Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - June 2020
Kanaiyazhi - June 2020
Kanaiyazhi - June 2020
Ebook192 pages55 minutes

Kanaiyazhi - June 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

June 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109505564
Kanaiyazhi - June 2020

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - June 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - June 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - June 2020 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி ஜூன் 2020

    மலர்: 55 இதழ்: 03 ஜூன் 2020

    Kanaiyazhi June 2020

    Malar: 55 Idhazh: 03 June 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி ஜூன் 2020

    தலையங்கம் - ம.ரா.

    யாகாவார் ஆயினும்…

    மாறி இருக்கிறது

    உலகத்தின் முகம்!

    மாற்றிப் பார்க்க

    வைத்திருக்கிறது கரோனா!

    நீராரும் கடல்

    நிலமடந்தை முகத்தில்

    பூமிக்கும் வாய் மூடி!

    வானத்துச் சூரியனுக்கும்

    அவ்வப்போது

    மேகத்தால் வாய்மூடி!

    தனிமையில்

    அலகைச் சிறகில் மறைத்துப்

    பறவைகளும் வாய்மூடும்!

    எல்லாவற்றிலும் தன்னைக் கண்டு

    கூடி, சேர்ந்து

    வாழ்ந்து வளர்ந்து வளர்க்கும்

    மானுட வாழ்க்கையின்

    கட்டுமானங்கள்

    கலகலக்கத் தொடங்கியுள்ளன.

    காலம் காலமாய்க்

    கலை இலக்கியங்கள்

    உருவாக்கிய

    மனக் கட்டுமானங்கள்

    கரோனா காற்றில்

    கலைந்து போகின்றன!

    கூடி வாழ்ந்தால்

    கோடி நன்மை

    தனித்திரு விலகியிரு என்று

    தவிடுபொடியாகிறது!

    ஊரடங்கில்

    கட்டுப்பட்டுக் கிடக்கிறது உடல்!

    கடந்து வந்த வாழ்க்கையின்

    நினைவுக் கணக்குகளில்

    கட்டுப்படாமல் திரிகிறது மனம்!

    வாழ்தல் வேண்டி வேலை தேடி

    ஊரையும் உறவையும் விட்டு

    குடும்பம் குடும்பமாக

    வேறிடம் வந்தவர்கள்

    ஊரடங்கில்

    வேலை இழந்ததும்

    நடைப்பயணத்தில்

    பிள்ளை குட்டிகளோடு!

    அதிலும் சிலர்

    தனக்குத் தானே

    நடத்திக் கொண்டார்கள்

    ஏமாற்றங்களோடு இறுதிப் பயணம்!

    என்ன உலகம் இது?

    ஊருக்குப் போக

    வழி கேட்டவர்கள் மீது

    தடியடி!

    மதுவாங்க வருகிறவர்களுக்கோ

    வழி காட்டி!

    கரோனா நெருங்காத

    கிராமத்துத் திடலில்

    ஒற்றைமர நிழலில்

    விளையாடும் சிறுவர்களை

    விரட்டி விரட்டி

    மிரட்டித் துரத்துகிறது

    ட்ரோன் விமானப் பூச்சி!

    கரோனாவில் கிடக்கும்

    நகரத் தெருக்களின்

    டாஸ்மாக் கடைகளில்

    அலை மோதும் கூட்டத்தின்

    அணிவகுப்பு மரியாதையில் அரசு!

    இலட்சக் கணக்கான மக்கள்

    தாம் பிறந்த மாநிலத்தில்

    உடல் உழைப்புக்கு

    வழியில்லாமல்

    அடுத்தடுத்த மாநிலங்களுக்குப்

    புலம் பெயர்ந்திருக்கிறார்கள்!

    அவர்கள் எல்லாம்

    அதிகம் படித்துவிட்டு

    அயல் நாடுகளுக்குச்

    சென்றவர்கள் இல்லை!

    அன்றாட கூலிக்குச்

    சொந்த மாநிலத்தில்

    வாழ வழியின்றி

    வாய்க்கும் கைக்குமாக

    வாழ விரட்டப்பட்டவர்கள்!

    அதற்கும் வாய்ப்பில்லாத போது

    சாவது சொந்த ஊரில்

    இருக்கட்டும் என்று

    உயிரை விட

    ஊரைத் தேடிப் போகிறார்கள்!

