Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaigal Serattum
Thaigal Serattum
Thaigal Serattum
Ebook123 pages46 minutes

Thaigal Serattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466459
Thaigal Serattum

Read more from Devibala

Related to Thaigal Serattum

Related ebooks

Related categories

Reviews for Thaigal Serattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaigal Serattum - Devibala

    14

    1

    லட்டுவை அம்மாவின் வாயில் திணித்ததும் முதலில் மது சொன்ன வாக்கியம் இனி நீ சமையல் வேலைக்குப் போக வேண்டாம்மா!

    ஏன்மா?

    என்ன கேக்கற நீ? கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வெச்சே! நானும் படிச்சு முடிச்சு பிரமாதமான வேலை கிடைச்சாச்சு! எடுத்த எடுப்பிலே மாசம் முப்பதாயிரம் சம்பளம். எல்லா வசதிகளும் உண்டு. எதுக்காக நீ சமையல் வேலைக்குப் போகணும்?

    மதுவைப் பார்த்து அம்மா சிரித்தாள்.

    ஏம்மா சிரிக்கற?

    நீ நல்லா படிச்சாலும், இன்ஜினியரிங் காலேஜ்ல நீ சேர்ந்ததும் முதல் வருஷ பீஸை உனக்காகக் கட்டி, அப்புறமா பேங்க் லோனுக்கு ஏற்பாடு செஞ்சு, கேட்டப்ப எல்லாம் பணம் தந்து நம்ம குடும்பத்தை நிலை நிறுத்தினது யாரும்மா?

    நீ வேலை பாக்கற வீட்டில் உள்ள கற்பகம்மா.

    நாம வாழவே காரணம் அவங்கதான்! அப்படி இருக்கும் போது, அவங்க வீட்டு வேலையை விடலாமா?

    அதுக்காக சொல்லலைமா! நீ இனி கஷ்டப்படணுமானு யோசிச்சேன்!

    இது கஷ்டமில்லை மது! கடமை! செஞ்சோற்றுக்கடன் நான் நன்றி மறக்க விரும்பலை. புரியுதா? சரி! நான் போய் முதல்ல அவங்க வீட்டுக்கு ஸ்வீட் கொடுத்து விஷயத்தைச் சொல்லிர்றேன்! சாரதாம்மா புறப்பட்டாள்.

    சாரதாம்மா சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் கணவர் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். சுமாரான சம்பளம். எந்த நேரமும் பற்றாக்குறை என்று வாழ்ந்தவர்கள். மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் மது. அடுத்தவள் ஜோதி. மூன்றாவது பெண் ஜீவா. தலா மூன்று வயது வித்யாசம். ஏற்கனவே வறுமை! இதில் மூன்று பெண் குழந்தைகள் வேறு.

    ஒருநாள் அவரை பக்கவாதம் தாக்க படுத்த படுக்கையாகி விட்டார். குடும்பம் செயலிழந்தது. அந்த நேரம் மூத்தவள் மது பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.

    அவருக்கு வேலையும் போய்விட, சாரதாம்மா நிலை குலைந்தாள்.

    தான் இனி உழைத்தால்தான் குடும்பத்தைக்காக்க முடியும் என்ற சூழ்நிலை வர, தனக்குத் தெரிந்த ஒரே தொழில் சமையல் என்பதால் நாலு இடங்களில் விசாரித்தாள்.

    அந்த நேரம் கற்பகம் சமையலுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்க, சாரதா போய் சந்திக்க, வேலை உடனே கிடைத்தது!

    மாதம் ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். காலை ஆறுமணிக்கு வந்தால் இரவு உணவையும் தயார் செய்து விட்டுப் போக வேண்டும் என்ற நிபந்தனை!

    சாரதா ஒப்புக் கொண்டாள்.

    கற்பகம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்!

    அவள் கணவர் அரசாங்கத்தில் உயர் பதவி! இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு! அடுத்தவன் +2 படிக்கும் மாணவன்!

    கற்பகத்துக்கு கர்ப்பப்பையை எடுத்து விட்டதால் பெட் ரெஸ்ட் அவசியமானதால் சமையலுக்கு ஆள் தேடும் நிலை!

    சாரதா சேர்ந்த ஒரு வாரத்தில் அந்தக் குடும்பத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டாள்.

    வெல்லம் போன்ற சமையல். விதம் விதமான சமையல். அந்த ருசியில் குடும்பமே சொக்கி விட்டது. பண்பான பெண்மணி! அன்பான பேச்சு எதைக் கேட்டாலும் முகம் சுளிக்காத பதில். அயராத உழைப்பு. அந்தக் குடும்பத்தில் சாரதா ஒருத்தியாகி விட, அவளுக்காக எதையும் செய்யவும் அந்தக் குடும்பம் காத்திருந்தது.

    இரண்டு வருட காலங்கள் சாரதாவின் கணவர் படுத்த படுக்கையாக இருந்து, குடும்பம் பற்றிய மன உளைச்சலில் ஒருநாள் உயிரை விட்டார்!

    அவரது உடலுக்கான இறுதி மரியாதைகளை செலுத்தி அந்தச் செலவை முழுமையாக கற்பகம் குடும்பம் ஏற்றுக் கொண்டது.

