Uruguthe Manam
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsVerinai Verukkum Vizhuthukal Rating: 4 out of 5 stars4/5Kan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5
Related to Uruguthe Manam
Related ebooks
Idhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5மனசு ஒரு தினுசு! Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Nesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5Kanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsNenjaththil Nee Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Naan Raja Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsKodimalar Rating: 5 out of 5 stars5/5Pattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/5Suttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Kadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsMangala Isai Rating: 3 out of 5 stars3/5Thagappatta Meengal Rating: 5 out of 5 stars5/5Ithu Thaai Madiye..! Rating: 0 out of 5 stars0 ratingsAthirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uruguthe Manam
0 ratings0 reviews
Book preview
Uruguthe Manam - R.Sumathi
21
1
பின்புறமாக தென்றல் வந்து தழுவிக் கொண்டதைப் போலிருந்தது, விமலா அணைத்தபோது!
உடைகளை மடித்து சிறிய சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்த ரமணி. அவளை முன்புறமாக இழுத்துக் கொண்டான்.
அவசியம் நீங்க போய்த்தான் ஆகணுமா?
முகத்தில் வலையும், சோகமும் படர ஏக்கமாகக் கேட்ட விமலா அழகாக இருந்தாள்.
கட்டுடல், மொட்டுபோல் மூக்கு, பட்டுப்போல் வழ வழப்பு, கட்டுக்கடங்காத கூந்தல், தேன் கலந்த இதழ்கள், வட்டப்பொட்டு, லட்டு கன்னம், சிட்டுக்குரல், இடம்விட்டு விலகிய மேலாடை, தடம் புரளவைத்தது அவன் மனதை.
மெல்ல அணைத்து கழுத்தோரம் முத்தம் பதித்தான் எனக்கும்தான் போகப் பிடிக்கலை. உன்னைவிட்டு ஒரு வாரம் எப்படி இருப்பேன்? ஆனா போய்த்தானே ஆகனும் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தா அடுத்து பதவி உயர்வுக்காக எழுதப்போற பரீட்சைக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதனால போய்த்தான் ஆகணும்.
நானும் வரட்டா?
குழந்தைத்தனமான விமலாவின் இந்தக் கேள்விக்கு ரமணி பெரிதாக சிரித்தான்.
நான் என்ன தேன் நிலவுக்கா போறேன். உன்னை கூட்டிக்கிட்டுப் போக? பயிற்சிக்குப்போறேன்.
அவனுடைய முகத்தை கைகளில் ஏந்தி, கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் இந்த முகத்தைப் பார்க்காம நான் எப்படி இருக்கப்போறேன்.
ஆமா! பெரிய முகம்? அழகு கொட்டுது...
"இருக்கட்டுமே! இந்த முகத்துக்கு என்ன குறைச்சல் அவனுடைய சொரசொரப்பான கன்னத்தில் முத்தமிட்டாள்
கல்யாணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப் போகுது என்னமோ நேத்துதான் கல்யாணமான மாதிரி பிரிஞ்சு இருக்கிறதைப்பத்தி கவலைப்படுறே?
கல்யாணமான புதுசுல ஏற்படுகிற பிரிவுல காமம் கலந்திருக்கும். இப்ப இந்தப் பிரிவுல பாசம்தான் மேலோங்கி இருக்கும்.
என்மேல அவ்வளவு பாசமா?
பாசம் மட்டும் இல்லை. பயமும்தான்.
என்ன பயம்? ‘சதிலீலாவதி’யில அலுவலக விஷயமா பயணம் போறதா சொல்லிட்டு வெளியூர் போய் ரமேஷ் அரவிந்த் ‘ஹீரா’வோடு ஆட்டம் போடுவாரே... அதே மாதிரி நானும் யாராவது ஒருத்தியைத் தள்ளிகிட்டுப் போய் ஆட்டம் போடப் போறேனோன்னு பயமா?
சீச்சீ! என்னை என்ன சந்தேகப் புத்தி உள்ளவள்னு நினைச்சீங்களா?
நூத்துக்கு தொண்ணூறு பொண்ணுங்க
சி.பி.ஐ.யில் வேலை பார்க்க வேண்டியவங்க. அவ்வளவு சந்தேகப்புத்தி. குடும்பத்துல குழப்பம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க."
ரொம்ப கிண்டல் பண்ணுறீங்க.
பின்னே எதுக்கு பயம்?
பயம் உங்கமேல இல்லை. உங்க அம்மாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு.
