Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathil Sollu Kaadhale
Kaathil Sollu Kaadhale
Kaathil Sollu Kaadhale
Ebook291 pages1 hour

Kaathil Sollu Kaadhale

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603861
Kaathil Sollu Kaadhale

Read more from Devibala

Related to Kaathil Sollu Kaadhale

Related ebooks

Reviews for Kaathil Sollu Kaadhale

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathil Sollu Kaadhale - Devibala

    http://www.pustaka.co.in

    காதில் சொல்லு காதலே

    Kaathil Sollu Kaadhale

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    உங்க பையன் தீனதயாளனுக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணத்த முடிச்சிடுங்க.

    ஏற்கெனவே குரு பலம் வந்து ஆறு மாசமாச்சு. இதை நழுவ விட்டா, இன்னும் நாலு வருஷத்துக்கு கல்யாணம் நடக்காது.

    வாத்தியார் தண்டபாணி தன் மனைவி சியாமளாவை கொஞ்சம் கலக்கத்துடன் பார்த்தார்.

    ஜோசியரே... எங்க மூணாவது பொண்ணு சவும்யாவுக்கு வயசு இருபத்தொண்ணு. அவ கல்யாணத்தை முடிச்சிட்டு இவனுக்கு செய்யலாமா?

    அவளுக்கு கல்யாண காலம் வரல... அவசரப்படாதீங்க. உங்க பையனுக்கும், அவளுக்கும் ஏழு வயசு வித்தியாசம். முதல்ல பையனுக்கு முடிச்சிடுங்க.

    சரி ஜோசியரே!

    தண்டபாணி, சியாமளா... வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    தண்டபாணி, பள்ளிக்கூட ஒய்வு பெற்ற வாத்தியார். சியாமளா குடும்பத் தலைவி. மூத்தமகள் கிரிஜா, திருமணமாகி சேலத்தில் இருக்கிறாள். கணவர் கலியமூர்த்திக்கு ஜவுளி வியாபாரம். ஏழு வயதில் ஒரு மகன். அடுத்தவள் நளினி, கல்யாணமாகி உள்ளூரில். அவள் தீனாவின் தங்கை. மூன்றாவது சவும்யா. பள்ளிப் படிப்புக்கு மேல ஏறவில்லை. வேலைக்கும் போகவில்லை. தையல், சமையல் என வீட்டோடு இருக்கும் பெண்.

    அந்தக் குடும்பத்தில் எம்.காம். படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீனா மட்டும்தான் அதிகம் படித்தவன்.

    அக்கா கிரிஜாவின் கல்யாணம் வரை அப்பா - பார்த்துக்கொண்டார். தங்கை நளினியின் கல்யாணத்தை தீனாதான் முடித்தான். இப்போது சவும்யா.

    சென்னை ஆவடியில் ஒரு வாடகை வீடு. தீனாவுக்கு வேலை, தாம்பரம் தாண்டி பெருங்களத்தூரில். தினமும் காலை ஆறரை மணிக்கு புறப்பட்டால், வீடு திரும்ப இரவு ஒன்பதாகிவிடும்.

    ஆவடியில் பல ஆண்டுகளாக வாழ்வதால் இடத்தைவிட்டுப் போக மனமில்லை. வாடகையும் குறைச்சல். குடும்ப 'பட்ஜெட்'டும் ஒரு காரணம்!

    அந்தக் குடும்பத்தில் பெண்கள் யாருமே வேலைக்குப் போகவில்லை. தண்டபாணி, சியாமளா... வீடு வர, ஜோசியர் என்னப்பா சொன்னார்?- தீனா கேட்க.

    முதல்ல உன் கல்யாணத்தை முடிக்கணும்! அப்புறம்தான் சவும்யா.

    அது ஏன்ப்பா?

    ஜோசியர் சொன்னதை அம்மா சியாமளா சொல்ல, சவும்யா உள்ளே வந்தாள்.

    நல்லதுதானே! முதல்ல அண்ணி வரட்டும் இந்த வீட்டுக்கு. எனக்கும் வயசானவங்கக்கூட வாழ்ந்து அலுத்துப் போச்சு.

