Sinthanaiye... En Siththame!
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPaarththaal Kathal Varum Rating: 5 out of 5 stars5/5Uravukal Sirukathai Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5
Related to Sinthanaiye... En Siththame!
Related ebooks
Uruguthe Manam Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsNaanal Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pouranami Rating: 5 out of 5 stars5/5Santhana Minnal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Venpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Nyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsThaalelo Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsDuwaraga Mayi Rating: 0 out of 5 stars0 ratingsAaravaaram Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal Rating: 4 out of 5 stars4/5Pattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/5Kadaisivarai Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sinthanaiye... En Siththame!
0 ratings0 reviews
Book preview
Sinthanaiye... En Siththame! - R.Sumathi
21
1
வாசுதேவனுக்கு விழிப்பு வந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்களின் சத்தம் காதில் விழுந்தது.
அந்த சத்தம் அவரை அவசரமாகவும் ஒருவித பரபரப்புடனும் எழ வைத்தது.
‘மீரா வேலை செய்கிறாளா? ச்சே! எப்படி தூங்கினேன்? சீக்கிரம் எழுப்பிவிட சொன்னாளே? இன்னைக்கு ஏதோ டெஸ்ட் இருப்பதாக வேறு சொன்னாளே? இப்படி தூங்கியிருக்கிறேனே!’ தன்னையே நொந்து கொண்டவராக சமையலறைக்குள் நுழைந்தார். மீரா இழுத்து சொருகிய புடவையுடன் அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை இறக்கிக் கொண்டிருந்தாள். சமையலறை ஜன்னல் வழியே உள்ளே புகுந்த காலை வெயில் அவளுடைய முகத்திலும் தோளிலும் பட்டு அவளுக்கு ஒரு பிரகாசத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.
என்னம்மாயிது! என்னை எழுப்ப வேண்டியதுதானே. நீ எதுக்கு காபியெல்லாம் போட்டுக்கிட்டு? சீக்கிரம் எழுப்பிவிடச் சொன்னே. ஸாரிடா! அப்பா அசந்து தூங்கிட்டேன்.
மீரா கனிவாக சிரித்தாள்.
இருக்கட்டும்ப்பா! ராத்திரி தலை வலிக்குதுன்னு நீங்க மாத்திரை போட்டுக்கிட்டு படுத்தீங்களே! அதான் உங்களை தொந்தரவு பண்ணலை.
டெஸ்ட் ஏதோயிருக்கு. சீக்கிரம் எழுப்பி விடுங்கப்பான்னு சொன்னே. அதையும் மறந்துட்டேன்.
நான் நாலு மணிக்கே எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டேன்.
சரி. நீ போய் படி. நான் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்.
வேண்டாம்ப்பா. நானே காபி கலக்கறேன். நீங்க போய் முகம் கழுவிக்கிட்டு வாங்க. அம்மாவையும் எழுப்புங்க.
சொன்னா கேளு. நீ போய் படி!
நான் படிச்சு முடிச்சுட்டேம்ப்பா!
இருக்கட்டும். இன்னொரு முறை படிச்சதை புரட்டிப்பாரு. ஈஸியா ஞாபகத்துக்கு வரும். காலம் பொன் போன்றது. காபி போடறது, டீ போடறதுக்கெல்லாம் அதை விரயமாக்கக் கூடாது.
போங்கப்பா! எப்பவும் நீங்க இப்படித்தான். இன்னைக்கு ஒரு நாளாவது என் கையால உங்களுக்கு காபி தரணும்னு ஆசைப்பட்டேன். ம்... முடியாமப் போய்ட்டு.
உண்மையான வருத்தம் மேலிட சொன்னாள் மீரா. வாசுதேவன் அன்பாக அவளுடைய தாடையை பற்றினார்.
காபி குடிக்கிறதா பெரிய விஷயம்? அப்பாவோட லட்சியத்தை நிறைவேற்று. அப்பறம் காபி என்ன அப்பாவுக்கு விருந்தே சமைச்சு போடு. சாப்பிடறேன்.
அப்படி இப்படி அடுப்புக்கிட்டே வேலை செய்தாத்தானே சமையல் கத்துக்க முடியும். திடீர்னு விருந்து சமைக்க முடியுமா?
