Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirvarai Inithaval
Uyirvarai Inithaval
Uyirvarai Inithaval
Ebook115 pages1 hour

Uyirvarai Inithaval

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580100901644
Uyirvarai Inithaval

Read more from Pattukottai Prabakar

Related to Uyirvarai Inithaval

Related ebooks

Reviews for Uyirvarai Inithaval

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirvarai Inithaval - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    உயிர்வரை இனித்தவள்

    Uyirvarai Inithaval

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    உயிர்வரை இனித்தவள்

    - பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    புதிதாக அடிக்கப்பட்ட சுண்ணாம்பின் வாசனை வீடு முழுக்க இருந்தது. சுவரோரமாக தரையில் சிந்திய வெள்ளைப் புள்ளிகள் சரியாக அலம்பப்படாமல் அங்கங்கே இருந்தன. தேங்காய் நாரைப் போட்டு அழுத்தி தேய்த்து இன்னொரு முறை அலம்பிவிட வேண்டும்.

    லாரிக்காரர்கள் இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்ட எல்லா சாமான்களையும் தனி ஒருத்தியாய் நானே வைப்பது சிரமம். கார்த்திக்கை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அவன் மாலை வீடு திரும்புவதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். என்ன அவசரம்? யார் வந்து பார்த்து சர்டிஃபிகேட் கொடுக்கப் போகிறார்கள்? முதலில் சமையலறையின் அத்தியாவசியமான சாமான்களையும், கொஞ்சம் உடைகளையும் எடுத்துக் கொண்டால் போதும். உடைகள் மூன்று சூட்கேஸ்களில் இருக்கின்றன. சமையல் பாத்திரங்கள் எந்த அட்டைப் பெட்டிக்குள் இருக்கின்றன என்று மேலாக ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கலாம். எல்லாம் ஒரே மாதிரியான அட்டைப் பெட்டிகள் என்பதால் ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்க்க வேண்டும்.

    ஒரு ஹால், ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன், ஒரு பாத்ரூம், ஒரு லெட்ரீன், பின்புறம் கிணற்றுடன் சின்ன தோட்டம், அதில் நான்கைந்து வாழை மரங்களும், ஒரே ஒரு முருங்கை மரமும், மொட்டை மாடிக்குச் செல்ல கிணற்றின் அருகில் படிகள். நானூறு சதுர அடியில் சின்ன மொட்டை மாடி. வாடகை ஆயிரம் ரூபாய் அதிகம்தான். தண்ணீர் பிரச்சனை இல்லை என்பதும். சுதந்திரமான தனிவீடு என்பதும் ப்ளஸ் பாய்ண்ட்டாக இருந்ததால் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

    வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடம் அமைந்ததும், அதில் கார்த்திக்கிற்கு எல்.கே.ஜி. அட்மிஷன் கிடைத்ததும் பெரிய அதிர்ஷ்டம். 'நீங்க உங்களோட சூழ்நிலை எல்லாத்தையும் சொன்னதால உங்க பையனுக்கு அட்மிஷன் தர்றேன். இப்படி வருஷ மத்தியில பொதுவாக நாங்க சேர்க்கறதே இல்லை மேடம்' என்று சொன்ன பிரின்சிபாலை கண்கலங்க கையெடுத்து கும்பிட்டபோது, இன்னும் நாட்டில் சில மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள் என்று பட்டது.

    இன்றோடு லீவு முடிந்தது. இந்த சாமான்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைப்பதற்காக இன்னும் இரண்டு தினங்கள் போடலாம். அல்லது சனி, ஞாயிறில் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தால் நாளைக்கு வேலையில் சேர்ந்து விட வேண்டும்.

    ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து மந்தைவெளியில் இருந்த என் பேங்கிற்குப் போய் வந்தது. ரொம்ப சுலபமாக இருந்தது. குறைந்த தூரம்தான். என் கைனெடிக் ஹோண்டாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் செலவு கூடும். இரண்டு நாளைக்கொரு முறை போட வேண்டிவரும். பக்கத்தில் நல்ல மெக்கானிக் யாரென்று விசாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பாலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாக புது ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டுமென்று பேங்கில் சக ஸ்டாஃப்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வாசலுக்கு காய்கறி வண்டி, அயர்ன் வண்டி எல்லாம் வருமா என்று பக்கத்து வீட்டில் கேட்கலாமா?

