Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeradum Kangal
Neeradum Kangal
Neeradum Kangal
Ebook131 pages41 minutes

Neeradum Kangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606203
Neeradum Kangal

Read more from Devibala

Related to Neeradum Kangal

Related ebooks

Reviews for Neeradum Kangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeradum Kangal - Devibala

    http://www.pustaka.co.in

    நீராடும் கண்கள்

    Neeradum Kangal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    *****

    அத்தியாயம் 1

    தொலைக்காட்சி சேனல் ஒன்றில் காதல் திருமணம் சரியா? தவறா? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது! காரசாரமாக இருந்தது.

    பெற்றோர்களில் ஒரு சாரர் காதலை கடுமையாக எதிர்க்க, இன்னொரு கூட்டம் அமைதியாக ஆதரித்துக் கொண்டிருந்தது!

    நேரம் இரவு ஒன்பது மணி.

    குடும்பத் தலைவி கல்யாணி அதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்க, அவளது மகள் ரம்யா அலுவலகம் முடிந்து அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். பின்னால் ஹெல்மெட்டை கழற்றியபடி அவளது அண்ணன் மகேஷ் கால்களை பதித்தான். ரம்யா அக்கடா என பெருமூச்சுடன் உட்கார்ந்தாள்!

    அம்மா காபி ஏதாவது குடு தலை வலிக்குது

    கல்யாணி காதில் அது விழவே இல்லை!

    காதலிக்கிற எண்ணமிருந்தா என் மகளை நான் வெட்டிப் போடுவேன் ஒரு அப்பா நெருப்பைக் கக்க,

    எதிரணி பெண்மணி ஆவேசமாகி, வெட்டிப்போட நீங்க யாரு சார்?

    என் மகளை வெட்டிப்போட எனக்கு உரிமை இருக்கு. அதைத் தட்டிக்கேட்க நீங்க யாரு?

    மகள் உங்களுதா இருந்தாலும் வெட்டிப்போட உரிமை இல்லை சார் இதைக் கேட்டதும் வயிறு கலங்குது எப்படி சார் இப்படி பேசுறீங்க? பெத்த மகளை கொஞ்சம் கூட நேசிக்காத அப்பாவா நீங்க?

    எங்க வலி எங்களுக்குத் தெரியும் மேடம் நீங்க பேசாதீங்க!

    ஆனாலும் வெட்டி போடுவேன்னு சொன்னது தப்பு. பலகோடி மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் இப்படி ஒரு வெறியோட பேச எப்படி முடியுது?

    நிகழ்ச்சி சூடு பிடித்து விட்டது!

    அம்மா நான் உங்ககிட்ட காபி கேட்டு அஞ்சு நிமிஷமாச்சு!

    அப்பா உள்ளே நுழைந்தார்.

    கல்யாணி களைச்சுப் போய் வீடு திரும்பின புள்ளைங்களை கவனி முதல்ல. எப்ப பார்த்தாலும் டி.வி. தானா? ராகவன் கண்டிக்க

    கல்யாணி கோபமாக எழுந்தாள்.

    நாள் முழுக்க நானும் வீட்ல உழைச்சிட்டுத் தான் இருக்கேன். எப்பவாவது நான் டி.வி. முன்னால் உட்கார்ந்தா இந்த வீட்டுல யாருக்கும் பொறுக்காது

    எப்பவாவதா? எந்த நேரமும் டீ.வி. எதிர்ல தான நீ இருக்க? ரம்யா.

    அப்படி சொல்லும்மா

    நிறுத்துங்க! உள்ளே வந்தவளுக்கு சமையல் கட்டுக்கு வழி தெரியாதா? ஒரு காபி போட்டுக் குடிக்க முடியாதா?

    என்ன கல்யாணி பேசறே? அவளே களைச்சுப் போய் வந்திருக்கா. வீட்ல வேலை செய்ய முடியுமா? அம்மான்னு நீ எதுக்கு இருக்க? செஞ்சா குறைஞ்சா போயிடுவே?

    சரிங்க உங்க பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. அடுத்த மாசம் இந்த நேரத்துல புகுந்த வீட்ல இருப்பா. அதை மறந்துடாதீங்க

    இருக்கட்டும்! அதுக்கும் நீ இப்ப காபி குடுக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?

