Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maavilakku!
Maavilakku!
Maavilakku!
Ebook136 pages1 hour

Maavilakku!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606198
Maavilakku!

Read more from Devibala

Related to Maavilakku!

Related ebooks

Reviews for Maavilakku!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maavilakku! - Devibala

    http://www.pustaka.co.in

    மாவிளக்கு!

    Maavilakku!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    *****

    அத்தியாயம் 1

    அர்ஜூன் காலை எட்டரை மணிக்கு ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான்!

    என்னங்க! நீங்க ரெடியா? தோசை ஊத்தட்டுமா?

    ம்! ரெண்டே ரெண்டு போடு அமலா! நேரமாச்சு!

    உள்ளே வந்து தன் ஐடிகார்ட், பர்ஸ், மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டான்!

    அவனது ரெண்டு வயதுக் குழந்தை நிஷா நல்ல உறக்கத்தில் இருந்தது! விழித்தால் ஆபத்து! அவனைப் போக விடாது! அடம் பிடிக்கும்! பால் போன்ற அந்த முகத்தைப் பார்த்த போது மடியில் கிடத்தி ஆழமாக முத்தமிடத் தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு வெளியே வந்தான்!

    அர்ஜுன் முப்பது வயது இளைஞன்! இந்த வயதில் நாலைந்து டிகிரிகளுக்கு சொந்தக்காரன்! அசாத்திய புத்திசாலி! தனியார் நிறுவனமொன்றில் லட்சத்தில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி!

    அவன் மனைவி அமலா 27 வயது! அவளும் எம்.காம் படித்தவள். ஒரு தனியார் வங்கியில் வேலையில் இருந்தவள்! நிஷா உண்டான பிறகு கர்ப்பத்தில் சிக்கல் இருந்ததால் வேலைக்குப் போக முடியவில்லை. அதன்பிறகு பிரசவம் - குழந்தை வளர்ப்பு எனப் போய்விட்டதால், வேலைக்கே போக முடியவில்லை.

    பரவாயில்லை அமலா! நான் கை நிறைய சம்பாதிக்கறேன்! நீ போகணும்னு இல்லை குழந்தையை கவனி!

    எப்போதோ சொல்லி விட்டான்!

    சென்னையில் ஒரு அடுக்குமாடி போர்ஷனுக்கு பத்தாயிரம் வாடகை கொடுத்து வாழ்க்கை!

    அமலாவின் பெற்றவர்கள் டெல்லியில் பிள்ளையிடம்.

    அர்ஜூன் அப்பா, அம்மா பெங்களூரில்!

    அர்ஜூன் கட்டிய சொந்த வீட்டில் குடித்தனம்!

    "அர்ஜூன் உணவு மேஜைக்கு வர, அமலா சூடான தோசைகளைப் போட,

    அமல்! இந்த வாரக் கடைசில திருப்பதிக்குப் போயிட்டு வரலாமா? முடிஞ்சா நெட்ல புக் பண்ணேன்!

    இது குளிர்காலம்! நிஷாவுக்கு சேருமா?

    அதெல்லாம் பிரச்சனையில்லை! ஒரே நாள்ள போயிட்டு வரப் போறோம்!

    சரிங்க!

    அடுத்த தோசையை போடும் போது, போன் அடித்தது.

    அமலா போய் எடுத்தாள்! அடுத்த நொடியே முகம் மாறியது!

    கூப்பிடறேன் அத்தே!

    அர்ஜூன் முகமும் மாறி விட்டது! எழுந்து வந்தான்!

    சொல்லும்மா!

    "அர்ஜூன்! இன்னிக்கு காலைல உங்கப்பாவுக்கு பிக்ஸ் மாதி வந்து, கல்பனாவைக் கூப்பிடக் கூட நேரமில்லை! பக்கத்து வீட்டுக்காரங்களை எழுப்பி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்கேன்!

    டாக்டர்கள் டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க! ICUல தான் அப்பா இருக்கார். இப்பத்தான் கல்பனா வந்தா! அவகிட்டப் பேசு!"

    ரிசிவர் கைமாற,

    தம்பி! அம்மா படற பாடு கொஞ்சமில்லை இங்கே? நரக வேதனை! நீங்க ரெண்டு பேரும் உடனே புறப்பட்டு வாங்க!

    அக்கா! இந்த ஆறு மாசத்துல நாலு தடவை நான் வந்தாச்சு! கம்பெனில லீவு தரமாட்டாங்க! ரொம்பக் கஷ்டம்! நீ இருக்கியே சமாளிக்கா!

    என்னடா பேசற நீ? உங்க மாமா, மாசத்துல 25 நாளும் வெளியூர் டூர் ஆபிஸ் வேலையா, புள்ளைங்களை அம்போனு விட்டுட்டு, ஆஸ்பத்திரில நான் ஒக்கார முடியுமா? அம்மாவை அனாதை மாதிரி விட முடியுமா அர்ஜூன்! நீதானே பிள்ளை? பொறுப்பை நீதான் ஏத்துக்கணும்? ராத்திரிக்குள்ளே வந்து சேருங்க! அதுவரைக்கும் எப்படியாவது நான் சமாளிக்கறேன்!

