Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Vellai Kaadhalan
Karuppu Vellai Kaadhalan
Karuppu Vellai Kaadhalan
Ebook106 pages47 minutes

Karuppu Vellai Kaadhalan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூரி...மது...ஜெயந்தி..என்ற மூவரின் முக்கோண காதல் கதை. தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநல வாதி மது. சூரிக்காக எதையும் விட்டுத்தரும் ஜெயந்தி. சுயநலம் வென்றதா? தியாகம் வென்றதா? வித்தியாசமான போராட்ட காதல் கதை.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580137406780
Karuppu Vellai Kaadhalan

Read more from Shruthi Prakash

Related to Karuppu Vellai Kaadhalan

Related ebooks

Reviews for Karuppu Vellai Kaadhalan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Vellai Kaadhalan - Shruthi Prakash

    https://www.pustaka.co.in

    கறுப்பு.. வெள்ளை காதலன்

    Karuppu.. Vellai Kaadhalan

    Author:

    ஸ்ருதி பிரகாஷ்

    Shuruthi Prakash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்.1

    அத்தியாயம்.2

    அத்தியாயம்.3

    அத்தியாயம்.4

    அத்தியாயம்.5

    அத்தியாயம்.6

    அத்தியாயம்.7

    அத்தியாயம்.8

    அத்தியாயம்.9

    அத்தியாயம்.10

    அத்தியாயம்.11

    அத்தியாயம்.12

    அத்தியாயம்.13

    அத்தியாயம்.14

    அத்தியாயம்.15

    அத்தியாயம்.16

    அத்தியாயம்.17

    அத்தியாயம்.18

    அத்தியாயம்.19

    அத்தியாயம்.20

    அத்தியாயம்.1

    மதுமிதா அலறிய சத்தம் கேட்டு அண்ணி வசந்தா ஓடி வந்தாள். பாத்ரூமில் மதுமிதா விழுந்து கிடந்தாள் .வசந்தா அலறி விட்டாள்.

    என்னங்க! நம்ம மது மயக்கமா இருக்கா. சீக்கிரம் வாங்களேன்!

    ரமணி ஓடி வந்தான். பார்த்தான். கெய்ஸர் அருகில் ஒரு புகை போல தெரிந்தது. மெல்ல ஸ்விட்சில் கை வைக்க படக்கென ஒரு தூக்கு தூக்கியது.

    ஷாக் வருது. எதையும் தொடாதே வசந்தா. முதல்ல அவளைப்பிடி.கொண்டு போய் கட்டில்ல கிடத்தலாம். மெயினை நான் ஆஃப் பண்ணிட்டு வர்றேன்

    மதுவை கட்டிலில் கிடத்தி, முதலுதவி செய்ய, மது மெல்ல கண் விழித்தாள்.

    என்னடீ மது? சரியா இருக்கியா? ஒண்ணும் பிராப்ளம் இல்லையே? என் உயிரே போயிடுச்சு!

    வசந்தா அழுது விட்டாள். மது எழுந்து உட்கார்ந்தாள்.

    சரியான ஷாக் அண்ணி! இப்பக்கூட அந்த கிடினஸ் போகலை!

    என்னங்க! என்ன பண்ணப்போறீங்க?

    நம்ம சூரிக்கு ஃபோன் பண்ணியாச்சு. வந்துகிட்டே இருக்கான்!

    கதவு தட்டப்பட்டது . சூரி சிரித்த முகத்துடன் உள்ளே வந்தான். ரமணி விவரம் சொல்ல, சூரி முகத்தில் பதட்டம்.

    மதுவுக்கு பிராப்ளம் எதுவும் இல்லையே? இப்பவே நான் பாத்துர்றேன்

    மது அருகில் சூரி வந்தான். அவளையே பார்த்தான்.

    டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடுங்க அக்கா. நான்ஆட்டோ கொண்டு வரவா?

    வேண்டாம் சூரி. அவளுக்கு இப்ப எதுவும் இல்லை. நீ வேலையை கவனி.!

    சூரி மெயின் போர்டை திறந்து எங்கே மின்சாரம் கசிகிறது என ஆராயத்தொடங்கினான்.

