Oru Koppai Kaadhal
()
About this ebook
இளமை துள்ளும் அழகு பதுமை, பத்மா. அப்பெண்ணிற்கு திருமணம் நடக்குமா? அவளின் தங்கையின் காதலன் செய்யும் சேட்டையினை தொடர்ந்து, கீர்த்தனாவின் எல்லை மீறிய காதல் திருமணமாக மலருமா? பத்மாவின் மாப்பிள்ளையின் நண்பர் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வருமா? தன் அண்ணியின் ஆதரவால் கீர்த்தனா எடுக்கும் முடிவு என்ன? என்பதை இக்கதையை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Koppai Kaadhal
Related ebooks
Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Oru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthithai Pirappom Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Kadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Thotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Poo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Indhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsJeippathu Neeya? Naana? Rating: 5 out of 5 stars5/5En Priya Preethikku Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Kaadhal Sei Rating: 0 out of 5 stars0 ratingsDecember Punnagai Rating: 5 out of 5 stars5/5Mannikka Mudiyatha Kutram Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsUyirvarai Inithaval Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Vilai! Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Puthir Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsThats All Your Honour... Rating: 0 out of 5 stars0 ratingsAtho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5En Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsIppadithan Aarambikkirargal Rating: 5 out of 5 stars5/5Mutru Pulliyil Arambam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Koppai Kaadhal
0 ratings0 reviews
Book preview
Oru Koppai Kaadhal - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
ஒரு கோப்பை காதல்
Oru Koppai Kaadhal
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
1
சிவாவுக்கு வகிடெடுத்து, தலை வாரி விட்டுக்கொண்டிருந்தாள், வித்யா. அவசரக் கொண்டை இட்டிருந்தாள். கழுத்தில் வியர்வை மின்னியது. இரவிக்கையின் முதுகு நனைந்திருந்தது.
அம்மா, வகிடு எடுக்காதேம்மா.
ஏன்டா?
இப்ப யாரும் வகிடு எடுக்கிறதில்லைம்மா.
மத்தவங்க ஒண்ணு செஞ்சா அதையே நாமும் செய்யணும்னு இல்ல சிவா. உனக்கு வகிடு எடுத்து சீவினாதான் அழகா இருக்கு.
புது பேனா கேட்டனே?
தாத்தாகிட்ட சொல்லுடா... இல்ல சித்தப்பாகிட்ட கேளு.
காசு கொடேன்... நானே வாங்கிக்கிறேன். பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்திலேயே கடை இருக்கும்மா.
உனக்குத் தெரியாதுப்பா... எதாச்சும் மட்டமானதா உன் தலையில் கட்டி ஏமாத்திடுவான். சரி, புறப்படு. நேரமாச்சி.
வித்யா, சிதறிக்கிடந்த புத்தகங்களை அவனுடைய புத்தகப் பையில் எடுத்து வைத்துவிட்டு, பூட்ஸ் போட்டுக்கோ. நான் சாப்பாட்டுக் கூடை எடுத்துட்டு வர்றேன்
என்று சமையலறைக்கு வந்தாள்.
பாத்திரத்தில் பால் வைத்துக் காத்திருந்த பார்வதி, சிவா சாப்பிட்டுட்டானாம்மா?
என்றார்.
ஆச்சு, அத்தை. இன்னிக்கு பள்ளிக்கூடத்துல ஏதோ விழா இருக்காம். சீக்கிரமே தயாராயிட்டான். உங்களுக்கு காப்பிபோட்டுத் தரட்டுமா?
நான் போட்டுக்கிறேன்ம்மா. நீ அவனை அனுப்புற வழியைப் பாரு. மாமா, பூஜை அறையிலேயா இருக்காரு?
இல்ல அத்தை, குளிச்சிட்டிருக்காரு.
பாட்டிலில் தண்ணீர் பிடித்து, பிளாஸ்டிக் கூடையில் வைத்து, எவர்சில்வர் பாத்திரத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
சிவா, அலமாரியில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.
என்னடா வேணும்?
என் பேட்ஜ்ஜை காணோம்மா.
ஒரு இடத்துல வச்சாத்தானே? இரு... நான் எடுத்துத் தர்றேன். நீ பூட்ஸ் போட்டுக்கோ.
வித்யா, பேட்ஜ்ஜை தேடி எடுத்து அவன் சீருடை சட்டையில் குத்தினாள்.
அம்மா, அடுத்த ஆண்டாச்சும் சைக்கிள் வாங்கிக்கொடும்மா...
அடுத்த ஆண்டுக்கு இப்பவே என்ன?
இப்படியே சொல்லு. நீ வாங்கித் தரமாட்டே.
அதுக்கில்லேடா... பயமா இருக்குப்பா.
