Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Vanthu Ennai Sudum!
Thendral Vanthu Ennai Sudum!
Thendral Vanthu Ennai Sudum!
Ebook98 pages1 hour

Thendral Vanthu Ennai Sudum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலை தடுமாறும் சில ஆண்களின் நடவடிக்கையால் பெண்கள் அதிகம் பாதிக்கபடுகின்றனர். அதானால், அப்பெண் எடுக்கும் முடிவு அவளை மட்டுமல்ல அவளின் எதிர்காலம் மற்றும் அவளை சார்ந்தோரையும் அழிக்கின்றது. இதைப் போல், இக்கதையில் வரும் கதாநாயகி சிவரஞ்சனியின் கருணை உள்ளத்தாலும், வயதுக்கு மீறிய சிந்தனையாலும் அவளுக்கு ஏற்படும் விளைவுகளும் அதிலிருந்து அவள் மீள முயலும் செயல்களும் தூண்டில் மாட்டிக்கொண்ட மீன் போலவே காட்சியளிக்கின்றன.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140606448
Thendral Vanthu Ennai Sudum!

Read more from R. Manimala

Related to Thendral Vanthu Ennai Sudum!

Related ebooks

Reviews for Thendral Vanthu Ennai Sudum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Vanthu Ennai Sudum! - R. Manimala

    https://www.pustaka.co.in

    தென்றல் வந்து என்னைச் சுடும்!

    Thendral Vanthu Ennai Sudum!

    Author:

    ஆர்.மணிமாலா

    R.Manimala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    பனி இன்னும் முழுதாய் விடைபெறவில்லை. காற்றில் குளிர் மிச்சமிருந்தது - என்றாலும் சிவரஞ்சனியின் முகத்தில் பனித்துளிகளாய் வியர்வை ஒட்டியிருந்தது.

    எழுபத்தெட்டு... எழுபத்தொன்பது... எண்பது... - மூச்சு வாங்க எண்ணிக்கொண்டே ஸ்கிப்பிங் பண்ணிக் கொண்டிருந்தாள்.

    அவள் எகிறி எகிறிக் குதிக்கும் அழகை எந்த இளைஞனாவது பார்த்தால்... சீக்கிரமாகவே பிரஷர் வந்து செத்துப் போய்விடுவான்.

    அப்படியொரு இளம் சிட்டுதான் சிவரஞ்சனி!

    பதினேழு வயது செழுமையை உடல் முழுக்க வஞ்சனையின்றி அப்பியிருந்தான் பிரம்மன். உடைத்த கோதுமை நிறம். இடுப்புவரை அடர்ந்திருந்த தலைமுடி. எந்த ஹேர் ஸ்டைலுக்கும் பணிந்து விடும் நேர்த்தி! ஒப்பனை அவசியமில்லாத, பியூட்டி பார்லரின் உதவி தேவைப்படாத இயற்கை அழகு! முகத்தில் இன்னமும் பால் மணம் மிச்சமிருந்தது.

    அந்த இன்னசன்ட்டான முகம்தான் அவளுக்கு ப்ளஸ் பாய்ண்ட்! சிறு சப்தத்திற்கும் அரண்டு விரியும் விழிகள் - அதைவிட ப்ளஸ் பாய்ண்ட்!

    அளவான சதைப் பிடிப்போடு, அம்சமாய் இருக்கும் சிவரஞ்சனியின் அழகில் பொறாமை கொண்ட க்ளாஸ்மேட் ஒருத்தி, 'இடுப்பில் சதை விழுந்து அசிங்கமாகிவிட்டது. இதே ரேஞ்சுக்குப் போனால் இன்னும் ஐந்தே வருடத்தில் ஏழெட்டு குழந்தைகளைப் பெற்றவள்போல் ஆகிவிடுவாய்' என்று பயமுறுத்த... கடந்த ஒரு வாரமாய் இந்தக் குதியாட்டம் தொடர்கிறது. ப்ளஸ் டூ படிக்கும் சிவரஞ்சனி, படிப்பிலும் சோடை போகவில்லை. ஆண்டவன் அவளுக்கு அழகை மட்டுமல்ல, அறிவையும் வாரி வழங்கியிருந்தான்.

    அது... மொட்டை மாடி! இடது பக்கம் முழுக்க பூச்செடிகளால் அந்த இடத்தையே நந்தவனமாய் மாற்றிய பெருமை சிவரஞ்சனியையே சாரும். கலர் கலராய் பல வகை ரோஜாச்செடிகளும், செம்பருத்திச் செடிகளும் கண்களுக்குப் பரவசத்தைத் தந்தது.