அப்பா சிரித்தார். மண்டு. உங்கம்மா என்னை காபி குடிச்ச டம்ளரைக்கூட கழுவ விட்டதில்லை. அப்படியிருந்த நான்தான் இப்போ அடுப்படியே கதியா கிடக்கிறேன். விதவிதமா சமைக்கிறேன். எல்லாம் அனுபவம்தான்.
வாசுதேவன் இப்படி சொன்னதும் சட்டென்று அவருடைய கையைப் பற்றிக் கொண்ட மீரா நெகிழ்ச்சியான குரலில் பேசினாள்.
அப்பா... இது தேவையா உங்களுக்கு? எல்லா பொறுப்பையும் நான் ஏத்துக்க தயாராயிருந்தேன். ஆனா... நீங்க வேலையை விட்டுட்டு இப்படி வீட்டோட கிடக்கணுமா? காலையில எழுந்து நீங்க வேலைக்குப் போற அழகே தனி. உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா.
மீராவின் கண்கள் கலங்கின.
டேய்... என்னடாயிது? ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இதை சொல்லி கண் கலங்கணும்னு ஏதாவது வேண்டுதலா? போ... போய் வேலையைப் பாரு. இந்த கவிதா கழுதை எழுந்தாளா இல்லையா? எழுந்திரிச்சிருக்க மாட்டாளே. அவளை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு. தூங்கறதுதான் தன்னோட வேலைன்னு நினைப்பு. படிக்கணும்கற எண்ணமே கிடையாது.
நான் எழும் போதே அவளையும் எழுப்பினேம்ப்பா. அவ எழுந்திரிக்காம இழுத்துப் போர்த்திக்கிட்டு அப்படி தூங்கறா.
முதுகுல நாலு கொடுத்து எழுப்பு போ...
அப்பா அதட்டலாக சொல்லவும் மீரா கவிதாவின் அறைக்குள் வந்தாள்.
கவிதா ஒரு குழந்தையைப் போல் கால் கைகளை சுருட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
கலைந்த கூந்தல், விலகிய ஆடை, குழந்தைத்தனமான முகம் - கவிதாவின் அழகை ஒரு கணம் ரசித்தவள் மறுகணம் அவளுடைய தொடையில் தட்டி எழுப்பினாள்.
கவிதா, ஏய் கவிதா... எழுந்திரிடி.
மீராவின் உசுப்பலில் புரண்டு படுத்த கவிதா சிணுங்கினாள்.
மீரா... ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதே. கொஞ்ச நாழி கழிச்சு எழுந்திரிக்கறேன்.
கொஞ்ச நாழியா? மணி ஏழாகப் போகுது.
போ! இன்னைக்கு ஒரு நாள் காலேஜுக்கு லீவு போடப் போறேன்.
என்னது லீவா? அப்பா தோலை உரிச்சுடுவார். அப்பாவைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே. அவருக்கு எல்லா விஷயத்திலேயும் கரெக்டாயிருக்கணும்.
ம்க்கும். ரொம்ப கரெக்ட்டுத்தான். ஆனா இவர் மட்டும் வேலைக்குப் போக மாட்டார். பார்த்துக்கிட்டிருந்த நல்ல வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கார்.
ஏய்... என்ன பேசற நீ? அப்பா காதுல விழுந்தா வருத்தப்படுவார். அம்மாவுக்கு இப்படி ஆனதால்தானே அவர் வேலையைக் கூட விட்டுட்டு வீட்ல இருக்கார். இன்னும் சொல்லப்போனா அம்மாவை கவனிச்சுக்க வேண்டியது நம்ம கடமை. அதைத் தான் ஏத்துக்கிட்டு அப்பா நம்மோட எதிர்காலம் வீணாகக் கூடாதுன்னு நம்மை படிக்க அனுப்பிட்டு அம்மாவை கவனிச்சுக்கறார்.
போர்வையை உதறிவிட்டு எழுந்த கவிதா அதை மடித்தவாறே அலட்சியமாக சொன்னாள்.
ஆமா! எதுக்கு வேலையை விட்டுட்டு அம்மாவை கவனிச்சுக்கணும்? பக்கவாதத்துல ரெண்டு காலும் செயல்படாம போனது நாம நினைச்சு பார்க்காததுதான். அதுக்காக இவர் எதுக்கு வேலையை விடணும்? ஒரு நர்ஸை போட்டா, அவ பார்த்துக்கறா. நல்ல வேலையை விட்டுட்டு யாராவது இப்படி வீடே கதியா கிடப்பாங்களா?
