Iyandhira Ithayangal
()
About this ebook
எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).
இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.
எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)
தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.
உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
Read more from Latha Saravanan
Kalvanin Kaadhali Rating: 5 out of 5 stars5/5Tholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Ippadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsIrubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsVilaimagalin Vilaiyilla Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsMarainthu Vidathey Maya Rating: 0 out of 5 stars0 ratingsChithira Paavaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Dosmeniyan Devil Rating: 0 out of 5 stars0 ratingsPatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsAntha Micro Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsAndha Anbu Aabathanathu Rating: 0 out of 5 stars0 ratingsMayanizhal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iyandhira Ithayangal
Related ebooks
Uratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsKaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsChocolate Saavigal Rating: 0 out of 5 stars0 ratingsOma Nathi Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 5 out of 5 stars5/5Puthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsIndhumathi Muthukkal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Thodarum Rating: 5 out of 5 stars5/5Kanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsAvan Rating: 3 out of 5 stars3/5Utharayanam Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsKasangiya Kaakithangal Rating: 0 out of 5 stars0 ratingsMalaril Urangum Vandu Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2021 Rating: 0 out of 5 stars0 ratingsOoradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Thedal Rating: 3 out of 5 stars3/5Mugam paagam 2 Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Saaviyaal Manathai Thirakkirean Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Iyandhira Ithayangal
0 ratings0 reviews
Book preview
Iyandhira Ithayangal - Latha Saravanan
http://www.pustaka.co.in
இயந்திர இதயங்கள்
Iyandhira Ithayangal
Author:
லதா சரவணன்
Latha Saravanan
For more books
http://pustaka.co.in/home/author/latha-saravanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இதுவும் கடந்து போகும்
2. போராட்டங்கள் இல்லாமல்
3. வியர்வைகளால் கவிதை எழுதி
4. அமீபாவைப் போல் அவலங்கள்
5. களைய வேண்டிய எதிர்மறை எண்ணங்கள்
6. தேடிச் சோறு நிதந்தின்று
7. சாவின் உதடுகள்
8. மீண்டும் மீண்டும்
9. ஆசிரியர்கள் தினம்
10. முயற்சி
11. பதட்டமும் அவசரமும்
12. புன்னகையும் நன்றியும்
13. தவறுகள்
14. இணையதளம்
15. இயந்திரஇதயம்
16. பரபரப்பு
17. வலைப்பதிவுகளில்
18. தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள்
19. அலட்சியங்கள் பெரும் ஆபத்து
20. போராடும் மனம் கொள்ளுங்கள் பெண்களே
21. ஆன்லைன் அலப்பறைகள்
22. மியாவ்… மியாவ்…
23. ஓவியம்
24. கர்ப்பப்பை காதல்
25. ரசமும் துவையலும்
26. வாயில்லா ஜீவன்
27. வரமா? சாபமா?
28. சினிமாவின் முந்தைய பரிணாம வளர்ச்சி
29. வெள்ளரிப் பிஞ்சுகள்
30. விதைப்பது சேற்றிலானாலும்
31. நம்பிக்கை
32. நேர்முகத் தேர்வு
33. போதும் என்ற மனமே....
34. பழையசாதமும் வெங்காயமும்....!
35. சகாப்தத்தின் சரித்திரத்திலிருந்து
1. இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும் ஆழ்ந்த நம்பிக்கைகள் பல நேரங்களில் பலனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இனி சந்திரமுகியின் ஆட்டம் தொடரும் என்று பேய்படத்தின் நடுவில் டைட்டில் கார்டு போடுவதைப் போல ஜனவரியிலேயே போடப்பட்ட கொரானா கார்ட்டை கவனிக்காத அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இப்போது அதற்கு பெரும் அரசின் கீழ் அடிமைப்பட்டு இருக்கும் சிற்றரசின் நிலைமையப் போல் கூனிக்குறுகிப் போய் இருக்கிறது.
