Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madipichai!
Madipichai!
Madipichai!
Ebook133 pages1 hour

Madipichai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100605360
Madipichai!

Read more from Devibala

Related to Madipichai!

Related ebooks

Reviews for Madipichai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madipichai! - Devibala

    http://www.pustaka.co.in

    மடிப்பிச்சை!

    Madipichai!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    நமது நாயகி புஷ்பா! ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில் டீச்சர். மிதமான அழகு! பேரழகோ கவர்ச்சியோ இல்லை. ஆனால் லட்சணமாக இருப்பாள். மாநிறம்! பெரிய கண்கள்! பட்டதாரி. நல்ல ஆங்கிலப்புலமை வயது இருபத்தி ஆறு பட்டம் முடித்து ஆசிரியப் பயிற்சிகளையும் முடித்து 24 வயதில் தான் அரசாங்க உத்தியோகம். 2 வருடங்களாக சம்பாதிக்கிறாள். கலகலப்பாக பழகுவாள். ஆனால் யாரையும் எல்லைமீறி உள்ளே அனுமதிக்க மாட்டாள்.

    மனிதர்களை எடைபோடும் ஆற்றல் உண்டு.

    தேர்ந்தெடுத்து பழகுவாள்.

    ருசியாக சமைப்பாள். அழகாக பாடுவாள். இரட்டை சக்கர வாகனம் ஓட்டுவாள்.

    விதவை தாய்!

    அண்ணன் இவளை விட ஆறு வயது மூத்தவன். தனியாரில் உத்யோகம். அண்ணி குடும்பத் தலைவி. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை. இதுதான் குடும்பம்.

    அண்ணன், முகுந்தனுக்கு காதல் கல்யாணம். அவன் பட்டதாரி அல்ல. அப்பா இறந்த காரணமாக மேற்படிப்புக்கு வாய்ப்பில்லை. பள்ளியுடன் முடிந்து விட வேலை தேடிக் கொண்டான்.

    சுமாரான கம்பெனி. சம்பளமும் சுமார் தான்.

    மூன்றே பேர். அப்பா கடன் வைக்கவில்லை. வீடு சொந்த வீடு.

    புஷ்பா பட்டப்படிப்பை முடித்து பயிற்சிக்கு போகும் நேரம்.

    முகுந்தன் காதலில் இருந்தான்.

    அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் ராமய்யா மகள் வேதா.

    அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வருவாள். ராமய்யா முகுந்தனுடன் நெருக்கம். அது வேதாவையும் தொற்றிக் கொள்ள காதல் கனிந்து விட்டது.

    ராமய்யா வெறும் செக்யூரிட்டி. வேதா மட்டும் தான் குடும்பத்தில்.

    வசதிகளும் போதாது. வாடகை வீடு. வேதா சின்னதாக ஒரு மெஸ் போல நடத்தி சம்பாதித்து அப்பாவின் பலுவைக் குறைக்க

    இந்தக் காதல் கனிய

    ராமய்யாவுக்கு முகுந்தனை பிடித்ததால் தடையில்லை. பச்சைக்கொடி காட்டி விட்டார்.

    ஆனால் கையில் எதுவும் இல்லை. அவள் கழுத்தில் 2 சவரன் செயின் மட்டும். மற்றபடி ஏழெட்டு சேலைகள். வயிறு பசிக்காமல் சோறு. மற்றபடி எதுவும் இல்லை. சம்மதமா எனக்கேட்டு விட்டார்.

    முகுந்தனுக்கு அம்மாவை விட தங்கை புஷ்பா நெருக்கம்.

    அவளிடம் விவரம் சொல்ல

    வேதாவை சந்திக்க புஷ்பா விரும்பினாள்.

    முகுந்தன் ஏற்பாடு செய்தான். தங்கையை ராமய்யா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

    வேதா வரவேற்றாள்.

    ஏற்கனவே மெஸ் நடத்துவதால் சூடான இடியாப்பம், தேங்காய்ப்பால் மணம் பரப்பும் குருமாவை புஷ்பாவுக்கு தர

    எனக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்கும்

    முகுந்தன் சொன்னார். அதான் செஞ்சேன்

    ரொம்ப ருசியா இருக்குங்க

    உணவில் தொடங்கும் பழக்கத்துக்கு எப்போதுமே ஒரு வலு உண்டு. எல்லாருமே சாப்பாட்டு விரும்பிகள் தான் இங்கே.

    ருசியான உணவைத் தந்து யாரையும் சுலபத்தில் மயக்கிவிட முடியும்.

    அதுதான் இங்கே நடந்தது.

    சுலபமாக புஷ்பாவும், வேதாவும் ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

    வேதாவும் நல்ல பெண். புஷ்பாவுக்கு பிடித்து விட்டது.

    அண்ணனுடன் கலந்து பேசி

    நான் அம்மாகிட்ட பேசுறேன்

    என்ன சொல்லப் போறே? அம்மாவுக்கு முதலாவதா காதல் பிடிக்காது. புஷ்பா நம்ம ஜாதியில்ல. மூணாவதா பண வசதி இல்ல

    நமக்கு கோடீஸ்வர அந்தஸ்து இருக்கா

    இல்ல புஷ்பா. ஆனா கஷ்டப்பட்டாலும் அம்மாவுக்கு எதிர்பார்ப்பும் பேராசையும் அதிகம்

    நான் பேசிக்கிறேன்

    எப்படி

    நீ பேசாம இரு. வேதாதான் எனக்கு அண்ணி

    அன்று இரவு சாப்பாட்டு நேரம்...