    இந்த நேரம் கதாபாத்திரங்களின் பின்னணியை சொல்லி விடலாம்.ரமணி மாநில அரசாங்க ஊழியர். ஓரளவு நல்ல பதவி. அவர் மனைவி வசந்தா பள்ளிக்கூட டீச்சர். இது சொந்த வீடு. ரமணிக்குஒரு பைக் உண்டு. ஓரளவு வசதியான அப்பர்மிடில் க்ளாஸ். அவர்களுக்கு குழந்தை இல்லை .ரமணியின் தங்கை மதுமிதாதான் குழந்தை. மதுவின்அப்பா அம்மா ஒரு விபத்தில் காலமாக, அந்த நேரம் மதுவுக்கு வயது பதினைந்து. அண்ணன் அண்ணி பொறுப்பில் மது வந்து விட்டாள். வசந்தாவுக்கு குழந்தை பிறக்காத நிலையில் மதுவை தன் மகளாக ஏற்றுக்கொண்டு விட்டாள். ஒருஅண்ணி, அன்னைக்கும் மேலாகி விட்டாள். மது பட்டப்படிப்பை முடித்து விட்டாள். கம்ப்யூட்டரில் டிப்ளமா. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. அவளுக்கு நல்ல வரன்கள் வரத்தொடங்கி விட்டது. ஆனால் பதவி, பணம் , அந்தஸ்த்துடன் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற பிடிவாதம் மதுவுக்கு. அதில் திடமாக இருந்தாள். அவளை அசைக்கவே முடியவில்லை.

    சூரி ப்ளஸ் டூ வரைஒரு கான்வென்ட் பள்ளியில் படித்தவன். ஏழைக்குடும்பம். அவன் அப்பா தயாளன் சவப்பெட்டி செய்யும் ஒரு தொழிலாளி. மகனை அதற்கு மேல் படிக்க வைக்க அவரால் முடியவில்லை. சூரி பள்ளியில் படிக்கும் போதே, எலக்ட்ரிகல் ப்ளம்பிங், கார்பென்ட்ரி வேலைகளில் தேர்ந்து விட்டான். அப்பாவுக்கு சவப்பெட்டி செய்ய அவ்வப்போது உதவி செய்வான். எந்த ஒரு பேராசையும் இல்லாமல் இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் மனசு படைத்தவன் சூரி.மின்சார வேலைகளில் கணிசமாக சம்பாதிக்கிறான். இப்போதைக்கு இந்த நீண்ட அறிமுகம் போதும்.

    அக்கா! சர்க்யூட்ல கொஞ்சம் சிக்கல் இருக்கு. அரைநாள் வேலை இருக்கு. மெயினை ஆஃப் பண்ணியிருக்கேன். சமாளிச்சுக்குங்க. மதுவுக்கு ரெஸ்ட் குடுங்க.

    பிற்பகல்மூன்று மணிக்கு வேலைகளை கச்சிதமாக முடித்து விட்டான்.

    அக்கா எல்லாம் ரெடி. இனி பயப்பட எதுவும் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை நான் எடுத்தாச்சு

    "கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா எங்க வீட்டுக்கு எல்லா வேலைகளையும் நீதான் செஞ்சு தர்றே.உ ன்னை விட்டா எங்களுக்கு வேற யார் இருக்காங்க?

    சரி! கை., கால் கழுவிட்டு சாப்பிட வா."

    வேண்டாம்கா. எனக்கு பசியில்லை!

    படவா! கொன்னுடுவேன். மரியாதையா சாப்பிட ஒக்காரு!

    ரமணி வெளியே வந்தார்.

    வேலை முடிஞ்சுதா சூரி? அவனுக்கு பணம் குடுத்தியா வசந்தா? உன் சர்வீஸ் சார்ஜைகேட்டு வாங்கிக்கோ சூரி!

    இது என் வீடு மாதிரி சார். எதுவும் வேண்டாம்!

    எப்பவும் நீ இப்படித்தான் சொல்றே. யாரோட உழைப்பையும் இலவசமா ஏத்துக்கக்கூடாது. எனக்கது பிடிக்காது. நீ குடு வசந்தா. சரி நீ புறப்படு வசந்தா! கடைக்கு போகணும்.

    சூரி இன்னும் சாப்பிடலைங்க!

    மது பார்த்துப்பா ! நிறைய வேலை இருக்கு நமக்கு. புடவையை மாத்திட்டு சீக்கிரம் வா வசந்தா!

    வசந்தா தயாராகி வெளியே வந்தாள்.

    மது! சூரியை சாப்பிடாம அனுப்பாதே! இந்த பணத்தை சூரிகிட்ட குடுத்துடு! நாங்க புறப்படறோம்!

    அவர்கள் கிளம்பிப்போக, கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள் மது. அவனை குறும்பாக பார்த்தாள்.

    சாப்பாடு எடுத்து வைக்கலாமா சாருக்கு?

    சூரி அருகில் நெருங்கினான்.

    நான் சாப்பிடத்தொடங்கியாச்சு!

    அவள் கண்களுக்குள் தன் விழிகளை ஊடுருவ விட்டு, அவளையே பார்வையால் பருகிக்கொண்டிருக்க, மது நெளிந்தாள்.

    போதும்டா! இதுவரைக்கும் என்னை நீ பார்த்ததே இல்லையா? கூச்சமா இருக்கு. சாப்பிட வா.!!

    "நான் தயார்! நீ பரிமாற

    Enjoying the preview?
    Page 1 of 1