அடுப்பங்கரையில் அழுக்குப் படிந்த அஞ்சரைப் பெட்டிக்குள் அடைபட்டு கிடந்த மிளகும், சீரகமும் இஞ்சி எலுமிச்சைச் சாறில் தன் இன்னிங்கிஸ்ஸை தொடங்கியிருக்கிறது தினமும்!
வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை என்ற உண்மை சுவற்றில் அறையப்பட்ட ஆணியைப் போல் முகத்தில் அறைவது உண்மையே, ஆய்வுக் கூடங்களின் இரசாயணக் குப்பிகள் தங்களை திரவங்களால் நிரப்பிக் கொண்டன. கூண்டில் அடைப்பட்ட பரிசோதனை எலியின் நிலைமையில் இன்று மனிதன் தன் வீட்டுக் கூண்டில் அடைபட்டு இருக்கிறான்.
எது அத்தியாவசியம் என்பதை கொரானா நமக்கு உணர்த்தியுள்ளது, மிக நிண்ட வரிசையில் நிற்கும் போதும் நம்மால் கடக்க முடியாத கஷ்டத்தைத் தாங்கும் போதும் நண்பன் பட விஜய் போல ஆல்ஸ் வெல் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் நாம் செய்யப் போவதில்லை.
இத்தாலியில் புதைக்கப்பட வேண்டிய பிணங்களுக்காக ஒரு விளையாட்டு மைதானமே இடுகாடாக மாறியுள்ளது என்ற செய்தியைக் கேட்கும் போது அந்த மைதானம் சுமந்து செல்லும் இருட்டுப் பக்கங்களை எண்ணியும் நாம் சுதாரிக்கவில்லையெனில் நம் கண் முன்னே ஒரு சைக்கோத்தனம் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதுதானே நிஜம்.
இந்த உலகம் நம் வீட்டு வாசலில் தான் தொடங்குகிறது என்ற எண்ணம் தான் நம்மை இன்னமும் உயிர்ப்புடன் வைக்கிறது. தனிஒருவன் திரைப்படத்தில் சொன்னால் போல ஒரு சிறு குற்றத்தின் பிண்ணனி பெரிய குற்றம் நாம் ஆழ்துளையில் புழுவாகும் மீனுக்காய் கடலே மிதக்கும் அளவிற்கு கண்ணீர் விடுவோம் ஆனால் அந்த தூண்டில் மீன் உயிரைப் பணயம் வைத்தால் தான் நாம் மீன்குழம்பும் மண்பானையும் என்று பாட்டுப் பாடிக்கொண்டு எச்சில் ஊறிய நாவை மீன் குழம்பால் குளிப்பாட்ட முடியும் என்று நினைப்பதில்லை, நம் உணவிற்காக இறக்கும் பல மீன்களுக்காய் நாம் உச்சுக் கொட்டுவதில்லை.
அப்படித்தான் ஊரடங்கிற்காக நாம் காத்திருக்க யோசிக்கிறோம், வாகனத்தை தடை செய்தால் நெருப்பு வைத்து தற்கொலையும், காலையில் தொலைக்காட்சியில் பார்த்த சினிமாவின் ஹீரோத்தனத் தாக்கத்தையும் காத்திருக்கும் காவலாளியிடம் காட்டுகிறோம். அதனால் பெறப்போகும் விபரீதத்தை உணரவில்லை. புதைக்கப்படும் சடலங்களின் உடலில் மிச்சமிருக்கும் கோடித்துணியை உருவும் வெட்டியானின் நிலையை ஒத்தது அல்லவா நம் சுயநலம்.
நல்லார் ஒருவர் உளரேல் ஒருத்தர் இருந்தாலே போதுன்னு சொல்றார் திருவள்ளுவர். அடுத்த வீடுதானே தீப்பற்றி எரிகிறது என்ற கலாச்சாரம் மிகுந்துவிட்ட காலத்தில் பக்கத்து வீட்டுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது என்ற பொதுநலம் கலந்த சுயநலம் ஆபத்தில்லாத காட்டாறைப் போன்றது.
