Kadalalavu Aasai
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadalalavu Aasai
Related ebooks
Thoguthi Pangeedu Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsKabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsMadipichai! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Ilai Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsJeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Poruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAkkarai Patchai Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsThalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsPoovin Yutham Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5Neeradum Kangal Rating: 0 out of 5 stars0 ratingsகைகேயி - 96 Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsMudichugal Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsKaruvoolam Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kadalalavu Aasai
0 ratings0 reviews
Book preview
Kadalalavu Aasai - Devibala
http://www.pustaka.co.in
கடலளவு ஆசை
Kadalalavu Aasai
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
*****
அத்தியாயம் 1
அம்மா! நல்ல நாள் பாரு. இந்த வாரத்துல இருக்கா?
எதுக்குடா சிவகுரு?
நான் சொன்னேனில்லையா, நாலு கிரவுண்ட் நிலம் விலைக்கு வருது. அதைப் பேசி முடிச்சிட்டேன். முன் பணத்தை நல்ல நாள்ல, குடுத்துட்டா, அடுத்த வாரம் பத்திரப்பதிவு
அப்பா வெளியே வந்தார். தலை துவட்டியபடி!
என்ன விலை ஆகுது?
என்பது லட்ச ரூபாய் ஆகுதுப்பா! ரொம்ப மலிவா வருது! அந்த ஆள் வெளிநாட்ல செட்டில் ஆகப்போறான். இங்கே சொத்துக்களை வித்துட்டுப் போறான். இன்னிக்கு இருக்கிற மார்க்கெட் நிலவரப் படி இதே நிலம் ஒண்ணே கால் கோடிக்கு போகும்பா. நமக்கு அதிர்ஷ்டம்
பணம் இருக்காப்பா?
இருக்குப்பா. கொஞ்சம் பற்றாக்குறைக்கு பேங்க் லோன் போட்டா ஆச்சு. சரியா?
சிவகுரு நகரின் மையத்தில் பெரிய ஒரு ஆட்டோ மொபைல் வொர்க்ஷாப் வைத்திருக்கிறான். ஏழு வருஷங்களுக்கு முன்னால் ஓலைக் கூரையின் கீழ் தொடங்கிய பட்டறை இன்று சிவகுருவின் கடுமையான உழைப்பால், பிரமாதமாக வளர்ந்து விட்டது. நவீன வெளிநாட்டு கார்கள் கூட சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு செல்லாமல் சிவகுருவின் பட்டறைக்கு சர்வீசுக்கு வருகிறது. அத்தனை நேர்த்தியான சர்வீஸ்.
ஏறத்தாழ பதினைந்து பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு இருபது வண்டிக்கு மேல் வருகிறது. எல்லா செலவும் போக மாதம் 3 லட்சம் வரை சிவகுருவால் சுலபமாக சம்பாதிக்க முடிகிறது.
இந்த ஏழு வருடங்களில் இரண்டு சகோதரிகளையும் கல்யாணம் செய்து கொடுத்து, பட்டறையை பெரிதாக்கி, சொந்த வீடு, கார் என வாங்கி, சிவகுரு வளர்ந்து கொண்டே போகிறான். அப்படி ஒரு வளர்ச்சி.
இத்தனைக்கும் சிவகுருவுக்கு படிப்பு நாலாவது வகுப்பு வரை மட்டுமே. ஆங்கில அறிவு பூஜ்யம்!
இப்போதும் பேண்ட் போடமாட்டான்.
ஒரு வேட்டி, சட்டை.
ஆனால் கல்யாண முகம்! தன்மையான பேச்சு! பொறுமை! வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் குணம்.
அம்மா ருக்மணி நாள் பார்த்தாள்.
அன்னிக்கே முடிச்சிடலாம். நாஷ்டாரெடியா?
அம்மா அவனுக்குப் பிடித்த இடியாப்பம், குருமாவை எடுத்து வைத்தாள்.
அப்பா மாணிக்கம் அருகில் வந்தார்.
சிவா! உனக்கு வயசு இருபத்தி எட்டு. இனியும் தாமதிக்க கூடாதுடா.
எதுக்கு?
கல்யாணத்துக்குத்தான். உங்கம்மாவால முடியல. வீட்டு நிர்வாகத்தை வர்றவ கைல ஒப்படைச்சா நாங்க ரெண்டு பேரும் கோயில், குளம்னு சுத்துவோம். இனிமேலும் தள்ளிப் போடக்கூடாது. லட்சக் கணக்கா சம்பாதிக்கறே. உனக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேணுமில்லையா?
சிவகுரு பேசவில்லை.
"உங்க மாமா பொண்ணு சந்தியாவை உனக்குனு பெரியவங்க மனசுல நினைச்சிருக்கோம். பேசிடலாமா?
வேண்டாம்பா
ஏண்டா?
அது என்ஜினீயரிங் படிச்சிட்டு, பெரிய கம்பெனில வேலை பார்க்குது. இங்கிலிஷ்ல பொளந்து கட்டுது. நாகரீகமான பொண்ணு. என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒப்புக்காதுப்பா
என்னடா உளர்ற?