அவன் சட்டென்று அமைதியானான். அவளைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டு, பழையபடி துணிகளை அடுக்கி சூட்கேஸில் வைத்தான்.
கட்டிலின் நுனியில் அமர்ந்தவள், ‘சேவிங் செட்டை எடுத்து சூட்கேஸில் வைத்தவாறே சொன்னாள்.
நல்ல காலத்திலேயே நீங்க இருக்கும்போது உங்கம்மா என்னை ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. இப்ப நீங்க வேற இல்லைன்னா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. புவனா வேற வீட்ல இருக்கமாட்டா... அத்தைக்கிட்ட நான் மட்டும் தனியா மாட்டிக்கிட்டு முழிக்கப் போறேன்.
புவனா வீட்ல இருக்கமாட்டாளா? அவ எங்க போறா?
அவளோட தோழிக்கு கல்யாணமாம். நாளைக்கு தஞ்சாவூர் போறாளாம். வர ரெண்டு நாளாகும். தனியா இருக்க எனக்கு பயமா இருக்குங்க.
ரமணி நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் கலவரம் படர்ந்திருந்தது.
அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. "என்ன பேசுவான்? அம்மாவிற்காக அவனால் வக்காலத்து வாங்க முடியாதே! விமலா இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இங்கே நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். அம்மா விமலாவைப் படுத்தும் கொடுமைகள் கொஞ்சமா? வேறொரு பெண்ணாக இருந்தால் இந்நேரம் ஓடிப்போயிருப்பாள். விமலா அத்தனையும் பொறுத்துக் கொண்டிருப்பது எதனால்? நான் காட்டும் அன்பினால்தானே! கணவன் இல்லாதபோது மாமியார் என்ன செய்வாளோ என அவள் பயப்படுவது நியாயம்தானே..?
மறுபடியும் மனைவியை அணைத்துக் கொண்டான். இதமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள், விமலா.
எதையோ பார்த்துப் பயப்படும் குழந்தையை ஆதரவாக அணைத்துக்கொள்ளும் தாயின் அணைப்பாக இருந்தது அவனுடைய இறுக்கம்.
அவனுடைய சட்டையின் பட்டனை மெல்ல வருடியபடி அவள் தயங்கி தயங்கிச் சொன்னாள்.
என்னங்க...
ம்...
நான்.. நான்...
சொல்லு.
நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். நீங்க வந்ததும் வர்றேன். புவனாவும் கல்யாணத்துக்குப் போயிட்டா எனக்கு அத்தை கூட இருக்க முடியாது.
அவளுடைய குரலில் இருந்த பயம் அவனுக்குப் பாவமாகப்பட்டது.
மெல்ல அவளுடைய கூந்தலை வருடினான்.
சரி.. நீ உன் அம்மா வீட்டுக்குப் போ.
சடாரென முகத்தில் பவுர்ணமியின் பிரகாசம்.
நி... நிஜமாவா... சொல்றீங்க?
அம்மா ஒத்துப்பாங்களா?
நான் சொல்றேன்.
இந்த வார்த்தை அவளுக்குள் நம்பிக்கையைத் தரவில்லை!
அவனை ஏளனமாகப் பார்த்தாள்.
‘இப்படி எத்தனை முறை எத்தனை விஷயங்களுக்கு இவன் நம்பிக்கையாக உறுதி தந்திருப்பான். ஆனால், அவை எல்லாம் அம்மாவிற்கு எதிரே தவிடுபொடியாகிவிடுமே!
"இதை எப்படி நம்புவது? அம்மா ஒரு அதட்டுப் போட்டால் இவன் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போவதை எத்தனை முறை பார்த்திருக்கிறாள். இவனுடைய வீரமெல்லாம் நான்கு சுவருக்குள்தான் அவளுடைய எண்ண ஓட்டம் என்னவென்று அவனுக்குப் புரியாமலில்லை.
‘உண்மைதானே! அவள் நினைப்பது உண்மைதானே! அம்மாவை எதிர்க்கமுடியாமல் எத்தனை விஷயத்தில் அடங்கிப்போயிருக்கிறான் - அடக்கப்பட்டிருக்கிறான். என்ன செய்வது? அப்படி வளர்ந்துவிட்டான். விமலாவும் வாயில்லாப்பூச்சி. எதிர்த்துப் பேசத் தெரியாதவள்."
ரமணி சூட்கேஸைப் பூட்டினான். கண்ணாடி எதிரே நின்று ஒருமுறை உடையை சரிப்பார்த்துக் கொண்டான்.
கிளம்பட்டுமா?
என்றான்.
ம்...
