Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kiliye Kobama?
Kaadhal Kiliye Kobama?
Kaadhal Kiliye Kobama?
Ebook120 pages35 minutes

Kaadhal Kiliye Kobama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603736
Kaadhal Kiliye Kobama?

Read more from Devibala

Related to Kaadhal Kiliye Kobama?

Related ebooks

Reviews for Kaadhal Kiliye Kobama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kiliye Kobama? - Devibala

    http://www.pustaka.co.in

    காதல் கிளியே கோபமா?

    Kaadhal Kiliye Kobama?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    இரவு மணி எட்டாகிவிட்டது. வாசலுக்கும், உள்ளுக்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தாள், ரேவதி!

    மகள் தீபா, பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள்.

    அண்ணி! பசிக்குது!

    உள்ளிருந்து குரல் கொடுத்தாள், லீலா!

    இருடி! என்ன அவசரம்? உங்க அண்ணன் இன்னும் வரலியேன்னு நான் கவலைப் பட்டுக்கிட்டு இருக்கேன்! இவ வேற!

    லீலா எழுந்து வந்தாள்.

    அண்ணன் பச்சைக் குழந்தையா? முழு ஆம்பிளைதானே! இராத்திரி எட்டு மணி ஆயிட்டா என்ன? அண்ணி ஏன் இப்படி இருக்கீங்க?

    நீ எதுவும் பேசாதே!

    இதோ பாருங்க! அண்ணண்னை கோழையாக்கி வச்சிருக்கிறது, நீங்கதான். அதுக்காக நீங்கதான் கஷ்டப்படப்போறீங்க!

    தாமதமாகும்னா, போனில் தகவல் சொல்லுவாரே! அதான் கவலையா இருக்கு! 'பைக்'கில் வேற போறாரு! போக்குவரத்து நெரிசல் உச்சத்துல இருக்கு! பயமா இருக்கு!

    ரேவதி சொல்லும்போதே 'தட்தட்' என ஓசை எழுப்பியபடி வாசலில் 'பைக்' வந்து நின்றது!

    திப்பு இறங்கினான்.

    அப்பாடா! பெருமூச்சுவிட்டாள், ரேவதி!

    திப்பு உள்ளே வந்தான்.

    அண்ணே! இனிமே ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு போன் பண்ணிடு! இல்லைன்னா, அண்ணி மத்தவங்க உயிரை எடுத்துடுவாங்க!

    திப்பு முகத்தில் சிரிப்பே இல்லை!

    உள்ளே போய்விட்டான்.

    ஏன்டீ! அவரே களைச்சுப்போய் வந்திருக்காரு! இப்பப்போய் எதையோ பேசிக்கிட்டு?

    திப்பு முகம் கழுவி, உடை மாற்றி வந்தான்.

    காப்பி தரட்டுமா? இல்லைன்னா சாப்பிடுறீங்களா?

    எனக்கு எதுவுமே வேண்டாம், ரேவதி!

    ஏன் முகம் ரொம்ப வாடியிருக்கு? வேலை அதிகமா? இல்லை, உடம்பு சரியில்லையா? என்னாச்சு?

    நெற்றி, கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லை!

    பின்ன ஏன் தாமதம்? ஏதோ பிரச்சினை இருக்கு! உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது!

    அவன் பேசவில்லை!

    ரேவதி அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவன் கைகளைப் பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

    சொல்லுங்க

    நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

    வேலை போயிடுச்சு, ரேவதி!

    அதானே பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் சந்தேகமா இருந்தது அய்யா எந்தக் குண்டையோ தூக்கிப் போடப் போறாருன்னு! போட்டுட்டார்! லீலா சொல்ல...

    லீலா! நீ சும்மா இருக்கமாட்டே? அவ கிடக்கா! விடுங்க! ஏன்? என்ன பிரச்சினை?

    கம்ப்யூட்டர் வந்துட்ட காரணமா ஆள் குறைப்பு செஞ்சிட்டாங்க. அந்தப் பட்டியலில் முதல் ஆள் நான்தான்!

    ரேவதி பேசவில்லை!

    ஒரே நாளில் கணக்கு தீர்த்து அனுப்பிட்டாங்க! வீட்டுக்கு வரவே பிடிக்காம, கடற்கரையில் உக்காந்துட்டு வர்றேன்!

