Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranathil Mannippom
Maranathil Mannippom
Maranathil Mannippom
Ebook112 pages42 minutes

Maranathil Mannippom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல தொழிலதிபர் ராஜாராம் நடிகை ஹேமாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். இதனால் ராஜாராமிற்கும் அவரது மகன் மகேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு சொத்தின் காரணமாக ஹேமா - மகேஷ் இடையே பகை ஏற்படுகிறது. இந்நிலையில் ஹேமா கொலை செய்யப்படுகிறாள். கொலையாளி யார்? மகேஷ் போலீசின் சந்தேகப் பார்வையிலிருந்து மீண்டானா வாருங்கள் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580100909634
Maranathil Mannippom

Read more from Pattukottai Prabakar

Related to Maranathil Mannippom

Related ebooks

Reviews for Maranathil Mannippom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranathil Mannippom - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மரணத்தில் மன்னிப்போம்

    Maranathil Mannippom

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கறுப்பு வானம் இன்னும் விடிவதற்குத் தயாராய் இல்லை.

    அலாரம் ஒலித்தபோது… ராஜாராம்தான் விழித்துக் கொண்டார். அருகில் இரவு விளக்கின் மெல்லிய நீல வெளிச்சத்தில் கிடத்தி வைத்த ஒரு பளிங்குச் சிலையென ஹேமா சலனமின்றிப் படுத்திருந்தாள். அவளின் மெலிதான, லேஸ் வைத்த இரவு உடை அங்கங்கே கலைந்திருந்ததில், எச்சில் விழுங்கிக்கொண்டார்.

    ராஜாராம் கைநீட்டி கட்டில் தலைமாட்டில் இருந்த பெரிய விளக்குக்கான பித்தானைத் தட்டினார். அவள் பக்கம் கவிழ்ந்து வழிந்த கூந்தலை விலக்கி நடுநெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

    ஹேமா டார்லிங்! மணி அஞ்சு. அலாரம் அடிச்சிடிச்சி. எந்திரிடா கண்ணு.

    ம் என்று முனகினாள். இன்னும் மும்மரமாக உறங்கினாள்.

    ராஜாராம் எழுந்தார். அறையோடு இணைந்த குளியலறையில் வெந்நீருக்காக ஹீட்டரைப் போட்டுவிட்டு வந்தார். அலங்கார அலமாரியின் தள்ளுக்கதவு அதன் ரப்பர் கால்களில் உருண்டு நகர்ந்ததும்… ஹேமா துடைத்துக்கொள்ள பூத்துண்டு, ஹேமா அணிந்துகொள்ள உள்ளாடைகள் எல்லாம் எடுத்துச் சென்று குளியலறை அலுமினியக் கம்பியில் தொங்கவிட்டுவிட்டு வந்தபோது,

    தொலைபேசி அழைத்தது.

    அலோ இது என்று தன் எண்ணைச் சொன்னார்.

    குட்மார்னிங் சார்! ரம்யப்பிரியா புரொடக்ஷன்லேர்ந்து தயாரிப்பு நிர்வாகி செல்லபாண்டியன் பேசறேன். அம்மா ரெடியாயிட்டாங்களா? கார் அனுப்பலாமா?

    இதோ தயாராயிடுவாங்க. சொந்த வண்டில வந்துடுவாங்க. இடத்தைச் சொல்லுங்க.

    அவங்களுக்குத் தெரியும், எலியட்ஸ் கடற்கரைகிட்டே அதிகாலை சூழ்நிலையில் ஓடற மாதிரி காட்சி. காட்சிக்குண்டான உடைகள்கூட அனுப்பிவிட்டோம். அவங்களே மேக்கப் செஞ்சுட்டு வந்துடறேன்னு சொல்லியிருக்காங்க.

    எத்தனை மணிக்கு வரணும்?

    ஆறு மணிக்குள்ளே அங்கே இருக்கணும் சார்! மற்ற எல்லாரும் இப்பவே அங்கே இருக்காங்க.

    சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க.

    தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் படுக்கையை அடைந்தார்.

    கண்ணா, எந்திரிடா, போன் பண்ணிட்டாங்க. ஆறு மணிக்குள் நீ அங்கே இருக்கணுமாம். தோளில் தட்டித் தட்டி எழுப்பினார்.

