Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Maanvizhiye
Anbulla Maanvizhiye
Anbulla Maanvizhiye
Ebook146 pages1 hour

Anbulla Maanvizhiye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Anbulla Maanvizhiye

Read more from V.Usha

Related to Anbulla Maanvizhiye

Related ebooks

Reviews for Anbulla Maanvizhiye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Maanvizhiye - V.Usha

    20

    1

    கடைசியாக இருந்த அந்த ஐம்பதாயிரத்திற்கான பணமாற்று வவுச்சரையும் கணினியில் ஏற்றிவிட்டு ‘எக்ஸிட்’ செய்தபோது சுகுமார் மணி பார்த்தான்.

    நாலரை!

    ‘அட’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

    வேலை இவ்வளவு சீக்கிரமாகவா முடிந்துவிட்டது? இத்தனைக்கும் மாதத்தின் முதல் வாரம் இது. பணப்புழக்கம் என்பது எல்லா தட்டு மக்களுக்கும் சுலபமாக இருக்கிற நாட்கள். தனியார் வங்கி என்று சொன்னால் நம்பவே முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கும். அப்படிப்பட்ட வேலைப்பளு காலத்தில் அவன் எளிதாக தன் கடமையை ஆற்றிவிட்டான்.

    இதற்கு மூலகாரணம் என்ன என்று சிறிய கேள்வி எழும்போதே அதற்கான பதிலைத் தேடி விழிகள் வலதுபக்க ஜன்னலோரம் நகர்ந்தன.

    ராகினி!

    வழக்கம்போல அவள் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தாள். ‘புன்னகையா, அப்படியானால் என்ன?’ என்று கேட்கிற அழுத்தமான உதடுகள். இயந்திரம் போல கணினியை இயக்கிக் கொண்டிருந்த விரல்கள். வெளிர் பச்சை நிறத்தில் காட்டன் சேலை. அதற்கு பொருத்தமான அதே நிற ரவிக்கை.

    ஒரே ஒரு சிறு புன்னகையை மட்டும் அவள் விழிகளோ இதழ்களோ வெளிப்படுத்தினால் போதும். அந்த இடமே விளக்கேற்றியது போலாகிவிடும். பாவை விளக்கு போல கல்லாக இருக்கும் அந்த இளம் மங்கையின் மனதிலே என்ன இருக்கிறது?

    சுகுமார் சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டான்.

    வேண்டாம்.

    இது தேவையற்ற சிந்தனை. கொஞ்சம்கூட அவன் வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத வேலை இது. மனிதனின் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம் அவன் செய்ய வேண்டியதைச் செய்யாததால் அல்ல, செய்ய வேண்டாததைச் செய்வதுதான்.

    சட்டென்று ரோஜாவின் முகம் கண்களுக்குள் தோன்றியது.

    குழந்தையின் நினைவு வந்ததும் அவன் உடல் தானாக எழுந்தது. உறையை எடுத்து கணினியை மூடிவிட்டு அவன் காலணிகளை சரியாக்கிக் கொண்டு நகர்ந்தான்.

    கிளம்பியாச்சா சுகுமார்? என்ற குரல் கேட்டு நிமிர்கையில் முரளி நின்றிருந்தான்.

    ஆமாம் முரளி... வேலை இன்னிக்கு கச்சிதமா முடிஞ்சது... நெட்ஒர்க் பிரச்னையும் இல்லே... எவ்ரிதிங் வென்ட் குட்... என்று புன்னகைத்தான் அவன்.

    ஆமாம்... ஒர்க் லோட் என்னவோ அதிகம்தான் இன்னிக்கு... பட் நேரத்துக்கு முடிக்க முடிஞ்சது... நீ திறமைசாலிதான் சுகுமார்... ரூரல் கிளைல இருந்து இந்த மெயின் பிராஞ்சுக்கு வந்து ரொம்ப விரைவா வேலை கத்துகிட்டே... ஆச்சரியம்தான்...

    நன்றியுடன் அவன் விழிகள் ஜன்னலோர இருக்கைக்கு சென்று மீண்டன.

    ராகினி மேடம்தான் காரணம் முரளி... குழந்தைக்கு சொல்லித் தர்ற மாதிரி பொறுமையா டீச் பண்ணினாங்க... அவங்கதான் முழுப் பொறுப்பு இதுக்கு... கற்றுக் கொடுக்கறது ஒரு கலை... அதுல அவங்க ஜீனியஸ்... என்றபோது அவன் குரல் சற்று நெகிழ்ந்திருந்தது.

