Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aboorva Ragam
Aboorva Ragam
Aboorva Ragam
Ebook117 pages40 minutes

Aboorva Ragam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126003884
Aboorva Ragam

Read more from Rajashyamala

Related to Aboorva Ragam

Related ebooks

Reviews for Aboorva Ragam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aboorva Ragam - Rajashyamala

    http://www.pustaka.co.in

    அபூர்வ ராகம்

    Aboorva Ragam

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டாள் ப்ரியா. ஒருமுறை தன் கையில் இருந்த ஃபைலைப் புரட்டிப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று சரி பார்த்து திருப்தி அடைந்தது போல் ஃபைலை மூடினாள். கண்களை, சுற்றிலும் சுழல விட்டாள். கண்களில் நேர்முகத் தேர்வைப் பற்றிய பயத்தையும் மீறி ஒரு மிரட்சி இருந்தது. மனதில் குபீர் குபீர் என்ற பயம் பந்தாய் எழுந்து அடங்கியது.

    ஃபைலை நாற்காலியில் வைத்துவிட்டு காரிடரின் ஓரத்தில் இருந்த சில் தண்ணீரைப் பிடித்துக் குடித்தாள். தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் மனதையும் குளிர்வித்தது. மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

    இன்டர்வியூவிற்கு வந்தவர்களில் பலர் தேர்வு முடிந்து கலைந்து போயிருந்தார்கள். அவளையும் சேர்த்து ஓரிருவர்தான் பாக்கி.

    காரிடரின் சிவப்புக் கம்பள விரிப்பும், செயற்கை கூரைகளும், செடிகளுமே கம்பெனியின் பொருளாதாரச் செழுமையைக் காட்டின.

    தனக்கு இங்கே வேலை கிடைக்குமா? கிடைக்காவிட்டால்...? மீண்டும் போய் அண்ணன், அண்ணி, காலில் விழ வேண்டும்.

    திரும்ப எங்க கழுத்தறுக்க வந்துட்டியா? என்பார் அண்ணன் அண்ணி சுமத்தும் வேலை பளு கூடும்.

    தண்டச் சோறா முழுங்கிட்டு தூங்கறதுக்குப் பதிலா, இதையாவது ஒழுங்காச் செய் என்ற சொல் அம்பு தாக்கத் தயங்காது.

    ஒரு வேலை கிடைத்துத் தனியாய்ச் சுலபமாய்க் காலில் நிற்கும் வரை இதையெல்லாம் தாங்கித்தான் ஆக வேண்டும். பெற்றோரா இருக்கிறார்கள் மகளைக் பற்றிக் கவலைப்பட? மதுரையில் பிறந்த ஒரே மகள் என்பதால் சீராட்டிப் பாராட்டித் தான் வளர்த்தார்கள். என்ன செய்வது? விதி! அவள் கல்லூரியின் முதல் வருடத்தில் கால் வைத்த நேரம். ஒரு கல்யாணத்திற்குப் போன பெற்றோர், ரயில் விபத்தில் இறந்து போனார்கள். ஒரே மகள் ப்ரியா நிற்கதியாய் நின்றாள்.

    ப்ரியா பெயரில் அவள் பெற்றோர் போட்டிருந்த பணம் உறவினரை ஈர்த்தது. ஆனால், ப்ரியா பாரமாய்த் தெரிந்தாள்.

    ப்ரியா படிக்கறது மதுரையில். நாங்க இருக்கறது பெங்களூர்ல. எப்படிக் கூட்டிப் போக முடியும்? யுனிவர்சிடி மாறுமே! மாமா கழண்டு கொண்டார்.

    பெரியப்பா மகன் ரங்கன் மேல் பாரம் விழுந்தது. ரங்கா நீதான் மதுரையிலேயே இருக்கே. அவளை உன்கூட வச்சுக்கோ. ரெண்டு வருஷத்துல படிப்பை முடிச்சுடுவா. அப்புறமா, எல்லாருமாச் சேர்ந்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடுவோம்.

    ரங்கனின் மனைவி கல்யாணி உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள். என்னங்க... இங்க கொஞ்சம் வாங்களேன்.

