Paarvaikal Puthithaa
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Sirukathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsPaarththaal Kathal Varum Rating: 5 out of 5 stars5/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Ennam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Paarvaikal Puthithaa
Related ebooks
Malarukku Thendral Pagaiyaanaal Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsIrai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Kaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Oonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Thoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Thagappan Sami Rating: 0 out of 5 stars0 ratingsThisaimaari Paayum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Mangala Isai Rating: 3 out of 5 stars3/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Vaasamillaa Malarithu Rating: 5 out of 5 stars5/5Ponnaadai Rating: 4 out of 5 stars4/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsThaigal Serattum Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsKathal Rajjiyam Unathu Rating: 0 out of 5 stars0 ratingsNathiyilla Odam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paarvaikal Puthithaa
0 ratings0 reviews
Book preview
Paarvaikal Puthithaa - R.Sumathi
15
1
உணவு இடைவேளைக்கான நேரம். நீண்ட மணியொலி மாணவர்களை வகுப்பறையிலிருந்து விடுவித்தது.
கையில் டிபன் பாக்ஸுடன் மாணவ மாணவிகள் வெளியே வந்தனர்.
சிலர் வகுப்பறையிலேயே அமர்ந்து டப்பாவைத் திறந்தனர்.
வகை வகையான உணவுகளின் மனம் காற்றில் கலந்தது.
கலவையான சிரிப்பொலியும் அந்த மணத்தோடு கலந்து எங்கும் நிறைந்திருந்தது.
மரத்துக்கு மேல் பறவைக் கூட்டங்களைப் போல் மரத்தடியில் மாணவ, மாணவிகளின் கூட்டம்.
சென்ற வகுப்பில் பாடம் நடத்திய டீச்சரைப் பற்றி, இன்றைக்கு உள்ளூர் தியேட்டரில் ரிலீஸாகியிருக்கும் படத்தைப் பற்றி, புத்தகம், கவிதை, விளையாட்டு இப்படி எதையெதையோ பற்றி ஏதேதோ பேசிச் சிரித்தபடி சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.
தனது புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு எழுந்தாள் தேவஸ்ரீ. பார்வைகள் புதிதா?
தேவஸ்ரீ... வாடி... சீக்கிரம். பசிக்குது!
என டிபன் பாக்ஸுடன் வந்தாள் மீனா.
மீனா... நான் சாப்பாடு கொண்டு வரலை. நீ போய்ச் சாப்பிடு...
என்றாள் தேவஸ்ரீ.
சாப்பாடு கொண்டு வரலையா, ஏன்?
அது...இன்னைக்கு விரதம்.
அருகே வந்தாள் மீனா. விரதமா?
என்ன விரதம்?
வெள்ளிக்கிழமை விரதம்.
மீனா சிரித்தாள். என்னவோ லட்சியம் அது இதுன்னு பேசுவே. இப்ப என்னடான்னா விரதம் அது இதுங்கறே! கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாயிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?
ச்சீ...புத்தியைப் பாரு! கல்யாணம் பண்ணிக்கறவங்க தான் விரதம் எடுப்பாங்களா? மத்தவங்க எடுக்க மாட்டாங்களா?
மத்தவங்க எடுக்கறது இருக்கட்டும். நீ எதுக்கு இப்ப விரதம் எடுக்கறேன்னு சொல்லு.
சொல்றேன். ப்ளஸ் டூவ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும். அதுக்காகத்தான்.
இதைக் கேட்டு மீனா கலகலவெனச் சிரித்தாள்.
எந்தச் சாமிக்கு விரதம் எடுக்கறே?
ம்...வந்து முருகனுக்கு."
அப்படியா...அப்ப ஒண்ணு பண்ணு. பேசாம மொட்டை போட்டுக்கயேன். ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்ன? ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர்றதுக்கே முருகன் அருள் கொடுப்பார்.
என்ன, கிண்டலா?
நான் கிண்டல் பண்றேன். நீதான் சாமியைக் கிண்டல் பண்றே?
என்ன உளர்றே?
