Maakolam
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maakolam
Related ebooks
Thethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Konchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsPore Megangal! Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Devan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsThakka Vachuko! Rating: 4 out of 5 stars4/5Akkarai Patchai Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsIni Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsAaravaaram Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsSandhitha Neram! Rating: 3 out of 5 stars3/5நதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsEngamma Maharasi Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNattupura Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maakolam
0 ratings0 reviews
Book preview
Maakolam - Devibala
http://www.pustaka.co.in
மாக்கோலம்
Maakolam
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
அட்வகேட் சுஜாதா என்றால் நீதிமன்ற வளாகமே பரபரப்பாகிவிடும்! அத்தனை பிரபலமான க்ரிமினல் லாயர்!
சுஜாதா ஒரு வழக்கில் ஆஜராகிறார் என்றால் மீடியாக்கள் அத்தனையும் கூடி விடும்.
சுஜாதா கையில் எடுக்கும் அத்தனை வழக்குகளும் பிரபலம்!
அரசாங்க வக்கில் ஆடிப் போய் விடுவார்!
எந்த ஒரு நீதிபதியும் சற்றே அச்சத்துடன் தான் தன் இருப்பிடத்தில் வந்து உட்கார முடியும்!
சட்டத்தின் சந்து பொந்துகளில் அனாயாசமாக அழைத்து வருபவர் சுஜாதா! இண்டியன் பினல் கோட் சட்டங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மேதை!
சுஜாதாவை பற்றி விமர்சிக்காத நபர் இல்லை.
இத்தனை பிரபலமாக சுஜாதா செய்தது என்ன?
கொலை, அடிதடி, கடத்தல், கற்பழிப்பு என குற்றங்களை வரிசைப்படுத்துங்கள்! இதைச் செய்பவர்களுக்கு இந்த சமூகத்தில் என்ன பெயர்? குற்றவாளிகள்! தண்டனை உண்டா? நிச்சயமாக உண்டு! கடுமையான சட்டம் இவர்கள் மேல பாய்வதுதானே நியாயம்?
மேற்படி குற்றவாளிகள் கையில் கணிசமான பணத்தோடு, நிஜத்தை மறைக்காமல் அப்படியே லாயர் சுஜாதாவிடம் ஒப்பித்து, அவர் காலில் விழுந்து விட்டால், அவனுக்கு விடுதலை சர்வ நிச்சயம்!
‘இது சாத்தியமா?'
'ஒரு கிரிமினல் குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்?'
'கடவுளால் கூட அவனைக் காப்பாற்ற முடியாது?’
‘ஆனால் சுஜாதாவால் முடியும்!'
'அதே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதன் சந்து பொந்துகளில் அனாயாசமாகப் புகுந்து சந்தர்ப்ப சாட்சியங்களை தக்கபடி உருவாக்கி, அந்த வழக்கை தவிடு பொடியாக்கும் வல்லமை சுஜாதாவுக்கு உண்டு!’
நீதி மன்ற வளாகம் மிரண்டு போனதுண்டு!
நீதிபதிகள் எல்லாம் தெரிந்தும் எதுவும் பேச முடியாத நிலை.
சுஜாதா ஒரு சவாலாகி நிற்க, யாராலும் எதுவும் செய்ய முடியாது!
குற்றவாளிகளின் புகலிடம்!
க்ரிமினல்களின் பாதுகாவலர்!
இதுதான் சுஜாதா!
'காலையில் எழுந்து விட்டால், சுஜாதாவின் பங்களா முன்பு திருவிழாக் கூட்டம்தான்!'
குற்றவாளிகளின் அணிவகுப்பு.
சுஜாதாவின் தம்பி விக்ரம்தான் அவனது அந்தரங்க செயலாளர், மானேஜர் சகலமும்!
விக்ரமிடம் தன் பிரச்சனையைச் சொல்லி, விக்ரம் அதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்! பெரிய தொகை பீஸாகச் சொல்லலாம் அதைத் தரும் சக்தி வேண்டும்.
கூசாமல் ஏற்றம் செய்பவர்கள் என்றுமே ஏழையாக இருக்க வாய்ப்பில்லை. ஏழைகளிடம் மனசாட்சியும், மற்றவருக்களுக்காக இறங்கும் மனோ நிலையும் நிச்சயமாக இருக்கும்!
பணம் படைத்தவர்களில் வெகு சிலரே நல்லவர்கள்!
பெரும்பாலானவர்கள் கொலை பாதகர்கள். தான் வாழ, பிறரை அழிக்கத் துடிக்கும் பாவிகள்!
இவர்களுக்கெல்லாம் சுஜாதான் காட்ஃபாதர்!
கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுஜாதா பிரபலம். பேர், புகழ், பணம் எல்லாமே சேர்ந்து விட்டது!
மீடியாக்கள் சுஜாதாவை ஒரு கதாநாயகியாக்கி உலகம் முழுக்க வெளிச்சம் போட,
ஒரு ரசனையுடன் அனைவரும் இதை கவனிக்க,
குற்றவாளிகளின் தைரியம் கூடிப் போனதுதான் மிச்சம்!
அடப்போடா! தைரியமா குற்றம் செய்யலாம். பணம் மட்டும் லட்சக்கணக்கில் இருந்தா, சுஜாதா காப்பாத்திடுவாங்க!
அதுதான் நடக்கிறது!
நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டது நியாயம்தான் என்று தோன்றுகிறது.
