Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Endral Anbu
Amma Endral Anbu
Amma Endral Anbu
Ebook91 pages35 minutes

Amma Endral Anbu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604248
Amma Endral Anbu

Read more from Devibala

Related to Amma Endral Anbu

Related ebooks

Reviews for Amma Endral Anbu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Endral Anbu - Devibala

    http://www.pustaka.co.in

    அம்மா என்றால் அன்பு

    Amma Endral Anbu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அவன் மேல் ஒரு காலைத் தூக்கிப்போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தது செளம்யா! கையால் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது. அம்மா வந்தாள்.

    செல்வம்! நேரமாச்சு! எழுந்திருப்பா!

    நான் அப்பவே முழிச்சுட்டேன்மா! என்னால் எழுந்திருக்க முடியலை! குழந்தை பாரு!

    அவளையும் எழுப்பு! ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டுத்தானே நீ போவ?

    அதன் கையை, காலை மெல்ல எடுத்தான்.

    செளம்யா! எழுந்திருடா டார்லிங்!

    குட்மார்னிங் பப்பா!

    தன் அழகிய கண்களை விழித்து, அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தது.

    நேரமாச்சு! நீ ஸ்கூலுக்குப் போகணும்! பப்பா ஆபீசுக்குப் போகணும்! வாடா ராஜா!

    ம்ஹூம்! நான் இன்னிக்கு லீவு!

    எதுக்கு?

    எங்க ரமா மிஸ் ஸ்கூலுக்கு வரமாட்டா!

    அவங்க வரலைனா, நீ எதுக்கு லீவு போடணும்?

    அவங்க வரலைனா, நான் போக மாட்டேன்!

    சிணுங்கத் தொடங்கியது!

    அம்மா உள்ளே நுழைந்தாள்.

    என்ன சொல்றா? ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னா?

    ஆமாம்!

    அதெல்லாம் முடியாது! அவளை எழுப்பி மூஞ்சில கொஞ்சம் தண்ணியை ஊத்து!

    பாவம்மா!

    என்னடா பாவம்? நீ பாட்டுக்கு ஆபீசுக்குப் போயிருவே! இது என் கழுத்தை நாளெல்லாம் அறுக்கும்! அதென்ன அப்படியொரு செல்லம்? ஸ்கூல் விஷயத்துல சலுகையே கூடாது செல்வம்!

    நீ வாடா கண்ணு! பல் தேச்சுக் குளிக்கலாம். பப்பா சொன்னா, கேப்பே இல்லையா?

    அதைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு நடந்தான். பல் தேய்க்க வைத்து, குளிப்பாட்டி விட்டான். வெளியே அழைத்து வந்து சீருடை மாட்டிவிட்டான்.

    அம்மா நாங்க புறப்படறோம்!

    செல்வம்! தரகர் வந்தார் நேத்திக்கு!

    எதுக்கு?

    உன் கல்யாண விஷயமா...?

    சடாரெனத் திரும்பினான். அம்மா! அந்த முயற்சி வேண்டாம்னு நான் சொல்றேன் இல்லையா? நீ கேக்க மாட்டியா?

    அதில்லைப்பா! நான் நிரந்தரம் இல்லை! வயசாச்சு! இந்தப் பச்சக் குழந்தையையும் வச்சுக்கிட்டு, எத்தனை காலம் நீ வாழ்க்கைல தனியா...

    ப்ளீஸ்மா! ஆபீஸ் போற நேரத்துல என்னை மூட் அவுட் பண்ணாதே! செளம்யா போலாமா?

    ரெடி!

    காரை எடுத்தான் வெளியே. அது முன் கதவைத் திறந்து அமர்ந்து கொண்டது.

    டிரைவர் இருக்கையில் அமர்ந்து வேகம் பிடித்தான் செல்வம்.

    செல்வம் நல்ல நிறத்துடன், உயரமும், செதுக்கி வைத்த உடம்புமாக அழகான இளைஞன்!

    இன்னும் முப்பதைக்கூட எட்டாதவன்.

    அயல்நாட்டு வங்கி ஒன்றில் அதிகாரி!

    ஐந்து இலக்கச் சம்பளம் பெறுபவன்!

    அப்பா சேர்த்து வைத்த சொத்துக்கள், இந்தப் பெரிய வீடு, கார், வங்கியில் கொஞ்சம் பணம். வசதியான வாழ்க்கை!

    அவனைச் சுற்றி எப்போதும் பெருமூச்சு விடும் பெண்கள் கூட்டம் ஒன்று உண்டு!

    ஆனால், ரேவதியின் மரணத்துக்குப் பின் கல்யாணம் என்ற வார்த்தையை அம்மா எடுத்தாலே சூடாகி விடுகிறான்!

    இப்போது அவனது உலகத்தில் எல்லாமே ஐந்து வயது செளம்யாதான்.

    கான்வென்ட் வாசல் வந்தது.

    நகரில் அது பிரபலமான, வசதிகள் அதிகமுள்ள பிள்ளைகள் மட்டுமே படிக்கும் கான்வெண்ட்!

    போன வருடம்தான் செளம்யாவை அதில் சேர்த்தான்.

    இந்த வருடம் அது யு.கே.ஜி.!

    குழந்தையை வகுப்பில் உட்கார்த்தி வைத்துவிட்டு வெளியே வந்தான். காரை எடுத்தான். வேகம் பிடித்தான். வங்கிக்குள் பத்து நிமிடம் தாமதமாக நுழைந்தான்.

    எதிர்ப்பட்ட மற்றவர்களுக்கு காலை வணக்கங்களை வாரி இறைத்து விட்டு நடந்தான்.

    தன் கேபினுக்குள் நுழைந்தான். ஏ.ஸி.யை இயங்க விட்டான். கம்ப்யூட்டர் மேலிருந்த உறையை எடுத்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1