Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chittukuruvi Suttu Pazhagu
Chittukuruvi Suttu Pazhagu
Chittukuruvi Suttu Pazhagu
Ebook105 pages1 hour

Chittukuruvi Suttu Pazhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604305
Chittukuruvi Suttu Pazhagu

Read more from Devibala

Related to Chittukuruvi Suttu Pazhagu

Related ebooks

Reviews for Chittukuruvi Suttu Pazhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chittukuruvi Suttu Pazhagu - Devibala

    http://www.pustaka.co.in

    சிட்டுக்குருவி சுட்டுக் பழகு

    Chittukuruvi Suttu Pazhagu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    உன் நினைவாக...

    நீ எங்கேயிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று என் ஐம்பதாவது பிறந்த நாளில் உன்னைக் கண்ணீருடன் வாழ்த்தும்...

    -ராஜதுரை

    அய்... நம்ம தமயந்தி மாதிரியில்ல?

    மாதிரியென்ன? அதே அச்சு... நம்ம கிண்டல் பண்ற அந்தக் கணலாய் மூக்கும்... கன்னக் கதுப்பும்... அவளே தாண்டீ...

    மொட்டையா இருக்கு விளம்பரம், போட்டோல இருக்கற பெண்ணோட பேர் இல்லை. விளம்பரம் கொடுத்த மனிதரோட முகவரி இல்லை. வெறுமனே ஒரு ராஜதுரை மட்டும்... இந்த ராஜதுரையை விட்டு அந்தப் பெண் பிரிஞ்சு போயிருக்கா... அவளுக்கு இப்ப ஐம்பது வயசு... இது மட்டும் தான் தெளிவான செய்தி சுவாரசியமாயில்லை?

    அப்படியே தமயந்தியை வார்த்து எடுத்த மாதிரி ஹெள ஹெண்டர்? தமயந்தி இன்னிக்கு வீட்ல இருப்பாளா?

    ரெண்டு நாளா ஆபீஸ் வரலை? அவளோட தம்பிக்கு காலேஜ் அட்மிஷன் விஷயமா அலைஞ்சிட்டு இருக்கா. போய்ப் பார்த்துட்டா?

    பேப்பரை எடுத்துக்க! அவளும் கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சரியமும் படட்டும்!

    அதிர்ச்சி, ஆச்சரியம் மட்டுமல்ல... அந்த தமயந்தியின் வாழ்க்கைப் பாதையையே அந்த விளம்பரம் ஒரு புரட்டுப் புரட்டப் போகிறது என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது.

    2

    ஷாம்பூக் கேசம் தோளில் வழிய, கதவைத் திறந்த தமயந்தி –

    என்ன திடீர்னு இந்தப் பக்கம் விஜயம்?

    ஒனக்கு ஒரு புது நியூஸ் கொண்டு வந்திருக்கோம். உள்ள வரச் சொல்ல மாட்டியா?

    'ஐ'ம் ஸாரி கெட் இன்! ஒக்காருங்க, காஃபி கொண்டு வர்றன்.

    காபி எடுத்து வர உள்ளே போகும் தமயந்தி பற்றி சின்னதாக ஒரு பாரா...

    போன மார்கழியில் இருப்பதை விழுங்கிவிட்டு மார்கிழியும் வண்ணம் ஆண்களின் இதயத்துடிப்பை அதிகப்படுத்திய இளம் பெண்...

    தனியார் நிறுவனம் ஒன்றில் தட்டெழுத்துக் காரியாகி மற்றவர்களின் நாடித் துடிப்பைத் தட்டிக் கொண்டிருக்கும் ஊழியை...

    சில நூறுகளை சம்பாதித்து தாயையும், தம்பியையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆணி மலர்.

    பங்குனி மாதம் மூன்றாம் தேதி பரந்தாமனைக் கன்னத்தில் அறைந்து, நாலாம் தேதி ஸாரி சொல்லி, எட்டாம் தேதியிலிருந்து சிரிக்கத் தொடங்கியிருக்கிறாள்.

    இதோ காப்பியோடு வந்து விட்டாள்...

    மீதி வர்ணனை நேரம் கிடைக்கும்போது...

    இந்தா, இதப் படி!

    போட்டோவைப் பார்த்ததும் நாற்காலி முனைக்கு வந்தாள் தமயந்தி... மை குட்நெஸ்! என்னடி இது? டூயல் ரோல் பண்ற சினிமா நாயகி மாதிரி?

    விளம்பரத்தைப் நாலைந்து முறை படித்தாள்.

    என்னடி தோணுது?

    பார்த்தவுடனே கொஞ்சம் அதிசயம், வேறென்ன இதுல இருக்கு? இதப்பத்தியே யோசிக்க, வேற வேலையே இல்லையா எனக்கு?

    கொஞ்சம் பேசிவிட்டு அவர்கள் போனதும், கதவைச் சாத்தி விட்டு உள்ளே வந்தாள்...

    மறுபடியும் அதை எடுத்துப் பார்த்தாள்...

    அதிர்ச்சியாகக்கூட இருந்தது.

    நானே தான்.

    ஐம்பதாவது பிறந்த நாளில்...!

    இந்தப் படத்தைப் பார்த்தா... அதிகபட்சம் அதுல பாதி கூடத் தேறாதே...

    நீ எங்கேயிருந்தாலும்?

    அப்படீன்னா காணாம போய் இருபத்தஞ்சு வருஷம் ஆச்சா?

    கண்ணீருடன் வாழ்த்தும் ராஜதுரை.

    யார் இந்த ராஜதுரை?

    காணாம போயிட்டாளா? ஓடிப் போயிட்டாளா?

    இருபத்தஞ்சு வருஷமா காணாம போன பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றது பைத்தியக்காரத்தனம் இல்லையோ? அவ உயிரோட இருக்கானு என்ன நிச்சயம்?

    ச்சே! எனக்கேன் இவ்ளோ கவலை?

    ராஜதுரை யாராயிருக்கும்?

    மறுபடியும் அதே நினைப்பு.

    திரும்பிப் படுத்துக் கொண்டாள்...

    பச்சை ரேடியம் 2:10 என்றது…

    மெல்லத் தூங்கிப் போனாள்.

    3

    ஜெகன், இதப் பார்த்தியா?

    மஞ்சலில் கறுப்புப் பூக்கள் சிதறிய புடவையோடு முன் நெற்றி முடி காற்றில் அலைய, துரு துருக் கண்களோடு அந்தப் பெண்...

    யாரிது தாதா? ரொம்ப அழகா இருக்காளே?

    எனக்கு அது தெரிஞ்சா, உன்கிட்டே எதுக்கு போட்டோவைக் காட்டறேன்? இந்தப் பேப்பரைப் பார்த்தியா? பிரித்துப் போட்டார் கீழே...

    "கேள்விகளுக்கு பதில் நிதானமா நா சொல்றன்... இப்ப உனக்கு அவசியமில்லை. உன் வேலை என்னன்னா, இன்னும் நாலு நாள்ள இந்தப் பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1