Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponnai Virumbum Boomiyile...
Ponnai Virumbum Boomiyile...
Ponnai Virumbum Boomiyile...
Ebook116 pages1 hour

Ponnai Virumbum Boomiyile...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அருணுக்கு வெளிநாட்டில் இருக்கும் நண்பணிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வருகிறது. "என் நண்பனின் தங்கை மனீஷா. அவளை ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கு அனுப்புகிறேன். அவளை பார்த்துக்கொள் என்று."

சில நாட்களில் மனீஷா இந்தியா வருகிறாள். மனீஷா மிகவும் அமைதியானவள், அழகும் கூட. அருண் வீட்டில் தங்குகிறாள்.அவன் வீட்டில் அவளை மிகவும் அன்போடு கவனித்தார்கள். சந்தோஷமாய் இருந்தாலும் அவள் முகத்தில் ஒரு புத்துணர்வு கூட இல்லை. அருண் வீட்டில் அனைவரும் அவள் சோகத்திற்கு காரணம் தெரியாமல் குழம்பினார்கள்.

ஒரு நாள் அருணின் அம்மா நேரடியாக மனீஷாவிடம் கேட்கிறாள் அவளின் கவலைக்கான காரணத்தை. அது என்னவாக இருக்கும்? அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்ன? படித்துப் பாருங்கள்!!
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580105706063
Ponnai Virumbum Boomiyile...

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Ponnai Virumbum Boomiyile...

Related ebooks

Reviews for Ponnai Virumbum Boomiyile...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponnai Virumbum Boomiyile... - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பொன்னை விரும்பும் பூமியிலே...

    Ponnai Virumbum Boomiyile...

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஏழு மணிக்கு மின்சாரம் நின்றுவிடும். அதற்குள் மின் அஞ்சலைப் பார்த்துவிட்டுக் கிளம்ப வேண்டும்.

    அருண் தனது கணினியில் ரகசியக் குறியீட்டை அடித்து மின் அஞ்சல் பக்கத்தைத் திறந்தான். பதினெட்டு அஞ்சல்கள் வந்திருந்தன. எல்லாம் அலுவலக சம்பந்தமாகத்தான். அமெரிக்காவில் இருக்கும் நண்பன் சரத்திடம் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. வியப்போடு அதைப் படித்தான்.

    அருண், நீ எனக்கொரு உதவி புரிய வேண்டும். என் நண்பனின் தங்கை மனீஷா. அவளை ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கு அனுப்புகிறேன். ஆறு மாதம் உன்வீட்டில் அவளை, பணம் தரும் விருந்தாளியாக தங்க வைத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தினரோடு இருப்பது அவளுக்கு மன ஆறுதலைத் தரும் என்பதால்தான் உன்னிடம் இந்த உதவியைக் கோருகிறேன். உடனே உன்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

    அருண் நண்பனுக்கு தன் பதிலைத் தட்டச்சு செய்தான். ‘உனக்காக இது கூடச்செய்யவில்லை என்றால் என்ன நண்பன் நான்? ஆனால் பணம் தந்து தங்கும் விருந்தாளியாக அந்தப்பெண்ணை அனுப்ப வேண்டாம். பணத்திற்காக அன்பு காட்டுவது கடினம்.

    எவ்வித கொடுக்கல் வாங்கலும் இன்றி அந்தப்பெண்ணை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறோம், அனுப்பிவை. எப்போது அவள் வருகிறாள், எப்படி இருப்பாள் என்று கூறினால் அழைத்து வர சவுகர்யமாக இருக்கும்.’

    பதிலை அனுப்பினான். மின் அஞ்சலில் இருந்து வெளியே வந்து கணிப்பொறியை அணைத்த நிமிடம் மின்சாரம் நின்றது.

    ஒன்பது மாடிகள் படி இறங்கி கீழே வந்து 'பைக்'கை கிளப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். கதவுக்கு வெளியில் புதிய செருப்புகள் கிடந்ததைப் பார்த்தபடி அழைப்பு மணியை அழுத்தினான்.

    அருண் வந்தாச்சு... ஸ்வேதாவின் குரலோடு தாள் நீக்கும் ஓசை கேட்டது.

    யார் வந்திருக்கான்னு சொல்லு ஸ்வேதா அவனை வழிமறித்துக் கேட்டாள்.

    ஆபீஸ்ல இருக்கும் போதே பால் தீய்ந்த வாடை அடிச்சுது. யமுனாதானே வந்திருக்கா!

    அடேயப்பா... சரியான மூக்குதான் உனக்கு யமுனா வியந்தபடியே அவன் முன்னால் வந்தாள்.

    அருண் ஒரு சில விநாடிகள் அவளை விழி விரியப் பார்த்தான்.

    ஐந்தாறு ஆண்டுகள் இருக்குமா யமுனாவைப் பார்த்து...? பள்ளி இறுதி வகுப்பை முடித்து அவள் கல்லூரியில் கால் வைக்கும் நேரத்தில் அவளுடைய தந்தைக்கு வடஇந்தியாவிற்கு பணி மாறுதல் கிடைத்தது.