    அதெல்லாம் நல்லாதான் சொல்லித் தருவாங்க... மத்தபடி... முரளி இழுத்தவன், சட்டென்று நிறுத்திவிட்டு டேபிளை சுற்றிக் கொண்டு பக்கத்தில் வந்தான்.

    எனக்கு... ஐ மீன்... என்கூட வருவியா சுகுமார்? என்றான் நிதானமாக.

    எங்கே?

    ஃபிரண்ட் ஒருத்தன் வீட்டுக்கு... ரமேஷ் யாதவ்னு பேரு, என் காலேஜ்மேட்... இப்ப மிலிடிரி ஆபிசரா இருக்கான்... லிக்கர் கொண்டு வந்திருக்கான், கூப்பிட்டான்... வரியா? சுத்தமான சரக்கு...

    சுகுமார் புன்னகையுடன் பார்த்தபடி சொன்னான்.

    உன் அழைப்புக்கு நன்றி முரளி... ஆனா என்னால வர முடியாது... எனக்கு லிக்கர் பழக்கம் இல்லே... லிக்கர்னு இல்லே, சிகரெட், பான், புகையிலைன்னு எந்த பழக்கமும் இல்லே... ஸாரி...

    வெக்கப்படாதே சுகுமார்... இனிமே மெட்ராஸ்தான், இந்த ஆபீஸ்தான்னு ஆகிப்போச்சு... மெல்ல மெல்ல பழகிக்க வேண்டியதுதானே? கம்மான்... கம் வித் மீ...

    ஸாரி முரளி... நீ போயிட்டு வா... எனக்கு சில ஸ்ட்ராங் கன்விக்ஷன்ஸ் உண்டு... அதுல முக்கியமானது இந்த மதுவிலக்கு... ரோஜாவை இன்னிக்கு வெளில அழைச்சுட்டுப் போகணும் முரளி... வரட்டுமா?

    ம்... பாவம்பா நீ... சொந்தமா ஊர் இல்லே, வீடு இல்லே, பொண்டாட்டி இல்லே... சாமி உன்னை கடுமையா தண்டிச்சிருக்கு... அப்பவும் கொள்கை, தத்துவம்னு சொல்லிட்டிருக்கே... சரி கிளம்பு... கொடுத்து வெச்சதுதானே கெடைக்கும்?

    சுகுமார் சிரித்தபடியே கிளம்பினான்.

    அவன் அனுமதியின்றியே பார்வை ஜன்னலோரம் சென்றது. கம்பிகளைத் தாண்டி திடீரென்று கறுப்பு மேகங்கள் அடர்த்தியாகத் தெரிந்தன. காற்றிலும் அப்போதுதான் சேர்ந்திருந்த குளிர்த்தன்மையை கவனித்தான்.

    ஓ, மழை தன் முன்னறிவிப்புகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் வேகமாக காலியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

    ராகினி இன்னும் தீவிரமாக வேலை பார்த்தபடி இருந்தாள். தன்னைச் சுற்றிலும் இயங்கிக் கொண்டிருந்த உலகத்தைப் பொருட்படுத்தாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

    ஒரு நிமிஷம் மேடம்... என்றான் அவன் வேகமாக அவளருகில் போய்.

    ஒரு கணம் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவனைக் கண்டதும் ஒரு மெல்லிய சலனத்தை தன் இமை படபடப்பின் மூலம் காட்டினாள். உடனே பழையபடி தன் இறுக்கத்திற்குப் போய்விட்டாள்.

    மழை கொட்டப் போகுது மேடம்... ஆபிஸே காலியாகிட்டிருக்கு... கவனிச்சீங்களா? என்றான் இயல்பாக.

    ஓ, அப்படியா? என்றாள். திரும்பி ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.

    கிளம்புங்களேன் ராகினி மேடம் என்றான் அவனும் வெளியே பார்த்துவிட்டு, இது வெறும் பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரி இல்லே... ஆரம்பிச்சுதானா அரை மணி, ஒரு மணின்னு கொட்டி தீர்க்கப் போகுது... மாட்டிக்காம கௌம்புங்க.

    இல்லே சார், இந்த வேலை இப்ப பாதில இருக்கு... முடிச்சுட்டு கௌம்பறேன்... யூ கேரி ஆன்... அவள் நிதானமாகச் சொன்னாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1