Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poiththaan Aaganum
Poiththaan Aaganum
Poiththaan Aaganum
Ebook90 pages33 minutes

Poiththaan Aaganum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465858
Poiththaan Aaganum

Read more from Devibala

Related to Poiththaan Aaganum

Related ebooks

Reviews for Poiththaan Aaganum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poiththaan Aaganum - Devibala

    13

    1

    அம்மணி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள்!

    பக்கத்து வீட்டு பொன்னு உள்ளே வந்தாள்!

    சாப்பிட்டாச்சா அம்மணி?

    நேரமில்லை. காலைல பெரியவனைத் தயார் செஞ்சு ஸ்கூல் வேன்ல ஏத்தி விட்டாச்சு. இப்ப இதுக்கு சாப்பாடு ஊட்டிட்டுத் தான் நான் மற்ற வேலைகளை கவனிக்கணும்!

    அம்மணி! உனக்கு என்ன வயசு?

    அறுபது வரப் போகுது - அஞ்சாறு மாசத்துல!

    ஓய்வெடுக்க வேண்டிய வயசு! இப்பிடி உழைச்சா தாங்குமா உன் உடம்புக்கு?

    அம்மணி சிரிப்புடன் நிமிர்ந்தாள்.

    என்ன செய்ய முடியும்? ரெண்டு பேரும் பெரிய படிப்பு படிச்சிட்டு, வெளிநாட்டுத் தொடர்புள்ள கம்பெனியில வேலைல இருக்காங்க! ராத்திரி பகல் பாக்காம உழைக்கறாங்க! வீட்ல அவங்க பெத்த புள்ளைங்களை நான் பாத்துக்கறது எனக்குக் கடமைதானே?

    சரி அம்மணி! உன் பையன் ஆம்பிளை! சம்பாதிக்கட்டும்! மருமக வீட்ல இருக்கக் கூடாதா?

    எப்பிடி பொன்னு? எம்.பி.ஏ. படிச்சிட்டு மருமக வீட்ல உட்கார முடியுமா? அவளும் சம்பாதிச்சாத்தானே என் பிள்ளை நிம்மதியா வாழ முடியும்?

    அதை நான் மறுக்கலை அம்மணி! நீ செத்துச் சுண்ணாம்பு ஆகறியே? பாவமா வருது? எல்லா வேலைகளுக்கும் ஆளை நியமிச்சிட்டா உனக்குக் கஷ்டமில்லையே? புள்ளைங்களை பாத்துக்க ‘பேபி சிட்டர்கள்’ கிடைப்பாங்களே!

    பாட்டியோட பாசம் - பணம் வாங்கி பாத்துக்கறவங்ககிட்ட கிடைக்குமா? புள்ளைங்க பசி, தூக்கம், எதிர்பார்ப்புகள அவங்களால புரிஞ்சுக்க முடியுமா?

    உன் பொண்ணுகிட்ட போய் கொஞ்ச நாள் இருக்க மாட்டியா?

    அவ டெல்லில இருக்கா! கூடவே மாமியார் இருக்காங்க! நான் போனா சரிப்படுமா? விடுங்க பொன்னு! இப்ப ஒடம்புல தெம்பு இருக்கு! முடியுது! முடியலைனா, என் பிள்ளை வேண்டிய ஏற்பாடுகளை செய்வான்!

    நம்பிக்கை நிறைய உனக்கு!

    அதுதான் மனுஷங்களை வாழ வைக்குது!

    அம்மணி ஆரம்பம் முதலே உழைத்தே வாழ்ந்தவள். இரண்டு பிள்ளைகள். மூத்தவன் முரளி வேலையில் சேர்ந்த வருடம் கணவர் மாரடைப்பில் காலமானார். முரளி தலையெடுத்து விட்டதால், குடும்பத்துக்கு பிரச்னை இல்லை. மகள் காவ்யா கடைசி வருஷ எம்.சி.ஏ. படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் வேலை கிடைத்து ஒரு வருஷம் சம்பாதிப்பதற்குள் திருமணம் நிச்சயமாகி விட்டது! கொஞ்சம் பணம் இருந்தது! முரளிதான் கடனை வாங்கி, பிரம்மாண்டமாக தங்கைக்கு கல்யாணத்தை நடத்தினான்! மேலும் ஒரு வருடம் கழிந்த பிறகு முரளிக்கும், தீபிகாவுக்கும் கல்யாணம்!