    பக்கத்து வீட்டில் காலேஜூக்குப் போகிற பெண் இருக்க வேண்டும். லாரியிலிருந்து சாமான்களை இறங்கிக் கொண்டிருக்கும் போது வாசலுக்கு வந்து பின்னலைப் பின்னியபடியே சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தாள். சாமான்களை இறக்கி முடித்ததும் அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்த்தால் அவள் உள்ளே போய்விட்டாள். பின்புற கிணற்றில் தண்ணீர் இறைத்து கைகளைக் கழுவிக் கொண்டபோது பக்கத்து வீட்டிலிருந்து 'எனக்கு காலேஜூக்கு நேரமாச்சும்மா' என்று குரல் வந்த போது அவளாகத்தானிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

    இனிமே நான் இந்த வீட்லதான் இருக்கப் போறேனா? - இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்ட கார்த்திக்கிடம், ஆமாம் ஏண்டா? என்றபோது… போம்மா! எனக்கு இந்த வீடே பிடிக்கலை என்று கூறி விட்டான். நீ ஸ்கூலுக்குப் போய்ட்டு வா, உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திடலாம் என்று சமாதானப்படுத்திக் கூட்டிட்டுப் போய் பள்ளியில் விட்டுவிட்டு வந்தாயிற்று.

    போகிற வழியெல்லாம் கேள்விகள்.

    எதுக்குமா என்னை புது ஸ்கூல்ல சேர்த்தே?

    புது வீட்டுக்கு வந்துட்டோமில்லையா? அதான் புது ஸ்கூலு!

    ராமு கூட புது வீட்டுக்குப் போனானே… ஆனா அவன் அப்போ ஸ்கூல் மாறல்லையேம்மா.

    இந்த ஸ்கூல்ல இன்னும் நல்லா சொல்லித் தருவாங்க கார்த்திக்.

    என் ஸ்கூல்லயும் நல்லாத்தானேம்மா சொல்லித்தந்தாங்க? நான் ஃபர்ஸ்ட் ரேங்க்தானே வாங்கினேன்.

    இந்த ஸ்கூல்ல ப்ளே கிரவுண்டு பெரிசா இருக்கு. நிறைய கேம்ஸ் இருக்கு கார்த்திக்.

    ஆனா என்கூட படிக்கிற ஃப்ரெண்ட்ஸ் யாருமே இருக்க மாட்டாங்களே, அவங்க எல்லாரும் அந்த ஸ்கூல்லேயேதானே இருப்பாங்க?

    இந்த ஸ்கூல்ல புதுசு புதுசா நிறைய ஃபிரெண்ட்ஸ் பண்ணிக்கிட்டால் போச்சு.

    புதுசா சேர்த்துக்க மாட்டாங்கம்மா.

    அதெல்லாம் சேர்த்துப்பாங்க. இப்ப நீ வாயை மூடிக்கிட்டு சும்மா வரப் போறியா இல்லையா? சும்மா தொணதொனன்னுகிட்டு…

    குழந்தை முகம் வாடினான். கஷ்டமாகத்தான் இருந்தது. நேர்மையான பதில் எதையும் சொல்லவில்லை. சொன்னால் புரியாது. இப்போது புரிய வைப்பதும் அவசியமில்லை. மனதில் பாதிப்பு வந்து உட்காரும்.

    கார்த்திக், அந்த ஸ்கூலுக்கு ரிக்ஷால போனே. இந்த ஸ்கூலுக்கு தினம் நடந்தே வரலாமே, எவ்வளவு பக்கம் பார்த்தியா?

    ஆமாம்மா. ரொம்ப பக்கம். ரொம்ப சீக்கிரமே வீட்டுக்கு வந்துடலாம்.

    கார்த்திக் கொஞ்சம் அந்த பாய்ண்டில் முகம் மலர்ந்தான்.

    "அது மட்டுமில்லை. மம்மி நீ கேட்ட குட்டி சைக்கிளை உன்னோட அடுத்த பர்த்டேயப்போ வாங்கித் தருவேனில்ல, அதை லீவு நாள்ல எல்லாம் இந்த ஸ்கூல் கிரவுண்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1