Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasara Vaarisu
Avasara Vaarisu
Avasara Vaarisu
Ebook74 pages34 minutes

Avasara Vaarisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604152
Avasara Vaarisu

Read more from Devibala

Related to Avasara Vaarisu

Related ebooks

Reviews for Avasara Vaarisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasara Vaarisu - Devibala

    http://www.pustaka.co.in

    அவசர வாரிசு

    Avasara Vaarisu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    சம்பத்! நீயும் வர்றியா? பம்பாய் ஷண்முகாநந்தா ஹால்ல ப்ரோக்ராம். தவிர இன்னும் அஞ்சாறு கச்சேரிகளுக்கு அங்கேயே புக் ஆகியிருக்கு.

    எத்தனை நாள்மா ஆகும்?

    பத்து நாளாகும் தாராளமா!

    வேண்டாம்மா! பிஸினஸ் கெட்டுப் போகும். எனக்கு வர ஆசைதான். ஆனா நீ காரணமாப் போது, தான் வெட்டியா பத்துநாள் பொழுதைப் போக்கறது சரியில்லைனு தோணுது!

    மகனைப் பெருமையுடன் பார்த்தாள் வித்யா.

    நான் பிரபல பாடகி. சுச்சேரி பண்ணி லட்சக் கணக்குல சம்பாதிச்சிட்டேன். நீ எனக்கு ஒரே பிள்ளை! எதுக்காக கண்ணா நீயும் பிஸினஸ்னு இருபத்தி நாலு மணி நேரமும் உழைக்கற? ஜாலியா இரேன் வாழ்க்கையில!

    எத்தனை காலத்துக்கும்மா?

    என்ன சொல்ற?

    இப்ப ஜாலியா இருந்தா, எப்ப பொறுப்பு வரும் எனக்கு? உன் பிள்ளை நான். உழைக்காம சாப்பிடலாமா? சொல்லு!

    வித்யா சிலிர்த்துப் போனாள்.

    சரி! உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? பத்து நாள் நான் ஊர்ல இருக்க மாட்டேன். உடம்பை ஜாக்ரதையாப் பார்த்துக்கோ. சரியா சாப்பிடு! அதிக நேரம் தூக்கம் முழிக்கக் கூடாது. புரியுதா?

    சரிம்மா!

    நாளைக்குக் காலைல ப்ளைட் எனக்கு!

    தன் பேக்கிங் வேலையில் மும்முரமாகி விட்டாள் வித்யா.

    சம்பத் ஒரே மகன் வித்யாவுக்கு. அவனுக்கு ஏழு வயதாக இருக்கும் போது அப்பா இறந்து போனார்.

    எப்படி?

    எல்லாக் கெட்ட பழக்கங்களும் உள்ள உத்தமமான (?) மனிதர் அவர்.

    வித்யா பெரிய அளவில் நொந்து போயிருந்தார்.

    அவருடன் குடித்தனம் நடத்திய வரையில் எந்த சந்தோஷமும் வித்யாவுக்கு இல்லை. அவர் செத்த அன்று உள்ளபடியே கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருந்தது.

    தன் சங்கீதம், ஞானம் சகலத்தையும் மூட்டை கட்டி பரண்மேல் வீசியிருந்த வித்யா, தூசி படிந்த தம்புராவை முதலில் கீழே இறக்கினாள்.

    ஸ்ருதி சேர்த்தாள்.

    உள்ளுக்குள்ளே அத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த சோகம் சங்கீதமாக அடித்து கொண்டு வெளியே வரத் தொடங்கியது.

    தானே பல சபாக்களைத் தேடிப் போனாள்.

    ரசனையுள்ள மனிதர்களை சந்தித்தாள்.

    அவளது கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் வீண் போகவில்லை.

    சின்னச் சின்ன நிகழ்ச்சிகளாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கேட்பவர்களின் ரசனை கூடப் போக, ஏதோ ஒரு மத்யானம் கச்சேரியை சங்கீத விமர்சகர் சுப்புடு ஏற்றி வைக்க, சூடு பிடித்துக் கொண்டது.

    படபடவென வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

    இதோ இந்தப் பதினைந்து வருடங்களில் அகில இந்திய ரீதியில் வளர்த்து விட்டாள்.

    அவள் கச்சேரி, மெல்லிசை

    Enjoying the preview?
    Page 1 of 1