நான் நல்லா ஓட்டுவேன்ம்மா
நீ நல்லா ஓட்டுவே. போக்குவரத்து பெருகிடுச்சி. நடந்து போறதே சிரமமா இருக்கு. சரி... சரி... அப்புறமா முடிவு பண்ணிக்கலாம். அப்பாவைக் கும்பிட்டுட்டு புறப்படு சீக்கிரம்.
முதுகில், பள்ளிப் பையை மாட்டிய சிவா, சந்தன மாலை அணிவிக்கப்பட்டிருந்த தன் அப்பாவின் படத்துக்கு முன் வந்து நின்று கைகூப்பினான்.
அம்மா...
என்னடா?
அப்பா இருந்திருந்தா உன்னை மாதிரி பயப்படாம சைக்கிள் வாங்கிக் கொடுத்திருப்பாரும்மா.
வித்யாவுக்கு தொண்டை அடைத்தது.
நான் போயிட்டு வர்றேம்மா.
அவனோடு நடந்தாள். தங்கள் மாடிப் பகுதியிலிருந்து படிகளில் கீழே இறங்கினார்கள்.
'வாக்கிங்' போய்விட்டு கையில் பத்திரிகையோடு திரும்பிய மதன், சிவாவின் தலையில் செல்லமாகத் தட்டி, என்னடா இன்னிக்கு சீக்கிரமே புறப்பட்டுட்டே?
என்றான்.
பேச்சுப் போட்டில கலந்துக்கிறேன், சித்தப்பா. சொல்லிப் பார்க்கணும்.
பிரமாதமா பேசணும். என்ன? தயார் பண்ணிட்டியா?
சின்ன அத்தை, எழுதிக் கொடுத்தாங்க.
டி.வி. பார்க்கிறதை தவிர இதுக்கெல்லாம் நேரம் இருக்கா அவளுக்கு? சரி, போயிட்டு வா.
அண்ணி, இன்னிக்கு பாங்கியில் பணம் எடுக்கணும்னு அப்பா சொன்னாரு. நான் மறந்துடுவேன். ஆபீஸ் போறப்ப கொஞ்சம் ஞாபகப்படுத்துறீங்களா?
சரிப்பா.
மேலே வந்தார்கள். இடுப்பில் வேட்டியுடன் தலையைத் துடைத்த படி வந்த ஜானகிராமன், மதன் ஆபீசுக்கு போறப்ப நானும் வர்றேன் என்னை ஜோசியர் வீட்டுல இறக்கி விட்டுடுப்பா
என்றார்.
நீங்க ஏன்ப்பா அலையுறீங்க? அவர் வரமாட்டாரா?
நேத்தே வர்றேன்னு சொன்னாரு. காணோம்! தரகர் கொடுத்த ஏழு ஜாதகத்தை பொருத்தம் பார்க்கக் கொடுத்து ஒரு வாரமாச்சி. நமக்கு வேலை ஆகணும்னா நாமதான் போகனும். இங்கே சும்மாதானே ரேடியோ கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கேன். கீர்த்தனா, குளியலறை நுழைஞ்சிட்டாள்னா அரை மணி நேரமாகும். சட்டுன்னு நீ போய் குளிச்சிடு.
இரவு உடையில் அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட கீர்த்தனா, அப்பா, என்ன இது. அண்ணனுக்கு மட்டும் சலுகையா நானும்தான் ஆபீஸ் போறேன். மதன், நான் முதல்ல குளிச்சிட்டு வந்துடுறேன்
என்றாள்.
சரி, போய்த் தொலை
, என்று நாற்காலியில் அமர்ந்த மதன், அண்ணி, காப்பி கொடுங்க. ஆமா பத்மா எங்கே?
மொட்டை மாடியில 'ஸ்கிப்பிங் ஆடிட்டிருக்காடா
என்று வந்தாள் பார்வதி".
மாப்பிள்ளை வீட்டுக்காரர் 'பொண்ணு குட்டையா இருக்காளே?'ன்னு சொல்லிட கூடாதேன்னு பயமா? இப்ப திடீர்னு செஞ்சா எப்படி? சின்ன வயசிலிருந்து செய்யணும்.
தோளில் ‘ஸ்கிப்பிங்' கயிறே வியர்வையில் குளித்தபடி பத்மா வந்து, "டேய்... நான் உன் அக்காடா கொஞ்சம் மரியாதை இருக்கட்டும் என்றாள்.
மரியாதைன்னா எப்படி? தினம் ஒரு தடவை காலைத் தொட்டு கும்பிடணுமா?
உன்னை...
செல்லமாக அடிக்க வந்தவள், தொலைபேசி ஒலியை நிறுத்திக்கொண்டாள். கீர்த்தனாவுக்குத்தான் இருக்கும் எடு. மகாராணி எந்திருச்சிட்டாளா?
குளிக்கப் போயிட்டா
என்ற மதன், தொலைபேசியை எடுத்து, அலோ… மதன் பேசுறேன்." என்றான்.