விரதம்ங்கறது பக்தியோட எடுக்கறது. வயிறு பூரா பசியை வச்சிக்கிட்டு சாப்பாடு இல்லைங்கறதால பட்டினியாய் எதுக்கு கௌரவமா விரதம்னு சொல்லிக்கணும்?
மீனா இப்படிக் கேட்கவும், தேவஸ்ரீ மௌனமாகத் தலை குனிந்தாள்.
தேவஸ்ரீ... என்கிட்டயே எதுக்குடி பொய் பேசறே? தோழமையோடும் ஏழ்மை பேசேல்னு ஒண்ணாங்க்ளாஸ்ல படிச்சதையெல்லாம் நீ ஒருத்திதான் ஞாபகம் வச்சிருக்கறதா நினைப்பா? நானும் ஞாபகம் வச்சிருக்கேண்டி. ‘உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு!’ நீ பசியோட பக்தி வேஷம் போடாதே. அடுப்புக்குள்ள பூனை தூங்கறதை மறைக்க ஆன்மிகம் பேசக் கூடாது.
மீனா...
உன் நிலைமை நல்லாத் தெரிஞ்சவள் நான். என்கிட்டயே எதுக்குப் பொய். படிக்கிற வயசுல இப்படி பட்டினி கிடந்தா எதையுமே சாதிக்க முடியாது. பசி எல்லா சக்தியையும் உறிஞ்சிடும். நான் உனக்கும் சேர்த்துத்தான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். வா...
என்று தேவஸ்ரீயின் கையைப் பற்றி இழுத்து வந்தாள்.
இருவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர்.
தனியாக மரத்தடியில் போய் அமர்ந்தனர். மீனா டிபன் பாக்ஸைத் திறந்து அதன் மூடியில் புளிசாதத்தை அள்ளி வைத்து நீட்டினாள்.
தேவஸ்ரீயின் வயிற்றில் பசி உணவைக் கண்டதும் அசுரனைப் போல் எழுந்து உட்கார்ந்து கொண்டது.
கறிவேப்பிலைத் துவையலும் புளி சாதமும் மிகவும் சுவையாகயிருந்தது.
ஒருவாய் அள்ளி வாயில் வைத்தபோது அம்மாவின் முகம் ஞாபகம் வந்தது.
அம்மாவும் இந்நேரம் பசியோடுதானே வேலை செய்து கொண்டிருப்பாள்?
நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சை அடைத்தது தொண்டையில் உணவு இறங்க மறுத்தது.
உணவை அவளிடமே நீட்டினாள். மீனா...வேண்டாம் எனக்கு. நீயே சாப்பிடு.
ஏண்டி?
என்னமோ தெரியலை. வாந்தி வர்ற மாதிரியிருக்கு.
இத பார். சாப்பிடாமையிருக்கறதுதான் அப்படிச் செய்யுது. கொஞ்சமா சாப்பிடு. எல்லாம் சரியா போய்டும்.
என்று வற்புறுத்தி மீண்டும் உணவை நீட்டினாள்.
இல்லை மீனா. நீ சாப்பிட்டுவிட்டு வா. எனக்குப் புளி சாதம் சாப்பிட்டாலே நெஞ்சைக் கரிக்கும். வாந்தி வரும். நான் சாயந்தரம் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கறேன்.
எழுந்து போய்விட்டாள் தேவஸ்ரீ.
‘இல்லாதவங்களுக்குக் கடவுள் பசியைத் தாங்கிக்கற சக்தியையும் கொடுத்திருக்கான்!’ என நினைத்த மீனா தேவஸ்ரீயையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதிய வகுப்பு ஆரம்பித்து விட்டது.
முதல் வகுப்பு கணக்கு வகுப்பு, ஆசிரியை கமலாதான் கணக்கு எடுப்பார்.
முதல் நாள் வீட்டில் செய்யச் சொல்லியிருந்த கணக்கை அவசர அவசரமாகப் பிரித்துச் சரி பார்த்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் ஆசிரியை உள்ளே நுழைந்ததும் எழுந்து வணக்கம் செய்தனர்.
