Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mundhanai Pandhal
Mundhanai Pandhal
Mundhanai Pandhal
Ebook75 pages34 minutes

Mundhanai Pandhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மங்கலம் என்ற பெண் கணவன் இல்லாமல் பெரிய கம்பெனியை நடத்தி வருபவள். நல்ல ஒரு குணசாலியான பெண். அவளுக்கு ஊதாரியான ஒரு மகன். சொத்தை அபேஷ் போட நினைக்கும் மங்களத்தின் தம்பி மணி. இவர்களுக்கு இடையே மங்களத்துக்கு நேர்ந்தது என்ன? மகன் திருந்தினானா? வாருங்கள் வாசிப்போம் முந்தானை பந்தலை...

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580100610236
Mundhanai Pandhal

Read more from Devibala

Related to Mundhanai Pandhal

Related ebooks

Reviews for Mundhanai Pandhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mundhanai Pandhal - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முந்தானை பந்தல்

    Mundhanai Pandhal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு!

    அத்தியாயம் மூன்று!

    அத்தியாயம் நான்கு!

    அத்தியாயம் ஐந்து!

    அத்தியாயம் ஆறு!

    அத்தியாயம் ஏழு!

    அத்தியாயம் எட்டு!

    அத்தியாயம் ஒன்பது!

    அத்தியாயம் பத்து!

    அத்தியாயம் பதினொன்று!

    அத்தியாயம் பன்னிரண்டு!

    அத்தியாயம் பதின்மூன்று!

    அத்தியாயம் பதினான்கு!

    அத்தியாயம் ஒன்று

    கெரோனாவிலிருந்து அம்மா மீண்டு விட்டாள். ஆனால் நாற்பது சதவீதம் நுரையீரல் பாதித்து விட்டது என்று டாக்டர்கள் எச்சரித்து விட்டார்கள்.

    அவங்க மகன் கிட்ட பேசணும்! டாக்டர் சொல்ல, மங்களத்தின் தம்பி, மணி டாக்டரிடம் வந்தார்.

    எங்கிட்ட சொல்லுங்க டாக்டர். அக்காவை அட்மிட் பண்ணினது நான்தான். பதினஞ்சு நாள் க்வாரன்டைன் முடிஞ்சு ஆஸ்பத்திரி வாசல்ல நான் தவம் கிடக்கேன்! எங்கிட்ட சொல்லுங்க.

    அவங்களுக்கு எத்தனை பசங்க?

    இளங்கோ ஒருத்தன்தான். வேற பசங்க இல்லை.

    அப்ப அவர் கிட்டத்தான் பேசணும்!

    சரி! நினைவு வந்த பிறகு அக்கா என்ன சொல்றாங்களோ, அதன்படி செய்யறோம். மணி வெறுப்புடன் வெளியே வந்தார். ஃபோன் அடித்தார். இளங்கோ எடுக்கவேயில்லை. சலித்து போனது. டாக்டரிடம் அவனை விட்டுக்கொடுத்து பேச வேண்டாம் என பொறுமை காக்கிறார்.

    ஆஃபீஸ் தொடர்பான உயர் அதிகாரிகள் வந்து விட்டார்கள்.

    மேடத்துக்கு எப்படி இருக்கு?

    இன்னும் நினைவு திரும்பலை. சின்னவர் எங்கே இருக்கார்னு தெரியுமா? ஏதாவது தகவல் உண்டா?

    ஆளுக்கொரு தகவல் சொல்றாங்க. தெரியலை சார்.

    நானும் குழம்பி இருக்கேன். டாக்டர் என்னை துளைச்சு எடுக்கறார். என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை! நர்ஸ் வந்து அழைத்தாள். உள்ளே போனார்.

    மணிங்கறது யாரு?

    நான்தான்! அவங்க தம்பி. என்னம்மா?

    அவங்களுக்கு நினைவு வந்திருக்கு. உங்க பேரைத்தான் சொல்றாங்க.

    அவர் பதட்டமாக உள்ளே போனார். மங்களம் கண்கள் லேசாக திறந்திருக்க, அவரை சைகையால் அருகில் அழைத்தாள். அவர் நெருங்க, அவர் கேசத்தை மெல்ல தடவிக்கொடுத்தாள். மணிக்கு அழுகை பீறிட்டது.

    அக்கா! உனக்கு ஆபத்து விலகியாச்சு. நீ குணமாகி வீட்டுக்கு வருவே!

    மங்களம் தலையசைத்தாள்.

    அவங்க உணர்ச்சிவசப்படவும் வேண்டாம். பேசவும் வேண்டாம். மருந்துல இருக்காங்க. நீங்க வெளில இருங்க!

    நீங்க என்ன பேச நினைச்சாலும் எங்கிட்ட பேசுங்க டாக்டர். நானும் உங்ககிட்ட பேச தயாரா இருக்கேன்.

    சரி வாங்க!

    டாக்டரின் அறைக்குள் நுழைந்து உட்கார்ந்தார் மணி.

    சொல்லுங்க டாக்டர்.

    அவங்க இப்ப உயிரோட இருக்காங்க! ஆனா நுரையீரல் பாதிக்கு மேல டாமேஜ். கிட்டத்தட்ட ஒரு நுரையீரல் இயங்கலை. லிவரும் சரியா இல்லை. இன்னும் பல பிரச்னைகள் இருக்கு. சுருங்க சொன்னா, அவங்க ஆயுள் அதிகபட்சம் நாலஞ்சு மாசங்கள்தான். மன உளைச்சல் இருக்கானு நீங்கதான் சொல்லணும். இத்தனை நடந்தும் அவங்க மகன் ஏன் வரலை? அதுதான் பிரச்னையா?

    ஆமாம் டாக்டர்! அவங்க மகன் இளங்கோதான் எல்லாத்துக்கும் காரணம்!

    நான் இதை எதிர்பார்த்தேன். அவர் வரலைனு ஆனப்ப சந்தேகப்பட்டோம். ஆனாலும் அவர் மகனா இருக்கற காரணமா சொல்ற கடமை எங்களுக்கு இருக்கு இல்லையா? நாளைக்கு ஒரு கேள்வி வரக்கூடாது பாருங்க!

    அதை விடுங்க டாக்டர். அக்காவை மீட்க முடியாதா?

    மருத்துவ ரீதியா அவங்க நிலைமை மோசம்தான். அதுக்கு காரணம் மன உளைச்சல்னு புரியுது. இனி மருந்துகளால எதுவும் செய்ய முடியாது. மகன் சாதிக்கலாம். அவர் நெனச்சா இனி மீட்கலாம். மற்றபடி ஒரு வாரம் இங்கே இருந்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க!

    மணி வெளியே வந்தார். மனசு கனத்து கிடந்தது. அக்கா இனி இல்லை. இளங்கோ நிச்சயமாக திருந்த மாட்டான். அவனால் அக்காவை மீட்க முடியாது. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1