Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kan Malar
Kan Malar
Kan Malar
Ebook137 pages40 minutes

Kan Malar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465445
Kan Malar

Read more from Devibala

Related to Kan Malar

Related ebooks

Reviews for Kan Malar

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kan Malar - Devibala

    14

    1

    வெங்கடேசன் ரிடயராகி விட்டார்! இன்றோடு அறுபது வயதும், அவரது பதவிக் காலமும் முடிந்து விட்டது!

    மத்ய அரசாங்க உத்யோகம்!

    பெரிய ஆபீசர் அல்ல - ஒரு சாதாரண ஹெட்கிளார்க்! கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வருஷ சர்வீஸ்! இன்றுடன் அவரது பதவிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது!

    அலுவலகத்தைச் சேர்ந்த முப்பது பேர் மாலை, மரியாதையுடன் அவரை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்!

    அவர்களுக்காக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார் வெங்கேடசன்! நன்றாக சாப்பிட்டு விட்டு, வெங்கடேசனை நன்றாகப் புகழ்ந்து பாராட்டி முடித்து, அத்தனை பேரும் விடை பெற்றார்கள்! எல்லாரும் கலைந்து போக, வெங்கடேசன் ஒரு மாதிரி களைத்துப் போயிருந்தார்!

    வெங்கடேசனுக்கு சாதாரண பள்ளிப் படிப்புதான்! கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்.

    பெரிய குடும்பம்! அப்பா, அம்மா, மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என பெரிய குடும்பம்!

    மற்ற இரண்டு சகோதரர்களும் வெங்கடேசனை விட மூத்தவர்கள். எந்த ஒரு பொறுப்பையும் ஏற்காமல் நழுவி விட்ட சுயநலக்காரர்கள்!

    மூன்று தங்கைகளையும் கரை சேர்க்கும் பொறுப்பு வெங்கடேசன் தலையில் விழுந்து விட்டது!

    கடனை வாங்கி அவர்கள் கல்யாணத்தை முடிப்பதற்குள் வெங்கடேசனுக்கு முப்பத்தி மூன்று வயதாகி விட்டது! அதன்பிறகு தான் அவரது கல்யாணம்!

    கட்டாயம் வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்று நிபந்தனை போட்டார்! பள்ளிக்கூடத்தில் டீச்சராக வேலை பார்க்கும் வசந்தா மனைவியானாள்!

    அவளுக்கும் கல்யாண சமயத்தில் முப்பதியொரு வயது!

    தாயை இழந்தவள்! இளைய தாயாரின் கொடுமைகளை அனுபவித்து அந்தக் குடும்பத்துக்கு தன் உழைப்பையெல்லாம் தாரை வார்த்து முதிர் கன்னியாக நின்றவள்!

    அப்பன் பொறுப்பில்லாதவன்! செலவழித்து வசந்தாவுக்கு கல்யாணம் நடத்த யாரும் இல்லை!

    தரகர் வரன் கொண்டுவர, வெங்கடேசனின் ஜாதகம் மாட்டி, வசந்தாவைப் பெண் பார்க்கும் நிலை வந்து விட, வசந்தாவின் வருமானம் போய் விடுமே என சித்திக்காரி இதையும் கெடுக்க,

    வசந்தாவே தாள முடியாமல் வெங்கடேசனை சந்தித்து பேசி விட, கல்யாணம் நடந்து விட்டது!

    சீர் செனத்தி எதுவும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாகக் கல்யாணம்!

    வெங்கடேசனின் பெற்றோருக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை! நீ மத்ய அரசாங்க உத்யோகம்! நல்லா வசதியுள்ள இடம் கிடைச்சிருக்கும். அதை விட்டுட்டு இப்படி ஒரு நாதியில்லாத பொண்ணைத் தேர்ந்தெடுக்கணுமா?

    அம்மா! எனக்கும் வயசு முப்பத்தி மூணு! தலை வழுக்கை விழுந்தாச்சு! வாலிபம் போயிட்டே இருக்கு! நான் அழகான ஆண் பிள்ளை இல்லை. வசதியும், அழகும் உள்ள பெண் என்னைத் தேர்ந்தெடுக்கமாட்டா!

    வசந்தாவிடம் வெங்கடேசன் பேசி விட்டார்.