    திமிராடீ? நீ ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடமாட்டே! எனக்கும் ஒடம்புல ஆயிரம் கோளாறு. ஒரு மருமக வந்துட்டா, குடும்பப் பொறுப்பை அவகிட்ட ஒப்படைச்சிட்டு, நான் அக்கடான்னு படுத்துக்கிடப்பேன்."

    அம்மா... அண்ணன் படிச்சவன். வரப்போற அண்ணி, வேலைக்குப் போகணும்னு நினைக்க மாட்டானா?

    தேவையே இல்ல. நம்ம குடும்பத்துல பொம்பள வேலைக்குப் போய் பழக்கமில்லை. புரிகிறதா...?

    அம்மா! நாங்க யாரும் பள்ளிக்கூடத்தைத் தாண்டலை. அப்புறமா எங்கே வேலைக்குப் போறது? எஸ்.எஸ்.எல்.சி. படிச்சவளைக் கட்டிப்பானா அண்ணன்?

    அது வேண்டாம்டி... படிச்சவளா இருக்கட்டும். ஆனா, வேலைக்குப் போக வேண்டாம்.

    ஏன் சியாமளா... சம்பாதிக்கிற பொண்ணா இருந்தா குடும்பத்துக்கும் உபயோகம்தானே.

    வேண்டாங்க! நம்ம கிரிஜாவும், நளினியும் வேலைக்குப் போகல. குடும்பம் நடத்தலையா... புள்ளைங்களைப் பெத்துக்கிட்டு வாழலையா? நாலு பெத்து நாம் ஆளாக்கலையா? உங்க ஒருத்தரோட வருமானம்தானே... வேலைக்குப் போற பொண்ணுங்க அடங்குமா? எனக்குப் பிடிக்கல.

    அம்மா! வாழப் போறவன் அண்ணன். அவனோட அபிப்ராயத்தை முதல்ல கேளு.

    பெத்தவளுக்கு சொல்ற பொறுப்பு இருக்குடி.

    அம்மா சொல்லட்டும் சவும்யா. அவங்களைத் தடுக்காதே - தீனா சொல்ல,

    சரி, தரகரைக் கூப்பிட்டு வரன் பாக்கணும். ஆறு மாசத்துல முடிக்கச் சொல்லியிருக்கார் ஜோசியர். நமக்கு அதிகமா அவகாசமில்ல.

    சியாமளா பதற.

    அம்மா, கம்ப்யூட்டர்ல பாத்துடலாம். இப்ப நவீன வசதிகள் நிறைய வந்திருக்கு. ஜாதகம், போட்டோ, குடும்பத் தகவல்கள் எல்லாம் கிடைக்கும்.

    அப்படியாடா?

    அண்ணே... இப்பவே பாத்துடலாம்!

    வாங்க.

    குடும்பத்தோடு தீனா தன் கம்ப்யூட்டர் முன்பு போய் உட்கார்ந்தான். 'இன்டர்நெட்' மூலம் உள்ளே நுழைந்தான். 'மேட்ரிமோனி’யில் நிறுவனங்களை வரிசைப்படுத்தினான். மணமகள் பகுதியை தேர்ந்தெடுத்தான்.

    அந்தக் குடும்ப ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, தீனா மளமளவென வரிசைப்படுத்த... பெண்களின் புகைப்படம் சர்வ தகவல்களுடன் வரிசையாக வெளியே வர- அம்மா, அப்பா, தங்கை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார்கள்.

    இவ முகம் நல்லாயில்ல... இது அழகு இல்ல... உயரம் அதிகம் என சவும்யா வேடிக்கையாக விமர்சித்துக்கொண்டே வர, இருபது நிமிடங்கள் ஓடிவிட்டன.

    நிறைய பொண்ணுங்க இருக்காங்க. ஆனா நம்ம மனசுக்கு எதுவும் பிடிபடலையே?

    அண்ணே... நிறுத்து. இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கு. விவரங்களைப்பாரு. தீனா அதை நிறுத்திப் படிக்க,

    சரண்யா வயது 24, படிப்பு: பி.டெக், உத்தியோகம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனம். சம்பளம் முப்பத்தி ஐந்தாயிரம். அப்பாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. அம்மா, மாநில அரசாங்க ஊழியர். ஒரே அண்ணன். வங்கியில் வேலை.

    தீனா விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான்.

    இது வேண்டாம்டா.

    ஏன்ம்மா?