    சித்தப்பா தான் பட்டென்று பதில் கொடுத்தார். இங்க பாரும்மா கல்யாணி, உம் புருஷனை உள்ளே கூப்பிட்டுக் கடிக்க வேண்டாம். ப்ரியா உனக்கு பாரமா இருக்க மாட்டா. அவங்கப்பா அவ பேர்ல பணம் போட்டு வச்சிருக்கார். அவ கல்யாணம்னு வரும்போது, அவ பேர்ல இருக்கற பணமும், அவ அம்மா நகையுமே போதும். அவங்க வீட்டை வாடகைக்கு விட்டா, பணம் வரும். அதுல அவ படிப்புக்கும், நீங்க தங்க இடம் கொடுத்து சோறு போடறதுக்கும், எடுத்துக்கோங்க... அரண்மனை மாதிரி பெரிய வீடு, மாடியும் கீழுமா குறைஞ்சது அஞ்சாயிரம் வாடகை வராது...? ரெண்டு வருஷம் அவ உங்க வீட்ல பேயிங் கெஸ்டா தங்கப் போறா. இப்ப சரியா?

    நடுக்கூடத்தில் பெரிசுகளெல்லாம் கூடிப் பேசி முடிவெடுக்கும்போது, அவளால் என்ன பதில் சொல்ல முடியும்? ஆனாலும், மாதா மாதம் பணம் வரும் என்ற உண்மை இனித்தது. அரைமனதாய் ஒப்புக் கொண்டாள். பணத்திற்காக ஒப்புக் கொண்டு விட்டாளே தவிர, எப்போதும் ஒரு ஜீவன் கூடவே வீட்டில் இருப்பது கல்யாணிக்குக் கஷ்டமாக இருந்தது. பூவிலிருந்து எல்லாவற்றையும் பங்கு போட வேண்டி இருந்தது.

    பக்கத்து வீட்டம்மாவோட சினிமாவுக்குப் போறேன் என்றால் போதும், கணவன் கரிசனமாய், ப்ரியாவையும் அழைச்சுட்டுப் போயேன். அப்பம்மாவைப் பறிகொடுத்துட்டு சோகமா முடங்கிக் கிடக்காளே என்பான். எரிச்சல் பற்றிக் கொண்டு வரும்.

    அதுவும் கணவனோடு கடைக்கோ சினிமாவுக்கோ போனால் நிச்சயம் ப்ரியாவை அழைத்துப் போக மாட்டாள் கல்யாணி.

    புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல இவ எதுக்கு?

    ஏன் கல்யாணி, அவ எனக்குத் தங்கை முறை

    அட அதுக்குச் சொல்லலீங்க. எனக்கு என் புருஷனோட வெளிய வாசல்ல போகணும்னு இருக்காதா? நமக்கும் கல்யாணமாகி, என்ன ஒரு அஞ்சு வருஷம்தானே ஆச்சு. நாளைக்கே பிள்ளை குட்டினு ஆச்சுனா, இப்படி இருக்க முடியுமா?

    ப்ரியா என்ன, ஒன்றும் புரியாத குழந்தையா? தன்னை அடக்கி கூட்டுக்குள் ஒடுங்கும் பறவையாய் இருக்கப் பழகி விட்டாள். கல்லூரி படிப்பு போக மீதி நேரம் மங்கு மங்கென்று அண்ணிக்கு உதவுவாள். அப்படியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் குறைவில்லை. கல்யாணியின் எரிச்சல்கள் ரங்கனையும் தொற்றிக் கொள்ளும். அவனுமே சமயங்களில் அவளிடம் கத்துவான். அம்மா வீட்டில் படிப்பும் பாட்டுமாய் செல்ல இளவரசியாய் சுதந்திரப் பறவையாய் சுற்றித் திரிந்தவள், இந்த இரண்டு வருடங்களில் தன் கஷ்டங்களை எல்லாம் விழுங்கக் கற்றிருந்தாள்.

    ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம்... நினைத்தாலே குலை நடுங்கியது. சாதாரணமாய் விழுங்கக் கூடிய விஷயமா அது? அரண்டு, நடுங்கி, அவள் வியர்வையில் குளித்த போதுதான் அவளை அழைத்துக் கொண்டிருக்கும் ப்யூனின் குரல் அவள் மூளையை எட்டியது.

    என்னம்மா, வேலை கிடைக்கறதுக்கு முன்னாடியே உட்கார்ந்துகிட்டு தூங்கறியா? சரிதாம்போ... ப்ரியாதானே உம் பேரு? இன்டர்வியூக்கு எழுந்து போம்மா

    அவள் பயத்தோடு உள்ளே போனாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1