ஜானகிராமன் இருக்காறா?
என்றது மறுமுனைக் குரல்.
எங்க அப்பாதான். நீங்க சார்?
நான் வளசரவாக்கத்துல இருந்து நாகராஜன் பேசுறேன். பத்மாங்கிறது?
எங்க அக்கா சார்.
உங்க அக்காளோட ஜாதகத்தை எனக்கு அனுப்பி இருந்தாரு. அது சம்மந்தமாதான் அப்பாகிட்ட பேசணும். இருக்காறா, தம்பி?
இருக்கார் சார். ஒரு நிமிடம்…
அணிந்த பனியனை இறக்கிவிட்டுக்கொண்டு வந்த ஜானகிராமன், மதன் விபரம் சொன்னதும் முகம் மலர்ந்தார்.
அவரு பையனுக்கு பாக்கலாம்னு தரகர் சொல்லிதான் ஜாதகத்தை அனுப்பிச்சேன். முருகா! நல்ல பதிலா சொல்லணும்.
தொலைபேசி ரிசீவரை வாங்கி, அலோ... ஜானகிராமன் பேசுறேன். வணக்கம் சார்
என்றார், உற்சாகமாக.
வணக்கம். உங்க பொண்ணு ஜாதகம் கிடைச்சது. பொருத்தம் பார்த்தோம். பதினொரு பொருத்தம் இருக்கு, தாராளமா செய்யலாம்னு ஜோசியர் சொன்னாரு.
அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்களைப் பத்தியும், உங்க பையனைப் பத்தியும் தரகர் நிறைய சொன்னாரு.
இருக்கட்டும். உங்க பயத்தைப் பத்தி கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.
"சார், நான் பி.யு.சி. தாண்டலை. ஆடிட்டர் ஆபீசில் வேலை பார்த்தேன். ஓய்வு பெற்று நாலு ஆண்டாச்சி. இங்கே திருவல்லிக்கேணியில் ஒரு மாடியில் குடியிருக்கோம்.
என் மனைவி பார்வதிக்கு ஊரு கும்பகோணம். எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் தஞ்சாவூர் மாவட்டத்துலதான் இருக்காங்க."
எத்தனை பிள்ளைங்க?
"நாலு பிள்ளைங்க. மூத்தவன். ஒரு ஆண்டுக்கு முன்னாடி தவறிட்டான். மருமகளும், பேரனும் எங்களோடுதான் இருக்காங்க. அடுத்ததுதான் பத்மா. பிளஸ் 2-க்கு மேல படிக்கலை.
அடுத்தவன் மதன். பட்டப்படிப்பு முடிச்சுட்டு ஒரு கட்டிட நிறுவனத்துல கண்காணிப்பாளரா இருக்கான். கடைசிப் பொண்ணு கீர்த்தனா. இவளும் பட்டப்படிப்பு முடிச்சுட்டு டிராவல்ஸ் ஆபீசில் வேலை பார்க்கிறா. பேரன் சிவா, அஞ்சாவது படிக்கிறான்."
சந்தோஷம். ஏன் பத்மாவை மட்டும் படிக்க வைக்கலை?
அந்த நேரம் அவளுக்கு மஞ்சள் காமாலை வந்து, ஆறு மாசம் படுத்திடுச்சி. அப்புறம் அப்படியே விட்டுப்போச்சு. தபால் மூலமா படிக்கணும்னு சொல்லிட்டிருந்தா. திடீர்னு ஆர்வம் குறைஞ்சிடுச்சி.
பரவாயில்லை. எங்க குடும்பத்தைப் பத்தி...
நீங்க எதுவும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம்தான் நான் ஜாதகம் அனுப்பிவைச்சேன்.
இருக்கட்டும்! தகவலா தெரிஞ்சிக்கிறது வேற. பழகி, பேசி தெரிஞ்சிக்கிறது வேற. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. பையனைப் பாருங்க. பேசுவோம். உங்களுக்கு எங்க பையனைப் பிடிச்சிருந்தா அதுக்கப்புறம் நாங்க பொண்ணு பார்க்க வர்றோம்.
பையனுக்கு பெங்களூர்ல வேலைன்னு சொன்னாரே?
மூணு மாசத்துக்கு முன்னாடி இங்கே சென்னைக்கு மாற்றலாகி வந்துட்டான். ஒரே புள்ளை. எங்க பக்கத்துலேயே இருந்தா பரவாயில்லைன்னு நெனைச்சோம். எப்ப வர்றீங்க?
உங்க சௌகரியம்தான் முக்கியம்.
நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வர்றீங்களா?
அவசியம் வர்றேன்.
நீங்க மட்டும் தனியா வராதீங்க. உங்க மனைவி, பையன். எல்லோரையும் கூட்டிக்கிட்டு வாங்க. எங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை.
