Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ival Oru Mathiri!
Ival Oru Mathiri!
Ival Oru Mathiri!
Ebook130 pages1 hour

Ival Oru Mathiri!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100603688
Ival Oru Mathiri!

Read more from Devibala

Related to Ival Oru Mathiri!

Related ebooks

Reviews for Ival Oru Mathiri!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ival Oru Mathiri! - Devibala

    http://www.pustaka.co.in

    இவள் ஒருமாதிரி!

    Ival Oru Mathiri!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் வரிதா இவள் ஒருமாதிரி! ஆங்.. இப்படி சொன்னதும் வேறு மாதிரி நினைக்க வேண்டாம்! தப்பான பெண் இல்லை படிச்ச அழகான, நல்ல உத்யோகம் பார்க்கற கண்ணியமான குடும்பத்து பெண் தான்.

    இவள் இந்த கதையின் நாயகியா?

    ஆம்!

    இவள் நான் இந்தக் கதையின் வில்லியா?

    ஆமாம்பா...ஆமாம்!

    அதெப்படி ஒரு பெண் நாயகியாக, வில்லியாக எப்படி இருக்க முடியும்!

    முடியுமே! அது அவளோட கேரக்டர்! அது தான் கதை படிங்க ஆச்சர்யங்கள் நிறைய காத்திருக்கு

    வனிதாவின் படிப்பு எம்.காம்.! தவிர ஐ.சி.டபுள்யூ எழுதியிருக்கிறாள். ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடப் முப்பதாயிரம் சம்பளம். புத்திசாலி சாதிக்கத் துடிக்கும் பெண் வயது இருபத்து மூன்று.

    குடும்பம்

    அப்பா இப்போது உயிருடன் இல்லை இரண்டு வருடங்களுக்கு முன்பே கேன்சர் வந்து இறந்தார்,

    அவர் ஒரு கம்பெனியில் அதிகாரி

    அம்மா பள்ளிக்கூடத்தில் டீச்சர்

    மூத்தவள் சுனிதா. பள்ளிப் படிப்பை தாண்ட வில்லை, சுமாரான அழகு!.. பெரிய அளவில் புத்தி போதாது. ஆனால் அற்புதமான சமையல், வீட்டுப் பராமரிப்பு, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ள நல்ல பெண் வயது இருபத்து ஆறு.

    அப்பா கொஞ்ச நாளாகவே கேன்சரில் தவித்து குடும்பமே போராடி போய்ச் சேர்ந்தார்.

    அவரது பைனல் செட்டில்மெண்ட் என இருபது லட்சம் வரை வந்தது அம்மா ஜெயாவுக்கு வேலை இருந்ததால் பிரச்சனை இல்லை,

    வீடு வாடகை வீடுதான் கடன் இல்லை. ஆனாலும் குடும்பத்தலை வனை இழந்ததால் குடும்பம் தடுமாறி நிற்பது தான் சோகம்!

    அப்பாநல்ல மனிதர் குடும்பப்பற்றும் பாசமும் உள்ளவர் ஒரு மகன் இல்லாத குறை ஜெயாவுக்கு.

    அதான் சின்னவ இருக்காளே தம்பி மாதிரி அவ பார்த்துப்பா!

    வனிதா மேல் அவருக்கு அசாத்தியமான நம்பிக்கை!

    போதுமே! அவளுக்கே தான் அழகு-புத்திசாலிங்கற அகங்காரம் பெரியவங்ககிட்ட மட்டு மரியாதை இல்லை, பெத்தவங்களையே மதிக்கிறதில்ல, நீங்க குடுத்த செல்லம்தான் காரணம்

    அம்மா ஜெயா புலம்ப, தப்புடி! அது அகங்காரம் இல்லை தன்னம்பிக்கை! திமிர் இல்லை, தைரியம்! எல்லாம் நிறைந்து இருந்தா இந்த துணிச்சல் தேவைதான்!

    இல்லீங்க எனக்கு புடிக்கல இது ஆபத்து! பொண்ணா பொறந்தா கொஞ்சம் அடக்கம் வேணும் வனிதா கிட்ட சுத்தமா அது இல்ல!

    பெத்த மகளை நீ கரிச்சு கொட்டாதே! நம்ம புள்ளைங்கள் நாமே விட்டுத்தரக்கூாடது!

    இல்லீங்க நான் ஒரு டீச்சர் எங்கிட்ட படிக்கற புள்ளைங்களுக்கு பண்பாடு, மரியாதை, அடக்கத்தை கத்துக்குடுத்துட்டுதான் பாடங்களை சொல்லிக் கொடுப்பேன்! பாடத்தை யார் வேணும்னாலும் படிக்கலாம் பண்பை பெத்தவங்கதான் சொல்லித்தரணும். ஊரார் புள்ளைங்களை திருத்தற நான் சொந்தப் புள்ளைக்கு சலுகை குடுக்கிறது நியாயமே இல்லை

    அப்பா என்னால முடியல இந்த வீட்டை பள்ளிக்கூடமா மாத்த உங்க பொண்டாட்டி நினைச்சா விடமாட்டேன்!

