Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nathikkaraiyoram
Nathikkaraiyoram
Nathikkaraiyoram
Ebook95 pages24 minutes

Nathikkaraiyoram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465773
Nathikkaraiyoram

Read more from Devibala

Related to Nathikkaraiyoram

Related ebooks

Reviews for Nathikkaraiyoram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nathikkaraiyoram - Devibala

    15

    1

    இது மூன்றாவது கருச்சிதைவு! உடைந்து போய் விட்டாள் தாரிணி.

    இரண்டாவது கர்ப்பம் அடைந்தபோதே டாக்டர் கல்யாணி சொல்லி விட்டாள்.

    ‘‘உனக்கு கர்ப்பப்பை பலமாக இல்லை. குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லை. அதனால இனி கர்ப்பம் தரிக்காம பாத்துக்கறது நல்லது.’’

    இதைச் சொல்லி ஒரு வாரம் கழித்து கர்ப்பம் தரித்து விட்டது. கிட்டத்தட்ட தொண்ணூறு நாட்களுக்கு அது நிலைத்து நிற்க, டாக்டரே சந்தோஷப்பட்டாள்!

    தாரிணி உத்யோகம் பார்க்கும் பெண். பட்டதாரி! மாதம் இருபதாயிரம் வரை சம்பளம்! கணவன் ரமேஷ் ஒரு வங்கியில் கேஷியர்! கல்யாணமாகி நாலு வருடங்கள் முடிந்து விட்டன. சொந்த வீடு, கார் போன்ற வசதிகள்!

    மாமனார் இல்லை. மாமியார் அகிலா! தங்கமான தாய்! தாரிணி மேல் அன்பைப் பொழியும் பெண்மணி!

    ரமேஷின் தம்பி சந்தோஷ்! நல்ல ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவன்! கல்யாணம் ஆகவில்லை.

    தாரிணிக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு எதிலும் கடுகளவும் குறையில்லை. ஆனால், இந்தக் குழந்தை பிரச்னை அவளை வாட்டும் விவகாரம்!

    இதோ கர்ப்பமாகி நூறாவது நாள். காலையில கடுமையான வயிற்று வலி. ரத்தப்போக்கு! ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எல்லாம் முடிந்துவிட்டது.

    கழுவித் துடைத்து வார்டில் கொண்டு வந்து போட்டு விட்டார்கள். ரமேஷ், மாமியார் அகிலா, மச்சினன் சந்தோஷ் அருகில் இருக்க,

    டாக்டர் கல்யாணி வந்தாள்.

    தாரிணி அழுதாள்.

    ‘‘நானும் சந்தோஷப்பட்டேன் இது நிலைக்கும்னு!’’

    ‘‘நான் பூ மாதிரி அகிலாவைத் தாங்கினேன் டாக்டர்!’’

    ‘‘உங்களைத் தெரியாதாம்மா? உங்களை மாதிரி ஒரு மாமியார், யாருக்குக் கிடைக்கும்?’’

    ‘‘ஸாரி டாக்டர்! இனி இது மாதிரி நிகழக் கூடாது!’’

    ‘‘அது மட்டுமில்லை ரமேஷ்! கர்ப்பப்பை புண்ணாகியிருக்கு. நாளைக்கு கேன்சர், அது இதுன்னு கொண்டு போய் விட்டிடக் கூடாது. அதனால...’’

    ‘‘அதனால?’’

    ‘‘அதை எடுத்துர்றது நல்லது!’’

    ‘‘டாக்டர்!’’ கதறி விட்டாள் தாரிணி!

    ‘‘இதப்பாரம்மா! உயிர் எல்லாத்தையும் விட உசத்தி! அதை நீ புரிஞ்சுக்கோ! இனி நீ கர்ப்பம் தரிக்கக்கூடாது! அப்படி இருக்க, அதை எடுத்துட்டா என்ன தப்பு?’’

    மாமியார் அகிலா அருகில் வந்தாள்.

    ‘‘டாக்டர் சொல்றது நியாயம் தாரிணி! இருக்கும்போது, கிடைக்குமோங்கற எதிர்பார்ப்பு இருக்கும்! இல்லைனா மனசு ஓரு திடமான முடிவுக்கு வந்துடும்!’’

    ‘‘அத்தே!’’