    படிச்ச பொண்ணு. பெரிய உத்தியோகம். குடும்பமும் படிச்சது. அவங்க அம்மாக்கூட வேலை பாக்கறாங்க. நமக்கு சரிப்படாது.

    பொண்ணு அழகா இருக்காம்மா! - சவும்யா சொல்ல,

    வேண்டாம்டி. வேலைக்குப் போகாத படிச்ச பொண்ணா பாரு தீனா.

    'காலிங் பெல்’ அடிக்க, அப்பா எழுந்து போனார்.

    சியாமளா... பக்கத்து வீட்டம்மா வந்திருக்காங்க.

    இதோ வந்துட்டேங்க.

    அம்மா எழுந்து போக, தீனா அந்த கம்ப்யூட்டரையே - பார்த்துக்கொண்டிருந்தான்.

    அண்ணே! இந்தப் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    எனக்கும்தான் சவும்யா.

    அப்ப இவங்களையே பார்க்கலாமே?

    அம்மா வேண்டாம்னு சொல்றாங்களே?

    அதுக்காக...? வாழப் போறது நீ! அம்மா சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்ட முடியுமா? உனக்குன்னு ஒரு சொந்தக்கருத்து வேண்டாமா? தீனா பேசவில்லை!

    அவன் கண்கள் முழுமையாக சரண்யாவின் புகைப்படத்தில் நிலைத்திருக்க,

    அம்மாவும், நாங்க மூணு பேரும் வேலைக்குப் போகலைன்னா... அதுக்கான தகுதிகள் எங்களுக்கு இல்லை. வரப்போற அண்ணியும் அப்படியே இருக்கணும்னு சட்டமா?

    தீனா எந்தவித பதிலும் சொல்லவில்லை. சரண்யா அதிவேகமாக அவன் கண்களின் வழியாக உள்ளே நுழைந்து நெஞ்சுக்குள் புகுந்துவிட்டாள் அதிரடியாக!

    தீனா, கல்லூரியில் படிக்கும் நாட்களில் எத்தனையோ பெண்களிடம் பழகியதுண்டு. நெருக்கமான தோழிகளாக பல பேர் இருந்ததுண்டு. இதோ... வேலை பார்க்கும் இடத்திலும் பெண்களின் பழக்கம் தினசரி தொடர்கிறது. இந்த 28 வயது வாழ்க்கையில் அவனுக்கு காதலில் நம்பிக்கை இல்லை. எந்த ஒரு பெண்ணும் பெரிதாக அவனை வசீகரித்ததும் கிடையாது. முதன் முறையாக ஒரு அதிர்வை உண்டாக்கிக்கொண்டிருக்கும் பெண் இந்த சரண்யாதான்!

    முழுமையாக அவனைஆக்கிரமக்கத் தொடங்கிவிட்டாள். 5 பெரிய படிப்பு, நல்ல சம்பளம்- இதெல்லாம்கூட தீனாவை ஈர்க்கவில்லை.

    அவளது அழகு கட்டிப்போட்டது. சவும்யா பக்கத்தில் இருந்து அவனது முகபாவத்தை உன்னிப்பாக கவனித்தாள்.

    அப்பா, அம்மா உள்ளே வந்துவிட்டார்கள்.

    சரிப்பா... அடுத்ததைக் காட்டு. தீனா பேசவில்லை.

    அம்மா... அண்ணனுக்கு இந்த சரண்யாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. இவ ஜாதகத்தை ஜோசியர்கிட்டக் காட்டலாம்.

    வேண்டாம்டி! மெத்தப் படிச்சு, நிறைய சம்பளம் வாங்கற பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரியேபடாது.

    அதுல என்னம்மா தப்பு?

    உனக்குப் புரியாது. வேண்டாம்னு சொன்னா விடு. தீனா திரும்பினான்.

    இல்லைம்மா! சவும்யா சொல்றது சரிதான். எனக்கு இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. இவளையே பாக்கலாம்.

    வேலைக்குப் போறாளேடா!

    அதையெல்லாம் பேசிக்கலாம்மா.

    அப்படீன்னா ஜாதகத்தைப் பாத்துடலாமா? அப்பா கேட்க.

