Indru Paathi Naalai Meethi
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Indru Paathi Naalai Meethi
Related ebooks
Sooriyan Sudavillai Rating: 0 out of 5 stars0 ratingsIlamaikku Perumai 1 Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsPorkkalap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Ini Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKalavupona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Kanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Rating: 0 out of 5 stars0 ratingsAindhavathu Vedham! Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsIlamaikku Perumai 2 Rating: 0 out of 5 stars0 ratingsThaanaagath Thriyum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indru Paathi Naalai Meethi
0 ratings0 reviews
Book preview
Indru Paathi Naalai Meethi - Devibala
26
1
ரங்கராஜன் அன்று மாலை வீடு திரும்பி, வேட்டிக்கு மாறி ஈஸிசேரிலே வந்து சாய்ந்தபோது,
சாவித்ரி எதிரே வந்தாள் டிகிரி காப்பியுடன். காலடியில் உட்கார்ந்து கொண்டாள்.
கீர்த்தனா எங்கே?
லைப்ரரி போயிருக்கா. சின்னது ட்யூசன் போயிருக்கு!
ம்!
காபியை ஆற்றத் தொடங்கினார்.
என்னங்க!
சொல்லு!
எனக்கொரு யோசனை. நீங்க கோவப்படலைனா சொல்றேன்.!
என்னா?
கொஞ்ச நாளைக்கு நீங்களும் சின்னவளும் சமாளிக்க முடியுமானா கீர்த்தனா கூட நான் மெட்ராஸ் போகட்டுமா?
என்ன சொல்றே நீ?
என்னை பேசவிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க. காலம் இருக்கற இருப்புல பொண்ணுகளுக்கு வேலை இல்லைன்னா, கல்யாண மார்கெட்ல மவுசு இல்லை. அதுவும் நல்ல வேலை அவசியமாக இருக்கு. இவளுக்கு தானா கிடைச்சிருக்கு. நீங்க 28 வருஷம் சர்வீஸ் போட்டு வாங்கற சம்பளத்தை, சேர்ந்த உடனே அவ வாங்கப் போறா. விடலாமா?
சரிம்மா... எப்படி அவளை தனியா...?
எதுக்குத் தனியா? உங்களுக்கு சமையல் தெரியும். இந்த வீட்ல கைக்குழந்தையா இருக்கு சமாளிக்க? கொஞ்ச நாள் ஒப்பேத்துங்க. நான் கீர்த்தனா கூடப்போறேன்!
அவளோட ஆபிஸ், மெட்ராஸ் மாதிரி மெட்ரோ சிட்டிகள்லதான். நீ எந்தக்காலத்துல வீடு திரும்பறது?
அதை அப்புறம் யோசிக்கலாமே! ஒரு ஆறுமாசம் பொறுமையா இருங்க. வழி பிறக்கும். சம்மதிக்கக் கூடாதா?
நர்த்தனா ட்யூசன் முடிந்து வீடு திரும்பினாள்.
ஆமாம்பா. நீயும், நானுமா சமாளிச்சுக்கலாம். அக்காவுக்கு அம்மா துணையா போகட்டும்.
சரி! ஆனா ரெண்டு பேரும் தங்கறது எங்கே? உன் தம்பி வீட்லேயா? வாயைப் பார்த்துட்டு இருக்கணும்.
வேற வழியிருக்கா?
வேற என்ன வழி?
இப்படி செஞ்சா?
சொல்லு!
உங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. நெருங்கின ஒருத்தர் சிபாரிசால, தனி வீடு எடுத்துட்டு தங்கிர்றம் நானும், கீர்த்தனாவும். அவளுக்கு நல்ல சம்பளம். சமாளிக்க முடியாதா? அது வந்துதான் இங்க ஆகணும்னு இருக்கா?
ஆண் துணையில்லாமல் இரண்டு பெண்கள் இருக்கலாமா?
அக்கம் பக்கம் பழகிட்டாப் போச்சு. நல்லவங்க இருக்க மாட்டாங்களா?
அப்பா அன்று இரவு முழுக்க மூளையைக் கசக்கிக் கொண்டார்.
காலையில் அவர் புறப்படும் நேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. கையில் பெட்டியோடு இறங்கினான் அவன்.
ரங்கநாதன் சார்! என்ன முழிக்கிறீங்க? என்னைத் தெரியலை?