    அம்மா சாப்பாட்டை எடுத்து வைக்க புஷ்பா ஒருவாய் எடுத்து விழுங்கினாள்.

    அம்மா வர வர உன் சாப்பாடு நல்லாவே இல்ல

    ஏண்டீ இப்படி பேசுறே

    உண்மையை சொல்லாம இருக்க முடியுமா? தரம் இறங்கியாச்சு. வயசாச்சு உனக்கு

    முகுந்தா அப்படியா?

    புஷ்பா இனி நீ சமையலை எடுத்துக்கோ

    நான் இங்கே நிரந்தரம் இல்ல. ஒரு நாள் இன்னொரு வீட்டுக்குப் போறவ. வரப்போற அண்ணி தான் இந்த குடும்பத்தை பார்க்கணும்

    முதல்ல உன் கல்யாணம்

    அதுக்கு பணம் வச்சிருக்கியா

    எங்கிட்ட ஏதுடி பணம்? முகுந்தன் தான் செய்யணும்

    அவன் வச்சிருக்கானா

    கடனை உடனை வாங்கி செய்யத்தான் வேணும்

    எப்படி கடனை அடைப்பான்

    செஞ்சு தானே ஆகணும்

    எப்படின்னு சொல்லு

    தெரியலை

    நான் சொல்லவா

    சொல்லு

    எனக்கு பயிற்சி முடிஞ்சு நல்ல வேலை கிடைக்கிறது உடனே நடக்காது. சம்பாதிக்கிற ஒருத்தி இந்த வீட்டு மருமகளா வரணும்

    இவன் வேலைக்கு அப்படி ஒரு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்

    நீ சரின்னு சொன்னா நான் கொண்டு வர்றேன்

    யாரது

    காந்தி தெரு மூலைல ஒரு மெஸ் இருக்கு. சின்னக் கடைதான். ஆனா கூட்டம் அள்ளும்

    புஷ்பா அது எங்க செக்யூரிட்டி ராமய்யா மகள் வேதா நடத்துற மெஸ்

    இருண்ணே! வேதா எனக்கு நெருங்கிய தோழி. ரொம்ப ருசியா சமைப்பா. அதான் கூட்டம். உன்னை விட அதிகம் சம்பாதிக்கிறா.

    அதனால?

    அவ எனக்கு அண்ணி ஆயிட்டா எல்லாருக்கும் நல்லது

    அவ படிச்சிருக்காளா?

    உன் பிள்ளை பட்டதாரியா

    அவ அழகா இருக்க மாட்டா

    உன் பிள்ளை பேரழகனா

    அவங்க இருக்கிறது வாடகை வீடு

    நீ மாளிகையில வாழறியா?

    அவங்க கல்யாணத்தை எப்படி நடத்துவாங்க?

    எல்லாரையும் மாதிரி அண்ணன் அவளுக்குத் தாலி கட்டுவான்

    அதானே?

    நக்கலாடி

    இல்லை. உனக்கு பேராசை. நாம சில விஷயங்களுக்கு மத்தவங்ககிட்ட எதிர்பார்க்கும்போது, அதை விட நாம பெட்டரா இருக்கணும். அது இங்கே இல்ல. வேதா நல்லவ. குடும்பப்பாங்கான எல்லாம் தெரிஞ்ச பெண். அவளுக்கு அண்ணன் தகுதியானு பாரு. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா வீடு விளங்கும். எல்லாருக்கும் நல்லது. அப்புறம் உன் இஷ்டம்

    அம்மா யோசிக்கத் தொடங்கி விட்டாள்.

    முகுந்தன் பிரமித்தான்.

    எங்க காதலைச் சொல்லாமலேயே அழகா வேதாவை உள்ளே கொண்டு வர்றியா?

    ஆமாண்ணே. நாளைக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் அம்மா காதலை காரணம் காட்டுவாங்க. நாமே பார்த்து செஞ்சு வச்சோம்னு ஒரு பெருமிதம் இருக்கட்டுமே

    பேசுவாங்களா

    நிச்சயமா. நான் வேதாகிட்ட பேசிக்கிறேன். காதல் இருக்கிறதை காட்டிக்க வேண்டாம்.

    சொல்லியும் விட்டாள். அம்மா தெரிந்தவர்கள் மூலம் சில பல சங்கதிகளை சேகரித்தாள்.

    ஒருமுறை எதிர் வீட்டு பொன்னியை வைத்து டிபன் பார்சல் வாங்கி வர வைத்தாள்.

    ருசியாக இருந்தது.

    அவளைப் பற்றி விசாரிக்க, நூற்றுக்கு நூறு நல்ல விமர்சனங்கள் வந்துவிழ

    அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போக முடிவெடுத்தாள்.

    தகவல் சொல்லி அனுப்ப,

    வேதா தயாராகி விட்டாள். ராமய்யா காத்திருந்தார்.

    இவர்கள் மூவரும் போய் இறங்கினார்கள். வேதாவே வரவேற்றாள். உட்கார வைத்து டிபன் கொண்டு வந்தாள்.

    அம்மா ஒருபிடிபிடித்து விட்டாள். ஆனால் முதலில் வேண்டாமென பந்தாகாட்டி விட்டு நாலு இட்லி

    Enjoying the preview?
    Page 1 of 1