    "என்னடா பேசற? ஜாதகம் பாக்காம நம்ம குடும்பத்துல எதுவும் நடக்காது... புரியுதா? பார்த்தே ஆகணும். கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர்

    வேண்டாம்ப்பா. ஜாதகம் சேரலைன்னா, இது அடிபடும். மனசுக்குப் பிடிச்ச பிறகு ஜாதகம் எதுக்கு? மகன் சொல்ல, அம்மா ஆடிப்போனாள்... அதுல எந்த ஒரு வில்லங்கமும் வரக்கூடாது."

    அப்ப உடனே பாத்துடுங்க. நானும் உங்கக்கூட வர்றேன்.

    சரண்யாவின் தகவலை உடனே 'பிரிண்ட் அவுட்' எடுத்துவிட்டான்.

    இப்பவே போகலாம்.

    அவன் படும் அம்மாவுக்கு அவசரம் கண்டு மிரட்சியாக இருந்தது!

    வீட்ல சமையல் வேலைல இருக்குடா.

    சரி... நானும், அப்பாவும் போறோம். நீ வீட்டு வேலைகளைக் கவனி.

    2

    கல்யாண விஷயங்களை பெரியவங்க பேசணும்! இவனே அதிகப்பிரசங்கித்தனமா 'மெயில்' கொடுத்திருக்கானே... நல்லாருக்கா? எனக்குப்பிடிக்கலை."

    அம்மா இந்திரா சொல்ல... சரக்கென நிமிர்ந்தாள் சரண்யா!

    ஏன்ம்மா... அதுல என்ன தப்பு? இந்த தீனா அளவுக்கு அவங்க வீட்ல படிச்சவங்க இல்லாம இருக்கலாம். அவனுக்கு நம்ம சரண்யாவை பிடிச்சிருக்கு. அதை அழகா 'மெயில்'ல சொல்லிட்டான்... என்ன தப்பு?

    அண்ணன் ராஜிவ் கேட்க... அப்பா சுந்தரம் அருகில்... வந்தார்.

    படத்துல அந்த தீனா அழகாத்தான் இருக்கான். தப்பா ஒண்ணும் தெரியல.

    சரண்யா! நீ என்ன சொல்ற?- ராஜிவ் கேட்க.

    எனக்கும் பிடிச்சிருக்கு.

    பிடிக்காம...? 'எங்க வீட்டுக்கு வாழ வரும் உன்னை, ஒரு ராஜகுமாரி போல நடத்துவோம்'ன்னு சொல்லி இருக்கானே... ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதுவரைக்கும் கல்யாண வரன்ல இத்தனை அழகான ஒரு 'மெயிலை' வேற யாரும் இந்த மாதிரி குடுத்திருக்க வாய்ப்பே இல்ல.

    நல்ல படிப்பு- பெரிய கம்பெனி. சம்பளமும் நம்ம சரண்யாவைவிட அதிகம்தான் - அப்பா சுந்தரம் பாராட்ட.

    இந்த வரனைப் பார்க்கலாம்ப்பாராஜிவ் சொல்ல,

    ஏன்ம்மா... நீ எதுவும் பேசலை?

    சரண்யா கேட்க, என் மனசுலபட்டதைச் சொன்னேன். உனக்குப் பிடிச்சிருந்தா, எனக்கு எந்தத் தடையும் இல்ல. 'பிரிண்ட் -அவுட்' எடு. ஜாதகம் பார்த்துடலாம்.

    "எ து க் கு இந்திரா...... ஜாதகம் சேர்ந்திருக்குன்னு அந்தப் பையன் எ ழு தி இருக்கானே?'

    ஆனாலும் நாம் பார்க்க வேண்டாமா?

    வேண்டாம் மா... அவங்க பொய்யா சொல்லுவாங்க?

    காதல்ல ஜாதகம் பார்க்கறோமா? - இது ராஜிவ்.

    சரி, உங்க விருப்பம்.

    சரண்யா... நீயே பதில் 'மெயில்' குடுத்துடு.

    சும்மா இருடா! பெரியவங்க நாங்க இருக்கோம். அந்த அதிகப்பிரசங்கித்தனம் நம்ம வீட்ல வேண்டாம் - இந்திரா சீற,

    சுந்தரம் குறுக்கிட்டார்.

    அப்ப 'மெயில்' வேண்டாம். நான் போன் பண்ணி தீனாவோட அப்பாகிட்ட பேசிடுறேன்.