பானு சந்தரா?
போச்சுடா! ஆளையே மறந்தாச்சா?
வா பானு! என்ன இது திடீர்னு வந்து நிக்கற? உன்னை நான் பார்த்து நாலைஞ்சு வருஷம் இருக்குமா?
மேலேயே இருக்கும்! நான் சேலத்துல இருந்தப்ப நீங்க பார்த்திருப்பீங்க
உட்காரு பானு! சாவித்திரி இங்க வா!
சாவித்திரி வெளியே வந்தாள்.
நம்ம சரவணமூர்த்தியோட தம்பிமா!
வணக்கம்!
உட்காருங்க. காபி கொண்டு வர்றேன்!
அதோட விட்ருவேனா? சாப்பிட்டுத்தான் போகணும் நீ!
உங்க மேல எனக்குக் கோபம் சார்!
எதுக்கு?
என் கல்யாணத்துக்கு நீங்க வரவே இல்லை!
எப்ப நடந்தது உன் கல்யாணம்?
அது ஆச்சு நாலு வருஷம்!
ஸாரிடா... அந்த நேரம் ஏதோ ஒரு சிக்கல்ல இருத்தேன் நான். எத்தனை குழந்தைகள்?
ரெண்டு வயசுல ஒரு பையன். திரும்பவும் இப்ப டெலிவரிக்குப் போயிருக்கா!
இதோட நிறுத்திக்கோ!
கீர்த்தனா காபியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
நான் பார்த்தப்ப பாவாடை சட்டையோட இருந்த உங்க மூத்த மகளா இவ? அழகான ஒரு பேர் உண்டே இவளுக்கு?
கீர்த்தனா!
ஆமாம். சச் எ பொயட்டிக் நேம். என்னம்மா பண்ணுறே?
டிகிரியும் கம்யூட்டரும் பண்ணிமுடிச்சுட்டேன்!
வேலை கூட கிடைச்சாச்சு. அதுலதான் நாலு நாளா வீடு யுத்தகளமா இருக்கு!
- ரங்கராஜன்
எங்கே வேலை?
மெட்ராஸ்ல ஒமேகால கம்யூட்டர் ஜூனியர் ஆபீசர்!
யம்மாடீ! எப்படி புடிச்சே அந்த வேலையை? கிடைக்கறது ரொம்ப கஷ்டமாச்சே!
மெரிட்ல அங்கிள்!
அசாத்தியமான பொண்ணா இருக்கியே!
அது நல்ல வேலைதானே அங்கிள்?
நல்ல வேலையா? அங்கே ஒரு ப்யூன் வேலை கிடைச்சாக் கூட போக நானே தயாரா இருக்கேன்!
அப்பாகிட்ட சொல்லுங்க. நான் போகக் கூடாதாம்.!
ஏன் சார்?
ஹாஸ்டல்ல குழந்தையை விட இஷ்டமில்லை!
எதுக்கு ஹாஸ்டல்? நம்ம வீடு இருக்கே! வந்து தங்கிக்க வேண்டியது தானே? ரெண்டு பேரும் வாங்க. நாளைக்கு நான் ஊர்திரும்புவேன். என்னோட வந்துருங்க. என்னைக்கு நீ ஜாயின் பண்ணணும்?
இன்னும் ஒரு வாரத்துல!
அதுல பிரச்சனையே இல்லை. சார், நான் பார்த்து அவளுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன்!
அதுல பானு...!
சொல்லுங்க சார்!
உன் வீட்ல எத்தனை நாள் ரெண்டுபேரும் இருக்க முடியும்?
ஏன்? எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம்!
அதெல்லாம் சரிப்படாது. தற்காலிகமா அதிகபட்சம் ஒரு மாசம் தங்கலாம். அதுக்குள்ள ஒரு வீட்டை ஏற்பாடு பண்ணிக்குடுத்துடு. நீ பக்கத்துல இருந்து பார்த்துக்கோ!
என்னைப் பிரிக்கறீங்க சார். நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு, உங்களுக்கு செருப்பா உழைக்கணும் நான்!
ஷ்! ஏன் பெரிய வார்த்தைகள்? நீயா இருக்கிறதாலதான் ரெண்டு பேரையும் நம்பிக்கையோட அனுப்பறேன். சாப்பாடு ரெடிபண்ணு சாவித்திரி. கீர்த்தனா நீ போய் இலை வாங்கிட்டு வா!
