Kan Simittum Kaathal
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Un Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsMannil Iranguthu Aakaayam Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5
Related to Kan Simittum Kaathal
Related ebooks
Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsThalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsEnakkulle Nee Irukka Rating: 4 out of 5 stars4/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Aanantham Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vanthaval! Rating: 0 out of 5 stars0 ratingsPeriyavanga Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5நதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsThethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Vithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsThen Sinthum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kan Simittum Kaathal
0 ratings0 reviews
Book preview
Kan Simittum Kaathal - Devibala
20
1
டாக்டரின் எதிரே இருந்தாள் மாதவி!
சொல்லும்மா!
அந்த முரட்டு நோயாளிக்கு நினைவு வந்தாச்சு!
கட்டப் படலையா?
வேண்டாம் டாக்டர்! அவன் இப்ப அமைதியாத்தான் இருக்கான்.
அவனுக்கு மன நோயே இல்லைனு சொன்னியே!
அவன் பார்வைல அந்த அலை பாயற காட்சி இல்லை. இயல்பா இருக்கான். அவனுடைய செய்கைகள் கூட சாதாரணமா இருக்கு. அவனை அட்மிட் பண்ணியது யார்?
ரிஜிஸ்டரை பாக்கணும்! சரி, ஒரு முழு நாள் ஆச்சே! யாரும் பாக்க வராமலா இருப்பாங்க?
வரட்டும் டாக்டர்! நான் பேசறேன் அவங்ககிட்ட! ஒரு மனுஷன் மனநோயாளி ஆகக் காரணமே, குடும்பத்துல உள்ளவங்க தான்!
மாதவி எழுந்தாள்.
நர்ஸ் வந்தாள்.
மாதவி! உன்னைக் கேட்டுட்டு கார்ல யாரோ வந்திருக்காங்க. ரிசப்ஷன்ல ஒக்கார வச்சிருக்கேன்!
வர்றேன்!
மாதவி கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள்.
ரிசப்ஷனை நெருங்க,
அந்த இளைஞன் நின்றிருந்தான்.
ரிம்லெஸ் கண்ணாடியுடன் நல்ல உயரத்தில் பசும் பால் நிறத்தில், கொஞ்சம் பூசினாற் போல உடம்பில் பளீரென இருந்தான்.
மாதவி நெருங்கினாள்.
நான் மாதவி!
உங்களைப் பாக்கத்தான் வந்தேன்! என் பேர் அமரேஷ். அமர்னு கூப்பிடுவாங்க!
ஒக்காருங்க!
அவனை உட்காரச் சொல்லி விட்டு, மாதவியும் உட்கார்ந்து கொண்டாள்.
சொல்லுங்க! நான் உங்களுக்கு எந்த விதத்துல உதவணும்?
நாளைக்கு உங்களைப் பெண் பார்க்க நான் வரப் போறேன். அது வரைக்கும் பொறுமையில்லை! இப்பவே வந்திட்டேன். இது என் காரெக்டர்.
நீங்க என்னைப் பெண் பார்க்க வர்ற நியூஸ் எனக்கு எப்படி தெரியாம போச்சு?
தரகர் உங்க வீட்டுக்குத் தகவல் தந்தாச்சு!
மாதவி அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
"ஓக்கே! அதான் இப்ப நீங்க பார்த்தாச்சே! நாளைக்கு தேவையில்லை!
நோ... நோ...! முறையா பெரியவங்களோட நாளைக்கும் வருவேன். அங்கே இத்தனை இயல்பா பேச முடியாது. அதான் இங்கே வந்திட்டேன். நம்ம ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்காம். எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு! ஸோ, கல்யாணத்துக்கு தடை இல்லை!
அவன் குரலில் உற்சாகம்.
மாதவி சுற்றிலும் பார்த்தாள்.
குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.
மிஸ்டர் அமர். நீங்க இங்கே வந்தது ஒரு வகைல நல்லதாப் போச்சு! நான் கல்யாணம் செஞ்சுக்கிற உத்தேசம் தற்சமயம் இல்லை! நீங்க போகலாம். நாளைக்கு தேவையில்லாம குடும்பத்தோட நீங்க வர வேண்டாம்!
அவன் முகம் சடாரென சுருங்கி விட்டது.
எனக்கு பேஷன்ட்ஸை பாக்கணும். ஸீ யூ லேட்டர்!
இருங்க மாதவி!
என்ன?
அப்படி உதறிட்டுப் போகாதீங்க! தரகர் உங்க போட்டோவை தந்ததுமே லயிச்சிட்டேன். பார்த்ததும் முடிவுக்கே வந்துட்டேன்! நம்ம கல்யாணம் நடக்கணும்!
கொஞ்சம் மெதுவா பேசுங்க சார்! என் விருப்பமும் முக்கியம். கட்டாயப் படுத்தினா எனக்கு கோபம் வரும்! நீங்க போகலாம்!
வேகமாக உள் நோக்கி நடக்கத் தொடங்கினாள். அமர் தாங்க முடியாத அவமானத்தில் கூனிக் குறுகி நின்றான்.