    காரியங்கள் முடிந்ததும் சாரதா வேலைக்கு வந்து விட்டாள்!

    புருஷனை இழந்தாலும் நான் வீட்ல ஒக்கார முடியாதம்மா! மூணு பெண் குழந்தைகளை நான் கரையேத்தணுமே!

    அவளுக்காக கற்பகம் குடும்பம் வேதனைப்பட்டது.

    +2 தேர்வில் மது நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்லூரியில் சேரப் போகும் நேரம் அது. கற்பகத்தின் கணவர் ராமச்சந்திரன் தான் அதற்காகப் பாடுபட்டார்.

    மானேஜ்மென்ட் கோட்டாவில் பெரிய தொகை ஒன்றைக் கட்டி நல்ல கல்லூரியில் அவளைச் சேர்த்து விட்டார்.

    பிறகு வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து, அவள் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததும் அதை அடைத்துக் கொள்ளட்டும் என்று ஏற்பாடு செய்தார்.

    அந்த நேரம்தான் நாலாவது வருஷத்தை முடித்து விட்டு அவரது மூத்த மகன் தேவாவுக்கு ஒரு நல்ல உத்யோகம் கிடைத்திருக்கிறது! 2வது மகன்? செல்வா, 2ம் ஆண்டு படிப்பில் இருந்தான். ராமச்சந்திரன் ஓய்வு பெற இன்னும் ஒரு வருஷம்தான்!

    சாரதா அழுது விட்டாள். புருஷனும் போய், நான் தவிக்கும் போது, என் குடும்பத்தை வாழ வச்சிட்டீங்க!

    எங்க வயித்துக்கு தினசரி நல்ல சோறு தர்றீங்க இல்லையா? அன்னமிட்டவள் அன்னைக்கு சமம். புரியுதா? வேலையைப் பாருங்க!

    மது நாலாவது வருஷம் படிக்கும் போது அடுத்தவள் ஜோதி +2 முடித்து விட்டாள். அவள் பி.காம்., படிப்பை விரும்ப, அதற்கான பணத்தைக் கட்டி அவளையும் கல்லூரியில் சேர்த்தது ராமச்சந்திரன்தான்!

    இதோ மது படிப்பை முடித்து வேலையும் கிடைத்து விட்டது. மாதம் முப்பதாயிரம் சம்பளம். நல்ல ஒரு கணிப்பொறி தொடர்பான நிறுவனம்!

    சாரதாம்மா ஸ்வீட் பெட்டியுடன் நுழைந்தாள்.

    கற்பகம் சிரித்தபடி வரவேற்றாள்.

    எங்களுக்கு முன்னாலயே தகவல் வந்தாச்சு! ராமச்சந்திரன் வெளியே வந்தார். அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று தற்சமயம் வீட்டில்தான் இருக்கிறார்.

    மூத்தவன் தேவா உத்யோக நிமித்தமாக கடந்த ஒன்றரை வருஷமாக வண்டனில் இருக்கிறான்.

    அடுத்தவன் செல்வா - பெங்களூரில்!

    சாரதா ஸ்வீட்டைத்தர இருவரும் சிரித்தபடி வாங்கிக் கொண்டார்கள். உன் கஷ்ட காலத்துக்கெல்லாம் விடியல் வந்தாச்சு சாரதா!

    நான் கஷ்டமே படலை! மது வேலைக்கு வந்தாச்சு! ஜோதி 2வது வருஷம் பி.காம். ஜீவா 12வது படிக்கறா| என் மூணு பெண்களும் ஓரளவுக்கு சமூகத்துல கால் ஊனி நிக்க நீங்கதானே காரணம்?

    அழுது விட்டாள்.

    விடு! அழக் கூடாது! இனிமே நீ சந்தோஷமா இருக்கணும். பட்ட கஷ்டங்கள் போதும்

    சரி! நான் போய் சமைல் வேலையை கவனிக்கிறேன்!

    மது எப்ப வேலைல சேர்றா?

    நாளைக்கே!

    அவளுக்குத் தேவையான ட்ரஸ்கள் எல்லாம் இருக்கா?

    ஓரளவுக்கு இருக்கு

    ராமச்சந்திரன் உள்ளே போய் பணம் எடுத்து வந்தார்.

    இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு! நல்ல எடத்துல வேலைக்குப் போகும் போது அதுக்குத் தக்கப் போகணும்! வாங்கிக்கோ சாரதா!

    சாரதாவின் கண்கள் கலங்கின. உங்க கடனையெல்லாம் எந்த ஜென்மத்துலே நான் திருப்பித் தரப்போறேன்?

    அன்புக்கும், பாசத்துக்கும் கணக்குப் பார்க்கக்கூடாது. இந்த வாரக் கடைசியிலே தேவா இந்தியா திரும்ப போறான்!

    அப்படியா!

    ஆமாம்! ஒண்ணரை வருஷமா லண்டன்ல இருக்கான். அங்கே ப்ராஜக்ட் முடிஞ்சது! இனிமே இங்கேதான் வேலை செல்வாவும் லீவு எடுத்துக்கிட்டு வர்றான்!

    சாரதாவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1