Suttum Vizhichsudare
By R.Manimala
()
About this ebook
Read more from R.Manimala
Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyasagi Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Manam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsVaa PonMayile Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Pesa Vaa Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Pathintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKannil Therigindra Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsPennalla Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Poonkili Kaivarum Naal Varumaa Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thara Vanthen Rating: 0 out of 5 stars0 ratingsPoongattre Nillu Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsPoove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratings
Related to Suttum Vizhichsudare
Related ebooks
Palingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaathal Crime Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsVeetla Vibareethanga Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsManam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Kana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Sugamaana Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Valaikku Thappiya Meen Rating: 0 out of 5 stars0 ratingsKoottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5Athirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Kadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Anthi Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Sikamanikal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsMelam Kotta Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPottu Vacha Vatta Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Suttum Vizhichsudare
0 ratings0 reviews
Book preview
Suttum Vizhichsudare - R.Manimala
16
1
தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது.
கனரக வாகனங்களின் சத்தமும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், ராகமிழுத்து ஓலமிட்ட நாயின் குரைப்பும் தவிர வேறெந்த சப்தமுமின்றி, மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
காஞ்சனாதேவிக்கு மட்டும் உறக்கம் வஞ்சித்திருந்தது.
‘எப்போதடா விடியும்’ என்று கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.
கட்டிலைச் சுற்றி அரவணைத்திருந்த மிகப்பெரிய கொசுவலையை விலக்கி எழுந்தாள்.
லேசாய் வாய் பிளந்து, மிதமான குறட்டையோடு, சற்றே மேடிட்டிருந்த வயிறு ஏறி இறங்க... நல்ல தூக்கத்திலிருந்தார் பாலகிருஷ்ணன்.
காஞ்சனா பால்கனிக் கதவைத் திறந்து வந்து நின்றாள். முன்தினம் பெய்த மழையின் குளிர்ச்சி காற்றில் நீக்கமற நிறைந்திருந்தது.
கைகளை இறுகக் கட்டிக்கொண்டு, மூச்சை உள்ளிழுத்து கன்னிக் காற்றை சுவாசித்தாள். சாலையில் முப்பது வயதொத்த பெண்ணொருத்தி, சைக்கிள் காரியரில் மூலிகைச் சாறுகளை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் செல்வது சோடியம் விளக்கின் ஒளியில் தெரிந்தது.
உறக்கம் வராத பல சமயங்களில் காஞ்சனா இதுபோல் வந்து நிற்கும்போதெல்லாம் அப்பெண் கண்களில் விழுவதுண்டு. நேரம் காலம் பார்க்காத அவளின் அயராத உழைப்பைக் கண்டு வியப்பதுடன் மனதிற்குள் வாழ்த்தவும் செய்வாள்.
காஞ்சனா மாடியில் இருந்தபடியே கீழேப் பார்வையை ஓடவிட்டாள்.
ஐந்து கிரவுண்டு நிலத்தில் முன்புறம் விஸ்தாரமான தோட்டம். மெயின் கேட்டிலிருந்து போர்டிகோ வரை மெத்தென்ற புல்வெளி. வலப்புறம் முழுக்க ரோஜா உட்பட பலவகை பூச்செடிகள். இடப்புறம் முழுக்க வரிசையாய் மா, பலா, சப்போட்டா உள்ளிட்ட ஏகப்பட்ட பழமரங்கள், வாசல் சுவரோரம் கரும்பு பயிரிடப்பட்டிருக்க, நடுவில் அழகிய குளம், அதில் தாமரை பூத்திருந்தது. பாட்மின்ட்டன் விளையாட வலை கட்டப்பட்டிருக்க, சற்றுத் தள்ளி, ஆடி, குதூகலிக்க ஊஞ்சலும் இருந்தது. அமர்ந்து இளைப்பாற உயர்ரக சேர்கள், கம்பீரமாய் வளைய, வர நான்கு ஜாதி நாய்கள் என ரசனையாய், வித்தியாசமாய் இருந்தது.
நடுவில் வெள்ளை வெளேரென்று பளிங்குக் கற்களால் மின்னிக் கொண்டிருந்தது ரசனையுடன் கட்டப்பட்டிருந்த பங்களா.
தோளில் கை வைத்து விழ, திடுக்கிட்டுத் திரும்பினாள். பாலகிருஷ்ணன்!
என்னங்க... இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிட்டீங்க?
நான் கேக்க வேண்டிய கேள்வி? இந்நேரத்திலே இங்கே நின்னுக்கிட்டு என்ன பண்றே?
தூக்கம் விலகாத கரகரத்த குரலில் கேட்டார்.
தூக்கமே வரலீங்க!
கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம வந்து படு. பனிக்காத்து... உனக்கு ஆகாது... உள்ளே வா!
எந்தக் குழப்பமும் எனக்கில்லீங்க. சொல்லப் போனா சந்தோஷத்துலதான் தூக்கமே வரலே!
அப்படியென்ன சந்தோஷம்? சொன்னா நானும் தூங்காம இருப்பேனே!
கிண்டல் பண்ணாதீங்க. விடிஞ்சா நம்ம ஷியா மோடப் பிறந்தநாளாச்சே?
…..
என்னங்க அமைதியாய்ட்டீங்க?
ஒண்ணுமில்லே தேவி... எப்படியும் நாளைக்கு அர்ச்சனை, அன்னதானம்னு கோவில் கோவிலா ஏறி இறங்கப்போறே... அதுக்காவது உடம்புல எனர்ஜி வேணாமா? வாம்மா... மணி மூணரையோ, நாலோதான் ஆகுது. ரெண்டு மணி நேரமாவது வந்து படு!
கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
இப்படி விடிய விடிய முழிச்சிக்கிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்? நீயொரு ஹார்ட் பேஷண்ட். அதை மறந்துடாதே... தூங்கு!
விளக்கை அணைத்தார்.
ஷியாமுக்குப் பிறந்த நாள்ங்கறேன்... எப்படித் தூக்கம் வருமாம்?
சிணுங்கியபடி கண்களை மூடியவளுக்கு உறக்கம் கண்ணாமூச்சி காட்டியது.
இரண்டே நிமிடத்தில் பாலகிருஷ்ணனிடமிருந்து குறட்டைச் சத்தம் வெளிப்பட... கண்களை மூடி, பழைய வைகளை அசைபோட்டபடி விழித்திருந்தாள்.
வீடு முழுக்க சாம்பிராணிப் புகை!
நாசியில் ஏற... தொண்டைக் கமறியது. இருமிக்கொண்டே விழித்தார் பாலகிருஷ்ணன்.
இருட்டும், விடியற்காலையும் கைக்கோர்த்துக் கனிந்து கொண்டிருந்த ஐந்துமணிப் பொழுது!
சலிப்புடன் கீழே இறங்கி வந்தார். பூஜையறையில் ஈர டவலால் கொண்டை போட்டு மஞ்சள் மினுமினுக்க ஸ்லோகம் சொல்லியபடி தெய்வப் படங்களுக்கு பூப்போட்டுக் கொண்டிருந்தாள் காஞ்சனா தேவி.
ஏம்மா, உன்னை நீயேக் கஷ்டப்படுத்திக்கறே? எப்போ எந்திரிச்சே... அஞ்சு மணிக்கெல்லாம் பூஜையிலே உட்கார்ந்துட்டே... நான் கண்ணை மூடினதும் எழுந்து வந்திருப்பே... அப்படித்தானே?
சரி... அப்படித்தான் வச்சுக்குங்களேன்! நேரமாயாச்சு... போய் குளிச்சிட்டு வாங்களேன்...
இன்னும் ஒரு மணி நேரம் தூங்கிட்டு வர்றேனே... ப்ளீஸ் தேவி!
அதெல்லாம் முடியாது. இப்பவே லேட். சரியா ஆறரை மணிக்கு மணக்கேஸ்வரி அம்மன் கோவில்ல பாலாபிஷேகம். அதை முடிச்சிட்டு வித்யா மந்திர் முதியோர் இல்லம் அன்னதானத்தை முடிச்சிட்டு, சிவா விஷ்ணு கோவிலுக்கு வரணும்.
மனைவியை கோபித்துக் கொள்வதா, பரிதாபப்படுவதா என்று புரியாமல் பெருமூச்சுடன் பாத்ரூம் நோக்கி நடந்த பாலகிருஷ்ணனுக்கு ஐம்பத்தைந்து வயது.
காலியான பூக்கூடையை ஓரமாக வைத்து விட்டு எழுந்தாள் காஞ்சனா தேவி.
இன்னும் இதுங்க ரெண்டையும் எழுப்பி தயார்ப்படுத்தணுமே...
அவசரமாய் இடப்பக்க அறையை நோக்கி நடந்தவளுக்கு ஐம்பது வயது.
தெய்வீகமான முகம். இளம் வயதில் பேரழகியாய் இருந்ததற்கான மிச்சங்கள் இன்னும் இருந்தன.
கை வைத்ததும் கதவு திறந்து கொள்ள உள்ளே சென்றாள்.
இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள் மகள் வித்யா.
வித்யா... வித்தும்மா... என் கண்ணு... டைமாய்டுச்சிப் பார்! எந்திரிடா...
ம்...
எந்திரிடா செல்லம்!
நைட்ல ஏம்மா வந்து எழுப்பறே... தூக்கம் வருது... போம்மா...
நைட்டா... விடிஞ்சி ரொம்ப நேரமாய்டுச்சு... எந்திரிம்மா!
போர்வையை உலுக்கினாள்.
பெட்ஷீட்டை விலக்கிச் சிணுங்கிய வித்யா, அம்மாவின் சாயலை பிரம்மனிடம் வாங்கி வந்திருந்தாள்.
எனக்கு எட்டரை மணிக்கு காலேஜுக்குப் போனா போதும்மா... இப்ப எதுக்கு எழுப்பறே?
ஷியாம் அண்ணனுக்குப் பிறந்த நாள்டி... கோவிலுக்குப் போக வேணாமா?
வருஷா வருஷம் உன்னோட இதே தொல்லையாப் போச்சும்மா! அண்ணன் பர்த்டேயைக் கொண்டாட பெரியப்பா, பெரியம்மா இருக்காங்க... நீ வேற எதுக்கும்மா?
யார் பிள்ளையா இருந்தா என்ன? ஷியாம் எனக்கும் பிள்ளை தான். பேசிட்டிருக்க நேரமில்லே... எந்திரி!
ஏன் தான் இப்படி ஷியாம் பைத்தியம் பிடிச்சி அலையறியோத் தெரியலே...
பேசிட்டிருக்க நேரமில்லே... சீக்கிரம் ரெடியாகு!
அழுத்தமாய் உச்சரித்துவிட்டு வெளியேறினார்.
அம்மா போன அடுத்த கணமே பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுக்க... வித்யா
என்ற அம்மாவின் அதட்டல் வந்தது.
"ச்சே... தூங்கக்கூட எனக்குச் சுதந்திரமில்லையா? உன்னை டைவர்ஸ் பண்ணாம விட