Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukkul Needhan!
Kannukkul Needhan!
Kannukkul Needhan!
Ebook95 pages24 minutes

Kannukkul Needhan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603394
Kannukkul Needhan!

Read more from Devibala

Related to Kannukkul Needhan!

Related ebooks

Reviews for Kannukkul Needhan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukkul Needhan! - Devibala

    http://www.pustaka.co.in

    கண்ணுக்குள் நீதான்!

    Kannukkul Needhan!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    இன்னும் ஒரு வாரத்தில் பாலாஜிக்கு தூக்கு தண்டனை: குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது.

    அந்தச் செய்தி சமீபத்தில்தான் வந்தது. இன்னும் ஒரு வாரம்.....

    வரும் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தூக்கிவிடப் போகிறார்கள். நாள் குறித்து விட்டார்கள்.

    முதல் மருத்துவப் பரிசோதனை செய்து விட்டார்கள்.

    ஜெயிலர், ஒரு மாஜிஸ்ட்ரேட், இன்ஸ்பெக்டர் டாக்டர் நால்வரும் முதல் மருத்துவப் பரிசோதனையின்போது இருந்தார்கள்.

    குற்றம் சாட்டப்பட்டு, நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தீர்ப்பாகி உள்ளே வந்தது முதல் ஜெயிலர். தர்மதுரைக்கு பாலாஜியிடம் ஒரு பிடிப்பு உண்டு.

    'இவனா கொலை செய்தான்?'

    'அவரால் இன்று கூட நம்ப முடியவில்லை '

    'கருணை வழியும் அமைதியான அந்த முகத்தில் எப்போது வந்தது கொலை வெறி?'

    மருத்துவப் பரிசோதனை முடிந்தது.

    ஜெயிலரைத் தனியாக அழைத்தான் பாலாஜி,

    சார்!

    என்ன பாலாஜி?

    எனக்கொரு ஆசை உண்டு. கடைசி ஆசை!

    'சொல்லு'

    நான் இறந்தபிறகு என் கண்களை தானமா தர்றதா எழுதி வச்சிருக்கேன். அதை உங்ககிட்ட தெரிவிக்கறேன் இப்ப!

    அதுக்கு வாய்ப்பில்லை பாலாஜி!

    ஏன் சார்?

    தூக்கு தண்டனை கைதிக்கு அதுக்கு அனுமதியில்லை!

    சட்டத்துல இருக்கா சார்?

    பாரு பாலாஜி! இப்ப உனக்கு உடம்பு சரியில்லாம போனா, உன்னை குணப்படுத்தின பின்னாலதான் தூக்குல போடுவாங்க. இது சட்டம். அப்படியிருக்க உன் கண்களை எப்படி எடுக்க முடியும்?

    கண்தானம்னா என்னா சார்? இறந்த பிறகு கண்களை எடுக்கறதுதானே?

    அதுக்கு இதுல வாய்ப்பில்லை பாலாஜி. தூக்கு மாட்டி அந்தக் கயிறு இறுக்கும்போது உன் முழி பிதுங்க வாய்ப்புண்டு. அப்புறம் அந்தக் கண்கள் எப்படி பயன்படும்? நிச்சயமா உன் ஆசை நிறைவேறாது!

    பாலாஜி மெளமான இருந்தான்.

    "வேறென்ன ஆசை?*

    சார் என்னை தூக்குல போடறதுக்கு முன்னால், நான் உயிரோட இருக்கும் போதே என் கண்களை எடுத்துட்டா,இந்த தானம் சாத்தியம்தானே?

    அதுக்குத்தான் சட்டத்துல இடமில்லையே பாலாஜி

    ப்ளீஸ் சார், எப்படியும் என் மரணம் உறுதி. இந்தக் கண்களாவது ஒருத்தருக்குப் பயன்படட்டுமே!

    அதுக்கு அனுமதியில்லை பாலாஜி

    பேசிப் பாருங்க சார்!

    யார் கிட்ட?

    போலீஸ் அதிகாரி, நீதிபதி, டாக்டர் எல்லார்கிட்டேயும். சார் இது பரிகாரம். நான் என்ன பாவம் செஞ்சேனோ, இந்த விதமான் தீர்ப்புக்குஆளாகியிருக்கேன். என் கண்கள்பயன்படட்டும். அதுவும் யாருக்குனு கேட்டா, நீங்க ஆச்சர்யப்படுவீங்க சார்!

    சொல்லு பாலாஜி!

    என்ன காரணமா இறந்து போனவர் யாரோ, யாரைக் கொலை செஞ்சதா குற்றம் சாட்டப்பட்டு இந்தத் தீர்ப்புக்கு நான் ஆளாகியிருக்கேனோ, அவரோட மகளுக்கு என் கண்களை தானமாத் தரணும்"

    அந்த பெண்ணுக்கு பார்வை இல்லையா?

    இல்லை சார். இது நான் தேடிக்கற பரிகாரம். ஏற்பாடு செய்ங்க சார். ப்ளீஸ்!

    ஜெயிலர் தங்கதுரை பேசவில்லை.

    யோசனையுடன் நகர்ந்தார்.

    செல்லைவிட்டு நாலு பேரும் வெளியே வந்தார்கள். அவரவர் புறப்பட ஆயத்தமாக,

    நான் கொஞ்சம் பேசணும்!

    சொல்லுங்க! பாலாஜியின் விருப்பதைச் சொன்னார் ஜெயிலர்.

    இம்பாஸிபிள். உயிரோட இருக்கும்போது கண்களை எடுக்கறதா? சாதாரணமாவே கண் தானத்துல அந்த வாய்ப்பு இல்லை. தூக்குத் தண்டனைக் கைதிக்கு நிச்சயம் அதை நிறை வேற்ற முடியாது!"

    டாக்டர் சொன்னார்.

    "சட்டத்தை மீறின ஆசை.

    Enjoying the preview?
    Page 1 of 1