Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Niram Maarum Pookkal
Niram Maarum Pookkal
Niram Maarum Pookkal
Ebook160 pages1 hour

Niram Maarum Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Niram Maarum Pookkal

Read more from R.Sumathi

Related to Niram Maarum Pookkal

Related ebooks

Reviews for Niram Maarum Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Niram Maarum Pookkal - R.Sumathi

    23

    1

    வெயில் அன்றைக்கு அதிகமாக இருப்பதாக தோன்றியது நாராயணனுக்கு. அனல் மீது நடப்பதைப் போலிருந்தது. கால் சுடாதவாறு செருப்புகள், உடலில் கதர் உடை, தலைக்கு பெரிய குடை. வெயிலுக்கு இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தும் பயனில்லை. குடையை மீறி வழுக்கை விழுந்த தலையில் வெயில் ஊசி ஊசியாய் சூட்டை இறக்கி கொதிக்க வைத்தது. வெயிலின் சூட்டை தாங்க முடியாமல் உடம்பு குழந்தையாகி தலை முதல் கண்கள் கொண்டு அழுதது. உடம்பின் எரிச்சலில் வெளியான வியர்வை துளிகளை கதராடை உறிஞ்சிக் கொண்டது.

    நாராயணன் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் சொந்த வீடும், வீட்டிற்கு பின்னால் சிறு தோட்டமும் சென்னையை ஒட்டிய கிராமத்தில் கொஞ்சம் நிலமும் இருந்தன. உடம்பில் தெம்பு இருந்தவரை எப்பொழுதாவது சென்று நிலத்தைப் பார்த்துக் கொள்வார். உடம்பில் தெம்பு குறைந்ததும் அதையும் விட்டு விட்டார். கிராமத்திலிருக்கும் அவருடைய அண்ணன் குடும்பத்தார் அவற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பணமாகவோ, அரிசியாகவோ தந்துவிடுவர். நாராயணனுக்கு ஆண்பிள்ளை இல்லை. இரண்டும் பெண்கள். மூத்த பெண் சரஸ்வதி மும்பையில் கணவனுடன் வசிக்கிறாள். கணவனும் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். சரஸ்வதியை நன்றாகப் படிக்க வைத்த அவரால் குழலியை மட்டும் படிக்க வைக்க முடியவில்லை. குழலி பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய அம்மாவிற்கு கர்ப்பப் பையில் புற்றுநோய் வந்துவிட்டது. அதை ஆபரேஷன் செய்தனர். அவளை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் குழலி வீட்டிலிருக்க நேர்ந்தது. அதனால் அவளுடைய படிப்பு தடைப்பட்டது. குடும்ப பாரம் அவளை அழுத்தத் தொடங்கியதில் படிப்பு பற்றிய எண்ணமே வரவில்லை.

    நாராயணன் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தபால் முறையிலாவது படி என்று. அதையும் அவள் படிக்கவில்லை.

    இப்பொழுது அவளுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு தரகர் சிவசிதம்பரத்திடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். ஒரு வாரத்தில் மாப்பிள்ளையோடு வருகிறேன் என்று அவரும் கூறியிருந்தார்.

    நாராயணன் வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்றரையாகியிருந்தது. வயிற்றின் பசியை வயோதிகம் தாங்கிக் கொள்ளவே சிரமப்பட்டது. கைப்பையைத் திறந்து ஆட்டோ ஓட்டுனர் கேட்ட பணத்தை குறைக்காமல் கொடுத்து விட்டு உள்ளே வந்தார்.

    குழலி... அம்மா குழலி...

    உள்நோக்கி குரல் கொடுத்தவாறே வந்தவர் சோபாவில் அமர்ந்தவாறே துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார். உள்ளிருந்து குரல் கேட்டு குழலி வந்தாள்.

    என்னப்பா... ஏன் இவ்வளவு லேட்டா வர்றீங்க? ஒரு மணிக்கெல்லாம் உங்களுக்கு சாப்பிட்டாகணும். வயசான காலத்துல ஏம்ப்பா இப்படி அலையறீங்க? வெளியில் தலைகாட்ட முடியலை. என்ன வெயில்? கொளுத்துது...

    காற்றாடியின் விசையை தட்டியவாறே அதன் சுழற்சிக்கு இணையாக இவளும் பேசினாள்.

    என்னம்மா பண்றது? பொண்ணை பெத்தவனுக்கெல்லாம் வெயிலும் பனியும் ஒண்ணுதாம்மா... போ... போய் ஜில்லென்று ஒரு டம்ளர் மோர் கொண்டா என்றார்.

