Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Putham Puthusu!
Putham Puthusu!
Putham Puthusu!
Ebook130 pages53 minutes

Putham Puthusu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580100605441
Putham Puthusu!

Read more from Devibala

Related to Putham Puthusu!

Related ebooks

Reviews for Putham Puthusu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Putham Puthusu! - Devibala

    http://www.pustaka.co.in

    புத்தம் புதுசு!

    Putham Puthusu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வெடி சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது! ஊரே தீபாவளி கொண்டாட தயாராகி விட்டது. இன்னும் நாலு நாட்களில் தீபாவளி! வீட்டுக்குள் நெய் மணத்துடன் பலகாரங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. எழுபது வயது ஆண்டாளம்மா அதிரசம் தயாரிப்பதில் முனைப்பாக இருக்க, அவருக்கு வேலையாட்கள் உதவிக் கொண்டிருக்க, உள்ளே தனியறையில் கதவை மூடிக் கொண்டு மாணிக்கம் மது அருந்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் பெல்லடிக்க, சமையல் கட்டில் இருந்த ஆண்டாளம்மாவுக்கு அது கேட்டது!

    வேகமாக உள்ளே வந்தார். கதவைத் திறந்து அதே வேகத்தில் சாத்திக் கொண்டார்.

    அம்மா! சிப்ஸ் இல்லைனா ஏதாவது மிக்சர் இருக்கா?

    அம்மாவிடம் பதில் இல்லை. பார்வையில் வெறுப்பா, கோபமா, பச்சாதாபமா எதுவெனத் தெரியவில்லை.

    கொண்டு வந்து குடும்மா! தீபாவளி பலகாரம் செஞ்சிருப்பே இல்லை! காரமா குடு! சைட்டிஷ் வேண்டாமா?

    பெரியவனே! இது நல்லவாயிருக்கு? நடு வீட்ல ஒக்காந்து நீ சரக்கடிக்கறது உனக்கே நல்லாயிருக்கா?

    நடு வீட்லயா? நான் என் ரூம்ல ஒரு ஓரத்துல ஒக்காந்து தானே குடிக்கறேன். என்னம்மா நீ?

    சரியில்லைடா புதுசா வாழ வந்த பொண்ணு படிச்சவ! வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கறா! அவ எப்படி உன்னை மதிப்பா! நீ சரக்கடிக்கறது அவளுக்கு தெரியக் கூடாதுன்னு நான் இந்த வீட்ல படற பாடு கொஞ்சமா? ஏண்டா இப்படி இருக்கே?

    மாணிக்கம் அம்மாவை உற்றுப் பார்த்தார்.

    இப்ப என்ன பார்வை? உன் தம்பி முருகனுக்கு தலை தீபாவளின்னு ஞாபகம் இருக்கா

    அதுக்குத்தான் எல்லா ஏற்பாடுகளையும் நான் செஞ்சிட்டேனே!

    உனக்குனு ஒரு வாழ்க்கையை வாழாம ஏண்டா இப்படி இருக்கே? பெத்த வயிறு பத்தி எரியுது!

    ஆண்டாள் அழத்தொடங்க

    எனக்கு நீ இருக்கியே! இந்த உலகத்துல என்னோட முதல் சொந்தம் நீ தானே? திட்டலாமா!

    விடுடா! வேலை நிறைய இருக்கு!

    வாம்மா!

    அம்மா அருகில் வர, அவள் இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டு, அந்த மார்பில் முகம் புதைத்து மெதுவாக அழ,

    நீ ஆம்பளைடா! போதை அதிகமாகி அழத் தொடங்கிட்டே! வேணுமா இதெல்லாம்?

    அம்மா! இந்த வீட்ல எல்லாம் இருக்கு! ஆனா எனக்குனு நீ மட்டும் தானே இருக்கே?

    அழுகை பெரிதானது!

    என்னை விடுடா! மலர் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற நேரம் அவ பார்த்தா, எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடும். கண்ணைத் துடைச்சுக்கோ, குடிச்சது போதும் நிறுத்து!

    சகலத்தையும் அம்மா அப்புறப்படுத்த,

    எடுக்காதே! இன்னும் ஒரு ரவுண்ட் விடு! சைட் டிஷ் அனுப்பு!

    ஆண்டாள் அவரிடமிருந்து விடுபட்டு வெளியே வந்தாள்.

    காரமான ரிப்பன் பக்கோடாவை கொண்டு வந்து தந்தாள்.

    நேராக சமையல் கட்டுக்குள் வந்து பலகாரம் தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள

    அத்தே! காபி இருக்கா? கேட்டபடி மலர் உள்ளே வந்தாள். 2-வது மகன் முருகனின் மனைவி!

    கல்யாணம் முடிந்து பத்து மாதங்கள். இது தலை தீபாவளி!

    இனி இந்தக் குடும்பம் பற்றி ஒரு அறிமுகம் அவசியம் இந்த நேரத்தில் வேண்டும்!

