Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaanaagath Thriyum
Thaanaagath Thriyum
Thaanaagath Thriyum
Ebook98 pages1 hour

Thaanaagath Thriyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465797
Thaanaagath Thriyum

Read more from Devibala

Related to Thaanaagath Thriyum

Related ebooks

Reviews for Thaanaagath Thriyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaanaagath Thriyum - Devibala

    20

    1

    துரையால் புறக்கணிக்கப்பட்டு வெளியே வந்த பாஸ்கி, நேராக தன் வீட்டுக்கு வந்தான். கையில் இருந்த காசில் ஒயின் ஷாப்புக்குப் போய் ஒரு ரவுண்ட் ஏற்றிக்கொண்டான்.

    நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்!

    அப்படியே படுத்துவிட்டான்!

    வேலையில்லை என்றதும் சுற்றியிருந்த ஜால்ராக் கூட்டம் மொத்தமும் சிதறிவிட்டது!

    பாஸ்கிக்கு பசி எடுத்தது. எழுந்து சமையல் கட்டுக்கு வந்தான். எல்லாம் காலி!

    விதம்விதமாக சமைத்துத் தருவாள் யமுனா!

    அவளும் இல்லை!

    ‘யமுனா - ஸ்நேகிதி வீட்டுக்குப் போனவள் - வருவாளா? மாட்டாளா?’

    ‘வருவாள் - ஒரு கோபத்தில் போய்விட்டாள். கண்டிப்பாக வருவாள்!’

    படுத்து பசியுடன் பாஸ்கி உறங்கிவிட்டான்!

    அதே நேரம் தோழி வீட்டில் உணவு மேஜையின் முன் யமுனா உட்கார்ந்திருந்தாள்.

    யமுனா! சாப்பிடும்மா!

    சாப்பிடப் பிடிக்கலை!

    என்ன சொல்ற நீ?

    பாஸ்கி இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்காரோ? தெரியலையே!

    வந்த முதல் இதையேதான் நீ புலம்பிக்கிட்டு இருக்கே! அப்ப நீ வந்திருக்கக்கூடாது!

    இல்லை சித்ரா! அவருக்கொரு பாடம் கற்பிக்கணும். அதுல என் பங்கு முக்கியம். ஆட்டம் உச்சத்துல இருந்திருக்கு! அதுக்கொரு முடிவு வர வேண்டாமா? இப்ப வந்திருக்கு! அவர் தனிமைல தவிக்கணும்!

    விடு! விட்டுட்டு நீ சாப்பிடு!

    ஆனா பயம்மா இருக்கு!

    என்ன பயம்?

    தனிமை அதிகமானா, இன்னும் குடிப்பார். இப்ப ஒரு வாரத்துக்குக் கையில் பணம் இருக்கும். அது தீர்ந்ததும் என்ன செய்வார்னு பாக்கணும்!

    இதப்பாரு! தண்ணில தள்ளி விட்டா, தானே நீச்சல் வரும்! நீ பொறுமையா இரு!

    அன்று இரவு முழுக்க யமுனா உறங்கவில்லை!

    மறுநாள் காலை எழுந்து குளித்து ஆபீசுக்கு புறப்பட்டாள்.

    துரையின் வீட்டு வழியாகத்தான் அவள் ஆபீசுக்கு புறப்பட வேண்டும்!

    அந்த வீட்டு வாசலில் அவள் செல்லும் ஆட்டோ பிரேக் டவுன் ஆகிவிட்டது!

    போகாதும்மா! வேற வண்டி புடிச்சுக்குங்க!

    யமுனா இறங்கிப் பணத்தைக் கொடுத்தாள்; திரும்பினாள்!

    துரை வெளியே வந்து கொண்டிருந்தார். யமுனாவைப் பார்த்துவிட்டார்.

    யமுனாவுக்குத் தாங்க முடியாத குற்ற உணர்ச்சி. துரை அருகில் வந்துவிட்டார்.