நம்மளோட சின்னத் தவறுகள்ன்னு நாம நினைக்கிறது முகம் தெரியாத ஒருவருக்கு உயிர் போற பிரச்சனையாகக் கூட ஆகலாம். நீங்க ஐரா படம் பார்த்து இருப்பீங்க படம் பார்த்து முடிஞ்சதும் ஒருத்தர் சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தார். லிப்டை நிறுத்தாது எல்லாம் ஒரு தப்பாங்க அதுக்குப்போய் கொலை செய்வாங்களான்னு?
நாம் நம் அவசரங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம் வேறு யாரைப் பற்றிய கவலையும் நமக்கு இருப்பதில்லை ஒரு பொது இடத்தில் அடுத்தவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவதில்லை என்பதே படத்தின் குற்றச்சாட்டு, அந்த சில நிமிட நேரம் காத்திருந்தால் அவளுக்கு வழிவிட்டு இருந்தால் ஒரு பெண்ணின் இறப்பைத் தடுத்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் வெறும் ரணங்களை மட்டுமே கொண்ட அந்த பெண்ணின் ஆசைகள் நிறைவேறாமலே போவதைப் போல படம் முடிந்திருக்கும். இது நம் கண்ணுக்குத் தெரிந்தது ஒரு இரண்டரைமணி நேரத்தில் ஒருவரின் வாழ்வின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவினை காட்டி முடித்திருந்தார்கள் ஆனால் வாழ்க்கை இரண்டரை மணி நேரத்தில் முடிவடைவது இல்லையே?! வாழ்க்கைக்கும் ஒரு ஸ்பீட் பிரேக்கரும், பேரிக்கார்ட்டும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்ககும்.
பத்து கட்டளைக்கு நடுவில் முழி பிதுங்கும் மணல்கயிறு விசுவின் நிலைதான் இந்த உள்ளிருப்பில் நாம் அனைவரும் அடைந்திருக்கும் ஒன்று. மன அழுத்தங்கள் அதிகரிக்க நாம் தேர்ந்தெடுக்கும் களங்கள் தொலைக்காட்சியும், மொபைலும் மட்டுமே ஆனால் அதிலேயே மன பிறலல்கள் அதிகரிக்கிறது.
மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களாய் வெகு சரியான நேரத்தில் வியாபாரத் தந்திரத்தை கையாளும் ஆசாமிகளாக சில நிகழ்வுகள்
ஹேஸ்டேக் தயாரித்து நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஒரு செல்பி எடுத்து அந்த டிவி சேனலின் ஆப்பை தரவிறக்கம் செய்து புகைப்படம் அனுப்பவேண்டுமாம் அப்படி அனுப்பினால் அழகானப் புகைப்படங்கள் டிவியில் காட்டப்படும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு எச்சரிக்கையான விழிப்புணர்வு என்று தோன்றும், ஆனால் மறைமுகமாக பார்த்தால் அதில் விழித்துக்கொண்டிருக்கும் வியாபாரம் புரியும்.
நிகழ்ச்சிகள் கொட்டிக்கிடக்கும் அந்த டிவியின் ஆப்பை டவுன்லோட் செய்ய ஒரு தொகை, பிரைம் நிகழ்ச்சியை ரசிக்க ஒரு தொகை, இது போக எப்போதடா நாம் பதிவிட்ட புகைப்படம் வரும் என்று பார்க்கத் துடித்து அந்த சேனலையே வைத்துப் பார்ப்பது இப்போது புரிகிறதா ஒரு வியாபாரத்தின் துவக்கம்.
இதேபோல்தான் உன் சோப்பு ஸ்லோவான்னு கேட்பதும், உப்பின் ஞானமும், கிடைக்காத நேரத்தில் சரக்கைப் பதுக்கிவைக்கும் ரேஷன் ஆசாமிகளைப் போல ஆகிவிட்டார்கள் இவர்கள்.