பானுசந்தர் குளித்தான்.
அவருடைய வேட்டியைக் கட்டிக் கொண்டான்.
எப்ப உங்க மனைவிக்கு ட்யூ டேட்?
கேட்ட சாவித்ரியை நிமிர்ந்து பார்த்தான்.
அடுத்த மாசக் கடைசில. பிரசவம் முடிஞ்சு ரெண்டு மூணு மாசம் பிறந்த வீட்ல இருப்பா!
இங்கே சாப்பாட்டுக்கு?
ஓட்டல்தான். எனக்கு சார் மாதிரி சமைக்க வராது!
குடும்பத்துக்காக உழைச்சவன் பானு. உனக்கு லேட் மாரேஜ்தான் இல்லையா?
ஆமாம் சார், முப்பத்தி ஒண்ணுல! இப்ப முப்பதஞ்சு!
சாப்பிட வாங்க!
நான் உங்களைவிட சின்னவன். சாரோட சிஷ்யன். எதுக்கு வாங்க... போங்க? உங்க தம்பி மாதிரி நினைச்சுக்குங்க. நான் உங்களை அக்கானே அழைக்கறேன். என்ன சார்?
அன்று மாலை பானுசந்தர் அலுவலக வேலையாகப் புறப்பட்டான். இரவு வந்து விட்டான். யாரையோ பிடித்து இவர்கள் இருவருக்கும் ரயிலில் டிக்கெட் வாங்கி விட்டான்.
மறுநாள் மாலை பெட்டிகளெல்லாம் கூடத்துக்கு வந்து விட்டன. பானு ஆட்டோ பிடிக்க வெளியே போக, அம்மாவுக்கு, அப்பா - நர்த்தனாவை விட்டுப் போக என்னவோ போலிருந்தது.
ரெண்டு பேரும் ஜாக்கிரதை!
குரல் இடறியது.
அப்பா நான் வர்றேன்!
அவள் நமஸ்கரித்தாள்.
ஜாக்கிரதைடா. நீ பிறந்தது முதல், உன்னைப் பிரிஞ்சதேயில்லை நான். வேலைக்குப் போற இடத்துல எச்சரிக்கையா இரு!
ஆட்டோ வந்து விட்டது.
போலாமாக்கா?
ம்!
பெட்டிகளை ஆட்டோவில் நுழைத்துவிட்டு, அவர்களை ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக் கொண்டான் பானு.
நீங்க கவலைப்படாதீங்க சார். ரெண்டு பேரையும் நல்ல படியா நான் கவனிச்சுக்கிறேன். போய்ச் சேர்ந்ததும் உங்க ஆபீசுக்கு போன் பண்றேன்!
சரிப்பா!
ஆட்டோ நகர்ந்தது. ஜங்ஷனில் வந்து, ரயில் பிடித்து அது புறப்படும் மட்டும் அம்மாதான் இறுக்கமான உணர்வுகளிலிருந்து விடுபடாமல் இருந்தாள்.
கீர்த்தனா கலகலவென இயல்பாகி விட்டாள்.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது.
ராயப்பேட்டையில் லக்ஷ்மிபுரத்தில் இருந்தது பானுசந்தரின் ஃப்ளாட். காலை எட்டரைக்கு உள்ளே நுழைந்தார்கள்.
அழகா இருக்கு அங்கிள் உங்க ஃப்ளாட். நீட்டா வச்சிருக்கீங்களே!
நீங்க ரெண்டு பேரும் குளிங்க. நான் போய் டிபன் வாங்கிட்டு வர்றேன்!
இன்னையோட உங்க ஓட்டல் சாப்பாட்டுக்கு முடிவு வந்தாச்சு.
ஏன்?
ஏனா? அம்மா வந்தாச்சே! இனிமே சமையல் வீட்லதான்!
ஆமாம் பானு! நான் ஒரு மளிகை லிஸ்ட் தர்றேன். அதை எனக்கு வாங்கிக் குடுத்துடு. மத்தியானமே சமையல் தொடங்கிடலாம்.
கறிகாய் வேண்டாமாக்கா?
"மத்தியானத்துக்கு வத்தக் குழம்பும், பருப்புத் துவையலுமா