    நிறையக் கடன் இருக்கு! வயசும் கூடிப் போச்சு! உன்னை நான் கல்யாணம் செஞ்சுகறதே, உன் சம்பளத்துக்காகத்தான்!

    அதுல தப்பே இல்லை. என் சித்தி குடும்பத்துல நான் அடிமையா இருந்து என்னத்தக் கண்டேன்? உங்களைக் கல்யாணம் செஞ்கிட்டா, எனக்குனு ஒரு குடும்பம் அமையுமில்லையா?

    அவளது வெளிப்படையான பேச்சு வெங்கடேசனுக்கு பிடித்து விட்டது! கல்யாணம் முடிந்த நாற்பதாவது நாள் வசந்தா உண்டாகிவிட்டாள்!

    வாழ வந்தமுதல் மாடுமாதிரி உழைத்தாள்!

    இல்லாத பெண் என்பதால் அவளை வெங்கடேசனின் பெற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை.

    வசந்தா அதிர்ந்து ஒரு வார்த்தை பேசவில்லை!

    இத்தனைக்கும் நல்ல உத்யோகம்; கை நிறைய சம்பளம்!

    காலை நாலு மணிக்கு எழுந்தால் இரவு படுக்க பதினொருமணி ஆகிவிடும்! வாழவந்த நாள்தொட்டே இது ஆரம்பமாகி விட்டது!

    கல்யாணமான நாத்தனார்கள் இருவர் உள்ளூரில்! எந்த நேரமும் இங்கேதான்!

    மாமியாரோ லேசுப்பட்டவள் இல்லை. அவள் அசந்தால், ஏற்றிக் கொடுக்கும் நாத்தனார்கள்!

    இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையில் பிள்ளை உண்டாகி, வேலைகளையும் பார்த்துக் கொண்டு வசந்தா பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை!

    முப்பத்தி ரெண்டாவது வயதில் பிறந்தாள், கண்மணி! சுமக்கும் நேரம் எந்த ஒரு பெண்ணும் படாத வேதனைகள்!

    லீவெடுத்தால் சம்பளம் கட்டாகும்!

    கடன்களை அடைக்க முடியாது!

    பிரசவத்துக்கு முதல் நாள் வரை வேலைக்குப் போனவள் வசந்தாவாக மட்டும்தான் இருக்க முடியும்!

    சித்தி கொடுமை! பிரசவம் பார்க்க பிறந்த வீட்டு உறவு தயாராக இல்லை.

    மாமியாரின் ஊசிகுத்தும் சொற்கள்!

    கண்மணியைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களில் செல்வி.. இதோ மூன்றாவதும் பெண்தான். வனிதா!

    ஒரு ஆம்பளப் புள்ளையைப் பெத்துக் குடுக்கத் துப்பில்லை. மூணுமே பொட்டச்சிகள்!

    வசந்தாவுக்கு நாக்கு துடிக்கும்!

    ‘நீ பெத்த மூணு பொட்டச்சிகளை கரையேத்த வாங்கின கடனை உன் பிள்ளை அடைக்கத்தானே, என்னையே நான் அடமானம் வச்சிருக்கேன்!’

    ஆனால் பேசவில்லை. காரணம் வெங்கடேசன்!

    நல்ல கணவர்! கல்யாணம் ஆன முதல் நாளே மனசு விட்டுப் பேசி விட்டார்.

    தன் சுமைகளை வெங்கடேசன் கூச்சப் படாமல் அவளிடம் சொல்ல, வசந்தா அதை சரியாகப் புரிந்து கொண்டு விட்டாள்!

    அதனால் அவரது எந்த ஒரு சொல்லுக்கும் மறுப்பில்லை! உழைக்கத் தயங்கவும் இல்லை.

    சின்னதாக ஒரு சலிப்பைக் கூடக் காட்டவில்லை!

    ‘நானும் சம்பாதிக்கிறேன்’ என்ற அகங்காரம் கடுகளவு கூட அவளுக்கு இல்லை.

    அடிபட்டதால் வந்த பக்குவம்!

    இதை வெங்கடேசன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டார்.

    அதனால் ஒரு நல்ல தாம்பத்யம் உருவாகிவிட்டது!

    அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1