    அம்மாவை விரட்டி வேலை வாங்கலாம். மாமியார் கிட்ட நடக்குமா? இவ ஆபீசிலேர்ந்து களைச்சு வந்ததும் மாமியார் காபி குடுப்பாளா? இங்கே பழகிக்கட்டும்! அப்பத்தான் அங்கு போய் வேலை செய்ய முடியும். துரும்பைக் கூட கிள்ளிப் போடலைன்னா அங்க போய் பிரச்சனை வரும். புரியுதா?

    அது அவளுக்கு தெரியாதா? இங்கே பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தானே சலுகை கிடைக்கும். அதை நாம தான் குடுக்கணும். நீ செய். குழந்தை ஒரு மாச காலம் இங்கே ராணி மாதிரி இருக்கட்டும். அவ குடும்பத்துக்கு போன பிறகு அவ பார்த்துப்பா

    மகேஷ் பர்முடாஸை மாற்றிக் கொண்டு வந்தான்.

    ஏண்டா நாங்க இத்தனை காரசாரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ மட்டும் ஏன் எதுக்கும் வர்றதில்லை? உன் காதுல எதுவுமே விழாதா?

    ரம்யா அண்ணனை சீண்ட,

    மூணு பேருமா கிட்டத்தட்ட இருபது நிமிஷமா பேசறீங்க. ஏதாவது நடந்ததா? நீ கேட்ட காபியும் கிடைக்கலை, அம்மா நிம்மதியா புரோகிராமும் பார்க்கலை. அப்பாவோட தியானமும் கெட்டுப் போச்சு. என்ன லாபம். சரி அம்மா பசிக்குது எனக்கு.

    வந்துட்டேன் மகேஷ். பத்தே நிமிஷத்துல புரோட்டா போட்டுக் குடுத்துடறேன். உனக்குப் புடிச்ச காலிபிளவர் க்ரேவி செஞ்சு வச்சிட்டேன்.

    பார்த்தீங்களாப்பா அவன் கேட்டதும் ஓடறாங்க. இப்ப டீ.வி. பெரிசாத் தெரியலை. ஏற்கனவே எல்லாம் தயாராம். அம்மாவுக்கு புள்ளை தான் ஒசத்தி. நான் ரெண்டாம்பட்சம் தான்பா

    கல்யாணி அதை காதில் போட்டுக் கொள்ளாமல் உள்ளே ஓட,

    கல்யாணி கேட்டியா?

    "இருங்க புரோட்டா போடணும். என் பிள்ளை பசி தாங்கமாட்டான்

    பார்த்தீங்களாப்பா? ராகவன் எதுவும் பேசவில்லை.

    நான் கேட்ட காபி இன்னும் கிடைக்கலை

    நான் போட்டுத் தர்றேன் உனக்கு

    அதற்குள் அம்மாவே காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள்.

    இந்தா ரம்யா குடி, டிரஸ் மாத்திட்டு வா நீயும் சூடா சாப்பிடு

    ரம்யா காபியை உறிஞ்சினாள்.

    கண்றாவியா இருக்கு. மாடு கூட குடிக்காது

    மகேஷ் அருகில் வந்தான்.

    ஏன் குறை சொல்றே ரம்யா? அம்மாவுக்கு நாள் முழுக்க வேலையில்லையா?

    அவளும் அம்மா ஆகும் போது தெரியும்

    சில நிமிடங்களில் குடும்பம் மொத்தமும் கூடி விட சண்டை மறைந்து சிரித்துப் பேசியபடி இரவு உணவை அனைவரும் சாப்பிட்டனர்.

    ரம்யாவின் அடுத்த மாசம் கல்யாணம் பற்றிய விவாதம் நடந்தது! மண்டபம் தயார். சமையல் கான்ட்ராக்ட் அவர்களது குடும்ப நண்பர் ஜெயமஹி ஜெயராமன் சகலமும் அவர்தான்.

    அவர் கையில் ஒப்படைத்து விட்டால் எந்த ஒரு கவலையும் இல்லாமல் உட்கார்ந்து விடலாம்.

    ரம்யா வங்கி ஒன்றில் அதிகாரி படிப்பு எம்.காம்.

    பார்த்திருக்கும் பையன் எம்.பி.ஏ. படித்து விட்டு ஒரு மல்டி நேசனல் கம்பெனியில் பெரிய பதவி அடிக்கடி வெளிநாடு செல்பவன். தாய், தகப்பன் தவிர ஒரு சகோதரி. அவளும் கல்யாணம் ஆனவள்!

    வசதியான குடும்பம்!

    ஒரு திருமண தகவல் மையம் மூலம் இந்த வரன் வந்தது!

    Enjoying the preview?
    Page 1 of 1