    ‘‘இதப்பாரு! எங்களுக்கும் வாரிசு வேணும்னு ஆசைதான்! அதுக்கு பல வழிகள் இருக்கு! யோசிப்போம்! இப்ப நீ தான் முக்கியம். புரியுதா?’’

    தாரிணி ரமேஷைப் பார்த்தாள்!

    ‘‘ஆமாம் தாரிணி! சரினு சொல்லு!’’

    வேறு வழியில்லாமல் தாரிணி தலையை அசைக்க, ‘‘இங்கேயே இருக்கட்டும்! மற்ற டெஸ்ட்டுகளை பார்த்துட்டு இந்த வாரத்துல முடிச்சிடலாம்!’’

    டாக்டர் கல்யாணி போய்விட,

    அழும் மருமகளை படிப்படியாக தேற்றி அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு பக்குவத்துக்குக் கொண்டு வந்து விட்டாள் அகிலா!

    எல்லா பரிசோதனைகளும் முடிந்து விட,

    நாளை ஆபரேஷன் என்று முடிவாகி விட்டது.

    முதல் நாள் மாலை ரமேஷ் மட்டும் அருகில் இருந்தான்,

    அம்மா, சந்தோஷ் சாப்பாடு எடுத்து வர வீட்டுக்குப் போய் விட்டார்கள்!

    ‘‘உங்களை நான் ஏமாத்திட்டேன்!’’

    ‘‘என்ன சொல்ற தாரிணி?’’

    ‘‘உங்க குடும்பத்துக்கு ஒரு ‘வாரிசை’த் தர முடியாம ஆயிட்டேனே?’’

    ‘‘அப்படியெல்லாம் நீ கவலைப்படாதே தாரிணி! யாராவது உன்னைப் புண்படுத்தியிருந்தா, நீ வேதனைப்படணும்; எதுவும் இல்லையே? அப்புறமென்ன! குழந்தை இல்லாம எத்தனையோ தம்பதிகள் வாழலையா? இல்லை, குழந்தை வேணும்னா, அதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு! இப்ப அது முக்கியமில்லை. நீ டென்ஷன் படாம ஆபரேஷனை முடிச்சிட்டு வா! மீதியை அப்புறமா பாத்துக்கலாம்!’’

    அகிலா, சந்தோஷ் வந்து விட்டார்கள்!

    ‘‘சந்தோஷுக்கு சீக்கிரமா ஒரு வரனை முடிங்க அத்தே! அவன் மூலமாவது ஒரு வாரிசு நம்ம வீட்டுக்கு வரட்டும்!’’

    ‘‘அண்ணி! நீங்க ஒடம்பு குணமாகி, பழைய நிலைக்கு வர்ற வரைக்கும் எதைப் பற்றியும் பேச வேண்டாம். புரியுதா! நம்ம குடும்பத்துக்கு ஒரு குறையும் இல்லை.’’

    தாரிணி கண்களை மூடிக் கொண்டாள்.

    ‘எத்தனை நல்ல குடும்பம்!’

    ‘அன்பைப் பொழியும் புகுந்த வீட்டு உறவுகள்!’

    ‘ஆனால், ஒரு குறை உண்டாகிவிட்டதே!’

    லேடி டாக்டர் வந்து மறுபடியும் பரிசோதித்து விட்டு, ‘‘டென்ஷன் படக்கூடாது! பட்டா, நாளைக்கு சர்ஜரி பண்ண முடியாது!’’.

    ‘‘இல்ல டாக்டர்!’’

    ‘‘சரி! அம்மா மட்டும் இருக்கட்டும்! நீங்க ரெண்டு பேரும் காலைல வாங்க!’’

    ‘‘சரி டாக்டர்!’’

    ‘‘ரமேஷ்! உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி, குருமா போட்டு ஹாட் பேக்ல வச்சிருக்கேன். பாலை சூடு பண்ணிக் குடிங்க! காலைல வந்துருங்க!’’

    ‘‘சரிம்மா!’’

    இருவரும் புறப்பட்டுப் போக, மாமியார் அகிலா வந்து தாரிணியின் கூந்தலைக் கோதி விட்டாள்!

    ‘‘இதப்பாரு! எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கறதில்லை. உள்ளதைக் கொண்டு ஆனந்தமா வாழப் பழகலேனா வாழ்க்கைல நிம்மதியே இருக்காது. புரியுதா?

    Enjoying the preview?
    Page 1 of 1