    ஆண்டாளம்மாவுக்கு நாலு பிள்ளைகள்.

    மூத்தவன் மாணிக்கம்.

    ஆரம்பம் முதலே ஆண்டாளின் கணவன் குடும்பத்தை சரியாக பொறுப்பாக கவனிக்கவில்லை. சூதாட்டம் பிற பெண்களின் தொடர்பு, குடி என சகல குணங்களும் உண்டு.

    ஆண்டாளின் உழைப்பில் தான் பிள்ளைகள் வளர்ந்தது!

    மூத்தவன் மாணிக்கத்தை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. 15 வயது முதலே பல இடங்களில் வேலை பார்த்து, ஆண்டாளிடம் இருந்த அத்தனை நகைகளையும் விற்று, மேலும் கடனும் வாங்கி ஒரு மளிகைக்கடை வைத்துத் தர,

    மாணிக்கத்தின் படிப்படியான கடுமையான உழைப்பால் அது வளர்ந்து, நகரில் இன்று நாலைந்து இடங்களில் ஆண்டாள் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் பெரிய டிப்பார்ட்மெண்டல் ஸ்டோராக உருவாகி விட்டது!

    மாணிக்கத்தின் அயராத உழைப்பு தான் காரணம்!

    அடுத்தவன் முருகன் பள்ளிப் படிப்புக்கு மேலே தாண்டவில்லை. அண்ணனுக்கு உதவியாக கடைகளை பார்த்துக் கொள்வதில் முருகன் முழுமையாக ஈடுபட்டான். அவனும் நல்ல உழைப்பாளி. எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. யாரிடமும் அதிர்ந்து கூடப் பேச மாட்டான்.

    வாடிக்கையாளர்களிடம் மிகவும் தன்மையாக நடந்து கொள்வதால் வியாபாரம் பெருக முருகனும் ஒரு காரணம்!

    மாணிக்கத்துக்கு வயது நாற்பத்தி நாலு!

    12 வருடங்கள் கழித்துத்தான் முருகன் பிறந்தான். இப்போது அவனுக்கு முப்பத்தி ரெண்டு!

    அதன் பிறகு 27 வயதில் ஒரு தம்பி - செந்தில் - அவன் பி.ஈ. படித்து முடித்து ஐ.டி. கம்பெனியில் பெரிய சம்பளத்தில் வேலை.

    கடைசியாக 23 வயதில் ஒரு பெண். அனு. அவளுக்கு வங்கியில் உத்யோகம். எம்.காம். படிப்பு.

    காலம் கடந்த பிள்ளை பிறப்பு!

    ஆண்டாளின் கணவர் வீட்டுக்கு வருவதே ஆண்டாளை கர்ப்பமாக்கத்தான்.

    ஆண்டாள் நல்ல பால்கோவா நிறத்தில் தளதளப்பாக அழகாக இருப்பாள். இந்த எழுபது வயதில் கூட அந்தம்மாவின் நிறமும் மங்கவில்லை. வசீகரமும் போகவில்லை.

    பொறுப்பில்லாத கணவன் மேல் வெறுப்பு.

    அந்த மனிதன் தொட்டாலே அருவருப்பாக இருக்கும். தாலி கட்டிய உரிமையில் அந்த மனிதன் அத்துமீறும் ஒவ்வொரு முறையும் ஆண்டாள் ஏறத்தாழ ஒரு பலாத்காரத்துக்கு ஆளாகி வயது வந்த பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு சண்டையும் போடமுடியாமல்... அனு பிறந்து எட்டு வயது வரை கணவர் வந்து போய்க் கொண்டிருந்தார்.

    ஒரு நாள் மாணிக்கம் பொறுக்க முடியாமல் மோதும் நிலை உருவாகிவிட்டது.

    இனிமே நீ வராதே! அம்மாவுக்கு இன்னொரு கர்ப்பம் தாங்க வயசும் இல்லை, உடம்பில் வலுவும் இல்லை, எங்களுக்கு உள்ள ஒரே சொத்து அம்மா! அவங்களை சாகடிச்சிடாதே! நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இனி நீ ஆட்டயப் போட நான் விட மாட்டேன்.

    பிரச்சனை பெரிதாகி கைகலப்பு வரை போய்விட

    இந்த முறை ஆண்டாளே எதிர்த்து விட்டாள்.

    மானரோஷம் இருந்தா வெளியே போயிடு! இனி இந்த வீட்டுக்கே நீ வராதே!

    ஆண்டாள்! நான் உன் புருஷன்!

    அதான் நாலு புள்ளையைக் குடுத்துட்டியே! அதுக்காகத்தானே நீ வர்றே! இனியும் நான் கர்ப்பமானா, என் மகனுங்களே என்னை மதிக்க மாட்டானுங்க! வராதே!

    அந்த முறை வெளியே போன ஆள், திரும்ப வரவே இல்லை.

    15 வருடங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1