    ஹேமா வேண்டாவெறுப்பாக எழுந்து கொட்டாவி விட்டாள். உடலை இப்படியும் அப்படியும் முறுக்கிக் கொண்டாள். கைகளைத் தனித்தனியாக உதறினாள்.

    அப்படியெல்லாம் செய்யாதே. அப்புறம் நீ கிளம்ப இன்னும் தாமதமாயிடும். சிரித்த தன் கணவருக்கு பரிசுப் பொருள்போல ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, ஹீட்டர் போட்டுட்டிங்களா?

    போட்டாச்சுடா. துணி எல்லாம் எடுத்து வச்சுட்டேன். போய்க் குளி.

    சுந்தரி வந்துட்டாளா? சாரங்கன் வந்தாச்சா?

    நான் பார்க்கிறேன். நீ குளி.

    ராஜாராம் மன்னன் இட்ட கட்டளை போல உடனே அறையைத் திறந்துகொண்டு கீழே இறங்கி வந்தார்.

    வரவேற்பறையில் ஹேமாவின் பிரத்யேக மேக்கப்பெண் சுந்தரி காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்தவள் இவரைப் பார்த்ததும் எழுந்துகொண்டாள்.

    வந்துட்டியா? சரி. டிரைவர் இருக்கானா வாசல்ல. பார்த்தியா?

    இல்லை சார்! வேலைக்காரிதான் கதவு திறந்துவிட்டாள். மேடம் தயாராயிட்டாங்களா?

    இன்னும் இல்லை. குளிக்கிறாங்க. இரு. கூப்புடு வாங்க.

    ராஜாராம் சமையலறைக்குள் சென்று, காபி ரெடியா? என்றார்.

    இதோ ஒரு நிமிடம். என்றாள் சமையல்காரி.

    சீக்கிரம். ஹேமாவுக்கு குளிச்சதும் காபி சாப்பிட்டாகணும்னு தெரியுமில்லே? எடு, எடு. கொதி வந்திடிச்சு பாரு.

    காபி போட்டு முடிக்கும் வரை பக்கத்தில் நின்று டிரேயில் வைத்து வாங்கிக்கொண்டார்.

    நான் கொண்டு போறேங்க.

    பரவால்லை. நீ மற்ற வேலைகளைப் பாரு.

    ராஜாராம் மாடிக்கு வந்தபோது ஹேமா வெள்ளையில் காலர் வைத்த பனியனும், வெள்ளை அரை பேண்டும் அணிந்து கொண்டிருந்தாள்.

    என்ன உடை இது?

    இன்றைக்கு படப்பிடிப்புக்கு உண்டான உடை இதுதான்.

    இவ்வளவு தூரம் தொடை தெரியற மாதிரியா!

    டைரக்டர் சொல்றதை எப்படி மாத்த முடியும் டியர்?

    சுத்த காலிப்பசங்க. கல்யாணமான நடிகையாச்சேன்னு கூட பார்க்கிறதில்லை.

    அவங்க என்ன பண்ணுவாங்க டியர்? மக்கள் என்கிட்டே கவர்ச்சியை எதிர்பார்க்கிறாங்களே… ஆரம்பத்திலேர்ந்தே கொஞ்சம் தாராளமா நடிச்சிட்டேனே… இப்ப திடீர்னு மாற்ற முடியுமா?

    ஏன், மாத்தினால் என்ன ஹேமா?

    நான் சேலை கட்டிப் போர்த்திக்கிட்டு வந்தா படம் ஓடாது டியர்.

    ஓடாட்டிப் போகட்டும்.

    அப்புறம் என்னைத் தொலைகாட்சி நாடகத்துக்குன்னு ஒதுக்கி வீட்டுல உட்கார வச்சிடுவாங்களே…

    அதனால் என்ன? என் சொத்துக்கு என்ன பஞ்சம் ஹேமா? நீ நடிச்சு சம்பாதிக்க என்ன அவசியம் இருக்கு?

    பார்த்தீங்களா, இதே மாதிரி என்னைக்காவது ஒரு நாள் சொல்வீங்கன்னு நான் அன்னைக்கே சொன்னேன். சுல்யாணமாகி ஒரு வருஷம்கூட இன்னும் ஆகலை, அதுக்குள்ளே சொல்லிட்டிங்க.

    இல்லை, நான் எதுக்குச் சொல்ல வர்றேன்னா…

    "டியர்! என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தெரிவிச்சப்பவே நான் என்ன சொன்னேன்?

    Enjoying the preview?
    Page 1 of 1