    பொண்ணை பெத்தவங்களுக்கெல்லாம் வெயிலும் பனியும் ஒண்ணுதானே. அப்புறம் எதுக்கு வெயிலின் சூட்டை தணிக்க ஜில்லுன்னு மோர் கேட்கறீங்க. சூடா வெந்நீர் கொண்டு வர்றேன் என்று குழலி சிரித்தாள். அப்பாவிற்கும் சிரிப்பு வந்தது.

    சின்ன புள்ளையாட்டம் என்னம்மா வம்பு இது? போ... போய் மோர் கொண்டா என்றார்.

    சில நிமிடங்களில் மோர் தம்ளருடன் வந்த குழலியைப் பார்க்கும் போது எவருக்கும் அந்த மோரினை அருந்திய குளிர்ச்சி உண்டாகும்.

    நாராயணனுக்கு இரண்டு பெண்களுமே அழகை அள்ளி பூசிக்கொண்டு தான் பிறந்தார்கள். அதிலும் குழலி மிகவும் அழகாக பிறந்தாள். பிறக்கும் போதே அவளுக்கு தலை நிறைய கன்னங்கரேலென நிறைய குழல். அதனாலேயே அவளுக்கு குழலி என அவர் பெயர் வைத்தார். கொடி போன்ற அழகான உடல்வாகு. சிரிக்கும்போது நட்சத்திரங்கள் சிரிக்கும் விழிகள். பருவ செழிப்பில் கரிய பெரிய விழிகளும் கன்ன சிவப்பும் அவளுக்கு தனி அழகை தந்தது. குழல் மட்டும் அழகல்ல அவளுக்கு. அவளுடைய குரல் கூட குழல் தான். தேன் கலந்து ஒலிக்கும் குரல். குழலிலிருந்து புறப்பட்ட நாதம் போன்ற இனிமையான குரல்.

    குழலி படிக்கவில்லையே தவிர மற்ற எல்லாவற்றிலும் அவளுக்கு திறமை இருந்தது. வீடு முழுவதும் அழகழகான பூவேலைப்பாடுகள் செய்து வைப்பாள். படிக்காத பெண் என்று அவளை யாரும் சொல்ல முடியாது. வீட்டிலிருக்கும் நேரங்களில் நூல் நிலையத்திலிருந்து கொண்டு வரும் புத்தகங்களை வாசித்து உலக அறிவைப் பெற்றிருந்தாள்.

    கையில் கொண்டு வந்த மோரினை அப்பாவிடம் நீட்டினாள். நாராயணன் அதை வாங்கிப் பருகினார்.

    அருகே வந்த அவர் மனைவி சொர்ணாம்பாள்.

    சிவசிதம்பரத்தைப் பார்த்தீங்களா? ஆவலாய் கேட்டாள்.

    ம்... பார்த்தேன். ஜாதகத்தை கொடுத்தேன். நல்ல இடமா பாருய்யான்னு சொன்னேன். ஒரு வாரத்துலயே மாப்பிள்ளையோட வர்றேன்னார்.

    ஒன்றும் அவசரமில்லை. நிதானமா ஒரு இடத்துக்கு நாலு இடமா பார்த்து விசாரிச்சு நல்ல பையனா பார்க்க சொல்ல வேண்டியது தானே.

    அதெல்லாம் சொல்லாமலா வந்திருப்பேன்?

    அப்புறம் நம்ம கண்டிஷன் சொன்னீங்களா?

    வற்புறுத்தி சொல்லலை. ஜாடை மாடையா சொல்லிட்டு வந்தேன்.

    அவர் அப்படி சொன்னதும் அவளுக்கு முகம் சுருங்கியது.

    வற்புறுத்தி சொல்றதுக்கென்ன? என்றாள்.

    ப்ச்! சொர்ணம், இந்த காலத்துல மாப்பிள்ளை கிடைக்கிறதே ரொம்ப சிரமமாயிருக்கு. எல்லாம் ஒத்து வந்து கல்யாணம் முடியக்காட்டியும் போதும் போதும்னு இருக்கு. அப்படியே முடிஞ்சாலும் நல்லப்படியா வாழணுமேன்னு பயமாயிருக்கு. ஊர் உலகத்துல நடக்கறதை கேள்விப்படும் போது அப்படியெல்லாம் நம்ம பொண்ணுக்கு நடந்திடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. எவன் ஒழுங்காயிருக்கேன்? மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறதுக்குள்ள போதும் போதுமின்னு ஆகுது. ஏதோ... நம்ம மூத்த பொண்ணுக்கு நல்லவனா கிடைச்சான். அதைப் போல இவளுக்கும் கிடைச்சுட்டா போதும்.

    என்னங்க நீங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசிக்கிட்டு போறீங்க?