‘உனக்கு அத்தனை அலட்சியமாடீ? ஆசையோட வந்தேன். நொறுக்கிட்டியே! நான் ஆசைப்பட்ட எதையும் அடையாம இருந்ததில்லை! அந்த சக்தி எனக்குண்டு! இங்கே - இப்ப இந்த ஆஸ்பத்திரில வச்சு சொல்றேன்! நீதான் எனக்குப் பொண்டாட்டி!’
வேகமாக வெளியேறினான்.
2
"மாதவி! உள்ளே வா!"
காஞ்சனா அவசரமாக அழைத்தாள்.
மாதவி உள்ளே வந்தாள்.
தரகர் கிட்ட என் போட்டோவை ஏன் குடுத்தே?
என்னடீ தப்பு? நாளைக்கு வர வேண்டிய அமரேஷ் இனிக்கே வந்துட்டார். வந்து அரை மணி நேரம் ஆச்சு!
மாதவி பேசவில்லை!
விவரமாப் பேசினார். போட்டோ பார்த்து ரொம்பப் புடிச்சு போச்சாம். நாளை வரைக்கும் பொறுமை இல்லையாம். வசதியான மனுஷன். நம்ம பாபுகிட்டே அன்பா பேசினார். என்னைப் பற்றி விசாரிச்சார். ‘கல்யாணம் முடிஞ்சா, எல்லாரும் வந்துடுங்க! ஒண்ணா இருக்கலாம்’னு சொன்னார்.
நீ மயங்கிட்டியாக்கும்?
மாதவி! இந்த அமரேஷை நீ கல்யாணம் செஞ்சுக்கலாம். வீடு தேடி நீதான் வேணும்னு ஒரு பெரிய கோடீஸ்வரன் வர்றது சாதாரண விஷயமில்லை!
காஞ்சனாவை ஏற இறங்கப் பார்த்தாள் மாதவி!
அரை மணி நேரத்துல உன்னை, தம்பியை வசப்படுத்தியாச்சு.
தப்பில்லையே மாதவி! அன்பால கட்டத் தெரியுதே! எத்தனை பேரால முடியும்? சரி சரி கூடத்துக்கு வா! தனியா ஒக்கார வெச்சுட்டு, நாம இங்கே பேசறது அநாகரிகம்! வா!
இருவரும் வெளியே வந்தார்கள்.
நாளைக்கு என் குடும்பத்தோட வர்றேன். எங்க வீட்ல நான் வெச்சதுதான் சட்டம்!
டிபன் தரட்டுமா?
காஞ்சனா சின்னக் குரலில் கேட்டாள்.
குடுங்களேன்!
உள்ளே போனாள். மாதவி எதிரே வந்து உட்கார்ந்தாள்.
வா மாதவி!
மரியாதையை இப்போது ரத்து செய்திருந்தான்.
மிஸ்டர் அமர்! ஆஸ்பத்திரியைத் தொடர்ந்து இங்கேயும் நீங்க வந்தாச்சு. பெண் பார்க்க நேரம் குறிச்சிட்டு, அதுக்கு முன்னாலேயே ரெண்டு தடவை வர்றது ஆபாசமா இருக்கு. எனக்குக் கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன், ஆஸ்பத்திரியில்! இங்கே, இப்ப சொல்றேன். உங்களை எனக்குப் பிடிக்கலை. அதனால எனக்கு ஒரு வேளை கல்யாணம் நடந்தாலும், நிச்சயமா அது உங்க கூட இல்லை! நீங்க போகலாம் மிஸ்டர் அமர்!
அவன் முகம் சுத்தமாக செத்துப் போயிருந்தது.
காஞ்சனா கதவோரம் டிபன் பிளேட்டுடன் நின்றாள்.
அவள் முகத்தில் கவலை ரேகைகள்.
சக்கர நாற்காலியில் பாபு படபடப்புடன்.
அமர் அவளைப் பார்த்தான்.
நான் போறேன் மாதவி! ஆனா ஒண்ணை சொல்லிட்டே போறேன் நீதான் எனக்குப் பொண்டாட்டி!
வேகமாக வெளியேறினான்.
இடியட்! என்ன நெனச்சிட்டு இருக்கான் மனசுல?
அமர் திரும்பி வந்து -
உன்னையே நெனச்சிட்டு இருக்கேன் மாதவி!
சொல்லிவிட்டு காருக்குள் நுழைந்தான்.
கார் புயலாகப் புறப்பட்டது!
மாதவி அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
காஞ்சனா அருகில் வந்தாள்.
மாதவி நீ படிச்சவதானா?
நிமிர்ந்தாள்.
வீடு தேடி வந்தவங்களை இப்படியா அவமானப்படுத்துவது? நியாயமா இது?
காஞ்சனா! அவசரப்பட்டு நீயும் பேசிடாதே! காலைல நர்ஸிங் ஹோமுக்கு வந்தாச்சு. இங்கே ரெண்டாவது தடவை. நாகரிகமா இல்லை!
"இருடி! அந்த மாதிரி பேசாதே! இப்படி பாரேன்! உன் மேல உள்ள அதீத