    யமுனா! என்னம்மா இங்கே நிக்கற?

    ஆட்டோ நின்னு போச்சு!

    வீட்டுக்கு வாம்மா! ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்!

    இல்லை சார். ஆபீசுக்கு டயமாயிடும்!

    உன்னை நான் கார்ல ட்ராப் பண்றேன். உள்ளே வா!

    யமுனா அவருடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

    துரையின் மனைவி கல்பனா யமுனாவை வரவேற்றாள்.

    எப்படி இருக்கே யமுனா?

    யமுனா மெதுவாக அழத் தொடங்கினாள்.

    ஏம்மா அழற?

    நான் எப்படி சார் இருப்பேன்? எல்லாரும் நல்லா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

    இருவரும் பேசவில்லை!

    அகங்காரம் புடிச்சு, இருக்கற தொழிலை - நல்ல நட்பை - எதிர்காலத்தை பாஸ்கி இழந்தாச்சு! குடியைத் தவிர மீதி எல்லாத்தையும் விட்டாச்சு! எனக்கும் ஆத்திரம் தாங்க முடியாமல்தான் கொஞ்ச நாள் ஸ்நேகிதி வீட்ல இருந்துட்டு வர்றேன்னு புறப்பட்டேன். ஆனா மனசு கேக்கலை! தனியா இருந்தா குடிப்பழக்கம் அதிகமாகும்! பயம்மா இருக்கு!

    கைல பணம் இருக்கா அவனுக்கு?

    அதிக பட்சம் ஒரு வாரத்துக்குத் தாங்கும்!

    மீதியை உன் பேர்ல டெபாஸிட்டா நீ வச்சிருக்கியா?

    இல்லைண்ணா! ஒரு நிலமா வாங்கி வச்சிட்டேன். பாஸ்கி பேர்லதான். ஆத்திரத்துல பத்திரத்தைக்கூட அவர்கிட்டக் குடுத்துட்டு வந்துட்டேன்!

    அதை வித்துடப் போறார்! கல்பனா சின்னக் குரலில் சொன்னாள்.

    அது தான்கா நடக்கும்! உடனே வேலை தேட மாட்டார். இருக்கறதை வித்துக் குடிக்கற புத்திதான் வரும்!

    தடுக்க முடியாதா?

    நான் அந்த வீட்டுக்குப் போகணும். அவரை நெனச்சா, கவலையாவும் இருக்கு. அதே சமயம் என் வீட்டுக்குப் போக எனக்குப் பிடிக்கவும் இல்லை! ஒழுங்கா இருந்து, சம்பாதிச்சுக்கிட்டிருந்தா, ஒரு வீடு வாசல்னு சேர்த்திருக்கலாம். சரி! அதுக்கெல்லாம் ஒரு யோகம் வர வேண்டாமா?

    கல்பனா தந்த காபியைக் குடித்துவிட்டு யமுனா எழுந்தாள்.

    யமுனா! நீ எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம். இது உன் பிறந்த வீடுனு நினைச்சுக்கோ!

    துரை சொல்ல,

    யமுனாவின் கண்கள் கலங்கியது!

    சரிண்ணா! அவரை மனசுல நெனச்சுகிட்டு என்னையும் நீங்க வெறுத்துடுவீங்களோனு நெனச்சேன்!

    யமுனா! நீ என்னை சரியாப் புரிஞ்சுக்கலை!

    என்ன சொல்றீங்க?

    அவனையே இப்பக்கூட நான் வெறுக்கலை! எல்லாத்தையும் இழந்து இந்த வீட்டு வாசலுக்கு அவன் வந்தப்ப, விரட்டித்தான் விட்டேன். ஆனா அன்னிக்கு ராத்திரி முழுக்க நான் தூங்கலை தெரியுமா?

    யமுனா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

    "நானும், அவனும் சேர்ந்து வேலை செய்யறது இந்த ஜென்மத்துல இல்லை! ஆனா அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1