Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seerum Sirappum
Seerum Sirappum
Seerum Sirappum
Ebook143 pages49 minutes

Seerum Sirappum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465452
Seerum Sirappum

Read more from Devibala

Related to Seerum Sirappum

Related ebooks

Reviews for Seerum Sirappum

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seerum Sirappum - Devibala

    12

    1

    "உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இனியாவது நம்ம காதலை உங்க வீட்ல சொல்லலாமில்லையா?"

    மேகா கேட்க, மௌனமாக உட்கார்ந்திருந்தான் தீனா!

    என்ன தீனா? எதுவும் பேசாம இருந்தா எப்படி?

    ம்! சொல்லணும்.

    என்ன தீனா தயக்கம்? உங்கம்மாவுக்கு ஏற்கெனவே தெரியுமில்லையா?

    தெரியும்!

    ‘‘உங்கப்பாவுக்கும் சொல்லலாமில்லையா? நீ முதல்ல சொல்ல முடியலைனா, உங்கம்மாவை விட்டு சொல்ல வை! என்ன கஷ்டம்."

    அவன் பேசவில்லை.

    தீனா! நீ இப்படி மௌனமாவே இருந்தா என்ன அர்த்தம்? எதுவுமே நீ பேசலைனா, நான் என்ன நினைக்கறது தீனா? நம்ம கல்யாணம் நடக்குமா? நடக்காதா? சொல்லு தீனா!

    என்ன மேகா இப்படி கேக்கற?

    நாம காதலிக்கத் தொடங்கி, ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. உன் மௌனம் எனக்கு பயத்தை உண்டாக்குது. நம்ம கல்யாணம் நடக்குமா? நடக்காதா? சொல்லு தீனா!

    நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

    இதப்பாரு மேகா! எனக்கு நிறைய பிரச்னை௧ள் இருக்கு. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லவும் முடியாது. சொன்னா உனக்குப் புரியாது. நான் உன்னை விட்டுப் போக மாட்டேன். நீதான் எனக்கு மனைவி. சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும். நீ நம்பு! பெரிய போராட்டம் நடத்தாம, சுமுகமா இதை நடத்தணும்னு நான் பாக்கறேன். அதுக்குத்தான் இத்தனை கஷ்டம். பொறுத்துக்கோ. நடக்கும்!

    மேகாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

    மேகா சிறுவயதில் பெற்றோரை இழந்தவள்! உடன்பிறப்புகளும் இல்லை. ஒரு சித்தப்பா தயவில் வளர்ந்த பெண். சித்தப்பா தங்கமான மனிதர். சித்தி கொடுமைக்காரி! மேகா அவளிடம் அனுபவித்த சித்ரவதை கொஞ்ச நஞ்சமல்ல. தாய், தகப்பனை இழந்த மேகாவை ஆளாக்க, சித்தப்பா வாங்கிய ரணங்கள் கொஞ்சமல்ல!

    தினசரி சித்தியுடன் சண்டை!

    சித்தப்பா காட்டும் பாசத்துக்காக மேகா சகலமும் பொறுத்துக் கொண்டாள்.

    பள்ளிப் படிப்பில் முதல் தர மாணவியாக வர, ஒரு தொண்டு நிறுவனம் ஸ்பான்சர் செய்ய, தன் கல்லூரி படிப்பை மேகா முடித்தாள்.

    உடனே வேலை கிடைத்தது.

    வேலை பார்த்துக் கொண்டே, மாலைநேரக் கல்லூரியில் பயின்று தனது எம்.காம் படிப்பையும் முடித்து விட்டாள்.

    உத்யோகம் பார்த்து அவள் சம்பளம் வாங்கிக் கொண்டு வர, சித்தியின் டார்ச்சர் திசை மாறியது.

    மொத்த சம்பளத்தையும் பறித்துக் கொண்டு, இத்தனை நாள் சித்தப்பா செய்த செலவுக்கு ஆயுள் முழுக்க அவளை அடிமையாக்கத் துடித்தாள்.

    மேகாவும் ஓரளவுக்கு செய்தாள்.

    ஒரு கட்டத்தில் சித்தப்பாவால் பொறுக்க முடியவில்லை.

    நீ போயிடும்மா! இந்த வீட்டை விட்டு போய், ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல இரு. போதும் உன்னோட இந்த கஷ்டம்! நீ அடிமையா வாழறதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வை.