    காற்று வாங்கினா காசு வருமா? வேறு வேலை தேடப்பாரு!

    லீலா! நீ சும்மா இருக்கமாட்டே?

    அண்ணி! எனக்குப் பசிக்குது!

    சட்னி இருக்கு! மாவு தயாரா இருக்கு! தோசை ஊத்திக்கோ! தெரியாதா, உனக்கு?

    லீலா அருகில் வந்தாள்.

    அண்ணே! நான் சொல்றேன்னு கோபப்படாதே! வெறும் பி.ஏ. படிப்பை வச்சிட்டு, நீ இனி குப்பைக் கொட்ட முடியாது! கணிப்பொறி கத்துக்கோன்னு நான் அடிச்சுகிட்டேன். நீ கேக்கலை! நவீன தொழில் நுட்பத்தைக் கத்துக்காதவங்க, இனி வீட்டுலதான் இருக்கணும். புரியுதா?

    ஏன்டீ இப்படி பேசுறே?

    அண்ணி! உண்மைகளை பேசாம மூடிவச்சாலும், எதார்த்தம்னு வரும்போது ஏத்துக்கத்தானே வேணும்?

    இதோ பாருங்க! இதுக்காக பட்டினி கிடக்கக்கூடாது! ரெண்டு தோசை சாப்பிடுங்க!

    ரேவதி எழுந்து உள்ளே வந்தாள்.

    திப்புவுக்கு வயது முப்பத்தி ஐந்து! பட்டதாரி! பெரிதாக அறிவு கிடையாது! ஆனால், அழகு என்றால் அப்படியொரு கொள்ளை அழகு! ஆண்களில் இத்தனை அழகாக ஒரு மனிதன் இருக்க முடியுமா என்பது சந்தேகமே! திப்புவை ஒப்பிடும்போது ரேவதி வெகு சுமார். ஜோடிப் பொருத்தமே இல்லை!

    அவர்களுக்கு ஒரே மகள் - எட்டு வயது.

    லீலா - திப்புவின் தங்கை. இருபத்திநாலு வயது. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை! புத்திசாலிப் பெண். மனதில் பட்டதை படக்கென தேங்காய் உடைப்பதைப் போல சொல்லிவிடுவாள்!

    சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டுச் செலவுக்கென லீலா கொடுத்து விடுவாள். மீதியை சேமிக்கிறாள்.

    திப்பு இதுவரை நாலைந்து வேலைகளைப் பார்த்தாகி விட்டது! எதிலும் நிலைக்கவில்லை!

    ஆனாலும் குடும்பம் ஓடுகிறது! ஊறுகாய், வற்றல், அப்பளம், முறுக்கு என வீட்டில் செய்து, தெரிந்த கடைகளில் விற்று, அதற்கென கணிசமான வாடிக்கையாளர்களை ரேவதி தன் கைகளில் வைத்திருக்கிறாள்.

    அவளும் மாதம் ஏழாயிரம் வரை சம்பாதிக்கிறாள்!

    தன் கணவன் திப்பு மேல் ரேவதிக்கு உயிர்! அவனை கணவனாக இல்லாமல், ஒரு குழந்தையாகத்தான் நடத்துகிறாள்!

    மகள் தீபா கூட இரண்டாம் பட்சம்தான்! அவன் என்ன சொன்னாலும் கட்டுப்படுவாள். அவனது முகத்தில் ஒரு சின்னச் சுருக்கம் வரக்கூடாது!

    இதுவே திப்புவை பொறுப்புள்ள மனிதனாக மாற்றாமல் போய்விட்டதே என்றுகூடத் தோன்றும்!

    'எப்படியும் ரேவதி சமாளிப்பா! கவலையில்லை!' என்ற மெத்தனம் திப்புவிடம் வந்துவிட்டது!

    வேலைகளை விடும்போது ஒரு வருத்தம் இருந்தாலும், திப்பு அதற்காக அதிகமாக உருகியதில்லை!

    அடுத்த வேலை கிடைக்கும்வரை வீட்டில் இருப்பான்!

    Enjoying the preview?
    Page 1 of 1