் இந்தக் குழந்தைப் பராமரிப்பு ஒரு பெரிய பிரச்னை!
இதை அத்தனை சுலபத்தில் தீர்க்க முடியவில்லை!
சில நாட்கள் அப்பா, அம்மாவின் கோபம் தீவிரமாக இருக்கும். சில சமயம் கட்டுக்குள் இருக்கும்.
சுமியின் பிறந்த வீடு பெங்களூரில். இங்கே அவளுக்கு யாரும் இல்லை.
பாபு குழந்தையை வாங்கிக் கொண்டான். கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் வைத்துக் கொஞ்சினான்.
அதன் பிறகு அம்மா குழந்தையை வாங்கிக் கொண்டு போய் சாப்பாடு ஊட்டி, உறங்க வைத்துவிட்டாள்.
பாவம்! வயசான காலத்துல ஓய்வுல இருக்கணும்! பல பெற்றவர்களுக்கு இந்தக் காலத்தில் அது முடிவதில்லை!
நேரம் இரவு எட்டரை!
பாபு! உனக்கு சப்பாத்தி போடட்டுமா?
சரிம்மா! அம்மா! சமையலுக்காவது ஒரு ஆளை போடறேனே!
உங்கப்பாவுக்கு வெளி நபர் சமையல்கட்டுக்குள்ளே வந்து வேலை செஞ்சா பிடிக்காதுடா!
இப்படி எல்லாத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் பிடிவாதம் புடிச்சா எப்படீம்மா?
அப்பா வந்துவிட்டார்.
யாருடா பிடிவாதம் புடிக்கறது? உன் பொண்டாட்டி காலைல ஏழரைக்கு புறப்பட்டா, திரும்ப ராத்திரி பத்தாகுது! நாங்களும் அவளை மாதிரி பொறுப்பில்லாம காலை உதறி நடக்க முடியுமா?
பாபுவுக்கு சுருக்கென வந்துவிட்டது!
அப்பா! அவளை நான் சப்போர்ட் பண்றதா நினைக்க வேண்டாம். பொறுப்பில்லாமனு சொல்லாதீங்க! அவ பீச்சுக்கோ, சினிமாவுக்கோ போகலை! கடுமையா உழைக்கறா! கஷ்டப்படறா! கை நிறைய சம்பாதிக்கறா!
யாருக்காக? எங்களுக்கா?
இல்லைப்பா! எனக்காக!
அப்படின்னா, நீதான் கஷ்டப்படணும். நாங்க எதுக்கு பாரம் சுமக்கணும்?
வேண்டாம்னுதானே சொல்றேன். எல்லாத்துக்கும் ஆள் ஏற்பாடு பண்றேன். நீங்க எதையும் செய்ய வேண்டாம்!
கண்டவங்க வந்து இந்த வீட்டுப் பொறுப்புகளை ஏத்துக்கிட்டா, நாங்க எதுக்கு?
பாரும்மா! இது நியாயமா? ரெண்டும் பேசினா எப்படி?
எனக்குப் பேசக் கத்துக் குடுக்கறியா?
வழக்கமான பேச்சு இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது! பாபு பதிலே பேசமாட்டான். அவனுக்கும் சூடாகிவிட்டது!
அம்மா பயந்துவிட்டாள்.
சரிங்க! விடுங்க! பாத்துக்கலாம்!
மாட்டேன். எத்தனை நாள் கஷ்டப்பட முடியும்? இதுக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்!
சொல்லுங்கப்பா! கட்டுப்படறேன்!
லக்ஷ்மி! நாளைக்கே நீ புறப்படு! காசி, ராமேஸ்வரம்னு ஒரு மாசம் கோயில்களை சுத்திட்டு வரலாம்.
சரிப்பா! நாங்க உங்களைத் தடுக்கலை! போயிட்டு வாங்க!
ஒரு மாசம் நாறினாத்தான் எங்க அருமை தெரியும்!
அப்பா! நீங்க இருக்கறது பெரிய உதவிதான். அதேசமயம், நீங்க இல்லைனாலும் நாங்க வாழ்ந்துதானே ஆகணும்?
பாத்தியாடீ பேச்சுல அகங்காரத்தை?
இல்லைப்பா! இது தன்னம்பிக்கை!
பேச்சு உச்சகட்டத்தை அடையும்போது சுமி வந்துவிட்டாள்.
உடை மாற்றிக் கொண்டே பேச்சை கவனிக்க, அவளுக்குப் புரிந்துவிட்டது!
சாப்பிட உட்கார்ந்தாள்!
சுமி! நாளைலேருந்து நீ லீவு போடணும். அப்பா, அம்மா ஊருக்குப் போறாங்களாம்!
அப்படியா? பாத்துக்கலாம்!
அப்பக்கூட அவ லீவு போடமாட்டா! நீதான் வீட்ல இருந்து புள்ளைய பாத்துக்கணும். நீயெல்லாம் ஒரு ஆம்பிளை! உன் இடத்துல நான் இருந்திருந்தா, பொண்டாட்டினு ஒருத்தி என்கூட வாழ முடியாது!
சுமித்ரா பார்த்தாள்.
"பாத்தியாடி! உன்னால நான் கேவலப்படறேன்! நீ ஆடி அசைஞ்சு தெனமும் பத்து மணிக்கு வர்றே! நான் இங்கே செருப்படி படறேன்! இவங்க ஒரு பக்கம் போகட்டும்! நானும் நாளைக்கு வெளில போனா, வீடு