Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyire... Uyire...
Uyire... Uyire...
Uyire... Uyire...
Ebook78 pages35 minutes

Uyire... Uyire...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126003860
Uyire... Uyire...

Read more from Rajashyamala

Related to Uyire... Uyire...

Related ebooks

Reviews for Uyire... Uyire...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyire... Uyire... - Rajashyamala

    http://www.pustaka.co.in

    உயிரே... உயிரே...

    Uyire… Uyire…

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    காசி நகர் பொன்வண்ணமாய் மின்னியது. அந்த மாலை நேரத்தில் தங்கத் தகடாய் சலசலத்து ஓடினாள் கங்கை.

    கரையோரம்... புனையா ஓவியமாய் நடை பயின்றாள் காசி இளவரசி அம்பா. காத்திருந்தாள் - காதலன் சால்வன் வரவிற்காகக் காத்திருந்தாள். காதல் நோய் கொடியது. அதனினும் கொடியது காத்திருப்பது.

    'கண்ணாளா, சீக்கிரம் வாருங்களேன்'

    மாதுளை இதழ்கள் துடித்தன. கண்கள் அலை பாய்ந்தன.

    அவள் தவிப்பை ரசித்தபடி புலியாய் நடந்து வந்தான் சால்வன். பூனையாய்ப் பதுங்கி அவள் தோள் தழுவினான்.

    ம், என்ன இது விடுங்கள். தென்றல் புகச் சற்று இடம் கொடுங்களேன்

    என்னைத் தவிர அந்தத் தென்றல்கூட உன்னை தழுவக் கூடாது, அம்பா."

    ஓ அப்படியா? நாளை சுயம்வரம். பாரதத்தின் அத்தனை இளவரசர்களும் போட்டிபோடப் போகிறார்களே. என்ன செய்வீர்களாம்?

    சிங்கத்தின் கர்ஜிப்பாய் நகைத்தான்.

    உன் சகோதரிகள் அம்பிகாவும், அம்பாலிகாவும் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். உன்னை வெல்லப் போவது நான்தான் பெண்ணே. குறித்துக்கொள்.

    தந்தச் சிலையாய் நின்ற அவள் மீது சூரியக் கதிர்கள் பொன் அள்ளி வீச தகதகத்த அவள் முகத்தில் கண்கள் மேலும் மின்னின.

    அது நெகிழ்ந்த குரலில் கிசுகிசுத்தாள், காத்திருப்பேன் மன்னவா.

    அரவிந்தனின் அலுவலகத்துக்கு அன்றுதான் முதல் முறையாய் வருகிறாள் ப்ரீதி. ரிசப்ஷனில் அவனுக்குச் சொல்லிவிட்டு காத்திருந்தாள். கல்லூரியிலிருந்து வருவதால் கையில் புத்தகக் கட்டும் டிபன் டப்பாவும் - அந்தச் சூழலுக்குப் பொருந்தாமல் இருந்தது. சற்றே மறைத்தாற்போல் வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

    அவசரமாக வந்தான் அரவிந்தன்.

    ஹாய், என்ன விஷயம்? என்று பரபரத்தான்.

    சும்மாத்தான்

    என்ன சும்மாத்தான்! சும்மா பேச என் ஆபீசுக்கு வந்தியா?

    அவன் படபடப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. கல்லூரியில் அன்று கடைசி ஹவர் லெக்சரர் வரவில்லை. அதனால், அவன் அலுவலகத்திற்கே வந்து அசத்த நினைத்தாள். அவனோ ஏன் வந்தாய் என்பது போல் அதட்டுகிறான். தனக்காக வந்து மணிக்கணக்காய் பொறுமையாய் காத்திருக்கும் தன் அர்வியா, இது?

    என்ன அர்வி, இது? உங்களைப் பார்க்க ஆசையா வந்தா இப்படிக் கத்தறீங்களே. அவள் முகவாட்டத்தில் பதறிப் போனான் அவன்.

    ப்சூ, அதில்லடா. ரொம்ப பிஸியா இருக்கேன். இப்பப் போயி வந்திருக்கியே. நானே உன்னை எப்படி மீட் பண்ணிச் சொல்லப் போறேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.

    எதுக்கு, அர்வி?

    இன்னைக்கு நான் ஜி. எம்மோட டெல்லி போறேன். நார்த் இண்டியா டூர். வர 15 நாளாகும்.

    மைகாட், 15 நாளா?

    எஸ்.

    இதைத் தவிக்க முடியாதாமா?

    முடியும். ஆனா, நீ அப்படியே வீட்டுக்குப் போயிருப்பானு சொல்லிடுவாங்க. அப்புறம் இந்த தேவதையை நான் எப்படி வந்து பெண் கேட்பேன்? வேலை இல்லாதவனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன்னு உங்கப்பா என்னைத் துரத்திட்டா?

    போங்க அர்வி, எப்பவும் உங்களுக்கு விளையாட்டுத்தான். சரி. சீரியஸா சொல்றேன். எங்கப்பா என் ஜாதகத்தை எடுத்துட்டாரு. நீங்க சீக்கிரமா வந்து பொண்ணு கேளுங்க.

    சரிம்மா, தேவதையே. இந்த டூரிலிருந்து திரும்பிய உடனே முதல்வேளை அதுதான் போதுமா?

    ம்

    சரி, இப்ப நீ கிளம்பு.

    என்னை துரத்தறதுலேயே இருங்க. போலியாய்ச் சீறி

    Enjoying the preview?
    Page 1 of 1