    அருண்... நாங்க டெல்லிக்குப் போறோம், அப்பாவுக்கு அங்கே மாறுதலாயிடுச்சு. ஆனா, எனக்குப் போகப்பிடிக்கல

    ஏன்... டெல்லி நல்ல ஊர்தானே?

    உங்க எல்லாரையும் விட்டுட்டு போகப்பிடிக்கல

    அது சரி... அப்படியே பாசம் பொங்குது! என்னோட சண்டை போடுறதுன்னா உனக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுற மாதிரியாச்சே. முதல்ல நீ கிளம்பும்மா. இனியாவது நா நிம்மதியா இருக்கேன்

    நிஜமா சொல்லு. நா போறதுல உனக்கு சந்தோஷமா?

    ரொம்ப சந்தோஷம்.

    இந்த வார்த்தைக்காக நீ சீக்கிரமே வருத்தப்படுவ அருண்

    அவன் 'நிச்சயமாக இல்லை' என்பது போல் சிரித்தான். அவள் முகம் சுருங்க புறப்பட்டுச் சென்றாள்.

    அவள் குடும்பம் டெல்லிக்குக் கிளம்பிச் சென்ற ஒரு வாரம்வரை அவன் மனசு வீம்பாக அமைதி காத்தது. அதன்பிறகு தண்ணீர் கிடைக்காத தாவரம்போல் வாடத் தொடங்கியது. வீட்டுக்குள் அடிக்கடி சுழன்று சுழன்று வீசிய தென்றல் காற்று வடதிசை நோக்கிச் சென்றதன் வெறுமையை வீடு உணர்த்தியது.

    அவன் மட்டுமல்லாது... வீட்டில் மற்றவர்களும் கூட அவளது பிரிவில் வருந்தினார்கள். ஸ்வேதாவும், யமுனாவும் ஒரு வயிற்றில் பிறக்கவில்லையே தவிர, சில நிமிட இடைவெளியில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்தவர்கள்.

    பிரசவித்த பதினைந்தாம் நாள் யமுனாவின் தாய் மலேரியா காய்ச்சலில் அவதிப்பட்டபோது அருணின் தாய்தான் அவளுக்குத் தாய்ப்பால் கொடுத்து பசியாற்றி இருக்கிறாள்.

    வளர்கிற பருவத்தில் மூவரும் சேர்ந்து அடித்த கொட்டங்களுக்குக் கணக்கில்லை.

    வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் கொட்டம் இன்னும் கூடும். ஸ்வேதாவும், யமுனாவும் சமையல் அறையை இரண்டுபடுத்துவார்கள்.

    'நா ஏதாவது உதவட்டுமா?' அருண் கேட்பான்.

    'நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். போய் சமத்தா உட்கார்ந்து பாடத்தைப்படி. உனக்கு பால் பாயசம் பண்ணித்தரேன்’ யமுனா பெரிய மனுஷி மாதிரி சொல்லிவிட்டுச் செல்வாள்.

    சற்று நேரத்தில் உள்ளே பால் கொதிக்கும் மணம் வீசும். அதன்பிறகு வாடை மாறும், ஏதோ பொசுங்கினாற்போல்.

    'அது என்ன வாடை?' என்று அவன் யோசிப்பதற்குள் தொங்கின முகத்துடன் வருவாள் யமுனா.

    'சாரிடா அருண். பாயசம் கொதிக்கும்போது அடி பிடிச்சுடுச்சு. கொஞ்சம் தீய்ந்த வாசனை வருது என்ன செய்யலாம்...?'

    'கொஞ்சமா...?' அருண் உள்ளே போய்ப் பாயச பாத்திரத்தைப் பார்த்துத் திகைத்தான்.

    வெள்ளை நிறமான பாலும், சேமியாவும் பழுப்பும்... கறுப்புமாய் பாத்திரத்தோடு பாத்திரமாக ஒட்டிக் கொண்டிருந்தது.

    பால் வீண், சேமியா வீண், சர்க்கரை வீண், யாருடி கேட்டது உங்களை... பாயசமெல்லாம்?

    பாயசத்திற்கு நாக்கில் நீர் ஊறக் காத்திருந்து கிடைக்காமல் போன எரிச்சலில் அவன் கத்துவான். அதன்பிறகும் கூட அடுப்பில் தீயவிடாமல் அவள் எதுவுமே செய்ததில்லை என்பதுதான் விசேஷம்.

    வீடு முழுக்க வளைய வந்து எல்லோரையும் வம்புக்கு இழுத்துக் கொஞ்சிய பெண் ஊரைவிட்டுப் போனதும் அந்தவீடு கொஞ்சம் தவித்துத்தான் போயிற்று. மிகுந்த சிரமத்தோடுதான் அந்தப் பிரிவை சகித்துக் கொண்டார்கள்.

    விடலைப் பெண்ணாகச் சென்றவளிடம்தான் ஐந்து ஆண்டுகளில் எத்தனை மாற்றம்! பொல பொலவென்று மலர்ந்து சிரித்தது

    Enjoying the preview?
    Page 1 of 1