    பரவால்லை சித்தப்பா! உங்களுக்காக நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக்கலாம்.

    தேவையில்லைம்மா! எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு. விட்ரும்மா! வேண்டாம்!

    அப்படியும் மேகா பொறுத்துக் கொண்டாள்.

    ஒரு நாள் சித்தப்பாவை, சித்தி கடுமையாக அவமதித்தாள்.

    தன் மகளுக்கு நகை வாங்க மேகாவை லோன் போடச் சொல்ல, சித்தப்பா அது கூடாது என்க, பிரச்னை பெரிதாக, சித்தி, சித்தப்பாவை அவமதிக்க, மேகா பொறுக்க முடியாமல் கேள்வி கேட்க, பிரச்னை வெடித்து சித்தப்பா வெறியாகி விட்டார்.

    மேகா! நாளைக்கே நீ போயிடு! நீயும் வாழணும். உன்னை இவ வாழ விடமாட்டா! நீ நல்ல பொண்ணு. உன் மனசுக்குப் புடிச்ச வாழ்க்கையைத் தேர்ந்தெடு! புரியுதா? நான் எங்கேயிருந்தாலும் உனக்கு ஆசி வழங்குவேன்!

    அவரே ஹாஸ்டலும் பார்த்து ஏற்பாடு செய்தார்.

    அது ஒரு கண்யமான உழைக்கும் மகளிர் விடுதி!

    மேகா எம்.காமும் முடித்து விட்டதால், ஏறத்தாழ தன் ஆபீசில் முப்பதாயிரம் வரை சம்பாதித்தாள்.

    தவிர வெளியிலே கணக்கெழுதி மாதம் பதினைந்தாயிரம் வரை வருமானம். கடுமையான உழைப்பாளி!

    மேகா அந்த மாதிரி தனியார் கணக்குகளை பார்க்கும் நேரம் ஏற்பட்ட நட்புதான் தீனாவுடன்.

    அவனும் ஒரு தனியார் கம்பெனியில் அதிகாரி.

    மேகாவின் புத்தியும், அழகும், தொழில் பக்தியும் தீனாவைக் கவர, நட்பு தொடங்கி, அது காதலாகி விட்டது.

    தீனாவின் நல்ல குணங்கள் மேகாவுக்கும் பிடித்துவிட, காதல் தீவிரமானது.

    மேகாவைப் பற்றி சகலமும் தீனாவுக்கு அவளே சொல்லியிருந்தாள்.

    தீனாவின் குடும்பம் பாரம்பர்யமானது!

    ஜாதி, பாரம்பர்யம், உறவுகள் என அதிகமாக பிடித்தம் உள்ளவர் அப்பா!

    அம்மா குடும்பத் தலைவி!

    தீனாவின் ஒரு அக்கா கல்யாணமாகி, பெங்களூரில் தன் கணவருடன் வசிக்கிறாள். அவளுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை. அடுத்தபடியாக தீனா - பெரிய பதவி. மூன்றாவது, தீனாவின் தங்கை ரோகிணி! அவளும் படித்து விட்டு வேலை பார்க்கும் பெண்!

    ரோகிணிக்கு கல்யாண ஏற்பாடு ஆனதுமே, அப்பா சதாசிவம், தீனாவின் பேச்சை எடுக்க ஆரம்பித்து விட்டார். அவரது தங்கை மகள் ஒருத்தியை தீனாவுக்காக ஏற்கெனவே சிறுவயது முதலே பேசிக் கொண்டிருந்தார்கள். அவளும் படித்து வேலை பார்க்கும் பெண். அப்பா மனதளவில் முடிவே செய்து விட்டார்.

    ரோகிணிக்கு கல்யாணத் தேதி குறித்ததும், இந்தப் பேச்சை வீட்டில் எடுக்க, அம்மா ஜானகியும் சேர்ந்து கொள்ள,

    தீனாவுக்கு ‘திக்’கென்றது!

    இனி மௌனம் சாதிப்பதில் அர்த்தமில்லை.

    முடிவில் அம்மாவிடம் பேச்சை எடுப்பது என்று முடிவெடுத்தான்.

    மறுநாள் காலை

    Enjoying the preview?
    Page 1 of 1