Kaathiru, Kaadhalikkirean!
()
About this ebook
ஆனந்த் விஜயா இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் காதல் ஏற்பட்டது. ஆனந்தின் நண்பன் மணியால் இவர்கள் காதலிப்பதை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. திடீரென ஆனந்த் இறந்து போனான். மணி இவர்களை என்ன செய்தான்? ஆனந்த் இறக்க காரணமானவன் யார்? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Patharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaathiru, Kaadhalikkirean!
Related ebooks
Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsAntharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Imaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsNirkathey... Kavanikkathey... Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Whisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Pala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsPlease... Please... Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5Panthaya Thudippu Rating: 5 out of 5 stars5/5Oru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Raathiri Neram Rating: 0 out of 5 stars0 ratingsHands - Up Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsBharath, Bharath, Bharath Rating: 5 out of 5 stars5/5Idhayathil Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathil Mannippom Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kaathiru, Kaadhalikkirean!
0 ratings0 reviews
Book preview
Kaathiru, Kaadhalikkirean! - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
காத்திரு, காதலிக்கிறேன்!
Kaathiru, Kaadhalikkirean!
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
காலை சூரியன் பூமியைத் தொட… நீர் நிலைகள் கண்ணடித்தன. பறவைகள் பயணம் துவங்க… வயல்களில் பச்சைக் கதிர்கள் கையசைத்தன. வேறுபாடின்றி அனைவரையும் தாலாட்டத் தொடங்கியது கம்யூனிசத் தென்றல்.
அந்த சின்ன கிராமம் கொஞ்சம் தாமதமாய் எழுந்திருந்தது. வேப்பங்குச்சி ஒடித்து பல் துலக்கியது. பித்தளை செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு புதர் மறைவுக்குப் போனது. மாடுகள் எழுப்பப்பட்டு வண்டியில் கட்டப்பட்டன. டீ குடித்துவிட்டு காதோரம் பீடியுடன், வேட்டி மடிப்பில் புகையிலையுடன் கலப்பை தோளில் சுமந்து வயல் நோக்கி வெறும் காலுடன் உழவர்கள் நடந்தனர்.
குடிசைகளின் உச்சந்தலையில் ஏறித்திரிந்து சேவல்கள் கத்தின. வாசல்களில் சாண நீர் தெளித்து மடக்கி அமர்ந்து கோலம் வைத்தனர். இடுப்பில் குடம் சுமந்து தோளில் துவைக்க வேண்டிய, உடுத்த வேண்டிய துணிகள் சுமந்து தூக்கக் கலக்கத்தில் பெண்கள் ஆறு நோக்கி நடந்தனர்.
மல்லி, இன்றைக்கு கிணத்துக்குப் போகலாம் வாடி.
அடியாத்தி… ஊர் கடைசில இருக்கு. அவ்ளோ தூரம் யார் நடக்கிறது?
தினைக்கும்தான் ஆத்துல குளிக்கிறமே… அட வாடி…
நேரமாய்டும், ஆத்தா திட்டும்.
அதெல்லாம் திட்டாது. நான்தான் இட்டாந்தேன்னு சொல்றேன் அங்க இந்த ஆம்பிளை பசங்க தொந்தரவு இருக்காது. சுதந்திரமா குளிக்கலாம்.
சரி, அப்பன்னா விரைவா நட.
வயல்கள் நடுவில், ஒற்றையடிப் பாதையில் நடந்து, மாந்தோப்புகளைக் கடந்து, ஊர் எல்லைக் காவல் தெய்வத்தின் ஆஸ்பெட்டாஸ் வேய்ந்த சின்ன கோயிலைத் தாண்டி அந்த பெரிய சதுர வடிவ பழைய கிணற்றை நோக்கி அவர்கள் நடந்தார்கள்.
கிணறு - விளிம்புகள் சிதைந்திருந்தது. உள்ளே தெளிவில்லாத தண்ணீர். பக்கச் சுவர்களில் அங்கங்கே தாவரங்கள். வளைவாய் இறங்கிச் செல்லும் படிகளின் ஓரங்களில் பாசி.
மல்லி, நீ படி வழியா இறங்கு.
நீ?
இங்கேர்ந்து குதிக்கப் போறேன்.
வேணாம்டி. கல்யாணத்துக்கு தயாரா இருக்கே… அடிகிடி பட்டுடும். இந்த முரட்டுத்தனம் எல்லாம் வேணாம். பேசாமல் இரு.
கல்யாணத்துக்கப்புறம் எந்த ஊரோ… எந்த தேசமோ… இப்படி குதிக்கிற சுகம் கிடைக்குமா?