என கண்கள் கலங்க மீண்டும் அவன் நெஞ்சில், சாய்ந்து கொண்டாள்.
உடம்பைப் பார்த்துக்கங்க. அடிக்கடி ‘போன்’ பண் ணுங்க.
நான் என்ன வெளிநாடா போறேன்? இத்தனை அறிவுரைகள்! கண்ணைத் துடைச்சுக்கோ. வா...
என அறையை விட்டு வெளியே வந்தான்.
கூடத்தில் அம்மா சிவகுமாரி வெள்ளி விளக்கைத் துடைத்த படி அமர்ந்திருந்தாள்.
தங்கை புவனா மேசை முழுவதும் சேலைகளை அடுக்கி வைத்தபடி இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் அருகே வந்து நின்றான், ரமணி. தயக்கமும், பயமும் அவனை ஆட்கொண்டன.
2
மகன் தன் அருகே நிற்பதை உணர்ந்த சிவகுமாரி நிமிர்ந்தாள்.
என்னப்பா... கிளம்பிட்டியா?
ஆமாம்மா!
உடம்பை கவனிச்சுக்க! நேரத்துக்கு சாப்பிடு.
சரிம்மா... அம்மா...
சொல்லுப்பா. என்ன?
"அம்மா... விமலா அவங்க அம்மா வீட்டுக்குப் போகனும்னு நினைக்கிறா.
அவளை அனுப்பி வை.
மகன் சொன்னதைக் கேட்டதும் சிவகுமாரியின் முகம் மாறியது. மெல்லிய அக்கினிப் பரவலோடு மருமகளைப் பார்த்தவள். அந்தப் பார்வையில் தீக்குச்சியின் உரசல் இருந்தது. சரேலென படமெடுத்த நாகப்பாம்பின் சீற்றம் தெரிந்தது.
அம்மா வீட்டுக்கா? இப்ப எதுக்கு அம்மா வீட்டுக்கு?
சும்மாதான். அவங்க அம்மா - அப்பாவைப் பார்க்கணும் போலிருக்காம்.
சரிதான். போறதுக்கு நேரம் பார்த்திருக்கா பாரு. நீயும் வெளியூர் போறே? இதோ இருக்காளே உன் தங்கச்சி. அவ சிநேகிதி கல்யாணத்துக்கு தஞ்சாவூர் போறாளாம். வர மூணு நாளாகுமாம். இந்த நேரத்துல இவ அம்மா வீட்ல போய் உட்கார்ந்துக்கிட்டா நான் இங்கே தனியா இருக்கிறதா? நிமிடத்துக்கு ஒரு நோயும், வேளைக்கு பல தினுசு மாத்திரையும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு நேரம் தலை சுத்துது. ஒரு நேரம் படபடப்பா இருக்கு. ஒரு நேரம் உடம்பே கீழே விழுந்துடுற மாதிரி இருக்கு. ஆளாளுக்கு அங்கங்கே போயிட்டா நான் செத்துக்கிடந்தாக் கூட பார்க்க நாதி இருக்காது.
இப்ப புவனா எதுக்கு கல்யாணத்துக்கு போறா? வயசுப் பொண்ணை எதுக்கு வெளியூரெல்லாம் அனுப்பி வைக்றே?
சற்றே எரிச்சலாகக் கேட்டான், ரமணி.
ஏன் வயசுப் பொண்ணை வெளியூர் அனுப்பினா உடனே கெட்டுப்போவாள்னு அர்த்தமா? கெட்டுப்போறதுன்னா வயசுப்பொண்ணு இல்லை... கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூட கெட்டுப்போயிடுவா. அவ சிநேகிதி கல்யாணத்துக்குப் போறா. போயிட்டு வரட்டுமே. என் பொண்ணு மேல எனக் நம்பிக்கை இருக்கு.
ரமணிக்கு எரிச்சலாக வந்தது. ‘சாதாரணமாகக் கேட்டதுக்கு அம்மா எப்படியெல்லாம் பேசுறாள்’ என சலித்துக் கொண்டான்.
புவனாவை வீட்ல இருக்க வச்சுட்டு அப்படி என்ன இவ அம்மா வீட்டுக்குப் போகணுமா? அதெல்லாம் அப்புறம் போய்க்கலாம். நீ கிளம்பு.
ரமணிக்கு மனைவியை ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் இல்லை. இந்த முறை மட்டுமல்ல... எந்த முறையும் அவனுக்குத் தோல்விதான். ஒருமுறை கூட அம்மா அவன் சொல்லுக்கு