    ஜாதகம் சேர்ந்தாச்சு... அடுத்தது என்னன்னு? கேட்டுடலாம்.

    இனி என்ன... பெண் பார்க்க வர்றதுதான்.

    அதை அவங்க சொல்லட்டும் இந்திரா. ராஜி... அந்த ஃபோன் நம்பர்'களை சொல்லுடா.

    ராஜிவ் சொல்ல, அப்பா சுந்தரம் 'டயல்’ செய்தார். அது தீனாவின் 'நம்பர்'.

    நேரம் இரவு எட்டரை. தீனா... போனை எடுத்தான். கல்யாண விஷயமா ஒரு 'மெயில்' வந்தது. பொண்ணு பேரு சரண்யா. நான் அவளோட அப்பா சுந்தரம்.

    நான் தீனாதான் பேசறேன்.

    ஒ... ஸாரி! இது உங்க நம்பரா?

    "பாதகமில்லை அங்கிள். சரண்யாவோட அப்பாவா நீங்க...? 'மெயிலை படிச்சிட்டீங்களா? ரொம்ப சந்தோஷம் என உறுத்து சடசடவென தீனா பேசத் தொடங்க, சுந்தரம் ஒரு மாதிரி ஆடிப்போனார்.

    உங்க அப்பா பக்கத்துல இருக்காரா?

    அங்கிள்... நான் வெளியில இருக்கேன். நீங்க தாராளமா எங்கிட்ட பேசலாம். வீட்டுக்குப் போய் அப்பாவை உங்ககிட்ட பேசச் சொல்றேன். சரண்யா படத்தைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுப் போச்சு! உங்க பொண்ணு என் 'மெயிலை' பார்த்தாங்களா?

    கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.

    எல்லாரும் பார்த்தோம் சார்.

    சாரா? 'தீனா'ன்னு கூப்பிடுங்க. மாப்பிள்ளையானாலும் மகனைப் போலதான்.

    சரி... நல்லது. மேற்கொண்டு என்ன வேணும்னு உங்க அப்பா சொல்லட்டும். நாங்க அதன்படி செய்யறோம்

    சரி அங்கிள். இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுந்தரம் சகல விவரங்களையும் சொல்ல, ராஜிவ் அதை ரசித்தான்.

    இந்திராவுக்கு மட்டும் பிடிக்கவில்லை.

    என்னங்க... அவங்க வீட்ல பெரியவங்க பேச மாட்டாங்களா... சரியா இல்லையே?

    அவன் வெளியில இருக்கான்ம்மா. எல்லாத்தையும் தப்பா எடுத்துக்க முடியுமா?

    அரை மணி நேரத்தில் அடுத்த 'போன்’!

    நான் தண்டபாணி- தீனாவோட அப்பா பேசறேன். பையன் சொன்னான்.

    சரிங்க

    நாங்க உங்க பொண்ணை பார்க்க எப்ப வரலாம்... எப்படி வசதி?

    அவளும் வேலைக்குப் போறவ. நாங்க எல்லாருமே அப்படித்தான். அதனால வர்ற ஞாயித்துக்கிழமை வச்சுக்கலாமா?

    தாராளமா! 'மெயில்'ல உள்ள விலாசம்தானே?

    ஆமாங்க.

    காலையில் பத்து மணிக்கு நாங்க உங்க வீட்டுக்கு வந்துடுறோம்... சரியா?

    சரிங்க

    அங்கே- தண்டபாணி, போனை வைத்தார்.

    இங்கே- சரண்யா... ஞாயித்துக்கிழமை உனக்கு இடைஞ்சல் எதுவும் இல்லையே?

    இல்லைப்பா.

    இந்திரா குறுக்கிட்டாள்: இப்பத்தான் 'மெயில்' பார்த்தோம். ஜாதகம் கூட பார்க்கல. அதுக்குள்ளே பெண் பார்க்க வரணுமா? அவங்க ரொம்ப அவசரப்படுற மாதிரி தெரியலே?

    என்ன பேசற இந்திரா... பேசி முடிச்சா, அடுத்தது பெண் பார்க்கற படலம்தானே?