    இரைதேடி வானத்தில் பறந்து சென்ற பறவைகளின் கீச்கீச் குரல் கவனத்தைக் கவர்ந்தாலும், வேடிக்கை பார்த்தாளேயொழிய, எண்ணுவதில் கவனமாய் இருந்தபடியே குதித்தாள். இருநூறு வரை ஸ்கிப்பிங் பண்ண வேண்டும் என்கிற குறிக்கோள் அழுத்தமாய் மனதில் பதிந்திருந்தது.

    கறுப்பு நிறத்தில் முழங்கால் வரை மிடியும், அதே நிறத்தில் டாப்ஸும் அணிந்திருந்தாள்.

    தன்னைச் சுற்றி யாருமில்லை. தான் மட்டுமே அந்த இடத்தின் மகாராணி என்ற எண்ணம் அவளுக்கு! ஆனால், அவளின் துள்ளலான இந்த அழகை விழிகள் பிதுங்க ரசித்துக் கொண்டிருந்தான் எதிர் வீட்டுப் பையன்! சிவரஞ்சனியைவிட இரண்டு வயது பெரியவன். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவன். வேற்று மதத்துக்காரன். அதனாலேயே சிவரஞ்சனியைக் காதலிக்கலாமா, வேண்டாமா? வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்ற கவலைகளோடு காலத்தைக் கரைத்துக் கொண்டிருப்பவன்.

    குமரன் மாடிப்படியேறி வந்து கொண்டிருந்தான். காலையில் எழுந்த உடன் அவனுக்கு சிகரெட்டை முத்தமிட்டாக வேண்டும். பெட் காபி மாதிரி! அம்மா எதிரில் ஸ்மோக் பண்ணமாட்டான். மரியாதை! அதனால் தனியே வந்து விடுவான். இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து விட்டதால்... மொட்டை மாடியில் சிவரஞ்சனி ஸ்கிப்பிங் ஆடுவதைப் பார்த்து விட்டான். அவளை மட்டும் பார்த்திருந்தால்கூட பிரச்சினையில்லை.

    திருட்டுத்தனமாய் சுவரோரம் மறைந்திருந்து நோட்டம் விட்ட எதிர்வீட்டுப் பையனையும் பார்த்து விட்டதுதான் அவன் கண்களைச் சிவக்க வைத்தது.

    ஏய்... ரஞ்சனி… என்று அடிக்குரலில் அதட்டினான்.

    திடுக்கிட்டுத் திரும்பிய ரஞ்சனி, அண்ணனின் கோபமான குரலுக்குக் காரணம் தெரியாமல் குழப்பமாய் பார்த்தாள்.

    என்ன பண்ணிட்டிருக்கே?

    ஸ்கிப்பிங்ண்ணா...

    அது தெரியுது! படிக்கிற நேரத்திலே படிக்காம எதுக்கு இந்த ஆட்டம்... புதுசா? - கண்களை இடுக்கி சந்தேகமாய் தங்கையைப் பார்த்தான்.

    வந்து... அது வந்துண்ணா... காலைலே ஸ்கிப்பிங் பண்ணினா, உடம்புக்கு நல்லதுன்னு எங்க PT டீச்சர் சொன்னாங்க...

    அதையெல்லாம் ஸ்கூலோட வச்சுக்க... வயசுப் பொண்ணா , லட்சணமா, அடக்கமா இரு! இனி, இந்த மாதிரி குதிச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்னு வச்சுக்க... குதிக்க கால் இருக்காது... புரியுதா?

    புரியுதுண்ணா... என்று பயத்தோடு புரியாமலே தலையை ஆட்டினாள்.

    என்ன பண்ணிட்டேன்னு இந்த அண்ணன் இந்த கத்து கத்துறார்? சே... எதை பண்ணாலும் இவருக்குத் தப்பாதான் தெரியும்! என்னைப் பார்த்தாலே இவருக்குப் பிடிக்கலே! அம்மா உயிரோட இருந்திருந்தா... நான் இந்த மாதிரி திட்டு வாங்கற அவசியமே இருந்திருக்காது... - சிவரஞ்சனி இறந்து போன அம்மாவை நினைத்துக் கண் கலங்கினாள்.

    ***

    கமலா கிச்சனில் இருந்தபடி, "ரஞ்சனி... ரஞ்சனி...' என்று குரல் கொடுத்தாள்.

    என்ன பெரியம்மா...? இதோ வந்திட்டேயிருக்கேன்! - யூனிஃபார்மை மாட்டிக்கொண்டிருந்தவள், அவசர அவசரமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1