அப்பா நாலாவது படிச்ச நான் சந்தியா கழுத்துல எப்படிப்பா தாலி கட்ட முடியும்?
அடேய்! ஆம்பிளைக்கு படிப்பை விட சம்பாத்தியம் முக்கியம். உன் வருமானம் மெத்தப்படிச்சவனுக்குக்கூட இன்னிக்கு இல்லை தெரியுமா? உன்னை வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா?
என்னங்க. நாலஞ்சு பேர் எங்கிட்ட கேட்டாச்சு. அவங்க எல்லாருமே படிச்ச புள்ளைங்கதான். டாக்டரா இருக்கற ஒரு பொண்ணோட அம்மா பேசத் தயாரா இருக்காங்க தெரியுமா?
அப்படியா?
நமக்கு தெரிஞ்ச, உறவுல உள்ள பொண்ணுனா, சந்தோஷம்! ஒரு பாதுகாப்பு! இல்லையா?
தம்பி! இதப்பாரு. எப்ப நீ கொஞ்சம் அவகாசம் தருவே? போய் பேசிடலாம்
நீங்க போய் பேசுங்கப்பா முதல்ல. அப்புறமா முடிவெடுக்கலாம்
அதுவும் சரிதான். இன்னிக்கே நாள் நல்லா இருக்கு. பேசிடலாம் ருக்மணி.
சரிங்க
அப்பா பொதுவா பேசிப்பாருங்க. யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏன்னா, இது வாழ்க்கை
சரிப்பா
மாணிக்கம், ருக்மணி அடுத்த ஒரு மணிநேரத்தில் புறப்பட்டு விட்டார்கள்.
ருக்மணியின் அண்ணன் முத்துசாமி அதே நகரில் மளிகைக்கடை வைத்து நடத்துபவர். அவருக்கு இரண்டு மகன்கள். சந்தியா ஒரு மகள்.
ஒரு மகன். மூத்தவன் வெளிநாட்டில் மனைவியுடன்!
அடுத்தவன், அப்பாவுடன் மளிகைக்கடையில் உதவியாக!
அவனும் படித்தவன் தான். சந்தியாதான் தங்க மெடல் வாங்கி, கல்லூரி வளாகத்தில் வேலை பெற்று பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.
மாதம் ஐம்பதாயிரம் சம்பளம்!
அவர்கள் குடும்பத்தில் இத்தனை படித்த முதல் பெண் சந்தியாதான்.
சந்தியா பணிவான நல்ல பெண்தான். எல்லாரிடமும் அன்பு காட்டுபவள். அழகான பெண்.
மாணிக்கம், ருக்மணி காரில் வந்து இறங்கினார்கள். சிவகுருதான் காரில் போகச் சொல்லி இருந்தான். நிறைய பழங்கள், இனிப்பு என வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள், முத்துசாமி, காமாட்சி இருவருமே வீட்டில் இருந்தார்கள். உற்சாக வரவேற்பு.
ஒரே ஊர்ல இருக்கோம்னு பேரு. உடன் பிறந்தவங்களா இருந்தும் பாத்துக்க முடியல அடிக்கடி
காமாட்சி பால்பாயசம் எடுத்து வந்தாள்.
என்னண்ணி விசேஷம் இன்னிக்கு?
நம்ம சந்தியாவுக்கு பிறந்த நாள்
அட ஆமாம்! தெரியாம போச்சே. குழந்தைக்கு எதுவும் வாங்கிட்டு வரலியே?
மாணிக்கம் கைப்பை திறந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்தார்.
தங்கச்சி இதை சந்தியாகிட்ட மாமன் குடுத்தேன்னு குடுத்துடும்மா
எதுக்கு அண்ணே?
எங்க மருமகளுக்கு ஆசையா நாங்க தர்றோம். எதுக்குனு கேக்கிற?
வாங்கிக்கோ காமாட்சி
முத்துசாமி சொல்ல,
காமாட்சி வாங்கிக் கொண்டாள்.
பிறந்த நாள், இனிப்புனு எல்லாமே சுபமா இருக்கு. வந்த விஷயத்தைப் பேசிடலாம்
ருக்மணி தொடங்க,
சொல்லும்மா
சிவகுரு - சந்தியா கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும் அண்ணே
முத்துசாமி முகம் மலர்ந்தது.
ஆமாம் ருக்கு! சந்தியாவுக்கும் இருபத்தி நாலு வயசு ஆகுது. இனி தள்ளிப் போடக்கூடாது. முடிச்சிடலாம்
காமாட்சி தயங்கி,
என்னங்க! புள்ளைங்களை ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?
சிவகுருவுக்கு எந்தத்தடையும் இல்லை. நாங்க பேசப் போறோம்னு சொன்னதும், அவன் வேண்டாம்னு சொல்லலியே! வண்டி குடுத்து அனுப்பிட்டானே?
இவ மட்டும் மறுக்கப் போறாளா ருக்கு? உன் பிள்ளை சம்பாதிச்சு குவிக்கிறானே? ராஜ வாழ்க்கையை யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா?
"ருக்கு! இது முடிவாயிட்டா, வெள்ளிக்கிழமை,