Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tholaintha Devathai
Tholaintha Devathai
Tholaintha Devathai
Ebook57 pages26 minutes

Tholaintha Devathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).

இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.

எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)

தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.

உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126904312
Tholaintha Devathai

Read more from Latha Saravanan

Related to Tholaintha Devathai

Related ebooks

Reviews for Tholaintha Devathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tholaintha Devathai - Latha Saravanan

    http://www.pustaka.co.in

    தொலைந்த தேவதை

    Tholaintha Devathai

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    http://pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    வெளிச்சப் புள்ளிகள் முகத்தைத் தழுவிட கலைந்த முடிக் கற்றையை ஒதுக்கினாள். கழுத்தைச் சுற்றிக் கொண்டிருந்த ஸ்ருதியை நகர்த்தினாள். ஏஸியின் சில்லிப்பில் அழகாய்ச் சுருண்டு கிடந்த குழந்தை அப்போதே பறித்த ரோஜாவைப் போல் இருந்தது. வெட்டி எடுத்த ஆரஞ்சுப்பழம் போல் கன்னங்கள், பாப் செய்த கூந்தல் இலேசாய்க் கலைந்திருந்தது. சோம்பலின் சோபை கூட அழகாய்த்தான் இருந்தது. பிறந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த மாதம் பிறந்தநாள் வரப்போகிறது. இப்போதுதான் பிறந்தாற் போல் இருக்கிறாள். காலம் தான் எத்தனை வேகமாய் ஓடி விடுகிறது. அருகில் குழந்தையின் புறம் திரும்பிக் கையைப் போட்ட கணவனைப் பார்த்தாள். ராகுல் வளர்ந்திட்டானே ஒழிய அவனும் குழந்தையைப் போலத்தான். சரிக்குச் சரி ஸ்ருதியிடம் மல்லுக்கு நிப்பான். இருவருக்கும் டீவி பார்ப்பதில் இருந்து ஸ்நேக்ஸ் பங்கிடுவது வரை சண்டைதான் அதிகமாய் வரும். அப்போதெல்லாம் சுசீலாதான் அவர்கள் இருவருக்கும் நீதிபதியாவாள்.

    ஸ்ருதி கார்ட்டூன் பார்க்கும் நேரம் வேண்டுமென்று சானலைத் திருப்பிச் செய்திகள் வைப்பான். தன் திராட்சைக் கண்களை வைத்து முறைக்கும் மகளை பெருமை பொங்கப் பார்ப்பான். இவள் வந்து அம்மா பாரும்மா அப்பாவை என்னை டீவி பார்க்கவே விட மாட்டேங்கிறார் என்பாள்.

    சரி செல்லம், அப்பா தினமும் ஆபீஸ் போயிடறார் இல்லையா? இன்னைக்கு ஒருநாள் தானே லீவு. பாவம் இல்லை, ஒருநாள் தானே. பார்த்திட்டுப் போகட்டுமே!

    அம்மா, எனக்கும் இன்னைக்குத் தானே லீவு. அப்பாவாவது நைட்டு டீவி பார்க்கிறார். டெய்லி நான் படிக்கும் போது ஈவினிங் டீவி பார்க்கிறார். நான் என்ன பார்க்கிறேனா? நீ அவங்க ஓனருக்குப் போன் பண்ணிக்கொடு. நான் அவரை வேலைக்குக் கூப்பிடச் சொல்லிடறேன், என்று பஞ்சாயத்து வைப்பாள். அடுப்பில் இருப்பதைக் குறைத்து விட்டு, கரண்டியோடு வெளியே வருவாள் சுசீலா.

    ஏங்க, பாப்பா வந்து உங்க மேல கம்ப்ளைண்ட் செய்யறா? அவளை ஏன் டீவி பார்க்க வைக்கலை? அவனிடம் இருந்து ரிமோட்டைப் பிடுங்கி சானலை மாற்றுவாள். மறுபடியும் சிறு ரகளை நடக்கும், ஸ்ருதி அழும் நிலைக்கு வரவும், ராகுல் சரண்டர் ஆவான். என் செல்லம் இல்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1