    அதான் சொன்னேனே. மாப்பிள்ளை கிடைக்கிறதே சிரமம். இதுல வீட்டோட மாப்பிள்ளையா பாருன்னு எப்படி சொல்றது? நமக்கு ஆண்பிள்ளை இல்லேங்கறதுக்காக நம்மோட சுயநலத்துக்காக வீட்டோட மாப்பிள்ளைப் பார்க்க முடியுமா? மாப்பிள்ளை ஒத்துக் கொள்ள வேண்டாமா?

    என்னங்க நீங்க? நான் என்ன குடும்பத்துல உள்ள பையனையா? பார்க்கச் சொல்றேன்? அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்களையெல்லாம் விட்டுட்டு மாமியார் வீட்டோட வந்திடுன்னா சொல்றேன். அம்மா அப்பா இல்லாத பையனா பாருங்கன்னுதானே சொல்றேன். நமக்கும் ஆண் பிள்ளை கிடையாது. மூத்த பொண்ணையும் ரொம்ப தூரத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். இவளையும் வெளியூர்ல கொடுத்தா நாம கடைசி காலத்துல எப்படியிருக்கிறது? இவளையாவது வீட்டோட வச்சுக்கிட்டா நமக்கு ஒரு துணையாயிருக்குமே மனைவியின் ஆதங்கம் அவருக்குப் புரிந்தது. சிரித்தார்.

    உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சொர்ணம். ஆனா... நம்ம பொண்ணு நம்ம பக்கத்திலேயே இருக்கணும்? நமக்கு ஒரு பாதுகாப்பு வேணும்ங்கிறதுக்காக நல்ல குடும்பத்திலேர்ந்து ஒரு நல்ல மாப்பிள்ளை வந்தா தட்டிக் கழிச்சுட முடியுமா. அம்மா அப்பா இல்லே, பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லே மாமியார் வீட்டோட வந்துடுவான்கிறதுக்காக மோசமான ஒருத்தனுக்கு கொடுத்துட முடியுமா?

    நான் என்ன மோசமானவனுக்கா கொடுக்கச் சொன்னேன்?

    நீ சொன்னேன்னு சொன்னேனா? மாப்பிள்ளை நல்லவனாயிருந்தா அவன் குடும்பத்திலிருக்கானோ, தனியா இருக்கானோ எப்படியிருந்தாலும் கொடுத்திட வேண்டியதுதான். நம்மோட சுயநலத்துக்காக அவளோட வாழ்க்கையை அமைக்கலாமா?

    அப்ப நாம கடைசி காலத்தில தனியாத்தான் வாழணுமா?

    நீ தைரியமா இரு. தைரியம்தான் வாழ்க்கை. ஆண்பிள்ளை இல்லாதவங்களுக்கு தைரியம் தான் தேவை.

    மனசுல தைரியம் இருந்தாலும் உடம்புல இல்லையே. ம்... ஒரு ஆண் பிள்ளையைப் பெத்திருந்தா இந்தப் பேச்சுக்கே இடம் இல்லை. இறுதியில் பிறக்காத ஆண் பிள்ளைக்காக மூக்கை சிந்தினாள் சொர்ணாம்பாள்.

    அவர் சிரித்தார்.

    அடிபோடி பைத்தியக்காரி. ஊர் உலகத்துல எத்தனை பேர் பெத்தவங்களுக்கு சோறு போடறான்? ஒருத்தன் ரெண்டு பேர்தான்.

    ம்... எல்லாத்துக்கும் ஒரு காரணமும் விளக்கமும் சொல்லிடுங்க.

    சரி... சரி நடக்கிறது நடக்கும். போய் வேலையைப் பாரு. அம்மா குழலி...

    இதுவரை சுவரோரம் சாய்ந்து அவர்களுடைய உரையாடலை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்த குழலி வந்தாள்.

    அப்பா.

    என்னம்மா...

    அப்பா... கல்யாணம் மெதுவா நாள் கழிச்சு பண்ணினாலும் பரவாயில்லை. அம்மா சொல்றமாதிரி இந்த வீட்டோட இருக்கிற மாதிரியே மாப்பிள்ளையைப் பாருங்கப்பா...

    அப்பா நிமிர்ந்தார் சட்டென.

    "ஆமாம்பா! உங்க ரெண்டு பேருக்கும் கடைசி வரை இப்படி இணையா உட்கார வச்சு நான் சாப்பாடு போடணும். என்னால உங்களை விட்டுட்டுப் போக முடியாது. என் கூடவே இருக்கணும். நீங்க. அதனால அம்மா சொல்ற மாதிரி வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க. அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1