நல்லதுங்க.
பொறப்படுறதுக்கு முன்னாடி 'போன்' பண்ணுங்க. சரியா வழி சொல்லுறேன்.
ரொம்ப நல்லதுங்க.
தொலைபேசி வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்து, பத்மா, உனக்கு நல்ல நேரம், ஆரம்பிச்சிடுச்சிம்மா. தரகர் சொன்னது எதுவுமே மிகையில்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப தங்கமான ஜனங்கன்னு பேச்சுலேயே தெரியுது. மாப்பிள்ளையோட அப்பா ரொம்ப தரமா பேசுறாரு. இந்த இடம் அமைஞ்சிடுச்சின்னா நீ ரொம்ப கொடுத்து வைச்சவம்மா
என்று நெகிழ்ந்தார்.
ஆற்றிய காப்பியை மதனுக்குக் கொடுத்த வித்யா, ஏன் மாமா, நம்ம பத்மா மருமகளா வர்றதுக்கு அவங்களும்தான் கொடுத்து வைச்சிருக்கணும்
என்றாள்.
பத்மா, தபால் மூலமா படிச்சிட்டிருக்காள்னு சொல்ல வேண்டியதுதானே? ஒரு ஆண்டு பாடம் எல்லாம் வந்திச்சி இல்ல?
என்றான், மதன்.
"பாடம்தான் வந்திச்சி. இவ படிச்சாளா? இல்லை பரிட்சைத்தான் எழுதினாளா? எதுக்குடா அநாவசியமா பொய் சொல்லணும் அதுவும் கல்யாணத்துல உள்ளதை உள்ளபடி சொல்றதுதான் நல்லது என்றார், ஜானகிராமன்.
எப்ப வரச்சொன்னாங்க?
என்றார், பார்வதி.
நாளைக்கே வரச்சொல்லுறாங்க எல்லோரும் வாங்கன்னு சொன்னாரு.
எல்லோரும்னா... அப்ப பத்மாவையும் கூட்டிட்டு போயிடலாமா? அவங்க பொண்ணு பார்க்க ஒரு தடவை இங்கே வர்றது மிச்சம்! என்ன பத்மா?
என்றான் மதன்.
ச்சீ! போடா
என்றாள், பத்மா.
அட! உனக்கு வெக்கப்படக் கூடத் தெரியுமா?
வாசல் மணி அழைக்க, வித்யா சென்று கையெழுத்து போட்டு தபால் வாங்கி வந்து, உங்களுக்குத்தான் மாமா
என்று நீட்டினாள்.
ஜானகிராமன், உறையை கிழித்து, கடிதம் எடுத்துப் படித்துவிட்டு உடனே முகம் மாறினார்.
என்னங்க... யாரு எழுதி இருக்காங்க?
என்றார், பார்வதி பரிதவிப்புடன்!
2
மனைவி பார்வதி கேட்கக்கேட்க, எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார், ஜானகிராமன்.
வித்யா, மதன், பத்மா தவிர குளித்துவிட்டு வந்திருந்த கீர்த்தனாவும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
கடிதத்துல என்னப்பா? யாரு எழுதிருக்காங்கன்னு சொல்லுங்க
என்றான், மதன் பதைப்புடன்.
அமைதியாக அவனிடம் நீட்டினார்.
சத்தமா படிடா
என்றாள், பார்வதி.
"அன்புடையீர்,
வணக்கம். வளசரவாக்கம் நாகராஜன் மகன் சாந்தகுமாருக்கு உங்கள் மகளை கட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? வேண்டாம்! உங்கள் மகள் சந்தோஷமாக வாழமாட்டாள்.
சாந்தகுமார் நல்லவன் இல்லை. பல பெண்களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு. அப்பா நாகராஜனோ நாணயம் இல்லாதவர். நிறைய பொய் பேசுபவர். ஏகப்பட்ட கடனும் இருக்கிறது. மிகவும் மோசமான குடும்பம், அது!
அவசரப்பட்டு முட்டாள் தனமாக முடிவெடுத்து விடாதீர்கள். பிறகு உங்கள் மகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். எச்சரிக்கிறேன்.
இப்படிக்கு,
உண்மை விளம்பி"
என்று படித்து முடித்துவிட்டு கடித உறையைப் பார்த்தான்.
உறை மேல விலாசம் இருக்கு போலிருக்கே
என்றாள், கீர்த்தனா.
ஆமாம். 'தணிகாசலம், ராஜகுமாரன் தெரு, மந்தைவெளி சென்னை'ன்னு போட்டிருக்கு.
மொட்டைக் கடிதம் எழுதுறவன் இப்படியா முழுவிலாசமும் எழுதுவான்? பின்னே எதுக்கு உண்மை விளம்பின்னு உள்ளே போடணும்?