சொன்னா கேட்க மாட்டியே… எப்படியோ போ.
மல்லி, படிகளில் ஜாக்கிரதையாக இறங்கு… தோழி தாவணியை இடுப்பில் செருகிக்கொண்டு, குடத்தை ஒரமாக வைத்துவிட்டு ஒண்ணு, இரண்டு, மூணு…
என்று முழங்கால் வரை பாவாடை விரிய உள்ளேக் குதித்தாள்.
சில வினாடிகள் கழித்து மேலே வந்தவள்… ஆ! ஆ
என்றாள். படியை நோக்கித் திணறினாள். தத்தளித்தாள்.
ஏய்… ஏய் என்னாச்சு?
மல்லி கைகொடுத்து அவளை படிக்கு இழுத்து அமர்த்த… தன் வலது காலை காட்டினாள்.
சரியாய் உள்ளங்காலில் எதுவோ கிழித்து… ரத்தம் வந்து கொண்டிருந்தது.
சொன்னேனே, கேட்டியா? கண்ணாடியோ எதுவோ கிழிச்சிருக்கு பாரு.
துண்டை நீரில் நனைத்து அவள் காலில் இறுக்கிக் கட்டினாள். கட்டிவிட்டு நிமிர்ந்து, கொலுசு எங்கேடி?
என்றாள்.
அய்யய்யோ! உள்ளே விழுந்திருச்சி போலிருக்கு.
இப்ப என்ன செய்யலாம்?
நகரு, நான் உள்ளாறப் போய் தேடிப் பார்க்கறேன். கொலுசைத் தொலைச்சிட்டு, காயம் வேற பண்ணிக்கிட்டு வீட்டுக்குப் போனால் செத்தேன்.
நீ இப்படி உட்காரு. நான் முங்கி தேடிப் பார்க்கிறேன்.
மல்லி நீருக்குள் மூழ்கினாள். தம் பிடித்துக்கொண்டு கைகளை துளாவினாள். தரை தொட்டாள். கைகளை செலுத்தி தேடினாள். கல்லும், மண்ணும் தட்டுப்பட்டன. மேலே வந்தாள். மூச்சு விட்டாள்.
கிடைச்சுதா?
இன்னும் இல்லை. பதறாம பார்க்கலாம், இரு.
மறுபடி நீரடியில் காணாமல் போனாள். மீண்டும் துளாவினாள். அலசினாள்.
இந்த முறை கைக்கு ஏதோ தட்டுப்பட்டது. கையால் பிடிக்கிற மாதிரி எதுவோ… கொலுசு இல்லை.
அதை எடுத்துக்கொண்டு மேல்பரப்புக்கு வந்து, கையை வெளியே எடுத்துப் பார்த்துப் பதறினாள்.
அது முக்காலடி நீளத்தில் பளபளத்த கத்தி!
என்னடி இது?
படியைப் பிடித்துக்கொண்டு மிதந்த மல்லி, தெரியலையே… இவ்ளோ பெரிய கத்தி எப்படி தண்ணிருக்குள்ளே வந்திச்சி?
இதான் என் காலை கிழிச்சிருக்கு.
பார்த்தா பழம் நறுக்கிற கத்தி மாதிரி தெரியலையே…
நீ வேற! இவ்ளோ பெரிய முரட்டு கத்தியாலயா பழம் நறுக்குவாங்க? நம்ம வேலுசாமி அண்ணன் இடுப்புல வச்சிருக்குமே அது மாதிரி இருக்கு.
சரி. நீ ஓரமாவே குளி. நான் கொஞ்சம் நீச்சல் போடறேன்.
மல்லி கத்தி எடுத்த பகுதிக்கு நேரெதிர் மூலையை நோக்கி நீந்தினாள்.
என் கொலுசு?
கிடைக்கலையே…
இன்னும் ஒரே ஒரு தடவைப் பாரேன் மல்லி.
மூச்சு வாங்குதடி. சரி. இதான் கடைசி தடவை. இப்பவும் கிடைக்கலைன்னா ஆளை வுட்டுடு. என்னைப் போட்டு தொல்லை பண்ணக்கூடாது.
மல்லி எதிர் மூலைப் பகுதியில் மூழ்கி தரை மட்டம் சென்று தடவினாள். இந்த முறை அவள் கைக்கு ஒரு கயிறு தட்டுபட… அந்த கயிற்றின் முனை நோக்கிக் கையைக் கொண்டுசென்ற பொழுது… ஒரு பெரிய பாறாங்கல்லுடன்