உள்ளே நுழைந்ததுமே சாக்பீஸைக் கையில் எடுத்துக் கொண்டு சரசரவெனக் கரும்பலகையில் கணக்கை எழுத ஆரம்பித்து விடும் கணக்காசிரியை வழக்கத்திற்கு மாறாக மேஜைக்கு முன்னாள் வந்து நின்று கொண்டு மார்பிற்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி மாணவர்களைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார்.
உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன்.
பீடிகையோடு ஆரம்பித்த ஆசிரியையின் முகத்தையே அனைவரும் ஆவலாகப் பார்த்தனர்.
நாளைக்கு லீவா டீச்சர்.?
முந்திரிக் கொட்டையெனப் பெயர் வாங்கிய மஞ்சு எழுந்து சொல்லவும் வகுப்பு குபீரெனச் சிரித்தது.
வர்றதே நாலு நாள் தான் நீ. இதுல லீவு வேற வேணுமா?
கமலா டீச்சர் மஞ்சுவைக் கோபமாகப் பார்க்க, மஞ்சு பூனைக்குட்டியைப் போல் சத்தமின்றி அமர்ந்தாள்.
ஓ.கே.! நான் சொல்றேன். நம்ம ஸ்கூல்ல டூர் போறதுக்கு ஏற்பாடாகி யிருக்கு.
அவர் சொல்லி முடிக்கவில்லை. ஹய்யா...
என மாணவர்கள் கையை உயர்த்தி கோரஸாகச் சப்தம் எழுப்பினார்.
உற்சாக மிகுதியால் சில மாணவர்கள் டெஸ்க்கில் தாளம் போடுவதும் தட்டுவதுமாக இருந்தனர்.
எவ்வளவு நாள் டீச்சர்?
ஒரு வாரம். இல்லாட்டி அஞ்சு நாள் இருக்கும்.
எந்தெந்த இடத்துக்கு டீச்சர்?
அதையெல்லாம் இன்னும் சரியா முடிவு செய்யலை அப்பறம் சொல்றேன்.
எவ்வளவு டீச்சர் பணம் தரணும்?
அதையும் ஹெச்.எம். சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. முதல்ல யார் யாருக்கு வர இஷ்டம்னு சொன்னா போதும்.
நான் டீச்சர்....
நான் டீச்சர்!
நிறையக் கைகள் உயர்த்தப்பட்டன.
எல்லோரும் தேவஸ்ரீகிட்டே பெயர் கொடுங்க. தேவஸ்ரீ நீ பெயரை எழுதிக்கோ. எவ்வளவு பணம் செலவாகும்னு நான் சொன்னதும் அதையும் கலெக்ட் பண்ணி என்கிட்டே கொடுத்துடு.
வகுப்புத் தலைவியான தேவஸ்ரீ எழுந்து நின்று, "சரி டீச்சர்!’ என்றாள்.
அடுத்த நிமிடமே சுற்றுலா செல்வதை பற்றி ஒருவரோடு ஒருவர் வகுப்பு என்பதையும் மறந்து கிசுகிசுக்கத் தொடங்க, வகுப்பில் ஒரு கதம்பமாக பேச்சுச் சத்தம் நிலவியது.
சரி...பேசினது போதும். எல்லோரும் ஹோம் ஒர்க் நோட்டை எடுத்துட்டு வாங்க.
கமலா டீச்சர் உத்தரவிட்டதும் வகுப்பறை கப்சிப் பென்றானது.
தேவஸ்ரீ எழுந்து எல்லோருடைய நோட்டுப் புத்தகங்களையும் சேகரித்து மேஜை மீது அடுக்கினாள்.
வகுப்பு எப்பொழுது முடியும் எனக் காத்திருந்ததைப் போல் ஆசிரியை அந்த வகுப்பை முடித்துக் கொண்டு சென்றதும் அனைவரும் தேவஸ்ரீயைச் சூழ்ந்து கொண்டனர்.
தேவஸ்ரீ! என் பெயரை எழுதிக்கோ! என் பெயரை எழுதிக்கோ...
ஆளாளுக்குப் பெயர் சொல்ல, தேவஸ்ரீ ஒரு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயராக எழுதினாள்.