Pottu Vacha Vatta Nila
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Seetha Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Unnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Un Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Kathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5
Related authors
Related to Pottu Vacha Vatta Nila
Related ebooks
Ilamaikku Perumai 2 Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsNaathanaar Rating: 0 out of 5 stars0 ratingsThalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsPathavi Neekkam Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKanthudaippu Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Ilamaikku Perumai 1 Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsVanthana Avan Vanthana? Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Naan Raja Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Thirai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pottu Vacha Vatta Nila
0 ratings0 reviews
Book preview
Pottu Vacha Vatta Nila - Devibala
18
1
இரவு பத்து மணி!
ஆண்டாள் கவலையுடன் கடிகாரத்தை ஏறிட்டாள். கதவைத் திறந்தாள். வாசலுக்கு வந்தாள்.
வெளியே இருட்டு அப்பிக் கிடந்தது. அன்றைக்குப் பார்த்துத் தெரு விளக்குக்கூட எரியவில்லை. நாயின் ஊளைச் சத்தம் பயங்கரமாக செவியைத் தாக்கியது.
இன்னும் சந்திரன் வரவில்லை.
காலையில் வெளியே போகும்போதே சற்று சோர்வாக இருந்ததால் அவன் முகமெல்லாம் வாடிக் கிடந்தது.
என்ன வேலையிருந்தாலும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவான். அப்படி முடியாமல் போனால் தொலைபேசியில் காரணத்தைச் சொல்லிவிடுவான். ஒரு நாள் கூட வெளியில் அவன் தங்கியதில்லை.
கவலையுடன் ஆண்டாள் உள்ளே வந்தாள்.
சந்திரனின் அப்பா, அம்மா உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு முடித்து ஏழரைக்கு உறங்கப் போய் விடுவார்கள். யாரைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள்.
‘யாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பற்றி விசாரிப்பது?’
நேரம் பத்தரை!
ஆண்டாளுக்கு மூச்சை அடைத்தது.
‘ஏன் என்னாயிற்று அவருக்கு? ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும்.’
‘ஒரு வாரமாக அவர் சரியாக இல்லை. அவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை.’
நேற்று முன் தினம் கேட்டே விட்டாள் ஆண்டாள்.
ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?
இ... இல்லையே ஆண்டாள்! நான் நல்லாத்தானே இருக்கேன்!
இல்லை... அப்படி இருக்கிறதாத் தெரியலை. முகமெல்லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு,
அவன் நெற்றி, கழுத்து என்று கை வைத்துப் பார்த்தாள்.
அவன் சிரித்தான்.
தொழில்ல ஏதாவது கஷ்டமா? நஷ்டம் உண்டாகியிருக்கா? எனக்கு சொல்லக்கூடாதா?
இல்லைம்மா! உங்கிட்ட எதை நான் மறைச்சிருக்கேன் ஆண்டாள். வேலை அதிகம். அதனாலதான் சோர்வு
.
அதற்குமேல் அவள் கேட்கவில்லை.
சந்திரனின் கைவசம் நாலு லாரி இருந்தது. சரக்கு லாரிகள். அப்பா கவனித்து வந்த தொழில். அவரால் முடியாமல் போக, சந்திரனே நாலைந்து ஆண்டுகளாக கவனித்து வருகிறான். சந்திரன் பட்டதாரிதான். மற்ற வேலைகளை விட லாரியில் அதிக வருமானம் இருந்ததால் இதில் நிலைத்துவிட்டான்.
சொந்த வீடு, சகல வசதிகள் என்று எல்லாமே இருந்தன. பெற்றவர்களுக்கு ஒரே ஆண் பிள்ளை. கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை மட்டும். இருவரும் திருமணமானவர்கள்.
ஆண்டாளை சந்திரன் மணந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தைகள் இல்லை.
நேரம் பதினொன்று அடித்தது.
ஆண்டாளால் நிற்கக்கூட முடியவில்லை.
‘இனி அத்தை, மாமாவை எழுப்ப வேண்டியதுதான். அவருக்கு ஏதோ ஆபத்து!’
அவர்கள் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.
அந்த நேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
இரண்டு இளைஞர்கள் இறங்கினார்கள் ஆட்டோவை விட்டு.
சந்திரன் வீடு இதுதானா?
ஆமாம். அவருக்கு என்ன?
நீங்க அவருக்கு என்ன வேணும்?