    அம்மா! உனக்கு சுத்தமா பிடிக்கலையா? சரண்யா கேட்க,

    இல்லைடி! அப்படி நான் சொல்லலை. அவங்க வீட்ல எல்லாத்தையும் அந்தப் பையனே பேசுறான். உங்க அப்பாகிட்ட உருகி வழியறான். மாப்பிள்ளைன்னா ஒரு கம்பீரம் இருக்க வேண்டாமா?

    ஏம்மா... பந்தா பண்ணணும்னு சொல்றியா? எதார்த்தமா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?- ராஜிவ் கேட்க,

    நீ சும்மா இருடா! என் மனசுலபட்டதைச் சொன்னேன்.

    இந்திரா... பேசிட்ட காரணமா, முடிஞ்சிடும்னு நினைக்க வேணாம். நேர்ல பார்க்கணும், பேசணும், மனசுக்கு பிடிக்கணும்... எவ்ளோ இருக்கு. ஏன் பதற்றப்படுற?

    சரிங்க! நான் எதையும் தடுக்கல. சரண்யா நமக்கு ஒரே பொண்ணு. அவசரப்படக்கூடாது. அவ சந்தோஷமா இருக்கணுமில்லையா?

    நானும் எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணின பிறகுதான் குடுப்பேன்.

    ராஜிவ் தனியாக வந்தான்.

    சரண்யா உனக்குப் புடிச்சிருக்கா?

    படத்துல ஓ.கே.!

    வித்தியாசமா இருக்கான். அன்பும், காதலும் ஒசத்தின்னு நினைக்கிறான். எனக்குப் பிடிச்சிருக்கு.

    மறுநாள் காலை அங்கே தீனா உற்சாகமாகிவிட்டான்.

    அப்பா... படத்துல பார்த்தா, நேர்ல கண்டிப்பா பிடிக்கும்! ஒருவேளை ஞாயித்துக்கிழமையே தாம்பூலம் மாத்திடலாம்னு அவங்க அபிப்ராயப்பட்டா அன்னிக்கே மாத்திடலாமா?

    சியாமளா கடுப்பாகிவிட்டாள்.

    தீனா... உனக்கு இன்னும் ரெண்டு சகோதரிகள் உண்டு... மாப்பிள்ளைங்க இருக்காங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு, நிச்சயதார்த்தம் நடத்த முடியுமா? அப்படி என்ன அவசரம்னு எனக்குப் புரியல!

    ஏம்மா கோபப்படுற?

    கோவம் இல்லடா! மனசுக்குள்ளே ஒரு பயம்.

    என்ன பயம்?

    அந்தக் குடும்பத்துல எல்லாரும் படிச்சு வேலை பார்க்கறவங்க. நிச்சயமா சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கும். நமக்கு எதுவும் இல்ல. நளினி கல்யாணக்கடன்கூட முழுசா அடைபடல. நம்மைவிட அந்தஸ்துல உசந்தவங்க வீட்லே இருந்து பெண் எடுத்தா, நமக்கு மரியாதை இருக்குமா?

    ஏன்டீ... தீனாவுக்கு என்ன குறைச்சல்?

    அதைத்தான் நானும் சொல்றேன். அப்படி இருக்க, நம்மைவிட பணம் படைச்சவங்க நம்ம பிள்ளையை குறைச்சி மதிப்பிடக் கூடாதில்லையா?

    அம்மா! நளினி அக்காவோட கல்யாணக் கடன்கூட அடையலைன்னு ஆதங்கப்படுறே. இந்த நிலையில் சம்பாதிக்கிற அண்ணி வந்தா, நம்ம குடும்பத்துக்கு நல்லதுதானே? அண்ணனோட பாரத்தை அவளும் சுமப்பா இல்லையா?

    எதுக்குடி...? நம்ம வீட்டுக் கடனை நாளைக்கு அவ அடைச்சா, உங்க அண்ணனோட மரியாதை என்னாகறது... அப்புறம் அவ அடங்குவாளா அவனுக்கு?

    ஏம்மா... புருஷனோட பாரத்தை மனைவி சுமக்கறது தப்பா? எந்த வீட்லயும் இது நடக்கலையா... என்ன பேசற நீ?

    நீ சின்னப் பொண்ணு... புரியாம பேசாதே!

    "நிறுத்தும்மா!

    Enjoying the preview?
    Page 1 of 1