சுஜாதா போன்றவர்களை பார்க்கவே அந்தக் கண்கள் கூசத்தான் செய்யும்!
விஷயமறிந்த நல்லவர்கள் குமுறத் தொடங்கி விட்டார்கள்!
'இது என்ன நியாயாம்?’
‘எப்படி நல்லவங்க நாட்ல நடக்கிறது?'
'கொடூரமான குற்றவாளிகள் சட்டம் தண்டிக்க விடாம இந்த சுஜாதா குறுக்கே புகுந்தா, நீதி எப்பவுமே மரணப் படுக்கையிலே நிரந்தரமா விழுந்து கிடக்குமே!’
'இது நியாயமா?’
‘இல்லைதான்! இந்த சுஜாதாவுக்கு யார் மணி கட்டுவது?’
'இவள் பிடியில் சிக்கியிருக்கும், நீதியை, நியாயத்தை எப்படி மீட்டு வெளியே எடுப்பது.’
'மேற்படி கேள்விக்கு பதில் இல்லை'
தன்னைப் பற்றிய பகிரங்க விமர்சனங்களை, பாராட்டுகளாகக் கருதும் ஸ்ரீஜாதாவின் அராஜக ஆட்டம் தொடர்கிறது!
'ஏன்?'
'ஒரு பெண்ணாக இருக்கும் சுஜாதா நீதியை தூக்கில் தொங்க விட என்ன காரணம்?’
*****
2
கங்காதரன் தென்னக ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி அவரது மனைவி உமா ஒரு பள்ளிக் கூடத்தில் டீச்சர்!
இவர்களது ஒரே மகள் தான் பவித்ரா! மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து விட்டார்கள், பி.டெக் முடித்து விட்டு, கல்லூரி வளாகத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட, ஐ.டி. கம்பெனி ஒன்றில் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து 3 வருடமாக பணிபுரியும் பெண் பவித்ரா!
அழகான பெண்! அதித புத்திசாலி! தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ளவள்! தன் மனசுக்கு தப்பு என்று பட்டால், யாராக இருந்தாலும் சொல்லி விடுவாள். இதனால் பல பிரச்சனைகளை படிக்கும் நாளிலேயே வீடுவறை கொண்டு வருபவள்!
அம்மா உதைக்கு பயப்படுவாள்!
இதப்பாரு! நரி இடம் போனா என்ன! வலம் போனா என்ன? விழுந்து புடுங்காம இருந்தா சரி! மத்தவங்க பிரச்சனைகளை எப்பவுமே காதுல போட்டுக்காதே! அது நமக்குத் தேவையும் இல்லை. ஒதுங்கிப் போ! புரியுதா?
இது தப்பும்மா! இந்த உலகத்துல எல்லோரும் அப்படி நெனச்சா, என்ன நியாயம்?
நீ பெரிய நீதி தேவதையா! இந்த உலகத்தை ரட்சிக்க வந்த தேவதையா? வாயை மூடிட்டுப் போவியா? நாளைக்கு நமக்கொரு பிரச்சனை வந்தா, யாரு உதவுவாங்க? கையை விரிச்சிட்டு போயிட்டு இருப்பாங்க! யாருக்கும் நாம் கெடுதல் செய்ய வேண்டாம்! அது நியாயம்! அதுக்காக ஊரைத் திருத்த நெனச்சு நமக்கு கஷ்டம் வந்துடக் கூடாது!
அப்பா கங்காதரனும் இதை ஆமோதிப்பார்.
ஆனால் பவித்ரா ஒப்புக் கொள்ள மாட்டாள்!
'நீ இங்கே எப்படி வேணும்னாலும் இருக்கலாம்! உன் புருஷன் வீட்டுக்குப் போனா, நாக்கைச் சுருட்டி உள்ளே வச்சுக்கோ! ஒரு சமயம் போல இருக்காது!'
'இதப்பாரம்மா' நான் படிச்சவ! கை நிறைய சம்பாதிக்கறேன்! என் கால்ல நிக்கறேன்! யாருக்கும் அடங்கிப் போகணும்னு அவசியமில்லை!
'இது திமிர்டி!’
‘இல்லம்மா! இதுக்குப் பேரு தன்னம்பிக்கை!’
‘விட்டுக் கொடுத்து போனாத்தான் வாழ்க்கைல நிம்மதி இருக்கும்!'
'ஏமாந்தா ஏறி மிதிப்பாங்க! கோழைனு பட்டம் சுமத்துவாங்க!' விவாதம் தொடர,
'விட்றி' உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது! எனக்கு அத்தனை புத்தியில்லை
'ஏம்மா கோவப்படற?'
'பின்ன? நீ ஒரு பெண்! ஆயிரம்தான் படிச்சவளா இருந்தாலும் புத்தியிருந்தாலும், எதிர்ப்பு கூடாது. எந்த ஆம்பிளைக்கும் அது புடிக்காது! அனுசரித்து வாழ்ந்தால்தான் கடைசி வரைக்கும் ஒரு பெண் வாழ முடியும்.’
சரி விடு உமா! அம்மாடி! உனக்கும் இருபத்தி நாலு வயசாகப் போகுது. உன் கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும்!
'அப்படி என்னப்பா அவசரம்?'
காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்மா! அது தான் எல்லாருக்கும் நல்லது!
"அப்பா! நீங்களும் அம்மாவும் நிறைய கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவங்க! குடும்ப பிரச்சனைகள் காரணமாக வரவும்