நான் அவரோட மனைவி. என்னாச்சு அவருக்கு?
மன்னிக்கணும். உங்க கணவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.
ஏன்?
அலறினாள் ஆண்டாள்.
எட்டு மணிக்கு இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்தார் சந்திரன். அப்படியே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவனைக்கு எடுத்துட்டுப் போய் வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சிட்டு உங்களைத் தேடி வர தாமதமாயிடுச்சு!
உள்ளே ஓடினாள் ஆண்டாள்.
அத்தே... அத்தே!
குலுங்கினாள்.
மாமியார் மிரண்டு விழித்தாள்.
இவள் விவரம் சொன்னதும் மாமாவும் அவசரமாக எழுந்துவிட-
மூவரும் பதறியபடி வாசலுக்கு வந்தார்கள்.
இளைஞர்களில் ஒருவன் வேறொரு ஆட்டோ கொண்டு வந்துவிட்டான் அதற்குள்.
ஆண்டாள் அழத் தொடங்கிவிட்டாள்.
எப்படி இருக்கார் அவர்?
என் பிள்ளை உயிருக்கு ஆபத்து ஒண்ணுமில்லையே?
அம்மா அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டாள்.
மருத்துவமனையை வண்டி அடைய, இறங்கி ஓடினார்கள் மூவரும்.
இதோ... இது டாக்டரின் அறை!
உள்ளே நுழைந்தாள் ஆண்டாள் புயல் போல்!
டாக்டர் என்னாச்சு அவருக்கு?
நீங்க யாரம்மா?
சந்திரன் மனைவி!
ஆங்... உட்காருங்க! நீங்க ரெண்டு பேரும் அவரைப் பெற்றவங்களா?
ஆமாம்!
எப்படி இத்தனை நாள் கவனிக்காம இருந்தீங்க?
எதை டாக்டர்?
சந்திரனுக்கு இரத்தப் புற்றுநோய். அதுவும் முற்றிய நிலை!
டாக்டர்!
அலறிவிட்டாள் ஆண்டாள்.
அதனால்தான் வாந்தி எடுத்திருக்கிறார் இரத்தம் இரத்தமாக.
இப்ப அவர்...
இருங்க! நானே கூட்டிட்டுப் போறேன். மயக்க ஊசி போட்டு வெச்சிருக்கோம். கடந்த சில நாட்களா அவருக்கு ஏதாவது நோய் அறிகுறி தெரிஞ்சிருக்கா?
நோய்னு எதுவும் இல்லை. ரெண்டு வாரமாக முகமெல்லாம் சோர்வா இருந்தார். சரியா சாப்பிடலை... தூங்கறதில்லை. நான் இதை விசாரிச்சேன். தொழில் சுமைனு ஒதுக்கிட்டார்!
காரணம் அது இல்லைமா. அவர் இரத்தத்துல புற்று நோய்க் கிருமிகள் கலந்தாச்சு. அது அசுர வேகத்துல வளர்ந்து இப்ப அவரை விழுங்கிட்டிருக்கு!
ரெண்டு வாரத்துல... எ... எப்படி டாக்டர்?
"மருத்துவத்திலும் பல செய்திகள் இப்பல்லாம் எங்களுக்கே பிடிபடறதில்லை. வேகமாக இரத்தத்துக்குள் புற்றுநோய் பரவ முடியும். சந்திரனுக்குப் பரவியிருக்கு.
டாக்டர்!
உங்ககிட்டே நான் பொய் சொல்ல விரும்பலை. உங்களை எதுக்கு நான் ஏமாற்றணும்? சந்திரனை மரணம் வேகமாக நெருங்குது. எந்த நேரமும் அது நிகழலாம். அதனால் சொந்த பந்தங்களை நீங்க அழைச்சுக்கலாம். சொத்து விவகாரங்களை சரி செஞ்சுக்கலாம். நான் ரொம்ப வருத்தப்படறேன்மா!
ஆண்டாளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
‘உன் கணவனின் மரணம் உன் கண் முன்னாலேயே நிகழப் போகிறது! அதுவும் விரைவில்!’
அந்த செய்தி அவள் உடலில் மின்சார இழையாக இறங்க, மயங்கிச் சரிந்தாள் அதே இடத்தில்.
2
சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.
ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.
அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.
உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?
ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.
விடிந்து வெகுநேரமாகிவிட்டது.