கவிதா! நீ என்ன பேசறே? சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதே. அம்மா காதுல விழுந்தா மனசு வருத்தப்படுவாங்க. வேலையையே விட்டுட்டு அப்பா அம்மாவுக்கு சேவை பண்றார்ன்னா அப்பாவோட மனசுல அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்கும்! ‘படிச்சது போதும் - நான் வீட்டோடயிருக்கேன்’னு சொன்னேன். அதுக்கும் அப்பா ஒத்துக்கலை. தன்னோட வேலையை விட்டுட்டு அம்மாவை கவனிச்சுக்கறார்.
ஆமா! இவர் வேலையை விட்டுட்டு விழுந்து விழுந்து கவனிச்சுக்கறதால அம்மா நாளைக்கே எழுந்து நடக்கப் போறாங்களா?
கவிதாவின் வாயைப் பொத்தினாள் மீரா.
நீ... என்ன பேசறே? அப்பா வேலையை உதறிட்டு அம்மாவே கதின்னு கிடக்கறதுக்குக் காரணமே அம்மா எழுந்து நடப்பாங்கங்கற ஒரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையிலதான் அப்பா எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறார். நீ இப்படியெல்லாம் பேசாதே!
மீரா தங்கையைக் கடிந்து கொண்டது பக்கத்து அறையில் படுக்கையில் இருந்த வசந்தாவின் காதில் விழுந்தது. அவளுடைய கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.
2
வாசுதேவன் வசந்தாவின் அறையினுள் நுழைந்தார். வசந்தாவின் அருகே சென்று அன்புடன் அவளுடைய நெற்றியில் கையைப் பதித்து ‘வசந்தா’ என எழுப்ப முயன்றவர், கண்களில் நீர் கசிய விழித்தபடியிருந்த மனைவியைப் பார்த்து துணுக்குற்றார்.
வசந்தா... என்ன செய்யுது? ஏன் அழறே?
என்றார். வசந்தா கணவரைப் பார்த்ததும் இன்னும் விம்மினாள். அவரின் கையை அன்போடு பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
நீங்க எனக்கு கணவரா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ?
சொல்லிவிட்டு மறுபடியும் விசும்பினாள்.
வசந்தா என்னம்மாயிது? என்னமோ என்னை பெரிய தியாகி மாதிரி நினைக்கறே?
தியாகம் இல்லாம பின்ன என்ன? எனக்காக வேலையை விட்டுட்டு வீட்டோடயிருந்து என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கறீங்களே! மீரா எம்.ஏ. படிச்சது போதும், அம்மாவை பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு பிடிவாதமா அவளை சட்டக் கல்லூரியில சேர்த்திங்க. சின்னவ சொல்ற மாதிரி என்னை கவனிச்சுக்க ஒரு நர்ஸை ஏற்பாடு செய்தா போதாதா? நீங்க இப்படி வீட்டோடயிருக்கணுமா? வேலை பார்க்கறதுதானே ஆணுக்கு அழகு.
பொண்டாட்டியை கவனிச்சுக்கறதுதான் அதைவிட அழகு.
செல்லமாக அவளுடைய கன்னத்தை தட்டினார்.
வசந்தாவுக்கு மனசு சிலிர்த்தது.
ஆனாலும் ஒரு புறம் குற்ற உணர்வு உண்டானது.
எனக்கு குற்ற உணர்வாயிருக்குங்க. என்னாலதானே நீங்க இப்படி இருக்க வேண்டியதாப் போச்சு.
வசந்தாவின் கூந்தலை அன்புடன் வருடினார்.
"வசந்தா! நீ என் மனைவி. என் சுகம், துக்கம் இரண்டிலும் பங்கெடுத்துக்க வந்தவள். உன்னைப் பார்த்து யாரும் அருவெறுப்படையவோ முகம் சுளிக்கவோ கூடாது. அதை என்னால தாங்கிக்க முடியாது. படுக்கையிலேயே உனக்கு எல்லாமும் செய்ய வேண்டியிருக்கு. பணத்துக்காக ஒரு ஆளைப் போட்டா உண்மையான பாசத்தோட எல்லாத்தையும் செய்வாளா? உள்ளன்போட கவனிச்சுக்க என்னை விட்டா