    அடுத்த ஐந்து வருடங்களில் இரண்டு ஆண் குழந்தைகள்! இரண்டு பேரும் பெரிய உத்யோகம் என்பதால், வீடு, கார் என பேங்கில் நிறைய கடன் வாங்கி சொத்துக்களை சேர்க்கத் தொடங்கி விட்டார்கள்!

    காவ்யாவின் கல்யாணக் கடன், வீட்டுக்கடன், கார்க்கடன், தவிர ஷேர் மார்க்கெட்டில் தாராளமான முதலீடு செய்து உண்டான நஷ்டங்கள் என பணத் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்து விட,

    இரண்டு பேரும் வருமான வரி கட்டியது போக, சேமிப்பு போக, கையில் தலா ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியும், சமாளிக்க முடியவில்லை.

    இரவு பகலாக உழைக்கிறார்கள்.

    சமையல்காரி, குழந்தை பராமரிப்பு என ஆள் போட்டால் ஏகப்பட்ட செலவாகும்! இதைப் புரிந்து ஆயா பொறுப்புகளையும் அம்மணி ஏற்றுக் கொண்டு விட்டாள்!

    அவரையும் சொல்லிக் குற்றமில்லை.

    அம்மணியின் வாழ்க்கை எந்திர கதியாகி விட்டது!

    மகன், மருமகள் என்று வரும்போது ஒத்துழைத்தால்தானே அவரது வண்டியும் ஓடும்.

    யார் வந்து என்ன போட்டுக் கொடுத்து, குடும்பத்தை உடைக்க நினைத்தாலும், அம்மணி அசைந்து கொடுப்பதில்லை.

    உள்ளூரில் அம்மணிக்கு ஒரு தம்பி உண்டு! சுந்தரம்!

    அவருக்கும் பெரிய குடும்பம்! ஆண் பிள்ளை இல்லை. இரண்டும் பெண்கள்.

    மூத்தவளின் பராமரிப்பில்தான் அவரும், மனைவியும் வாழ்கிறார்கள்!

    அன்று மாலை முரளியும், தீபிகாவும் சிக்கிரமே வந்து விட்டார்கள்!

    ஏதோ ஒரு கல்யாண வரவேற்புக்கு புறப்பட்டார்கள்! தீபிகாவின் தோழி சம்பந்தப்பட்ட கல்யாண வரவேற்பு!

    அம்மணிக்கு மாலை முதலே தலைசுற்றல் இருந்தது! ஒரு முறை வாந்திகூட எடுத்து விட்டாள். சொல்லவில்லை!

    குழந்தைகள் இரண்டும் ஒருபுறம் ரகளை செய்து கொண்டிருக்க, அம்மணி அடுத்தடுத்து வாந்தி எடுக்க, முரளி பதறி விட்டான்.

    என்னம்மா ஆச்சு?

    தெரியலைப்பா! காலைமுதலே தலைசுற்றல் அதிகமா இருக்கு! வாந்தியும் மூணு தடவை ஆயாச்சு!

    நிற்க முடியாமல் சோர்ந்து உட்கார,

    தீபிகா! அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகணும்!

    சரி! ரிசப்ஷனுக்கு நீங்க வர வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வந்திர்றேன்!

    குழந்தைகளைக் கூட்டிட்டுப் போயிடு! நான் அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்!

    இதுங்க ரெண்டையும் நான் ஒருத்தியா எப்படீங்க சமாளிக்க முடியும்?

    வீட்ல தனியா விட்டுட்டுப் போக முடியுமா தீபிகா?

    "இல்லைனா, நீங்க ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடுங்க! அப்புறமா நாம ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1