    போக்குவரத்து வசதி

    மறுக்கப்பட்டவர்கள்

    கைகால்களை நம்பி

    நடக்கத் தொடங்கிவிட்டார்கள்!

    ஊரடங்கு போடும் முன்

    அரசு யோசித்திருக்க வேண்டாமா?

    வேலை இல்லை

    வீட்டுக்குப் போ என்பார்களே

    வேலையைப் பிடுங்கிவிட்டு

    வீட்டுக்குப் போக விடவில்லையே!

    முடங்கிக் கிடக்கும் நாம்

    ஊரடங்கிலிருந்து

    வெளிவருவது எப்படி? எப்போது?

    புதிய மனக் கட்டுமானங்களை

    உருவாக்கக்

    கலை இலக்கியங்களுக்குத்

    தேவைப்படப்போகும்

    காலம் எவ்வளவு?

    பழைய சாரங்கள்

    புதிய கட்டுமானத்துக்குப்

    பயன்படுமா?

    இன்றைய உலகத்

    தேவைப் பட்டியலில்

    இருக்கப் போகிறவர்கள் யார்? யார்?

    தேவை இல்லாமல்

    எதையும் தொடாதே!

    கலை, இலக்கியம், விளையாட்டு

    கூட்டம், பேச்சு, சிரிப்பு எல்லாம்

    தேவைப் பட்டியலில் இனி

    இடம்பெறுமா?

    பழைய கதைகளின்

    புத்துயிர்ப்பில்

    புதிய வாழ்க்கை நிற்குமா?

    பண்பாட்டு நடுக்கத்

    தலைமுறை இடைவெளிப்

    பள்ளங்களைக் கடப்பது எப்படி?

    இந்த நிலையிலும்

    எரிகிற வீட்டை அணைக்காமல்

    எடுத்துச் சுருட்ட நினைக்கும்

    அரசியல்வாதிகள்-

    எல்லையோரங்களில்

    படைகளைக் குவிக்கும்

    ஆதிக்கவாதிகளென்று

    கண்ணில் படும்

    எல்லாவற்றிலும்

    விரக்தியின் ஆதிக்கம்!

    ஆனாலும் மானுடம் வெல்லும்!

    வரலாற்றில் இது புதிய தடம்!

    சமூக இடைவெளி

    கூட்ட இடைவெளி கடந்து

    தனிமனித இடைவெளி விட்டு

    இப்போது

    தனக்குத் தானே இடைவெளி!

    கரோனாவுக்கு மருந்து

    கைவசம் இருக்கிறது!

    வயிறு நிறைப்பது தவிர

    வாய்க்கும் கைக்கும் உறவில்லை

    ஆம்! கரோனாவுக்கும் மருந்து

    வாய் காக்கும் இடைவெளிதான்!

    ஆகவே

    யாகாவார் ஆயினும்

    வாய் காக்க!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - தயாஜி, மலேசியா

    சிறுகதை - கே. நல்லதம்பி

    கவிதை - காசாவயல் கண்ணன்

    சிறுகதை - பா. செயப்பிரகாசம்

    கட்டுரை - கார்த்திகேயன் புகழேந்தி

    கவிதை - பிறைநிலா

    கட்டுரை - சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி

    சிறுகதை - ஐ. கிருத்திகா

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - கீர்த்தி கிருஷ்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கட்டுரை - ச.பழனியப்பன்

    சிறுகதை - கவிஜி

    கவிதை - புஷ்பால ஜெயக்குமார்

    கட்டுரை - முபீன் சாதிகா

    கட்டுரை - முனைவர் கோ.சசிகலா

    கட்டுரை - பாக்யம் சங்கர்

    சிறுகதை - க.அரவிந்த் குமார்

    கவிதை - ப.ராஜகுமார் சிவன்

    கவிதை - எம்.சோலை

    கடைசிப் பக்கம் - இந்திரா

    ***

    கட்டுரை - தயாஜி, மலேசியா

    ஊரடங்கில் நான்...