    ரிசிவரை வைத்து விட்டாள்!

    அர்ஜூன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்!

    என்னங்க!

    அப்பா மறுபடியும் அட்மிட் ICUல இருக்கார்! இந்த ஆறு மாசத்துல ஒண்ணுமில்லாம நாலு லட்சம் பணச் செலவு! என் லீவும் தீர்ந்தாச்சு! இப்ப மறுபடியும்?

    உங்கக்கா சமாளிக்க மாட்டாங்களா?

    அவதான் பேசறா! அவளுக்கும் குடும்பம் இருக்கே!

    நமக்கில்லையா? அவங்க லோக்கல்!

    அமல்! அதெல்லாம் பேசி லாபமில்லை. பொறுப்பும், கடமையும் நமக்கும். நாளைக்கு பேச்சு வரும்! இப்பப் போகலைனா, இத்தனை நாள் செஞ்சதெல்லாம் இல்லாம போகும்!

    சரி! என்ன பண்ணலாம்!

    நீ குழந்தையோட போயிட்டு வர்றியா?

    என்ன பேசறீங்க? நீங்க வந்தாத்தான் அவங்களுக்குப் பிடிக்கும். ஏதாவதொரு எமெர்ஜன்சினா, முடிவெடுக்கற பவர் எனக்கில்லையே? நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க! நம்ம குழந்தையை அலைக்கழிக்க வேண்டாம்!

    கடவுளே! நான் லீவுக்குச் சொல்லணும்! போன்ல சொன்னா, அசிங்கம்! நேர்ல போயிர்றேன்!

    அடுத்த போன்! இருவரும் பதறிப் போனார்கள்.

    அர்ஜூன் எடுத்தான்!

    நான் கல்பனா பேசறேன்!

    பிரச்சனையாக்கா?

    இப்ப இல்லடா! நீ மட்டும் வந்து நிக்காதே! அமலா, கூட்டிட்டு வந்துடு! வேளா வேளைக்கு சாப்பாடு ரெடி பண்ணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பனும்! வீட்டைப் பாத்துக்கணும்! அவ வந்தே ஆகணும்!

    சரி! வைத்தான்!

    என்னவாம்?

    நீ வந்துதான் ஆகணும்! விவரம் சொல்ல,

    வீட்டை பூட்டுப் போட்டுட்டு, உங்கக்கா அவங்க வீட்லேருந்து சமைச்சு கொண்டு வரக் கூடாதா? ஆஸ்பத்திரில ஒக்கார்ந்து அம்மா கூட அரட்டையைப் போட்டுட்டு, பிடிக்காத தலைகளை உருட்டணும்! அதானே?

    அமல்! இப்ப உன் கோவத்தை நீ காட்டினா, எனக்குத்தான் கஷ்டம்!

    இல்லீங்க! நீங்க பேசணும்! உங்க பிரச்சனைகளையும் எடுத்துச் சொல்லணும்! அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்! நீங்க எதுவும் பேசாம இருந்தா எப்படீங்க?

    அமல்! நான் ஒரே பிள்ளை! முடியாத அப்பானு வரும்போது விவாதம் பண்ணிட்டு இருக்க முடியுமா? அம்மாதான் அதை சரியாப் புரிஞ்சுபாங்களா? சரி! நான், போய் லீவு சொல்லிட்டு வர்றேன்! நீ நெட்ல பார்த்து பஸ் புக் பண்ணு, பேக் பண்ணி வை! குழந்தையை எழுப்பிக் குளிப்பாட்டு!

    அவன் புறப்பட்டு விட்டான்!

    அமலா, சிஸ்டத்தின் முன்பு உட்கார்ந்து விட்டாள்! பிற்பகல் 2.00 மணிக்கு பெங்களூர் செல்லும் பேருந்தில் இடம் இருந்தது! பதிவு செய்து விட்டு, உடனே செல்போனில் அர்ஜூனுக்கு சொல்லிவிட்டாள்!

    பிறகு பெட்டியை எடுத்து துணிமணிகளை அடுக்கத் தொடங்கினாள்!

    காலிங் பெல் அடித்தது!

    போய்த் திறந்தாள்! எதிர் வீட்டு சரண்யா!

    வாங்க சரண்யா!

    நாளை மறுநாள் நம்ம வீட்ல ஒரு சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன்! தை வெள்ளிக்கிழமை! மாவிளக்கும் போடறோம்! நீங்களும் ஏழு சுமங்கலிகள்ள ஒருத்தர்!

    குங்குமம் நீட்டினாள்!

    அமலா எடுத்துக் கொண்டாள்!

    ஸாரி சரண்யா! வேற யாரையாவது ஏற்பாடு பண்ணுங்க!

    என்னாச்சு?

    ஊருக்குக் கிளம்பறோம்! 2 மணி பஸ்! அவர் லீவு சொல்லப் போயிருக்கார்!

    என்ன திடீர்னு?

    வழக்கம் போல மாமனார் அட்மிட்! காலைல போன்!

    Enjoying the preview?
    Page 1 of 1