    அம்மா! தப்பா பேசலயே வனிதா!

    நீ வாயை மூடு சுனிதா

    அவ உன் அக்கா மரியாதை குடு!

    உன்ஜால்ராவுக்கு 'ம்'... போட எனக்கு பிடிக்காது!

    அவ பெத்தவங்களை மதிக்கறா! அதுக்கு பேரு ஜாலரா இல்ல!

    அவளுக்கு சுயநம்பிக்கை இல்லை ஏன்னா படிக்கல, தன்னை வளர்த்துக்கல, அவ உலகம் சமையல் கட்டுதான்!

    பசிச்சா சோறு திங்க சமையல் கட்டுக்குத்தான் வரணும்!

    ஓட்டலுக்கு போகலாம் எனக்கு சமைக்கத் தெரியும்!

    இவளுக்கு உன்னை விட்டா நாதியில்ல மத்தவங்களை சார்ந்து வாழணும்னா அண்டிப் பிழைச்சாத்தான் முடியும்

    சுனிதா கண்கள் கலங்கி விட்டது!

    அம்மா ஜெயா கடுப்பாகி விட்டாள்

    ஏண்டி அவளை புண் படுத்தறு! உனக்கு பாசம், ஈரம், இதயம் எதுவும் இல்லையா?

    உண்மையை சொன்னா புண்படுத்தறதா நீ நேனச்சா எனக்கு கவலையில்லை

    சரி விடுங்க! அப்பா சொல்ல.

    என்ன விடுங்க! அவளை உங்களால் கண்டிக்க முடியாதா! பெரியவளுக்கும் நீங்கதான் அப்பா.அவ கண்ணீர்உங்களை பாதிக்கலையா?

    இது ஒரு சாம்பிள்

    இந்த மாதிரி தினசரி நடக்கும்

    அந்த அப்பா நோய் தாக்கி உயிரையும் விட்டு விட்டார்

    அந்த நேரம் வனிதா படித்துக்கொண்டிருந்தாள்!

    ஜெயா மட்டுமே வேலைக்கு போகும் நிலை!

    இரண்டு வருமானத்தில் தாராளமாக இருந்த குடும்பம் சற்றே தள்ளாடியது!

    அவரது மொத்தப்பணத்தை ஜெயாவங்கியில் சேர்ந்து விட்டாள்! வனிதா எம்.காம். முடித்ததும் வெளிநாட்டில் மேலே படிக்க ஒரு வாய்ப்பு வந்தது! 15 லட்சம் தேவைப்பட்டது!

    அம்மாவிடம் கேட்டாள்

    இல்வ வனிதா! அதை கொடுக்க முடியாது

    ஏன் அப்பா பணத்துல எனக்கு உரிமை இல்லையா

    இருக்கு ஆனா உனக்கு படிப்பு இருக்கு வேலை கிடைக்கும் உன் கால்ல நீ நிக்கலாம். சுனிதா நிலமை அப்படி இல்லை. அவளை ஒரு நல்ல இடத்துல ஒப்படைக்க எனக்கு பணமே போதாது! புரியுதா?

    அவ படிக்க ஆசைப்பட்டா கொடேன்மா!

    இல்லடி! அதுக்கு வாய்ப்பு இல்லை!

    வனிதா கடுப்பாகி விட்டாள்

    இந்தப் பணத்தை வச்சு இவளை நீ வாழ வச்சிடுவியா!

    முடியும்னு நம்புறேன்!

    நீ முட்டாள் இவளுக்கு எந்தத் தகுதியும் இல்லை! எவன் இவளை கட்டிக்க வருவான்? இந்தப் பணத்தை காட்டி யார் தலைல இவளை கட்டப்போற

    போதும்டி! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாக்கூட நான்மனுசியாக இருக்க மாட்டேன்! கூடப்பொறந்தவ வாழணும்னு நீ நினைக்க நீ வேண்டாம்... தப்பாவா பேசுற

    ஏம்மா' உண்மைகளை சீரணிக்க உன்னால் முடியாதா! எப்பவுமே போலியாகத்தான் வாழ்வியா

    நிறுத்துடி! அவ நல்லவ! கடவுள் அவளை கை விடமாட்டார் பெத்த அம்மா நானிருக்கேன். உங்க யார்தயவையும் தாடி இவளை வாழ வைக்க போறதும் இல்லை, அதுக்கான அவசியமும் எனக்கில்லை, இதோட நிறுத்திக்கோ!

    அடுத்த ஒரே மாதத்தில் வனிதா அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டுவிட்டாள்,

    முப்பதாயிரம் சம்பளம்

    அவளது புத்திக்கு தரப்பட்ட வேலை. அம்மாவிடம் வந்து நின்றாள். ஆர்டரை நீட்டினாள்!

    அப்பா பணமும் வேண்டாம், உன் தயவும் வேண்டாம் நல்ல வேலைல சேர்ந்தாச்சு

    சந்தோஷம்! ஆனா நீ தானா மேல வரல அதை மறக்காதே!

    தெரியும்! அதை சுனிதாவுக்கு ஏன் செய்யல

    Enjoying the preview?
    Page 1 of 1