    1

    உலகம் முழுக்க ஒலித்த குறைந்தபட்ச ஒருமித்த குரலாக வந்திருப்பது கொரோனா(கோவிட்19). அடித்தட்டு மக்களில் இருந்து உச்சத்தில் இருக்கின்றவர்கள்வரை ஏதோ ஒரு வகையில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றில் இருந்து இன்னொன்று மாறுபட காரணமாக இருக்கிறது பொருளாதாரம். அதற்காகவும் அல்லது அதன் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும்தான் நாம் பல வகைகளில் முயன்றும் போராடியும் வருகிறோம். இம்முறை இந்த கோவிட்-19 வந்து தன் பலம் கொண்டு அடித்த இடம் அந்த பொருளாதாரம். என்னதான் பசித்திருந்தாலும் சிங்கங்கள் புற்களை தின்னப்போவதில்லை என்கிற நினைப்பு காப்ரேட் கம்பெனிகளை நினைக்கையில் உள்ளுக்குள் அச்சம் ஊரவேச் செய்கிறது.

    01.jpg

    கோவிட்19, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எல்லா வகைகளிலும் சாமான்ய மனிதர்கள் மட்டுமே சிப்பாய்களாக முதல் குண்டுகளை தாங்கிக் கொண்டு அவதிப்படுகிறார்கள். ஏற்கனவே விபத்தொன்றில் பாதிக்கப்பட்டிருந்ததால், கோவிட் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியில் நடமாட முடியாமல் அத்தை வீட்டிலேயே அடைபட்டிருந்தேன். ஆக, எனக்கு பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. மலேசியாவில் முதன் முதலில் ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டைத்தான் ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு வீட்டில் ஒருவர் என குடும்ப தேவைகளுக்கு வெளியேறலாம். சிலருக்கு தெய்வாதீனமாக சில மாதங்களுக்கு வீட்டு வாடகையை கட்ட வேண்டாம் என வீட்டு உரிமையாளர்கள் சொல்லிவிட்டார்கள். சில வங்கிகளும் குறிப்பிட்ட சிலவற்றின் தவணைகளை ஆறு மாதங்கள் வரை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என சொல்லியிருந்தார்கள். ஆறு மாதங்களுக்கு பிறகு வரவிருக்கும் சிக்கல்களை நாங்கள் அறியாமலில்லை.

    முதல் இரண்டு மாதங்களுக்கு கையிருப்பை வைத்து சமாளித்தோம். நாட்கள் நகரநகர வீட்டில் சமைப்பதைக் குறைத்துக்கொண்டோம். நாங்கள் சாப்பிடும் அளவையும் குறைத்துக்கொண்டோம். கோவிட்-19னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பொறுப்பற்றவர்களால் அதிகமாகிக் கொண்டும், அதற்கான கட்டுப்பாடும் இறுக்கமாகிக் கொண்டும் இருந்தது. இந்த சமயத்தில்தான் நாங்கள் கொஞ்சம் எதிர்ப்பார்க்காத சம்பவம் நடந்தது.

    ஜொகூரில் வசிக்கும் அத்தையின் அக்கா காலமாகிவிட்டார். அவருக்கு ஒரே மகள். எனது அத்தையும் மாமாவும் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டிய சூழல். கடந்த ஆண்டு அத்தையின் அண்ணனும், இந்த ஆண்டு அவரின் அக்காவும் காலமாவிட்டார். கோலாலும்பூரில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல அனுமதியில்லை. அதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியிருந்தார்கள். அன்றைய இரவே காவல் நிலையத்திற்கு சென்றோம். விபரங்களைச் சொன்னோம். வாட்சப்பில் வந்திருந்த இறப்புச் சான்றிதழைக் காட்டினோம். நான்கு பேர் மட்டுமே இப்போது செல்ல அனுமதி வழங்கப்பட்டது. முதலில் அத்தை, மாமா, அவர்களின் மகனுடன் அத்தையின் அண்ணனுடன் அவரின் காரிலேயே அனுப்பி வைத்தோம்.

    இறந்தவர், எல்லா குடும்ப நிகழ்வுகளுக்கும் முன் நிற்பவர் மூத்தவர். யார் எதை கேட்டாலும் உடனுக்குடன் அதற்கான தீர்வுகளைச் சொல்லக் கூடியவர். பலருக்கும் நன்கு அறிமுமானவர்.

    மற்றவர்கள் மறுநாள் காலையில் காவல்நிலையத்திற்குச் சென்றோம். சம்பத்தப்பட்ட அதிகாரி காலை எட்டு மணிக்குத்தான் வருவார் என்றார்கள். அதோடு அங்கு வெளியில் செல்ல விண்ணப்பிக்க ஒரு பெரிய வரிசையே காத்திருந்தது. எங்கள் முறை வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேலானது. ஆனால், நேரடி ரத்த சம்பந்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1