தினசரி நம்முடைய காத்திருப்புகள் அதிகரித்துக் கொண்டேதான்
இருக்கு, நாம் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருத்தருக்காக காத்திருக்கிறோம் ஆன்லைனில் ஆர்டர் பண்ண பொருட்கள் வாங்க, மருத்துவமனையில் ஊசி போட, காசைக் கொடுத்து ஹோட்டல் சர்வர் எப்போ வருவார்ன்னு பக்கத்து டேபிளில் நிரப்பட்டு இருக்கும் தட்டுகளைப் பார்த்து ஏங்கிக்கொண்டு இருப்போம், அதே போல்தான் இன்னைக்கு வீட்டுக்கு வேலை செய்ய வர்றாங்களான்னு, பாலில் இருந்து குப்பைத்தொட்டி வரை. பல நேரங்களில் நெருங்கியவர்களின் மூலம் கிடைக்கப்படும் அன்பிற்கு இப்படி நிறைய காத்திருப்பல்களோடு இன்னும் கொஞ்சநாள் காத்திருப்போம் உலகத்தைக் காக்க! கொரானாவில் இருந்து.
2. போராட்டங்கள் இல்லாமல்
போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடிவதில்லை.
பிறந்த குழந்தை கூட பசிக்காக அழும் போது தன் முதல் போராட்டத்தை தொடங்குகிறது அதனை அறியாமலேயே, பின் மூன்று மாதங்களில் குப்புற விழும்போதும், நடை பயிலும் போதும் சின்னசின்ன கீறல்களில் அதன் போராட்டத்த தழும்புகளைக் காணலாம். நாம் பிறக்கும் போதே போராட்டக் குணம் நம்மில் ஒட்டிக்கொண்டதாலோ என்னவோ உணவிற்கும் உடைக்கும் இதோ இப்போது கொரானாவின் அபாயாத்திற்கும் சேர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது.
இன்றைய போராட்டங்கள் மனிதனோடு இல்லை, கண்ணுக்குத் தெரியாத கொரானோவோடு நம்மை நெருக்கும் மனிதர்களோடு, நம் கூடவே பிறந்த அடிவயிற்றுப் பசியென்னும் அரக்கனோடு, ஒருவேளை உணவிற்காக ஜகத்தை அழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு நாம் என்ன பாரதியாரா அவரையே இறந்த பிறகுதானே மதித்தோம் ஆனால் காற்றும் இயற்கையும் அவனின் கிறுக்கல்களை ஓவியமாய் நமக்கு முன்பே கொண்டாடியது.
இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம், பிரான்ஸில் ஜனநாயம் அல்லது மரணம் என்ற கோஷப் போராட்டம் எல்லாமே தோல்வியில் முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வெற்றியும் பெற்று மைல்கல்லாக ஆனது. ரஷ்யா, அமெரிக்கா, சிகாக்கோவில் ஜூன் 1886ல் 7 பேரக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு ஹேமார்க்கெட் படுகொலை இப்போதும் அங்கே நினைவுச்சின்னமாய் உழைப்பாளர்களின் போராட்டததை நமக்கு நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது.
அதேபோல் அமெரிக்காவின் கருப்பு தினம் தூக்கில் இடப்பட்ட தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர் அமெரிக்காவின் வேலை நேரப் போராட்டமும், சிகாககோவின் தியாகமும் தான் இன்று உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன் முதலில் தொழிலாளர்தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காலவேலர் 1923ல் சென்னை அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்கள். அதன் நினைவுச் சின்னம்தான் மெரினாவின் உழைப்பாளர்கள் சிறை நாளை மீண்டும் ஒரு உதய நாளைக் கொண்டாடக் காத்திருக்கிறது.
சென்னையில் எத்தனையோ சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை எல்லாமே மத ரீதியாகவோ அல்லது ஒரு தனி மனிதம் மற்றும் அரசியல் அபிமானத்திற்காகவோ வைக்கப்பட்டு இருக்கும். சிலது இதில் விதிவிலக்கு